Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழனிசாமி - தினகரன் மோதல் அதிகரிப்பு கட்சி நாளிதழில் முதல்வர் படம், செய்திக்கு தடை

Featured Replies

பழனிசாமி - தினகரன் மோதல் அதிகரிப்பு
கட்சி நாளிதழில் முதல்வர் படம், செய்திக்கு தடை
 
 
 

முதல்வர் பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. அதனால், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில், முதல்வர் படம் மற்றும் செய்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

பழனிசாமி - தினகரன் மோதல் அதிகரிப்பு   கட்சி நாளிதழில் முதல்வர் படம், செய்திக்கு தடை


தமிழக ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின், அதிகாரப்பூர்வ நாளிதழ், 'நமது எம்.ஜி.ஆர்.,' இதன் நிறுவனரான ஜெயலலிதா மறைவுக்குப்பின், நாளிதழ் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்ட போது, பன்னீர் அணிக்கு எதிரான செய்திகள், அதிகம் வெளியாகின. துணை பொதுச் செயலராக, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் உள்ளதால், அவர் தொடர்பான செய்திகளும், முதல்வர் பழனிசாமியின் அறிவிப்புகள், அவர் தொடர்பான செய்திகளும் வெளியாகின.
 

ஒதுக்கி வைப்பதாக



ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் போட்டியிட்டது, முதல்வர் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம், எரிச்சலை

ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, தினகரனை கட்சியில் இருந்து, ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். பின், சசிகலா அணியானது, முதல்வர் பழனிசாமி அணி,தினகரன் அணி என, பிளவுபட்டது. தினகரனை, 35 எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தனர்.
 

தினகரனுக்கு எரிச்சல்



அவர்களில் பெரும்பாலானவர்களை, பழனிசாமி அணியினர், தற்போது தங்கள் பக்கம் இழுத்து விட்டனர். ஆட்சி அதிகாரம் கையில் உள்ளதால், ஆட்சியையும், கட்சியையும் முழுமையாக, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கைகளையும், பழனிசாமி மேற்கொண்டுள்ளார்.
'முன்னாள் முதல்வர் பன்னீர் அணியும், சசிகலா அணியும் ஆக., 5க்குள் இணைய வேண்டும். இல்லையேல், என் பணியை துவக்குவேன்' என, ஏற்கனவே தினகரன் கூறி உள்ளார். இந்நிலையில், தன் ஆதரவாளர்களை, பழனிசாமி அணியினர்இழுத்து வருவது, தினகரனுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதனால், அவரது ஆதரவாளர்கள் சிலர், சட்டசபையில் அரசுக்கு

 

எதிராக, சில கருத்துக்களை கூறினர்.
இது, பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையிலான விரிசலை அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக, அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில், முதல்வர் படம் மற்றும் செய்திக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நாளிதழில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்பான செய்தி மற்றும் படம் எதுவும் இடம் பெறவில்லை.

முதல் பக்கத்தில், ஜனாதிபதி தேர்தல் மற்றும், 'சசிகலாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும், கர்நாடக, டி.ஐ.ஜி., ரூபா மீது, மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன்' என, கர்நாடக மாநில செயலர், புகழேந்தி விடுத்துள்ள அறிக்கை வெளியானது.
இதன் மூலம், பழனிசாமி அணிக்கும், தினகரன் அணிக்கும் இடையிலான, மோதல் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளது, வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1814168

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.