Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசமைப்பை உருவாக்கும் பணியிலிருந்து நழுவுகிறது அரசு

Featured Replies

அரசமைப்பை உருவாக்கும் பணியிலிருந்து நழுவுகிறது அரசு

 
அரசமைப்பை உருவாக்கும் பணியிலிருந்து நழுவுகிறது அரசு
 

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் விட­யத்­தில் அர­சுக்கு ஆர்­வம் குன்­றி­விட்­டது. அந்த முயற்­சி­க­ளி­லி­ருந்து அவர்­கள் பின்­வாங்­கப் பார்க்­கின்­றார்­கள். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் தமது தனிப்­பட்ட நலன்­க­ளைப் பற்றி மாத்­தி­ரமே தற்­போது சிந்­திக்­கின்­ற­னர்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பி­னர், ஐ.நாவின் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச் செய­லா­ளர் நாய­கம் ஜெப்ரி பெல்ட்­ம­னி­டம் இடித்­து­ரைத்­துள்­ள­னர்.

கொழும்­பி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்­தில் நேற்­றுச் சுமார் ஒரு மணி நேரம் நடை­பெற்ற சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறப்­பட்­டுள்­ளது. ஆர்­வம் குறைந்து விட்­டது.

சந்­திப்­பின் ஆரம்­பத்­தில் கருத்­துத் தெரி­வித்த இரா.சம்­பந்­தன், தமிழ் மக்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சினை தொடர்­பில் அர­சின் அக்­க­றை­யீ­னம், அதில் காட்­டப்­பட்டு வரும் மெத்­த­னம் தொடர்­பில் எடுத்­துக் கூறி­யுள்­ளார்.

இதன் பின்­னர் அர­ச­மைப்பு விட­யத்­தைப் பற்றி பேசி­யுள்­ளார். இதன்­போது, புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­கள் 2016ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. அது இன்­ன­மும் தொடர்ந்து கொண்டு செல்­கின்­றது. அர­சுக்கு இந்த விட­யத்­தில் ஆரம்­பத்­தில் இருந்த அக்­கறை – ஆர்­வம் தற்­போது குறைந்­து­விட்­டது. அவர்­கள் இந்த முயற்­சி­க­ளி­லி­ருந்து பின்­வாங்­கப் பார்­கின்­றார்­கள். ஆனால் நாம் சரி­யா­கத்­தான் செயற்­ப­டு­கின்­றோம்.

இதே­வேளை, இந்த ஆண்டு ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கைக்கு இரண்டு ஆண்டு கால நீடிப்பு வழங்­கும் பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது. இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் எமது கட்­சிக்­குள்­ளேயே, கால நீடிப்பு வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்ற குரல்­கள் எழுந்­தன.

அத­னை­யும் மீறி நாங்­கள், நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் கால நீடிப்­புக்கு இணங்­கி­னோம். ஐ.நா. தீர்­மா­னத்தை அரசு மந்­த­க­தி­யி­லேயே நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றது. எதிர்­பார்த்­த­ள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை என்று இரா.சம்­பந்­தன் சுட்­டிக்­காட்­டி­னார்.

மக்­கள் கோப­மாக இருக்­கி­றார்­கள்

சந்­திப்­பில் கலந்­து­கொண்­டி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், புதிய அர­ச­மைப்பு தேவை­யில்லை. தேர்­தல் திருத்­தம் மாத்­தி­ரமே போது­மா­னது என்ற போக்­கில் அரசு செயற்­ப­டு­கின்­றது. தமிழ் மக்­கள் இதனை ஒரு­போ­தும் ஏற்­றுக் கொள்­ள­மாட்­டார்­கள். அவர்­கள் விரக்தி நிலைக்­குச் சென்­று­கொண்­டி­ருக்­கின்­றார்­கள் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

மற்­றொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான செல்­வம் அடைக்­க­ல­நா­தன், மக்­கள் எங்­கள் மீது கோப­மாக இருக்­கின்­றார்­கள். அரசு பல விட­யங்­க­ளைச் செய்­ய­வில்லை. மக்­க­ளின் கோபம் நியா­ய­மா­னது. நாங்­கள் உங்­களை (ஐ.நா.) நம்­பித்­தான் இருக்­கின்­றோம்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­தன், இலங்கை அர­சுக்கு 2 வரு­டக் கால அவ­கா­சம் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் வழங்­கப்­ப­டு­வதை எதிர்த்­த­வர்­க­ளில் நானும் ஒரு­வன்.

கால அவ­கா­சம் வழங்­கி­னால், இலங்கை இழுத்­த­டித்து ஒன்­றை­யும் செய்­யாது. காலப் போக்­கில் அர­சும் மறந்து போகும். நீங்­க­ளும் மறந்து விடு­வீர்­கள். நாங்­கள் நடுத் தெரு­வில் நிற்­க­வேண்டி ஏற்­ப­டும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

மீண்­டும் ஆயு­தப் போராட்­டம்

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன், தமிழ் மக்­கள் இந்த அரசு மீது விரக்­தி­ய­டைந்து விட்­டார்­கள். அதி­லும் இளை­ஞர்­கள் அதி உச்ச விரக்­திக்­குச் சென்­று­விட்­டார்­கள். மீண்­டும் ஆயு­தப் போராட்­டம் வரு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­க­மாக இருக்­கின்­றது என்று தெரி­வித்­துள்­ளார்.

