Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைக்கப்படும் சகாயம் கமிஷன்... புதைகுழியில் கிரானைட் வழக்குகள்!

Featured Replies

கலைக்கப்படும் சகாயம் கமிஷன்... புதைகுழியில் கிரானைட் வழக்குகள்!

 

 

‘விலைமதிப்புமிக்க கனிமவளம், பொதுவான சமூகச் சொத்து - தேசச் சொத்து. அதை, தனிநபர்களும் நிறுவனங்களும் சுரண்டுவதை, சூறையாடுவதை அனுமதிக்க முடியாது. ஏழை விவசாயிகளின் - கிராம மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துவிட்டு, ஒரு சில தனியார் நிறுவனங்கள் பெரும் பலன்களை அடைவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது!’
 
- கிரானைட் கொள்ளை பற்றி 2012-ம் ஆண்டு தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பிய அன்றைய மதுரை கலெக்டர் சகாயம், தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு, முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்தன; கிரானைட் அதிபர்கள் அடித்த கொள்ளைகள் வெடித்துக் கிளம்பின; அவர்கள் வெட்டிச் சிதைத்த மலைகளின் அளவுக்கு, அவர்களுக்கு எதிராகப் புகார்கள் குவிந்தன. அரசுக்குக் குறைந்தபட்சம் 16,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.

p2b.jpgஇதுபற்றி விசாரிக்க உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சகாயம் கமிஷன் கலைக்கப்பட உள்ள நிலையில், வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி உயர் நீதிமன்றம் தொடங்கி, மேலூர் நீதிமன்றம் வரை விசாரித்தோம். வழக்குகளைப் பலவீனப்படுத்தும் வேலைகளை, சிலர் செய்துகொண்டிருக்கின்றனர்.

கொள்ளையும்... வேட்டையும்!

2012 மே 19-ம் தேதி, அன்றைய மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், 13 பக்க அறிக்கையைத் தமிழக அரசுக்கு அனுப்பினார். ‘ந.க.எண்.488/2012 கனிமம்’ என்ற எண்ணுள்ள அந்த அறிக்கையோடு, சில ஆவணங்களையும், ஆதாரங்களையும் அவர் இணைத்திருந்தார். அதன்பிறகு அவர், மதுரையில் இருந்து மாற்றலாகிச் சென்றுவிட்டார். அவருக்குப்பின் மதுரை கலெக்டராக வந்த அன்சுல் மிஸ்ரா... அனல் மிஸ்ராவாக மாறி, கிரானைட் கொள்ளையர்களைக் கலங்கடித்தார்.

கிரானைட் அதிபர்கள் அடித்த கொள்ளையைத் துல்லியமாகக் கண்டுபிடித்தார் அன்சுல் மிஸ்ரா. கிரானைட் நிறுவனங்கள், ரெய்டுகளால் துளைத்தெடுக்கப் பட்டன. ஆறாயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன. சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ-க்களிடமிருந்து புகார்கள் வாங்கப்பட்டன. 30 ஆண்டுகளாக மதுரையை மையமாக வைத்து, தனி அரசாங்கம் நடத்தி வந்த கிரானைட் அதிபர்கள் ஒடுங்கிப்போயினர். மேலூர், மேலவளவு, கீழவளவு, ஒத்தக்கடை, கீழையூர் கிராமங்களைப் பல ஆண்டுகளாகத் தெறிக்கவிட்ட கிரானைட் குவாரிகளுக்குப் பூட்டுப் போடப்பட்டன.

கிரானைட் நிறுவனங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மேலூர் காவல் நிலையத்தில் தனி அறையில் வைத்துப் பூட்டி சீல் வைக்கப்பட்டன. மேலூர், ஒத்தக்கடை, மேலவளவு, கீழவளவு, கீழையூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. தனி விசாரணை டீம்களும் அமைக்கப்பட்டன.  மொத்தம் 98 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த வழக்குகள் தவிர்த்து, கிரானைட் கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட கிராம மக்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்ய, சகாயம் கமிஷன் அமைக்கப்பட்டது.

p2ed.jpg

வி.ஏ.ஓ-க்கள் கொடுத்த புகார்கள் அனைத்தும் கிரானைட் நிறுவனங்களின் முறைகேடுகள், கிரானைட் கொள்ளைகள் தொடர்பானவை. இவற்றில் புகார்தாரர் தமிழக அரசாங்கம்தான். இவை போலீஸ் வழக்குகள் ஆயின. சகாயம் கமிஷனிடம் அளிக்கப்பட்ட புகார்கள் அனைத்தும், கிரானைட் கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், நிலத்தை இழந்தவர்களின் குமுறல்கள். இவற்றில், பாதிக்கப்பட்ட நபர்களே புகார்தாரர்கள்.

