Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

மிரட்டல்,விடுக்கும்,தினகரனை,அடக்க,பழனிசாமி,வியூகம்

'அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணையா விட்டால், ஆக., 5ல், முக்கிய முடிவுகள் எடுக் கப்படும்' என, மிரட்டல் விடுத்துள்ள தினகரன், ஆக., 4ல், அ.தி.மு.க., தலைமையகம் செல்ல வும், பின், தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செய்து, ஆதரவாளர்களை திரட்டவும் திட்டமிட்டுள்ளார்.

 

மிரட்டல்,விடுக்கும்,தினகரனை,அடக்க,பழனிசாமி,வியூகம்

அதற்கு, 'செக்' வைக்கும் வகையில், கட்சி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தால், அவரை கைது செய்து, சிறையில் அடைக்க, முதல்வர் பழனிசாமி, வியூகம் வகுத்துள்ளார். இதன் மூலம், ஆட்சி மட்டுமின்றி, கட்சியை யும், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர, பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதற்கான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க, அவர்கள் தயாராகி வருகின்றனர்.'பன்னீர் மற்றும் பழனிசாமி என, அ.தி.மு.க.,வின் இரு அணிகளும், 60 நாட்களுக்குள் இணைய வில்லை என்றால், ஆக., 5ல், என் தலைமை யில், முக்கிய முடிவு எடுக்கப்படும்' என, திஹார் சிறையில்இருந்து ஜாமினில் வெளியே வந்ததும், சசிகலா அக்கா மகன், தினகரன் அறிவித்தார்.

கட்சியின் துணை பொதுச்செயலராக, சசிகலா வால் அறிவிக்கப்பட்ட அவர், தீவிர அரசியலில் ஈடுபடாமலும், சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு செல்லாமலும், ஊடகங்

களில் மட்டுமே பேட்டியளித்து வருகிறார்.சில நாட்களுக்கு முன், தன் உறவினரும், சசிகலா வின் சகோதரருமான திவாகரனை, தஞ்சாவூ ரில் சந்தித்து, இணைந்து செயல்பட முடிவு செய்தார்.

சசிகலா குடும்பத்தில், இரு துருவங்களாக இருந்த இவர்கள், ஒற்றுமை அடைந்துள்ள தால், எதிரணியினரான, பழனிசாமி தரப்பினர் உஷார் அடைந்துள்ளனர்.பன்னீர் மற்றும் பழனிசாமி என, இரு அணிகளின் இணைப்பு, இன்னமும் நடக்காததால், ஆக., 5 முதல், தீவிர அரசியலில் ஈடுபட, தினகரன் முடிவு செய்துள் ளார்.ஆக., 7ல், மதுரையில் பிரமாண்டபொதுக் கூட்டம் நடத்த, அவர் திட்டமிட்டு உள்ளார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாகவும் அறிவித்து உள்ளார்.

அதற்கு முன், ஆக., 4ல், சென்னை, ராயப் பேட்டை யில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்ல முடிவு செய்துள்ளார். ஆதரவாளர்களாக உள்ள, முன்னாள் அமைச்சர் கள்,எம்.எல்.ஏ.,க்கள்,நிர்வாகிகளை சென்னை க்கு வரவழைத்து, அவர்களுடன் கட்சி தலை மையகத்திற்குள் நுழைந்து, தன் கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்து, தஞ்சாவூரில், ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்த தகவல், முதல்வர் பழனிசாமிக்கு, உளவு துறை போலீசார் மூலம் தெரிய வந்துள்ளது. உடனே அவர், மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.அப்போது, முதல் வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளுடன், ஆக., 4ல், கட்சி தலைமைய கத்திற்கு சென்று,அதை தங்கள் கட்டுப் பாட்டில் எடுப்பது' என, முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தினகரனும், அவரது ஆதரவா ளர்களும், கட்சி அலுவலகத்திற்குள் நுழைய

 

முயன்றால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிவித்து, அவரை கைது செய்ய வேண்டும் எனவும்,முதல்வருக்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது.