இதே­வேளை, இந்­தச் சந்­திப்­புத் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள பத்­தி­ரி­கைச் செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

மக்­க­ளின் காணி­களை அரசு மீளக்­கொ­டுக்­கா­மல் இருப்­ப­தற்­கான எவ்­வித நியா­ய­மான கார­ணங்­க­ளும் இல்லை எனத் தெரி­வித்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர், காணி­கள் மக்­க­ளி­டம் மீளக்­கை­ய­ளிக்­கப்­ப­ட­வேண்­டும் என­வும் வலி­யு­றுத்­தி­னார்.

காணா­மற்­போ­னோர் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த இரா.சம்­பந்­தன் பல்­வேறு ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள சமர்ப்­ப­ணங்­க­ளின் அடைப்­ப­டை­யில் 20 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோர் காணா­மற்­போ­யுள்­ள­தா­கத் தெரி­வித்த அதே­வேளை, இவர்­க­ளில் அநே­க­மா­னோர் ஆயு­தக் குழுக்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் அல்­லர் என்­ப­த­னை­யும் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

அன்­பிற்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­த­தென்­பதை அறி­யாத நிலை­யில் மக்­கள் பெரிய மன­அ­ழுத்­தத்­தில் காணப்­ப­டு­கின்­ற­மை­யை­யும், இந்­த­நி­லைமை தொட­ர­மு­டி­யாது என்­ப­த­னை­யும் வலி­யு­றுத்­தி­னார்.

தளம்­பும் வாக்­கு­றுதி

பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டம் தொடர்­பில் கருத்து தெரி­வித்த கூட்­ட­மைப்­பின் தலை­வர், இந்­தச் சட்­டம் நீக்­கப்­ப­டும் என்ற உத்­த­ர­வா­தத்­தைப் பன்­னாட்­டுச் சமூ­கத்­திற்கு இலங்கை அரசு வழங்­கி­யி­ருந்­தது. இதனை நீக்­கு­வது தொடர்­பில் மிகச் சிறி­ய­ளவு முன்­னேற்­றமே காணப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் சுமந்­தி­ரன், இலங்கை அர­சா­னது இந்த விட­யம் தொடர்­பில் மிகத்­தெ­ளி­வான உத்­த­ர­வா­தத்தை ஐ.நா.வுக்கு வழங்­கி­யி­ருந்­த­மை­யைச் சுட்­டிக்­காட்­டிய அதே­வேளை, அர­சின் அமைச்­சர்­கள் அந்த உத்­த­ர­வா­தத்­திற்கு எதி­ரான கருத்­துக்­க­ளைத் தற்­போது முன்­வைப்­ப­த­னை­யும் எடுத்­துக்­காட்­டி­னார்.

அர­ச­மைப்பு

கடந்த 30 வரு­டங்­க­ளுக்­கும் மேலாக அர­ச­மைப்­புத் தொடர்­பில் அநேக விட­யங்­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும், முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் அரசு உட்­பட அனைத்து அர­சு­க­ளும் நடை­மு­றை­யி­லுள்ள அர­ச­மைப்­பினை மாற்­ற­வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாய் இருந்­த­னர் என­வும் தெரி­வித்­தார். தற்­போது புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் தடு­மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது.

கால­வ­ரை­ய­றை­யின்றி இந்த விட­யங்­க­ளில் நாம் காத்­தி­ருக்க முடி­யாது என­வும், தாம் அர்ப்­ப­ணிப்­பு­டன் இந்த விட­யத்­தில் செய­லாற்­று­வ­தா­க­வும் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு நாட்­டி­னைப் பிள­வு­ப­டுத்­தும் தீர்­வி­னைக் கோர­வில்லை.

மாறாக அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளி­ன­தும் மக்­க­ளி­ன­தும் ஒத்­து­ழைப்­போ­டும் ஒப்­பு­த­லோ­டு­மான ஒரு தீர்­வி­னையே வலி­யு­றுத்­து­வ­தா­க­வும் தெரி­வித்­தார். மேலும் சில்­ல­றைத்­த­ன­மான அர­சி­யல் விளை­யாட்­டுக்­க­ளைச் செய்து எமது மக்­களை மீண்­டும் பாதிக்­கப்­பட்ட சமூ­க­மாக மாற்­று­வ­தற்கு இவர்­க­ளுக்கு இட­ம­ளிக்­க­மு­டி­யாது என­வும் அவர் தெரி­வித்­தார்.

ஐ.நா. தீர்­மா­னம்

ஐ.நா. தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் காணப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் திருப்தி அடைய முடி­யாது என­வும் இத­னைத் துரி­த­மாக நடை­மு­றைப்­ப­டுத்த அரசு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டும் என­வும் தெரி­வித்­தார்.

கொடுக்­கப்­பட்ட கால அவ­கா­சத்­தி­னைச் சரி­யா­கப் பயன்­ப­டுத்­திப் பிரே­ர­ணையை உச்­ச­பட்­சத்­தில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் தேவை­யான படி­மு­றை­களை அரசு மேற்­கொள்­ளும் என்ற எதிர்­பார்ப்பு எம்­மி­டம் இருந்­த­மை­யி­னால் அரசு கால­அ­வ­கா­சத்­தி­னைக்­கோ­ரிய போது நாம் அதனை எதிர்க்­க­வில்லை.

ஆனால், கடந்த சில மாதங்­க­ளில் இடம்­பெற்­றுள்ள முன்­னேற்­றம் தொடர்­பில் ஆய்வு செய்­கின்­ற­போது தமிழ் மக்­கள் நிச்­ச­ய­மா­கத் திருப்தி அடை­ய­வில்லை – என்­றார்.

http://uthayandaily.com/story/12937.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.