Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கினார் தஸநாயக்க! சிக்குவாரா கரண்ணாகொட?

Featured Replies

சிக்கினார் தஸநாயக்க! சிக்குவாரா கரண்ணாகொட?

 

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு காணாமல் போகச் செய்­யப்பட்ட சம்ப­வத்­துடன் கடற்­படை சிறப்பு புல­ன­ாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்­பா­ளரும் முன்னாள் ஊடகப் பேச்­சா­ள­ரு­மான கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்­க­வுக்கு உள்ள நெருங்­கிய தொடர்பை மையப்­ப­டுத்தி அவர் குற்றப் புல­னாய்வுப் பிரிவினரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

 விசா­ரணை வல­யத்­துக்குள் இருந்த அவரின் கடவுச்சீட்டு நீதி­மன்­றினால் முடக்­கப்பட்டி­ருந்த நிலையில், அமெ­ரிக்­கா­வுக்கு செல்ல ஆயத்தங்களை முன்­னெ­டுத்து வந்த நிலை­யி­லேயே அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்டார். சி.ஐ.டி.யின் கைதில் இருந்து தப்­பிக்க தஸ­நா­யக்க இரு முறை குற்றப் புலனாய்வுப்பிரிவில் ஆஜ­ரா­வதை தவிர்த்த போது, சுக­யீனம் எனக் கூறி வெலி­சறை கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக சேர்ந்த நிலையில் அங்கு சென்ற பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா தலை­மை­யி­லான குழு­வினர் பொலிஸ் அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி அவரைக் கைது செய்­தி­ருந்­தனர்.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு காணாமல் போகச் செய்­யப்பட்ட சம்பவத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் வெள்ளை வேன் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தற்­போது தீர்க்­க­மான கட்­டத்தை எட்டியுள்ள­தா­கவே தஸ­நா­யக்­கவின் கைது உணர்த்­து­கின்­றது.

உண்­மையில் இந்த கடத்­தல்கள் தொடர்­பி­லான விடயம் முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே அம்­ப­லத்­துக்கு வந்­தது. தனது தனிப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த சம்பத் முன­சிங்­கவை தனிப்­பட்ட காரணம் ஒன்­றுக்­காக பழி தீர்க்க கரண்­ணா­கொட இந்த முறைப்­பாட்டை செய்த போதும், அந்த முறைப்­பாடு மீதான மேல­திக விசா­ர­ணை­களில் கரண்­ணா­கொ­டவின் கீழ் செயற்­பட்ட அப்­போ­தைய கடற்­படை செய்த கப்பம் கோரல்கள், கடத்­தல்கள், கொலைகள் என அனைத்து விட­யங்­களும் வெளிப்­பட ஆரம்­பித்­துள்­ளன.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு இந்த விசா­ர­ணைகள் மாற்­றப்­பட்­டி­ருந்த நிலையில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்­கு­பொ­றுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் நாஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் சானி அபே­சே­க­ரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் புல­னாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டி சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த சட்டவிரோத செயல்கள் அம்­ப­லத்­துக்கு வந்­துள்­ளன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே, ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையைச்சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியா­க­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

 இவ்­வாறு கடத்­தப்­பட்ட அனை­வரும் கோட்­டையில் உள்ள கடற்­படை தலை­மை­ய­கத்தை அண்­மித்த பிட்டு பம்­புவ எனும் இடத்­திலும் அதன் பின்னர் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தில் உள்ள இர­க­சிய வதை முகா­மான கன்சைட் எனும் தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்­த­மையை குற்றப் புல­ன­ாய்­வா­ளர்கள் கண்­டு­பி­டித்­தனர். (இது தொடர்பில் ஏற்­க­னவே கேசரி பல கட்­டு­ரைகள் ஊடா­க­ த­க­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது) இந்த விடயம் சர்­வ­தேச அளவில் அவ­தா­னிப்­புக்குள்­ளா­கி­யுள்ள நிலையில், சிறப்பு புல­னா­ய்வுப் பிரிவின் பொறுப்­பா­ள­ராக கட­மை­யாற்­றி­யி­ருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்க, கன்சைட் நிலத்­தடி இர­க­சிய வதை முகாமின் பொறுப்­பா­ள­ராக அப்­போது இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் தரத்­தினை உடைய தற்­போது கொமாண்ட ராக பதவி உயர்த்­தப்பட்­டுள்ள சுமித் ரண­சிங்க, கடற்­படை சிப்பாய் லக் ஷ்மன் உத­ய­கு­மார, நலின் பிர­சன்ன விக்­ர­ம­சூ­ரிய, தம்­மிக தர்­ம­தாஸ, கித்­சிறி ஆகியோர் கைது செய்­யப்பட்­டுள்­ளனர். இவர்­களில் சம்பத் முன­சிங்க பிணையில் உள்ள நிலையில் ஏனையோர் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் இருந்து வரு­கின்­றனர்.