அதை ஏற்றுள்ள முதல்வர், காய்களை நகர்த்தி வருகிறார். தினகரனை கைது செய்ய உள்ள தகவல், அவரது ஆதரவு எம்.எல்.ஏ., மூலம், தினகரனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கு தினகரன், 'கைது நடவடிக்கையை கண்டு நான் பயப்பட மாட்டேன்; அ.தி.மு.க.,வை, பா.ஜ.,விடம் அடகு வைப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கட்சியை காப்பாற்ற போராடுவேன்' என, கூறியுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சசிகலாவின் அண்ணன் மனைவி, மறைந்த, சந்தானலட்சுமியின், மூன்றாம் நாள் காரியங் கள், நேற்று, தஞ்சாவூரில் நடந்தன. அதில், பங்கேற்க வந்த, சசியின் சகோதரர் திவாகரன் கூறியதாவது:பன்னீர்செல்வம் எங்கள் பங்காளி தான். அந்த அணியில் இருந்து ஒவ்வொருவ ராக, எங்கள் அணியில் இணைந்து வருகின்ற னர். இதை புரிந்து, பன்னீர் எங்களுடன் இணை வார். அனைவரும் இணைந்து, பணியாற்று வோம்.சிறையில் இருந்து, சசிகலா ஜாமினில் வர, விண்ணப்பித்துள்ளோம். அவர் வந்ததும், கலந்து பேசி, நல்ல முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன் கூறுகையில், ''இரண்டு அணிகளும், இணைவதற்கு எங்கள் குடும்பம் இடையூறாக இருப்பதாக கூறினர். இதனால், நான் விலகி இருந்தேன். 60 நாட்களாக விலகி இருந்த எனக்கு, நானே விதித்த கெடு, 4ம் தேதி முடி கிறது.அதன் பின்,என் பணியை துவங்குவேன். ''அணிகளை இணைத்து, கட்சியை பலப்படுத் தும் பணிகளில் ஈடுபடுவேன். அமைச்சர்களுக் கும், எங்களுக்கும், எந்த கருத்து வேறுபாடும் இல்லை,'' என்றார். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1823190

  • தொடங்கியவர்

‘கைது செய்தால் பாக்கியம் அடைவேன்!’ - எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விடும் தினகரன் #VikatanExclusive

 
 

 ‘கட்சித் தலைமை அலுவலகத்துக்கு நான் செல்லும்போது என்னை போலீஸார் கைதுசெய்தால், அது நான் செய்த பாக்கியம்' என்று ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார், டி.டி.வி.தினகரன். சசிகலா குடும்பத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது, முதல்வர் அலுவலகம்.

தினகரன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைய, 60 நாள்கள் காலக்கெடு விதித்த டி.டி.வி.தினகரன், கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கியிருந்தார். அந்தக் காலக்கெடு வரும் ஆகஸ்ட் 4-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரை இரண்டு அணிகளும் இணையவில்லை. இதையே காரணமாக வைத்து, ஆகஸ்ட் 5-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் சென்று பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார் தினகரன். கூடவே, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து, ஆதரவாளர்களைச் சந்திக்கவும் முடிவுசெய்திருக்கிறார். இந்த நேரத்தில், தினகரனின் மாமியார் சந்தானலெட்சுமியின் மரணத்தால் சுற்றுப்பயணம் தள்ளிப்போய்விட்டது. துக்கவிழாவில் தினகரனும் திவாகரனும் கை குலுக்கியது அமைச்சர்கள் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இருவரும் இணைந்தே கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

