Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சோதனை என்ற பெயரில்...' - சிறையில் உறவுகளிடம் கலங்கிய சசிகலா #VikatanExclusive

Featured Replies

'சோதனை என்ற பெயரில்...' - சிறையில் உறவுகளிடம் கலங்கிய சசிகலா #VikatanExclusive

 
 

sasikala_prison_12346.jpg

டி.டி.வி.தினகரனின் மாமியார் சந்தானலட்சுமியின் இறுதி அஞ்சலியில் சசிகலா பங்கேற்க சிறைத்துறை அனுமதி மறுத்ததால், அவர் சோகத்தில் உள்ளார். மேலும், சோதனை என்ற பெயரில் நடத்தப்படும் சிறைத்துறை அதிகாரிகளின் கெடுபிடிகளால், சசிகலா மனவேதனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திட்டமிட்ட சதி

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி, சந்தானலட்சுமி. இவரின் மகளைத்தான் டி.டி.வி.தினகரன் திருமணம் செய்துள்ளார். சந்தானலட்சுமி, நேற்று சென்னையில் மரணமடைந்தார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி, தஞ்சாவூரில் இன்று நடைபெறுகிறது. பரோலில் சசிகலா செல்ல சிறைத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அதை கர்நாடக சிறைத்துறை நிராகரித்துவிட்டது. இதனால் அவர் சோகத்தில் உள்ளார்.

சிறையில் சசிகலாவும் இளவரசியும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசிக் கொள்கின்றனர். ஆனால், சுதாகரன் ஆண்கள் சிறையில் இருப்பதால் அவர் யாரையும் சந்திப்பதில்லை. சசிகலாவுக்குப் பரோல் மறுக்கப்பட்டதும்  'இது திட்டமிட்ட சதி' என்று இளவரசியிடம் சசிகலா சொல்லிக் கதறியழுததாகச் சொல்கின்றனர் உள்விவர வட்டாரங்கள். 

மூன்று நாள்கள் 

சசிகலா தரப்பில் பேசியவர்கள், "கடந்த ஏப்ரல் மாதம் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், நெஞ்சுவலியால் மரணமடைந்தார். மகாதேவன் மீது தனிப் பாசம் வைத்திருந்தார், சசிகலா. இதனால், அவர் பரோலில் வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் வரவில்லை. கடைசியாக மகாதேவனின் முகத்தைக்கூட அவரால் பார்க்க முடியாமல்போனது குடும்பத்தினருக்குக் கடும் வருத்தம். மற்ற அண்ணிகளைவிட சந்தானலட்சுமியை சசிகலாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க சசிகலா விரும்பினார்.

இதனால், சசிகலா பரோலில் வர சிறைத்துறையினரிடம் ஐந்து நாள்கள் அனுமதி கேட்டோம். குறைந்தபட்சம் மூன்று நாள்கள் கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால், சந்தானலட்சுமி, சசிகலாவுக்கு ரத்த சொந்தமில்லை என்று காரணம்காட்டி சிறைத்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், அவர் சிறையில் சோகத்தில் உள்ளார். 

 பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா

சசிகலாவின் மனநிலை 

சிறை விதிமுறைகளை மீறி, சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பிறகு, அவருக்குக் கடும் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. சோதனை என்ற பெயரில், இரவில் அவரைத் தூங்கவிடாமல் சிறைக்காவலர்கள் தொந்தரவு செய்வதாக வழக்கறிஞர்களைச் சந்தித்தபோது சசிகலா சொல்லி அழுதுள்ளார். அப்போது, 'சிறையிலிருந்து வெளியில் வர ஏதாவது வழியிருக்கிறதா' என்று அவர் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

சந்தானலட்சுமியின் இறுதிச் சடங்கைக் காரணம்காட்டி சிறையிலிருந்து சசிகலாவை வெளியில் அழைத்துவர ஏற்பாடுசெய்யப்பட்டது. ஆனால், அதற்கும் அனுமதி கிடைக்காததால், மனவேதனையில் இருக்கிறார். சந்தானலட்சுமி இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு டி.டி.வி.தினகரன், சசிகலாவைச் சந்திக்க உள்ளார். தொடர்ந்து மரணங்கள் ஏற்படுவதால், சசிகலா குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு, ஏதாவது பரிகார பூஜை செய்யலாமா எனவும் ஆலோசித்துவருகிறார்கள்" என்றனர். 