  இந் நிலை­யி­லேயே தற்­போது 7 ஆவது சந்­தேக நப­ராக கடற்­படை கொமாண்டர் தர அதி­கா­ரி­யான முன்னாள் ஊடகப் பேச்­சாளர் டி.கே.பி. தஸ­நா­யக்க கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இருந்து சுமார் 28 பேர் வரை இந்த கடற்­படை கப்பம் மற்றும் கடத்தல் குழுவால் கடத்­தப்பட்­ட­தாக சந்­தேகம் நிலவும் போதும் 11 பேரின் கடத்­தல்கள் தொடர்­பி­லேயே இது வரை­யி­லான விசா­ர­ணை­களில் ஆதா­ரங்கள் சிக்­கி­யுள்ளன. அதன்படி இருவர் தொடர்­பி­லான கடத்தல், கொலை தனி­யான விசா­ர­ணை­யா­கவும் 11 பேர் தொடர்­பி­லான விசா­ர­ணை தனி­யா­கவும் முன்­னெ­டுக்­கப்பட்டு வரு­கின்­றது.இந்த 11 பேரும் கடத்திச் செல்­லப்­பட்­டமை, தடுத்து வைக்­கப்­பட்­டமை உள்­ளிட்ட செயற்­பா­டுகள் தஸ­நா­யக்­கவின் கீழ் செயற்­பட்ட உளவுப் பிரிவு அதி­கா­ரி­க­ளா­லேயே முன்­னெ­டுக்­கப்பட்­ட­தற்­கான தேவை­யான சாட்­சிகள் குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வி­னரால் கடந்த 3 ஆண்­டு­களில் பல வாக்குமூலங்கள் ஊடாக திரட்­டப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக 2008, 2009 ஆம் ஆண்­டு­களில் தஸ­நா­யக்க கடற்­ப­டையின் கெப்டன் தர அதி­கா­ரி­யாக விளங்­கி­ய­துடன் அக்காலப் பகு­தியில் அவர் கடற்­ப­டையின் ஊடகப் பேச்­சா­ளரா­கவும், கடற்­படை சிறப்பு புல­னாய்வு நட­வ­டிக்கை பணிப்­பா­ள­ரா­கவும், விசேட இயந்­திரப்படகுப் படைப் பிரிவின் பிர­தா­னி­யு­மாக கட­மை­யாற்­றி­யி­ருந்தார். இக்­கா­லப்­ப­கு­தியில் தஸ­நா­யக்­கவின் கீழ் மூன்று முக்­கிய படைகள் செயற்­பட்­டன. அதிலும் குறிப்­பாக புல­னா­ய்­வுடன் தொடர்­பு­பட்­ட­தாக மூன்று முக்­கிய பிரி­வுகள் தஸ­நா­யக்­கவின் நேரடி கட்­டுப்­பா­ட்டில் இருந்­தன. கொழும்பில் லெப்­டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆரச்­சியின் கீழும், திரு­ம­லையில் லெப்­டினன்ட் கொமாண்டர் ரண­சிங்­கவின் கீழும் மன்­னாரில் லெப்­டினன்ட் கொமாண்டர் தயா­னந்­தவின் கீழும் இந்த விசேட படை­ய­ணிகள் புல­னா­ய்வு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டன. இந்த படை­ய­ணிகள் ஊடா­கவே கடத்தல், கப்பம் கோரல் உள்­ளிட்ட சட்டவிரோத நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றுள்­ளமை இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளன.

