Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன சொல்ல வருகிறார் கமல்... அடுத்தடுத்த ட்வீட்!

Featured Replies

என்ன சொல்ல வருகிறார் கமல்... அடுத்தடுத்த ட்வீட்!

 

நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் முதல்முறையாகத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாலோ என்னவோ நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

கமல்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் ஒளிப்பரப்பைத் தடைசெய்ய வேண்டும்' என்று இந்து மக்கள் கட்சியினர் சில நாள்களுக்கு முன்பு விஜய் டிவி-யின் முன்பு போராட்டம் நடத்தினர். 

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் காயத்ரி ரகுராம் 'சேரி பிஹேவியர்ஸ்' என திட்டியதால் அதுவும் சர்ச்சையானது. 
இதுகுறித்து எல்லாம் விளக்கம் அளிக்க கமல் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது தமிழக அரசை பற்றியும் அவரது விமர்சனத்தை வைத்தார். இதனால், அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் தொடர்ந்து கமலை திட்டி வந்தனர். பின்னர், மு.க.ஸ்டாலின், கமலுக்கு ஆதரவாக அறிக்கை எல்லாம் வெளியிட்டார். அதற்கு கமலும் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ட்வீட்கள் செய்துள்ளார். முதல் ட்விட்டில், 'அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு  அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்' என்று ட்விட்டினார். பலரும் அர்த்தம் புரியவில்லை என தொடர்ந்து கமென்ட் செய்தனர். 

அடுத்த ட்விட்டாக, 'புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கையில் நாளை வரும் சேதி' என தலைப்பிட்டு ஒரு கவிதையை வடித்திருக்கிறார். அந்த கவிதை இதுதான். 

 

கமல்

http://www.vikatan.com/news/tamilnadu/96026-what-is-kama-haasanl-trying-to-say-through-tweets.html

  • தொடங்கியவர்

விமர்சனங்களுக்கு கவிதை மூலம் பதிலடி: அரசியலில் குதிக்கிறார் கமல்?

 
 
 

சென்னை: என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் அறிவிப்புவரும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.மேலும் கவிதை மூலம் தனது ரசிகர்களை உசுப்பிவிட்டுள்ளார்

தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் நடிகர் கமல் பேட்டி ஒன்றில் கூறினார். இதற்கு அமைச்சர்கள் சிலர் நடிகர் கமலை கடுமையாக விமர்சித்து வந்த வண்ணம் உள்ளனர். ஜெயலலிதா இருந்த போது வாய் திறக்காத கமல் இப்போது வாய் திறக்கிறார் என்றனர்.
 

 

விரைவில் அறிவிப்பு

 

 

gallerye_233427446_1814895.jpg

இது தொடர்பாக நடிகர் கமல் டுவீட்டரில் கூறியது, நேற்று முளைத்த காளான்கள் போல் என் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் விரைவில் உண்மை என்ற வெயிலில் காய்ந்து போகும். இது போன்ற. குற்றச்சாட்டுகளை அமைதிப்படுத்தும் வகையில் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1814895

  • தொடங்கியவர்

'ஊழல்புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள்': கமல் ஆவேசம்

 
'ஊழல்புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள்'படத்தின் காப்புரிமைபடத்தின் காப்புரிமைNOAH SEELAM Image caption'ஊழல்புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள்'

ஊரெல்லாம் ஊழல் பற்றிய ஓலம் கேட்பதாகவும், ஊழல் பற்றிய புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தபோதே தான் அரசியலுக்குவந்துவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் கமல் அரசியலில் ஈடுபடப்போகிறாரா என்ற யூகச் செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் இருப்பதாக கமல் கூறியதையடுத்தே இந்த யூகங்கள் எழுந்தன.

குழப்பத்தில் ஆழ்த்திய டிவிட்டர் செய்தி

இதற்கிடையில், தனது ட்விட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கிழமையன்று கமல் வெளியிட்ட செய்தி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

"அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்" என்று ஒரு ட்விட்டர் செய்தியும் அதன் பிறகு, "இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை, துடித்தெழுவோம் உம்போல் யாம் மன்னரில்லை, தோற்றிறந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர், அடிபணிவோர் அடிமையரோ, முடிதுறந்தோர் தோற்றவரோ, போடா மூடா எனலாம் அது தவறு, தேடாப் பாதைகள் தென்படா, வாடா தோழா என்னுடன், மூடமை தவிர்க்க முனைவரே தலைவர், அன்புடன் நான்" என்று ஒரு செய்தியும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன.