இரண்டு முறை வந்த டி.டி.வி.தினகரன் 

சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறைத்துறை விதிப்படி சசிகலா நடத்தப்படுகிறார். அவருக்கும் இளவரசிக்கும் எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை. அவர்கள் இருவரும் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதி. பிளாக்கில் பணியாற்றும் சிறைக்காவலர்களையும் கண்காணித்துவருகிறோம். மேலும், சசிகலா, இளவரசி இருவரும் எங்களது ரகசியக் கண்காணிப்பில் உள்ளனர்.

சிறையில் சசிகலாவுக்குச் சலுகை வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. அதன்பிறகு, சசிகலாவைச் சந்திக்க சிறைக்கு டி.டி.வி.தினகரன் இரண்டு முறை வந்தார். ஆனால், அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சசிகலாவை, அவரது வழக்கறிஞர்கள் மட்டும் சந்தித்துள்ளனர். சசிகலாவுக்கு பரோல் அனுமதி வழங்கப்படாததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை"என்றார்.

வீடியோ விவகாரம் 

சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலாவுக்குச் சிறையில் வழங்கப்பட்ட சலுகைகள்குறித்த வீடியோக்கள் எடுத்தது சிறைவாசிகள்தான் என்ற தகவல் உள்ளது. அவர்கள் யார் என்று விசாரணை நடந்துவரும் நேரத்தில், சசிகலா தரப்பினரால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது. தற்போது, சசிகலா பரோலில் செல்ல அனுமதி கொடுக்க சிறைத்துறை விதியில் இடமில்லை. மகாதேவன் மரணமடைந்தபோது, சசிகலா சிறையிலிருந்து செல்ல விரும்பவில்லை. ஆனால் இப்போது, சிறையிலிருந்து எப்போது வெளியேறலாம் என்ற மனநிலையில் இருக்கிறார். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி சிறையிலிருந்து வெளியேறும் மனநிலையில் இருந்த சசிகலாவுக்கு, சந்தானலட்சுமி மரணம் காரணமாக அமைந்தது. 

உடனடியாக பரோலில் செல்ல அனுமதி கேட்டார். ஆனால், 'அனுமதி வழங்க முடியாது' என்று கூறப்பட்டதும் அவர் முகத்தில் கோபம் கொப்பளித்தது. உடனடியாக தன்னுடைய அறைக்குள் சென்று கதறி அழுதார். சந்தானலட்சுமி மரணமடைந்த தகவலைக் கேட்டதிலிருந்து சசிகலா பதற்றமாகவே இருக்கிறார். அவருக்கு இளவரசியால்கூட ஆறுதல் சொல்லமுடியவில்லை. அவரது ரத்த அழுத்தம் அதிகமாகவே இருக்கிறது. அவர் நேற்றிலிருந்து உணவும் மருந்தும் சரிவர உட்கொள்ளவில்லை. இதனால், மருத்துவர்கள் அவரைக் கண்காணித்துவருகின்றனர்" என்றனர்.  

தூங்காத சசிகலா

தற்போது சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் யாரிடமும் அதிகம் பேசுவதில்லையாம். இளவரசியிடம் மனம்விட்டுப் பேசுவதாகச் சொல்கின்றன சிறை வட்டாரங்கள். மேலும், சிறைத்துறையினரின் கண்டிப்பால் சசிகலா முகத்தில் கோபம் அதிகமாகக் காணப்படுகிறதாம். அந்தக் கோபத்தை அடிக்கடி சிறைக் காவலர்களிடம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது. சில நாள்களுக்கு முன்பு,  சிறை அறையில் தூங்காமல் விழித்திருந்துள்ளார். அதை, பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக்காவலர்கள் பார்த்து, உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். 

 

பிறகு, சசிகலா அறைக்குச் சென்ற சிறைக்காவலர்கள், அவரைத் தூங்குமாறு சொன்னதற்கு, 'எனக்குத் தூக்கம் வரவில்லை' என்று பதிலளித்துள்ளார். இதனால், சிறைக்காவலர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர்.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா  குடும்பத்தில் இரண்டு பேர் மூன்று மாதங்களுக்குள் மரணமடைந்ததால், அவர் கடும் மனவருத்தத்தில் இருக்கிறார். இதனால், தனிமையை அவர் அதிகம் விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/97116-sasikala-cried-and-complaints-to-her-relatives-in-prison.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.