 குறிப்­பாக கொழும்பில் லெப்­டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆரச்­சியின் கீழ் செயற்­பட்ட குழு­வுடன் அப்­போ­தைய கடற்­படை தள­பதி வசந்த கரண்­ணா­கொ­டவின் தனிப்­பட்ட உத­வி­யாளர் லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­கவின் கீழ் செயற்பட்ட புல­ன­ாய்வுப் பிரிவும் இணைந்து செயற்பட்­டுள்­ளன. இவற்றை கடற்­ப­டையின் அப்போ­தைய தள­பதி கரண்­ணா­கொ­டவும், புல­னா­ய்வு நட­வ­டிக்கை பணிப்­பாளர் தஸ­நா­யக்­கவும் அறி­யாமலில்லை. அவர்­க­ளது நேரடி கண்­கா­ணிப்­பி­லேயே அச்­செ­யற்­பா­டுகள் இடம்­பெற்­றன.

 அதன் பிர­கா­ரமே கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இடம்­பெற்ற கடத்­தல்­களில் லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்க, ஹெட்டி ஆரச்சி ஆகி­யோரின் கீழ் செயற்­பட்ட குழு நேர­டி­யாக களத்தில் இறங்­கி­யுள்­ள­மைக்­கான ஆதாரம் குற்றப் புல­னா­ய்வுப் பிரி­விடம் உள்ளது. அவர்­க­ளது கடத்தல் நட­வ­டிக்­கை­க­ளிலும் கப்பத் தொகையை பகிர்ந்து சட்டவிரோத தடுத்து வைத்தல் மற்றும் அதன் பின்­ன­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு தஸ­நா­யக்­கவின் கீழ் செயற்­பட்ட திரு­மலை, மன்னார் பகு­தி­களின் புலனாய்வுப் படைப் பிரிவின் ஒத்­து­ழைப்­புக்­களும் பங்­க­ளிப்­புக்­களும் பெறப்பட்­டுள்­ளன. இது தொடர்­பி­லான ஆதா­ரங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே தற்­போது இடம்­பெறும் கைது நட­வ­டிக்­கைகள் அமைந்­துள்­ளன.

 இந்த கடத்­தல்­க­ளுடன் தஸ­நா­யக்­க­வுக்கு உள்ள தொடர்பை தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­காக ஒரு விட­யத்தை உதா­ர­ண­மாக இங்கு சுட்­டிக்­கா­ட்­டு­வது பொருத்­த­மாக இருக்கும்.

 தஸ­நா­யக்­கவின் கீழ் திரு­ம­லையில் பொறுப்­பா­ள­ராக செயற்­பட்­டவர் லெப்­டினன்ட் கொமாண்டர் ரண­சிங்க. ரண­சிங்­கவின் கீழ் இருந்த ஒரு புல­னா­ய்வு அதி­காரி மகேஷ் குமார. ஒரு நாள் மகேஷ் குமார ரண­சிங்­க­வுக்கு அரிப்பு பகு­தியைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன் தொடர்பில் தனக்­குள்ள சந்­தே­கத்தை குறிப்­பிட்­டுள்ளார். அதா­வது புலிக­ளுடன் அவர்கள் தொ­டர்­பு­ப­டு­கி­றார்­களோ என சந்­தே­கித்த மகேஷ் குமார அவர்கள் ஊடாக புலி­களின் தக­வல்கள் எத­னையும் பெற முடி­யுமோ என சந்­தேகம் கொண்டு இந்த தக­வலை ரண­சிங்­க­விடம் கூறி­யுள்ளார். விடயம் தஸ­ந­ாயக்­கவின் கவ­னத்­துக்கும் கொண்­டு­வ­ரப்­பட்டு அவர்­களை கண்­கா­ணிக்கும் நட­வ­டிக்கை தஸ­நா­யக்­கவின் உத்­தர­வுக்கு அமைய ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.அதனைத் தொடர்ந்து தஸ­நா­யக்­கவின் கீழ் அவ்­ இ­ருவர் தொடர்­பிலும் தனித்­த­னி­யாக கோவைகள் பரா­ம­ரிக்­கப்பட்­டுள்­ளன.