'புரியாதவர்களுக்கு ஆங்கிலப் பத்திரிகைகளில் நாளை வரும் செய்தி' என்றும் கமல் குறிப்பிட்டிருந்தார்.

டிவிட்டர் பதிவுபடத்தின் காப்புரிமைTWITTER Image captionடிவிட்டர் பதிவு

முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்று அந்த ட்விட்டர் செய்தியில் இருந்ததை வைத்து, கமல் அரசியலில் ஈடுபடப்போவதாக இன்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

கமல் மீது தமிழக அமைச்சர்கள் விமர்சனம்

இதையடுத்து தமிழக அமைச்சர்கள் கடுமையாக எதிர்வினையாற்றினார்கள். கமல் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருந்தார்.

புதன்கிழமையன்று கமல்ஹாசன் குறித்து செய்தியாளர்கள் முதலமைச்சரிடம் கேட்டபோது, "கமல்ஹாசனின் தொழில் சினிமாவில் நடிப்பது. அவர் அரசியலுக்கு வரும்போது அவரது கருத்துக்களுக்கு பதில் அளிப்பேன்" என்று அவர் பதிலளித்தார்.

இந்த நிலையில், புதன்கிழமையன்று மாலையில் தனது ட்விட்டரில் அறிக்கை ஒன்றை கமல் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையி்ல், "ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா, ஆதாரம் உண்டா என்று கேட்கும் குணாதிசயம் கல்லுளிமங்கர் போன்ற ஊழலாருக்கே உரித்தான குணாதிசயம்" என்று தெரிவித்திருக்கிறார்.

"ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் மானமிகு ஜெயக்குமாரோ அல்லது எலும்பு வல்லுனர் எச். ராஜாவோ நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள்.

தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தேனோ அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதி" என்றும் கமல் கூறியிருக்கிறார்.

'முதுகெலும்பிருந்தால் கமல் அரசியலுக்கு வரட்டும்'

கமல்ஹாசனின் நேற்றைய ட்விட்டர் பதிவு குறித்து விமர்சித்த பா.ஜ.கவின் எச். ராஜா, கமலுக்கு முதுகெலும்பிருந்தால் அரசியலுக்கு வரட்டும் என்று கூறியிருந்தார். அதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே எச். ராஜாவை எலும்பு நிபுணர் என்று கமல் கூறியிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன்

ஊரெல்லாம் கேட்ட ஊழல் ஓலம் மறந்திருந்தால் நினைவுபடுத்த மக்களே இருக்கிறார்கள், நடுவில் நான் எதற்குப் பூசாரி என்று கேட்டிருக்கும் கமல், அமைச்சர் கேட்டுக்கொண்டபடி ஆதாரங்களை மக்களே இணையதளங்களில் அல்லது தங்களது வசதிக்கேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பிவைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கவே இந்த அறிக்கையை விடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

ூைபடத்தின் காப்புரிமைTWITTER

மேலும், "இவ்வரசின் காலத்தில் ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் சேதி அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள். தற்கால அமைச்சர்களைவிட மாண்புமிக்கவர்கள் மக்கள் என்று அவர்கள் புரிந்துகொள்ளட்டும். குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் வரும். அத்தனை லட்சம் கேள்வியாளரையும் கைதுசெய்வீரோ அல்லது பதில் சொல்வீரோ.. இத்தனை லட்சம் பேரை கைது செய்ய போதிய சிறைகள் தமிழகத்தில் இல்லை" என்றும் கமல் கூறியிருக்கிறார்.

"சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று, ஒவ்வொரு படத்திற்கும் தனிச் சான்றிதழ் வாங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னைப் போல் வெகுசிலரைத் தவிர மற்றவரெல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர்" என்று கமல் குற்றம் சாட்டியுள்ளார்.

துணிவுள்ள சினிமாக்காரர்கள் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கிவழியும் என்றும் மக்களின் குரலைக் கேட்கும் மாண்பை எய்துங்கள் என்றும் கூறியுள்ள கமல், புகார் கொடுக்க வேண்டிய இணைய தள முகவரியையும் தன் அறிக்கையில் கொடுத்துள்ளார்.

அவரது இந்த அறிக்கை ட்விட்டரில் உடனடியாக ஆயிரக்கணக்கானவர்களால் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் அதற்கு விருப்பக்குறி இட்டுள்ளனர்.

http://www.bbc.com/tamil/india-40660295

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.