பல ஆண்டுகளாக கிரானைட் கற்களைக் கொள்ளையடித்து வந்தவர்களுக்கு எதிரான வேட்டை, 2012 முதல் 2015 வரை தீவிரமாக நடைபெற்றது. பி.ஆர்.பி., பி.ஆர். சிந்து, ஒலம்பஸ், ஐஷ்வர்யா, கோரமண்டல் ஆகிய கிரானைட் நிறுவனங்கள், வழக்குகளில் சேர்க்கப்பட்டன.

ஆவணத் திருட்டு!

கிரானைட் நிறுவனங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளில் சிக்கிய ஆவணங்கள், மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்துப் பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட காலத்தில் அவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் இருந்தன. அதன்பிறகு, சில ஆவணங்கள் மட்டும் நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டன. அப்படிக் கொடுத்தபோது மிகப்பெரிய முறைகேடு அரங்கேற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ‘‘கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஓர் ஆவணத்தையே ஐந்தாறு ஆவணங்களாகப் பிரித்து தனித்தனி ஆவணமாகக் கணக்குக் காட்டினர். உதாரணமாக, ஒரு நிலப்பத்திரம் இருந்தால், அதோடு தாய்ப்பத்திரம், இதற்கு முன் உரிமையாளராக இருந்தவரின் பத்திரம் எனக் கூடுதல் ஆவணங்கள் சேர்ந்து இருக்கும். இது ஒரே ஆவணமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இதைப் பிரித்து பல ஆவணங்களாகக் கணக்குக் காட்டினர். இப்படிச் செய்ததன் மூலம், பலவீனமான 1,500 முதல் 2,000 ஆவணங்களையே 6,500 ஆவணங்களாக மாற்றி விட்டனர். அதையே நீதிமன்றத்துக்கும் கணக்குக் காட்டியுள்ளனர். உண்மையான – வலுவான - மற்ற ஆவணங்கள், யாரிடமிருந்து கைப்பற்றப்பட்டதோ, அவர்களிடமே விலைபேசி விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது’’ என்று சொல்கின்றனர், சென்னையில் உள்ள சில நீதித்துறை அலுவலர்கள். ‘‘இதுபோல, மேலூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் சிலவும் மர்மமான முறையில் காணாமல் போய்விட்டன’’ என்று சொல்கிறார்கள்.

தறிகெட்ட விசாரணை!

கிரானைட் கொள்ளையை விசாரிக்க சிறப்பு விசாரணை டீம்களை அன்றைய மதுரை போலீஸ் எஸ்.பி விஜயேந்திர பிதாரி, நியமித்தார். விஜயேந்திர பிதாரி நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி-யாக இருந்தபோது, அவருக்குக் கீழ் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் பிரகாஷ், கிரானைட் கொள்ளை தொடர்பான சிறப்பு விசாரணைக்காக மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். இதைப் போலவே, டி.எஸ்.பி-க்கள் குருசாமி, சூரியமூர்த்தி, தங்கவேலு, மணிரத்னம், இன்ஸ்பெக்டர்கள் முத்துப்பாண்டி மற்றும் ராஜாசிங் ஆகியோரும் சிறப்பு விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களிடம் கிரானைட் தொடர்பான வழக்குகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

p2c.jpg

‘‘98 வழக்குகளில் பி.ஆர்.பழனிச்சாமியின் பி.ஆர்.பி தொடர்பான மிக முக்கியமான 20 வழக்குகளை இன்ஸ்பெக்டர் பிரகாஷ் எடுத்துக் கொண்டார். மீதியுள்ள வழக்குகளில் எந்தெந்த வழக்குகளை யார் யார் விசாரிக்க வேண்டும் என்பதையும் அவர்தான் தீர்மானித்தார். மொத்த டீமையும் பிரகாஷ்தான் கட்டுப்படுத்தினார். இன்னும் சொல்லப் போனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிராக யார் சாட்சி சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களே சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். உண்மையாக பாதிக்கப்பட்டு, சாட்சி அளிக்க வந்தவர்கள் ஓரம்கட்டப்பட்டனர். தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைகள் அனைத்தும், மிகவும்  பலவீனமாக இருப்பதுபோலவே தயாரிக்கப்பட்டுள்ளன. அந்தளவுக்கு அதில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் அபத்தமாக உள்ளன’’ எனப் புலம்புகிறார்கள், பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

“சிறப்பு விசாரணை அதிகாரிகள் ஏழு பேர் என்றாலும், புகார்கள் அனைத்தையும் விசாரித்தது அந்த ஏழு பேரில் ஒருவர்தான். உயர் அதிகாரிகளின் ஆசி பெற்ற அந்த இன்ஸ்பெக்டர் காட்டிய இடங்களில் மற்றவர்கள் கையெழுத்து மட்டுமே போட்டனர்” என்கின்றனர், போலீஸ் வட்டாரத்தில்.