 இந்த கால­கட்­டத்தில் தஸ­நா­யக்க ஒரு நாள் வெளி­நாட்டுப் பயணம் ஒன்­றினை முன்­னெ­டுத்­துள்ளார்.

 இந்த கால கட்­டத்­தி­லேயே ஹெட்டி ஆரச்சி தலை­மை­யி­லான குழு அமலன் லியோன், ரொஷன் லியோன் ஆகி­யோரைக் கடத்­தி­யுள்­ளது. அவ் ­இரு­வ­ரையும் கடத்­திய இந்த குழு அவர்கள் தொடர்பில் பரா­ம­ரிக்­கப்பட்ட அந்த கோவை­களை மகேஷ் குமா­ர­விடம் கோரி­யுள்­ளது. தஸ­நா­யக்­கவை தவிர அந்த கோவை­களை யாரி­டமும் கொடுக்க முடி­யாது என மகேஷ் குமார கூறி­யுள்ளார். அதன் பின்னர் ஹெட்டி ஆரச்சி அமலன் லியோன், ரொஷான் லியோன் ஆகி­யோ­ரை கடத்தி வந்த விட­யத்­தையும் அவர்­களை கோட்­டையில் உள்ள பிட்டு பம்பு எனும் இடத்தில் உள்ள இர­க­சிய தடுப்பு இடத்தில் தடுத்து வைத்­துள்­ள­மை­யையும் தஸ­நா­யக்­க­வுக்கு லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்க தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், தனக்கு அது தெரியும் எனவும் அது தொடர்பில் ஹெட்டி ஆரச்சி பார்த்­துக்­கொள்வார் எனவும் தஸநா­யக்க கூறி­யுள்ளார்.

 இந்த தக­வல்கள் மகேஷ் குமார, லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்க உள்­ளிட்ட சில­ரிடம் குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் இருந்து வெளிப்­ப­டுத்­தப்பட்ட தக­வல்­க­ளாகும். தஸ­நா­யக்க இக்­க­டத்­தல்கள் தொடர்பில் பூர­ண­மாக அறிந்­தி­ருந்தார் என்­ப­தற்கும் அவரின் கீழ் இடம்­பெற்ற இத்­த­கைய சட்டவிரோத செயல்­க­ளுக்கு அவர் உடந்­தை­யாக இருந்தார் என்­ப­தற்கும் இது ஒரு ஆதாரம் மட்­டுமே. இது போல் பல விட­யங்­களை குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வினர் சேக­ரித்­துள்­ளனர்.

இத­னை­விட 2008/2009 ஆம் ஆண்­டு­களில் இத்­த­கைய கடத்­தல்கள் தொடர்பில் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நம்­பப்­படும் , மாணவர் கடத்­தலின் பிர­தான சந்­தேக நபர்­க­ளான தஸ­நா­யக்­கவின் கீழ் செயற்­பட்ட தற்­போது கைதா­கி­யுள்ள லெப்­டினன்ட் கொமாண்டர் சுமித் ரண­சிங்க, கைது செய்­யப்­பட திறந்த பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்டு தேடப்­பட்டு வரும் லெப்­டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி ஆகி­யோரின் கீழ் பயன்­ப­டுத்­தப்பட்ட 54 – 9438 எனும் வெள்ளை வேன் குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வி­னரால் தற்­போது கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

தற்­போது சி.ஐ.டி.யினரால் கைப்­பற்­றப்பட்­டுள்ள வெள்ளை வேன் வாடகை அடிப்­ப­டையில் அப்­போது ஹெட்டி ஆரச்­சியின் குழு­வி­னரால் பெறப்­பட்­டுள்­ள­தா­கவும், கடத்­தப்பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள 11 பேரில் உள்­ள­டங்கும் வத்­த­ளையில் வைத்து வேனுடன் கடத்­தப்பட்ட கொட்­டாஞ்­சேனைப் பகு­தியைச் சேர்ந்த ஜோன் ரீட் என்­ப­வரின் வேனின் எஞ்சின் பின்னர் குறித்த வெள்ளை வேனுக்கு பொருத்­தப்பட்­டுள்­ள­தாக சந்­தே­கிப்­ப­தா­கவும் குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவு சுட்­டிக்­காட்­டி­ய­துடன் அதனை உறுதி செய்ய இர­சா­யன பகுப்­ப­ாய்­வுக்கு வேனை உட்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்பட்­டுள்­ளன.

