Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிக்கு பணிவிடை செய்த புகாரில் அதிகாரி அனிதா தூக்கியடிப்பு

Featured Replies

சசிக்கு பணிவிடை செய்த புகாரில் அதிகாரி அனிதா தூக்கியடிப்பு

 
 
சசிக்கு,பணிவிடை,செய்த,புகாரில்,அதிகாரி,அனிதா,தூக்கியடிப்பு
 

பெங்களூரு:அ.தி.மு.க., சசிகலாவுக்கு உதவிய குற்றச்சாட்டில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரி, அனிதாவும் துாக்கியடிக்கப்பட்டார்.

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, அ.தி.மு.க., சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும், பிப்ரவரி, 15ல்,
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், சிறைத் துறை, டி.ஜி.பி.,யாக இருந்த, சத்யநாராயண ராவ், இரண்டு கோடி ரூபாய் பெற்று, சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்ததாக, குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வெளியான புகைப்படங்களும், வீடியோவும், கர்நாடகா, தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, அறிக்கை அளித்த, டி.ஐ.ஜி., ரூபா, பெங்களூரு போக்குவரத்து கமிஷனராக, துாக்கியடிக்கப்பட்டார். டி.ஜி.பி., சத்தியநாராயண ராவ், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்; சிறை கண்காணிப்பாளர், கிருஷ்ணகுமார் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார்.

சிறைக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், இப்பிரச்னையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த, சிறை அதிகாரி அனிதாவின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை; மாறாக, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.இப்பிரச்னையைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வினய் குமார் தலைமையில், கர்நாடக அரசு அமைத்த விசாரணை கமிஷன், சிறையில் ஆய்வு நடத்தியது.

ஆனால், சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்தும், கைதிகளிடம் சேகரிக்கப்பட்ட
தகவல்களின் அடிப்படையிலும், முதல் கட்ட விபரங்களை அரசிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்களில், சிறை அதிகாரி அனிதா மட்டுமே, தற்போதும் சிறை பொறுப்பில் இருக்கிறார் என்பதையும், அவருக்கு எதிராக கைதிகள் போராடியதையும், அரசிடம் சுட்டிக் காட்டியதாக தெரிகிறது.

இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில், நேற்றும் அதிரடி காட்சிகள் அரங்கேறின. காலை 11:50 மணிக்கு, சிறைத்துறை கூடுதல், டி.ஜி.பி., மேகரிக், சிறைக்குள் சென்றார். அவர், மூன்று மணி நேரம், சிறை மருத்துவமனை, கைதிகள் அறை, உணவகம் என, பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார்; அப்போது, சிறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.

சிறையில், சசிகலாவை பார்க்க வந்தவர்கள் பற்றிய குறிப்புகள், முறைகேடுகள் குறித்த ரூபாவின் குறிப்புகள் ஆகியவற்றையும் பார்வையிட்டார். பின், தார்வாடில் முகாமிட்டுள்ள, முதல்வர் சித்தராமையாவிடம், ஆய்வு குறித்த விபரங்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறையில், சசிகலாவுக்கு உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி அனிதா, தார்வாட் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக, தார்வாட் மத்திய சிறை அதிகாரி ரமேஷ், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை அதிகாரியாக நியமிக்கப்பட்டதாகவும், சிறைத் துறையின் நிர்வாக பிரிவு துணை செயலர், எம்.ஆர்.ஷோபா உத்தரவிட்டார்.

சிறையில், சசிகலாவின் கட்டளைகளை நிறைவேற்றி வந்த சிறை அதிகாரி அனிதா, அவருக்கு தேவையான அனைத்து பணிவிடைகளையும் செய்ததாக, விசாரணைக் குழுவிடம் பெண் கைதிகள் புகார் செய்துள்ளனர். மேலும், அவருக்கு எதிராக சிறையில், கைதிகள் திடீர் போராட்டம் நடத்தியதாலும், அனிதாவை, அரசு இடமாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 

சசியை பார்க்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு


சசிகலாவின் உறவினர் தினகரன், நேற்று பெங்களூரு வருவதாக தகவல்கள் வெளியானது. அவர் வருவதற்கு முன், மதியம், 2:45 மணியளவில், சசிகலா அணியைச் சேர்ந்த, கர்நாடக மாநில செயலர் புகழேந்தி, இணை செயலர் ராஜு ஆகியோர், சிறைக்கு அருகில் காத்திருந்தனர். மதியம், 3:30 மணிக்கு, சிறை வளாகத்துக்குள் தினகரன் காரில் வந்தார்.

சிறையின் பிரதான நுழைவாயிலின், 500 மீட்டர் துாரத்திலுள்ள சோதனைச் சாவடியில், கார் தடுத்து நிறுத்தப்பட்டது. முன்பெல்லாம், தினகரன் வரும் போது, இந்த எல்லையை தாண்டி, கார் செல்ல அனுமதிக்கப்பட்டது. தற்போது, பிரச்னை எழுந்துள்ள நிலையில், 'தனியார் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது' என, போலீசார் கூறினர்.

இந்த வேளையில், ஓசூரைச் சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகரும், தினகரன் ஆதரவாளருமான ஒருவர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்குள், தினகரன், காரிலிருந்து இறங்கி, நடந்து சென்றார்.அனுமதி சீட்டு கொடுக்கும் இடத்துக்கு சென்ற தினகரன், அவரது ஆதரவாளர்கள், அங்கிருந்த சிறை ஊழியர்களிடம் அனுமதி சீட்டு கேட்டனர். சிறை ஊழியரோ, 'மாலை, 4:45 மணி ஆகிவிட்டது; அனுமதி கொடுக்க முடியாது' என, சிறை விதிமுறைகளை விளக்கினர்.

இந்த வேளையில், அங்கிருந்த, ஓசூர் அ.தி.மு.க., பிரமுகர், தமிழிலும், கன்னடத்திலும் ஆவேசமாக பேசி, ரகளையில் ஈடுபட்டார். இதனால், அங்கு, ஒரே கூச்சலும், குழப்பமுமாக காணப்பட்டது.இதற்கிடையில், தினகரன் வழக்கறிஞர் கிறிஸ்டோபர், சிறைக்குள் சென்று, அங்கிருந்த
அதிகாரியை சந்தித்து, அனுமதி கோரினார். ஆனால், 'கைதிகளை பார்க்கும் நேரம் முடிந்து விட்டது' என கூறி, திருப்பி அனுப்பி விட்டனர்.இதைக் கேட்டு எரிச்சலடைந்த, தினகரன், சிறை வளாகத்திலிருந்து வெளியேறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1816356

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.