Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசி சொகுசுக்காக ஹவாலா மூலம் ரூ.2 கோடி கைமாறியது...அம்பலம்!

Featured Replies

சசி சொகுசுக்காக ஹவாலா மூலம் ரூ.2 கோடி கைமாறியது...அம்பலம்!

 

பெங்களூரு:அ.தி.மு.க., சசிகலா, பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகளை அனுபவிக்க, ஹவாலா முறையில், இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தந்தது அம்பலமாகி உள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கூடுதல் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதை, டி.ஐ.ஜி., ரூபா, மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, கர்நாடகா தலைநகர் பெங்களூரில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்தாலும், தனி அறை, பார்வையாளர்களை சந்திக்க வரவேற்பு அறை, பிடித்த உணவுகளை சமைத்து வழங்க கைதிகளிலே உதவியாளர்கள், சமையலறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகளுடன் அவர் வலம் வந்ததை, டி.ஐ.ஜி., ரூபா அம்பலப்படுத்தினார்.

விஸ்வரூபம்

இதற்காக, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், அவர் அறிக்கைஅளித்தார். இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, பெங்களூரு சிறையில் நடந்த விதிமீறல்கள் குறித்து, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வினய் குமார், பெங்களூரு மாநர குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ரவி, மைசூரு சிறை கண்காணிப்பாளர் ஆனந்த ரெட்டி ஆகியோர்விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள், முதற்கட்ட விசாரணை அறிக்கையை, நாளை தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், சசிகலாவின் அக்கா மகன், தினகரனின் நண்பரான மல்லிகார்ஜுனாவிடம், இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், டில்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, கர்நாடகா முன்னாள் அமைச்சரும், மாநில காங்., தலைவருமான, பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ், தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியது, விசாரணையில் தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து, பிரகாஷிடம் டில்லியில் விசாரணை நடந்தது. அப்போது, சசிகலாவுக்கு, சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர, ஹவாலா முறையில், இரண்டு கோடி ரூபாய் கைமாறிய அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

போலீசாரின் அடுத்த கட்ட விசாரணைகளில், சசிகலாவுக்காக, ஹவாலா பரிவர்த்தனை நடந்தது உறுதியானது.ஹவாலா முறையில் கைமாறிய பணம், சசிகலா அடைக்கப்பட்டுள்ள, பரப்பன அக்ரஹாரா சிறையில், உயர்மட்ட அதிகாரிகள் முதல், கீழ் மட்ட காவலர்கள் வரை, தாராளமாக பகிர்ந்து அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 

 

தகவல் உறுதி


சிறையில் சசிகலாவை, பிரகாஷ் சந்தித்து பேசியதும், விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபாவும், இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
சசி மீதான புதிய குற்றச்சாட்டுகள், விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக, சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
 

 

சிறப்பு வசதிகள் ரத்து


பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் எதுவும் அளிக்கக்கூடாது என்று, சிறைத்துறை கூடுதல், டி.ஜி.பி., மேகரிக், சிறை அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகளை, நேற்று பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவுகள்:
* கைதிகளை பார்க்க வரும் உறவினர்களை, 10 நிமிடம் மட்டுமே சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும்
* சிறைக்குள், கைதிகளுக்கு கிடைத்து வந்த, பீடி, சிகரெட், கஞ்சா, மதுபானம், மொபைல் போன் போன்றவை, இனிமேல் கிடைக்காத வகையில், சோதனைகளை பலப்படுத்த வேண்டும்
* சிறை கைதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த, வீட்டு உணவுக்கு தடை விதிக்கப்படுகிறது
* போலீசார் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும்
* கர்நாடகாவின் அனைத்து சிறைகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், 'மொபைல் போன் ஜாமர்'கள் சீரமைக்கப்பட வேண்டும்
* முறைகேடுகள் நடக்க உதவியாக இருந்த அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்.
இவ்வாறு அவர்உத்தரவிட்டுள்ளார்.