  வெல்­லம்­பிட்­டியில் உள்ள கராஜ் ஒன்றில், லெப்­டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆரச்­சி­யினால் இவ்­வாறு எஞ்சின் மாற்­றப்பட்­டுள்­ள­தாக தகவல் உள்­ள­தா­கவும் அது தொடர்பில் சிறப்பு விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கூறப்­ப­டு­கின்­றது.

இத­னை­விட இந்த கடத்­தல்­க­ளுடன் நேரடி தொடர்­பு­பட்ட பிர­தான சந்­தேக நப­ரான லெப்­டினன்ட் கொமா­ண்டர் ஹெட்டி ஆரச்­சியைக் கைது செய்ய திறந்த பிடி­யாணை குற்­ற­வியல் சட்­டத்தின் 63 (1) அ, ஆ அத்­தி­யா­யங்­களின் பிறப்­பிக்­கப்பட்­டது. உண்­மையில் தஸ­நா­யக்­கவை கைது செய்ய முன்னர் அவரின் கீழ் செயற்­பட்ட ஹெட்டி ஆரச்­சியைக் கைது செய்­வதே குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் திட்­ட­மாக இருந்­தது. எனினும் ஹெட்டி ஆரச்சி நாட்­டை­விட்டு தப்பிச் சென்­றி­ருக்­கலாம் என்னும் நிலையில், அவ­ருக்கு எதி­ராக திறந்த பிடி­யா­ணையைப் பெற்ற பின்னர், அடுத்த கட்ட கைது பட்­டி­யலில் இருந்த தஸ­நா­யக்க இவ்­வாறு கைது செய்­யப்பட்­டுள்ளார்.

ஹெட்டி ஆரச்­சியைக் கைது செய்­வ­தற்­காக கடந்த 2017.03.01, 2017.03.21 ஆம் திக­தி­களில் அவரை குற்றப் புல­ன­ா ய்வுப் பிரிவில் ஆஜ­ராக கோரப்­பட்­டி­ருந்­தது. எனினும் அவர் அங்கு சென்­றி­ருக்­க­வில்லை. 31.03.2017 முதல் அவர் கடற்­படை உத்­தி­யோ­க­பூர்வ குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராக கோரப்பட்டிருந்தது. எனினும் அவர் அங்கு சென்றிருக்கவில்லை. 31.03.2017 அன்று அவர் கடற்படை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தும் மாயமாகியிருந்தார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய இரு முறை வெல்லம்பிட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றும் முடியாமல் போனது. இதனையடுத்தே ஹெட்டி ஆரச்சி சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தது.

 இதனையடுத்து தண்டனை சட்டக் கோவையின் 140,296,332,337,355,378,383,384 ஆகிய அத்தியாயங்களின் கீழும் துப்பாக்கிகள் கட்டளை சட்டத்தின் 44 ஆ பிரிவின் கீழும் குற்றச்சாட்டு உள்ள நிலையில் திறந்த பிடியாணை ஹெட்டி ஆரச்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே ஹெட்டி ஆரச்சியின் மேலதிகாரியாக கடமையாற்றிய தஸநாயக்க அடுத்த சந்தேக நபராக பெயரிடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

 அப்படியாயின் இந்த கடத்தல், தடுத்து வைப்பு குற்றங்கள் தொடர்பில் அறிந்திருந்தும் அவற்றை புரிந்த தனக்கு கீழ் கடமை செய்த கடற்படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது அவர்களை பாதுகாத்த கடற்படையின் முன்னாள் தளபதி கரண்ணாகொடவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

எம்.எப்.எம்.பஸீர்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-15#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.