மாஜிஸ்திரேட் இல்லாத நீதிமன்றம்!

‘கிரானைட் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்’ எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு, தற்போது அதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான எந்த வேலையும் தொடங்கப்படவில்லை. இந்தப் பிரச்னை ஒரு பக்கம் இருக்க... ஏற்கெனவே இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாஜிஸ்திரேட்டே தற்போது இல்லை என்பது மற்றொரு பிரச்னையாக உள்ளது. இந்த நீதிமன்றத்தில் இருந்த மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி, உயர் நீதிமன்ற விசாரணை அடிப்படையில் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டதும் கிரானைட் பிரச்னையில்தான்.

p2a.jpg

பி.ஆர்.பழனிச்சாமிக்கு எதிராக தனிநபர்கள் இரண்டு பேர் நடத்திய வழக்கில், அவரை மகேந்திரபூபதி விடுதலைசெய்தார். அதையொட்டி அவர் மீது உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, விசாரணை நடத்தப்பட்டது. அவர் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு முகாந்திரம் இருப்பதாகச் சொல்லி, 2016 மார்ச் 1-ம் தேதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். அதன்பிறகு, இந்த நீதிமன்றத்துக்கு இப்போதுவரை மாஜிஸ்திரேட் நியமனம் செய்யப்படவில்லை. அதனால், அந்த நீதிமன்றமே செயல்படாத நிலையில் உள்ளது. அதனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் விசாரணை நடக்கவில்லை. மீதியுள்ள வழக்குகளுக்குக் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்ய முடியாத நிலை.

கறார் காட்டும் அரசு வழக்கறிஞர்!

98 கிரானைட் வழக்குகளையும் அரசு சார்பில் வழக்கறிஞர் ஷீலா நடத்துகிறார். இவர் கண்டிப்புடனும், நேர்மையுடனும் இருப்பதால்தான் இந்த வழக்குகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ‘‘இவர், முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை வழக்கில் அரசு சார்பில் ஆஜரானவர். அப்போது அந்த வழக்கை மிக நேர்மையாகவும், கறாராகவும் நடத்தினார். அப்படிப்பட்ட வழக்கறிஞர் இருக்கும்போது, வழக்கு நடப்பது ஆபத்து என்று குற்றம்சாட்டப்பட்ட சிலர் கருதுகின்றனர். அதனால், போலீஸை வளைத்து, முடிந்தவரை வழக்குகளை இழுத்தடிக்கின்றனர்’’ என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்குச் சொந்தமான ஒலம்பஸ் கிரானைட் நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் ஏற்படுத்தப்படும் தாமதத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசுக்குச் சொந்தமான டாமின் நிறுவனங்களில் வெட்டியெடுக்கப்பட்ட கிரானைட் கற்களை, ஒலம்பஸ் நிறுவனத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 2012-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு, இன்றுவரை கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது.

p2.jpg

சகாயம் கமிஷன் வழக்குகள்!

கிரானைட் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்கள், சகாயம் கமிஷனில் கொடுத்த புகார்களின் அடிப்படையில் 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் மேலூர், ஒத்தக்கடை, மேலவளவு, கீழவளவு, கீழையூர் காவல்நிலையங்களில் பதிவுசெய்யப் பட்டுள்ளன. அது தொடர்பான அறிக்கையையும் நீதிமன்றத்தில் சகாயம் சமர்ப்பித்துவிட்டார். சகாயம் கமிஷனும் விரைவில் கலைக்கப்பட உள்ளது. ஆனாலும், அந்த கமிஷன் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவற்றில் எப்.ஐ.ஆர் போடப்பட்டதோடு சரி; அதற்கு மேல் ஓர் அடி கூட நகரவில்லை.

சகாயம், அன்சுல் மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் அளித்துள்ள ஒரே ஆறுதல்... கிரானைட் கொள்ளையர்கள் பல ஆண்டுகளாக சில கிராமங்களில் வைத்துக்கொண்டிருந்த வெடிகள் இப்போது அங்கு வெடிப்பதில்லை. அதே நேரத்தில் வழக்குகள், வாய்தாக்கள் மூலம் இழந்த வளங்களும், தனிநபர்கள் இழந்த உடைமைகளும், பாதிப்புகளும் சரிசெய்யப்படும் என்று அந்தக் கிராம மக்கள் துளியும் நம்பவில்லை.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.