‘திவாகரனும் தினகரனும் சேர்ந்து செயல்பட்டால், அ.தி.மு.க-வில் அது நிச்சயம் சலசலப்பை ஏற்படுத்தும்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கருதுகின்றனர். தினகரன், திவாகரனின் அடுத்தகட்ட நகர்வுகளை உளவுத்துறைமூலம் தெரிந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, தினகரனுக்கு 'செக்' வைக்க முடிவுசெய்துள்ளது. ஆகஸ்ட் 4 அல்லது 5-ம் தேதி, தினகரன் கட்சி அலுவலகத்துக்கு வந்தால், அவரைக் கைதுசெய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராக உள்ளது. இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட தினகரனும் ' நானும் தயார்' என ஆதரவாளர்களிடம் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

தினகரனின் ஆதரவாளர்களிடம் பேசினோம். 'நாங்கள் அமைதியாகச் செயல்படவே விரும்புகிறோம். எங்களை அடக்க முயன்றால், அது அவர்களுக்கும் ஆபத்து என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகஸ்ட் ஐந்தாம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்துக்கு நாங்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. அதையும் மீறி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்தால், அது ஆட்சிக்கே சிக்கலை உண்டுபண்ணிவிடும் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும். எங்களுக்கு வெளிப்படையாகவே 36 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. மறைமுகமாக மேலும் சில அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் ஆதரவுகொடுத்துள்ளனர். எங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் எப்போதுமே எதிரியில்லை. அவருடன் நாங்கள் இன்னமும் நட்புடனே இருக்கிறோம் என்பது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க-வையும் ஆட்சியையும் நடத்த ஆசைப்படுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்கு, ஒருபோதும் அ.தி.மு.க. தொண்டர்களும் சம்மதிக்க மாட்டார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவருக்கு ஆலோசனை சொல்லும் சில அமைச்சர்களும் பதவிக்காக அ.தி.மு.க-வை அழிக்க முயல்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தால், மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிடும் " என்கிறார்கள் கொந்தளிப்புடன்.

சசிகலா,டி.டி.வி.தினகரன்,  திவாகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

நேற்று, தன்னுடைய ஆதரவாளர்களிடம் விரிவாக ஆலோசனை செய்திருக்கிறார், டி.டி.வி.தினகரன். அப்போது, ‘தலைமை அலுவலகத்துக்குச் சென்றால் கைதுசெய்வதாகத் தகவல் வந்துள்ளதே’ என ஆதரவாளர்கள் கேட்டுள்ளனர். ‘காரணமில்லாமலேயே என்னைக் கைதுசெய்துவிட்டார்கள். கட்சிக்காகக் கைதுசெய்வதை பாக்கியமாகக் கருதுவேன். இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட பொய்ப் புகாரில், டெல்லி போலீஸார் என்னைக் கைதுசெய்தபோதே நான் கலங்கவில்லை’ என உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

 

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ, “தினகரனின் கட்சிப் பதவியே நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, அவரால் எப்படி கட்சி அலுவலகத்துக்கு வர முடியும்? அதை அவர் உணர்ந்தால் நல்லது. குறிப்பாக, கட்சி சின்னம், பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. கட்சி அலுவலகத்துக்கு அவர் வந்து, ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், கட்சித் தலைமை அலுவலகத்தைப் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதிக்கும். இப்படியொரு சூழல் உருவாக தினகரன் காரணமாகிவிடக்கூடாது. அவர் சொல்லி, நாங்கள் இணையவேண்டிய அவசியமில்லை. ஓ.பன்னீர்செல்வம் அணியினர், ‘சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஓரம்கட்ட வேண்டும்’ என தர்மயுத்தத்தை நடத்திவருகின்றனர். அவர்கள், தினகரனுடன் நட்பாக இருக்கிறார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. ஆகஸ்ட் மாதத்தோடு அ.தி.மு.க-வில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுவிடும். சுதந்திர தின விழாவில் கொடியேற்றத் தயாராகிவிட்டார் முதல்வர் பழனிசாமி" என்கின்றனர் உறுதியாக. 

 

http://www.vikatan.com/news/tamilnadu/97412-i-am-lucky-to-get-arrested-for-this-reason-says-ttv-dinakaran.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.