Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்: கெயில் புயலை இந்தியா சமாளிக்குமா?

Featured Replies

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்: கெயில் புயலை இந்தியா சமாளிக்குமா?

gayle_3184154h.jpg
 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி யில் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது. இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கிறிஸ் கெயில் உட்பட முன் னணி வீரர்கள் பலரும் களம் இறங்க உள்ளதால் இந்திய அணிக்கு அது சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தற் போது மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இன்று களம் இறங்குகிறது.

ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியதால் இந்திய அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன் இப் போட்டியில் களம் இறங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரஹானே மிகச் சிறப்பாக ஆடினார். இருப்பினும் டி20 போட்டிகளில் அவரால் சிறப் பாக ஆட முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஒருநாள் போட்டிகளில் அவர் ரன்களைக் குவிக்க அதிக பந்துகளை எடுத்துக் கொண்டதே இதற்கு காரணம். எனவே டி 20 போட்டியைப் பொறுத்தவரை ஷிகர் தவணுடன் சேர்ந்து விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக கோலி ஏற்கெனவே பல முறை தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

விராட் கோலி தொடக்க ஆட்டக் காரராக களம் இறங்கும் பட்சத் தில், இளம் இந்திய வீரரான ரிஷப் பந்துக்கு இப்போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கி லாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் ஆடிய பிறகு அடுத்த வாய்ப்புக்காக ரிஷப் பந்த் நீண்ட காலமாக காத்திருக்கிறார். விக்கெட் கீப்பரான இவர், இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைத்தால் தன் இடத்தை தக்க வைக்கும் முனைப்புடன் அதிர டியாக ஆடலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

ஒருநாள் போட்டித்தொடரில் வேகமாக ரன்களைக் குவிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு தோனி மீது உள்ளது. இதனால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று இளம் வீரரான ரிஷப் பந்துக்கு வழிவிட வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. இந்நிலையில் இன்றைய போட்டியில் அதிரடியாக ஆடி தனது இடத்தை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் தோனி உள்ளார்.

ஐபிஎல் போட்டித் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக் காக அதிக விக்கெட்களை வீழ்த் திய குல்தீப் யாதவ், இப்போட்டி யில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார். அவருடன் சேர்ந்து புவனேஷ் குமார், உமேஷ் யாதவ் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

டி20 போட்டிகளைப் பொறுத்த வரை மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக சாம்பியனாக உள்ளது. கிறிஸ் கெயில், மர்லன் சாமுவேல்ஸ், சுனில் நரைன், சாமுவேல் பத்ரி போன்ற டி20 போட்டிகளில் சிறந்த வீரர்கள் பலரை அந்த அணி கொண் டிருக்கிறது. குறிப்பாக டி20 போட்டியில் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் கிறிஸ் கெயில் 15 மாத இடை வெளிக்குப் பிறகு அந்த அணிக்காக ஆடவுள்ளார். சிக்சர்களை அனாயாசமாக பறக்க விடக்கூடிய ஆற்றல் வாய்ந்த அவரது சவாலை இந்திய அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் டி20 போட்டியில் அந்த அணியின் எவின் லீவிஸ் சமீப காலமாக மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர், 49 பந்துகளில் 100 ரன்கள் குவித்ததை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. எனவே இன்றையப் போட்டியில் வெற்றிபெற இந்திய அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

அணி விவரம்

இந்தியா :

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், அஜிங்க்ய ரஹானே, தோனி, யுவ ராஜ் சிங், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், தினேஷ் கார்த்திக், முகமது ஷமி.

மேற்கிந்தியத் தீவுகள்:

கார்லோஸ் பிராத்வெயிட் (கேப்டன்), சாமுவேல் பத்ரி, ரான்ஸ்போர்டு பீட்டன், கிறிஸ் கெயில், எவின் லீவிஸ், ஜேசன் மொகமது, சுனில் நரைன், பொல்லார்ட், ரோவ்மன் பொவல், மர்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர், வால்டன், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

http://tamil.thehindu.com/sports/இந்தியா-மேற்கிந்தியத்-தீவுகள்-இன்று-மோதல்-கெயில்-புயலை-இந்தியா-சமாளிக்குமா/article9756149.ece?homepage=true

  • தொடங்கியவர்

டி-20 கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்!