சசி அறையில் கட்டில், மெத்தை, எல்.இ.டி., 'டிவி'

டி.ஐ.ஜி., ரூபா, நமது நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டி:


சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து, உங்களுக்கு எப்படி தகவல் கிடைத்தது?
சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக பதவியேற்ற பின், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ஆய்வுக்கு சென்றேன். அப்போது, அங்கிருந்த கைதிகளில் சிலரும், ஊழியர்கள் சிலரும், படங்கள், வீடியோக்களுடன், என்னிடம் புகார் கூறினர். சிறையில் நடக்கும், பல முறைகேடுகளை அவர்கள் தெரிவித்தனர்.

சசிகலாவை நேரில் சந்தித்தீர்களா?

ஆம்; சந்தித்து பேசினேன். இரண்டு கேள்விகள் கேட்டேன். கன்னடம் தெரியுமா என்ற கேள்விக்கு, கற்று வருவதாகவும், நன்றாகஉள்ளீர்களா என கேட்டதற்கு, ஆம் என்றும்
பதிலளித்தார்.

சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட ஐந்துஅறைகளை நேரில் பார்த்தீர்களா?

பார்த்தேன். ஒரு அறையில், சசிகலா மற்றும் இளவரசியின் உடைகள்; மற்றொரு அறையில், சமையல் பாத்திரங்கள், படுக்கை மற்றும்மருந்துகள் வைக்கப்பட்டிருந்தன. 150 அடி நீளமுள்ள வராண்டாவும், அப்பகுதியிலுள்ள ஐந்து அறைகளும், அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தன.
அந்த இடத்தில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருந்ததையும் கண்டுபிடித்தேன்.

சாதாரணமாக, தண்டனை கைதிகள், சிறையில் வழங்கும் படுக்கை, சீருடையை பயன்படுத்த வேண்டும். ஆனால், ஒரே அறையில், இரண்டு மரக்கட்டில்கள், மெத்தை, தலையணைகள் இருந்தன.

நீங்கள் பார்த்த போது, சசிகலா என்ன உடையில் இருந்தார்?

நைட்டியில் இருந்தார். அவர் பயன்படுத்தியசுடிதார், சேலை உள்ளிட்ட உடைகளும்
அங்கிருந்தன.

சசிகலா அறையில், 'டிவி' இருந்ததா?

ஆம்; சாதாரணமாக, 30 முதல், 40 கைதிகளுக்கு, ஒரு, 'டிவி' வழங்கப்பட்டிருக்கும். ஆனால், சசிகலா இருந்த தனி அறையில், எல்.இ.டி., 'டிவி' இருந்தது.

சசிகலாவின் பார்வையாளர்கள், அவரை எந்த அறையில் சந்தித்தனர்?

சிறை வளாகத்திலுள்ள முதல் மாடியில்,அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தஅறையில் சந்தித்துள்ளனர். அதிகாரிகளுக்குபோடப்பட்டிருக்கும் நாற்காலிகளை அவர்கள் பயன்படுத்தினர்.
கைதிகள், தங்கள் பார்வையாளரை சந்திக்க வரும் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா எண், 7ல், ஒரு நாள் கூட, சசிகலா தொடர்பான எந்த காட்சியும் பதிவாகவில்லை.
சிறையில் மொபைல் தொடர்புகளை செயலிழக்க வைக்கும், 'ஜாமர்' கருவிகள் உள்ளனவா?
இருக்கின்றன; ஆனால், சிறையில் நான் ஆய்வுக்கு சென்ற போது, ஜாமர் இயங்கவில்லை என்ற தகவல் எனக்கு கிடைத்தது.

சிறையிலிருந்து சசிகலா வெளியே சென்று வந்தாரா?

அப்படி எதுவுமில்லை.

லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டுநிரூபிக்கப்பட்டால், சசிகலாவுக்குஎன்ன தண்டனை கிடைக்கும்?

குற்றம் நிரூபிக்கப்பட்டால், கண்டிப்பாக தண்டனை கிடைக்கும். சிறைத்துறையில் நான்,
20 நாட்கள் தான் பொறுப்பு வகித்தேன்.எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பது எனக்கு தெரியாது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1817715

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.