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நடந்த ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், இரு அணிகளும் டி-20 போட்டியில் மோதின. இந்திய அணி முதலில் பேட் செய்தது. அணியில் தினேஷ் கார்த்தி மற்றும் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டிருந்தனர். கேப்டன் கோலி, தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

தொடக்கம் முதலே இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்தி 48, கோலி 39, பண்ட் 38 ரன்கள் குவித்தனர். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது.

Lewis

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெய்ல் 18 ரன்களில் அவுட் ஆனார். ஆனால், இவின் லீவிஸ், சாமூவேல்ஸ் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக, அதிராடியாக ஆடிய லீவிஸ் சதமடித்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 125 ரன்கள் குவித்தார்.

 

இதன் மூலம் 18.3 ஓவர்களிலேயே இலக்கை எளிதில் எட்டியது மேற்கிந்திய தீவுகள் அணி. அந்த அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லிவீஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

http://www.vikatan.com/news/sports/94896-west-indies-beats-india-in-t20-match.html

  • தொடங்கியவர்

எவின் லீவிஸ் ருத்ரதாண்டவம்: இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி

 

    அ-அ
எவின் லீவிஸ் ருத்ரதாண்டவம்: இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி
 

இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் எவின் லீவிஸின் அதிரடி சதத்தால் 191 ரன்கள் இலக்கை அடைந்து மேற்கிந்திய தீவுகள் அணி எளிதாக வெற்றி பெற்றது.

கிங்ஸ்டன்:

இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் எவின் லீவிஸின் அதிரடி சதத்தால் 191 ரன்கள் இலக்கை அடைந்து மேற்கிந்திய தீவுகள் அணி எளிதாக வெற்றி பெற்றது.

கிங்ஸ்டன் நகரில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய டி-20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

201707100217228661_Copy%20of%20dkbrh71m.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர்களை பதம் பார்த்தனர். 22 பந்துகளில் 39 ரன்களை குவித்த கோலி 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தவான் நான்கு பவுண்டரிகளை விளாசி 23 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

பின்னர், களமிறங்கிய ரிஷு பாந்த் மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் தினேஷ் 29 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 2 ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.
201707100217228661_Copy%20of%20iqg0aa3w.
20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 190 ரன்களை குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களில் டெய்லர் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டத்தை தொடங்கியது. டி-20 போட்டிகளில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்கள் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், தொடக்க வீரர்களாக களமிறங்கிய எவின் லீவிஸ் மற்றும் கிறிஸ் கெயில் ஆட்டத்தின் போக்கை தொடக்கத்திலேயே மாற்றி விட்டனர். ஆட்டத்தின் 9-வது ஓவரில் அதிரடி மன்னன் கெயில் 20 ரன்களில் வெளியேறினாலும், லீவிஸ் இந்திய பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தார். 

201707100217228661_zdjowhpr._L_styvpf.gi

சிக்சர்களும், பவுண்டரிகளுமாக லீவிஸ் அதிரடி காட்ட இந்திய வீரர்கள் செய்வதறியாது திகைத்தனர். 24 ரன்களில் அரைச்சதமடித்த லீவிஸை கட்டுப்படுத்த இந்திய பவுலர்கள் எடுத்த அனைத்து முடிவுகளும் புஸ்வானமாகி போனது. மற்றொரு பக்கம் தன் பங்குக்கு சாமுவேல்ஸ் பவுண்டரிகளை விளாச, இந்தியாவின் வெற்றி வாய்ப்பு சிறிது சிறிதாக மங்கியது.

9 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் லீவிஸ் 54 பந்துகளில் சதமடித்தார். முகம்மது சமி மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சை இருவரும் இணைந்து நாலாபுறமும் சிதறடித்தனர். இறுதியில் 19வது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி எளிதாக வெற்றி பெற்றது.

லீவிஸ் 125 ரன்களுடனும், சாமுவேல்ஸ் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் குல்தீப் யாதவ் மட்டும் 1 விக்கெட் வீழ்த்தினார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.