Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயபாஸ்கர் கைது?

Featured Replies

சுகாதாரத்துறை,அமைச்சர்,விஜயபாஸ்கர்,மொத்தசொத்தும்,முடக்கம்

'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்
விஜயபாஸ்கர், டில்லியில் முகாமிட்டுள்ள நிலையில்,அவருக்கு சொந்தமான, குவாரி உள்ளிட்ட மொத்த சொத்துகளையும், வருமான வரித்துறை முடக்கி உள்ளது. அவரின், 92 ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்தி உள்ளது.

 

சுகாதாரத்துறை,அமைச்சர்,விஜயபாஸ்கர்,மொத்தசொத்தும்,முடக்கம்

சென்னையில், 'குட்கா' ஆலை நடத்திய, மாதவ்ராவ் உட்பட, சிலரது வீடுகளில், 2016 ஜூலை, 8ல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய டைரியில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பதற்காக, 2015ல் இருந்து, அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் மத்திய கலால் துறை அதிகாரிகளுக்கு, மாதவ்ராவ் தொடர்ந்து லஞ்சம் தந்த விபரம் தெரிய வந்தது.

இதையடுத்து, தொடர் கண்காணிப்பில் இருந்த விஜயபாஸ்கரை வளைக்க, வருமான வரித்துறையினர், தக்க நேரம் பார்த்து காத்திருந்தனர்.இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பின், டிச., 8ல், மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அவரது நண்பர்களின் அலுவலகங்களில் சோதனை நடந்தது.
 

பங்குதாரர்


இதில், 132 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 177 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. ரெட்டியிடம் நடத்திய விசாரணையில், 'குவாரி வர்த்தகத்தில், விஜயபாஸ்கர் பங்குதாரராக உள்ளார்' என, தெரிவித்திருந்தார்.இதன்பின், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, விஜயபாஸ்கரின், சென்னை வீடு, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மற்றும் விராலி மலையில் உள்ள, அவருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறையினர்

சோதனை நடத்தினர். அவரது மணல் குவாரியிலும் சோதனை நடைபெற்றது.
 

தொடர் விசாரணை


சென்னையில், அவரது உதவியாளர் வீட்டில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணம் சிக்கியது. அதை தொடர்ந்து, இடைத்தேர்தல் ரத்தானது. அன்று முதல், விஜயபாஸ்கரின் தந்தை, மனைவி, சகோதரர், நடிகர் சரத்குமார், ராதிகா மற்றும் அதிகாரிகளிடம், தொடர் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில், விஜயபாஸ்கர் தொடர்பான அனைத்து வழக்குகளும், சென்னை, வருமான வரிபுலனாய்வு மத்திய பிரிவுக்கு, சில மாதங் களுக்கு முன் மாற்றப்பட்டன. பின், அவரிடம், ஒரு வாரத்திற்கு முன், மீண்டும் விசாரணை நடந்தது. இந்நிலையில், குட்கா வழக்கில் ஏற்கனவே சிக்கித் தவிக்கும் விஜயபாஸ்கருக்கு, அடுத்த அடியாக, தேர்தல் வழக்கு தொடர்பாக, அவருக்கு சொந்தமான, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, 92 ஏக்கர் நிலத்தை, வருமான வரித்துறையினர் நேற்று முடக்கினர். வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளர், அதை முடக்கி உள்ளார். அத்துடன், அவரது மொத்த சொத்துகளும் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, தமிழக வருமான வரித்துறை, புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
புதுக்கோட்டை- - அன்னவாசல் இடையே, திருவேங்கைவாசல் பகுதியில், 'ராசி புளூ மெட்டல்ஸ்' கல் குவாரி மற்றும் 'கிரஷர்' மையத்தை, விஜயபாஸ்கரின், பினாமி நடத்தி வருகிறார். அந்த பினாமி, விஜயபாஸ்கரின் சமையல்காரர். வருமான வரித்துறை வளையத்தில், விஜயபாஸ்கர் சிக்க, இந்த குவாரி மிக முக்கிய காரணமாக இருந்தது.

அதை ஆய்வு செய்து, மத்திய பொதுப்பணித் துறை தந்த அறிக்கை மற்றும் எங்களின் ஆய்வு
ஆகியவற்றின் அடிப்படையில், அதை முடக்க முடிவு செய்தோம். அதன்படி, குவாரி உட்பட, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 92 ஏக்கர் நிலங்கள் முடக்கப்பட்டு உள்ளன. அதன் சந்தை விலையை, இன்னும் மதிப்பிடவில்லை.

 

வழக்கு முடியும் வரை,அது எங்கள் பொறுப்பில் தான் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

பிரதமரை பார்த்தாலும்...!


வருமான வரி அதிகாரிகள் கூறுகையில், 'சில நாட்களுக்கு முன், பிரதமர் மோடியை,
விஜயபாஸ்கர் சந்தித்தார். அதனால், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் என, சிலர் கருதினர். அவர், 'நீட்' தேர்வு என்ற காரணத்தை சாக்காக வைத்து, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்கும் போது, அதை தட்டிக்கழிக்க முடியாது. ஆனால், பிரதமர் சந்திப்பை வைத்து, வழக்கில் இருந்து தப்ப முடியாது' என்றனர்.
 

முதல் அஸ்திரம்!


பொதுவாக, வருமான வரித்துறை சோதனை நடந்தால், சொத்தின் மதிப்பை, குறிப்பிட்ட அதிகாரி தான் கணக்கிடுவார். அவரை விட, உயரிய பதவியில் இருந்தாலும், வங்கிக் கணக்கையோ, நிலத்தையோ முடக்குவதற்கு, புலனாய்வு அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. இதனால், பல வழக்குகளில் தொய்வு ஏற்பட்டது; குற்றவாளிகள் தப்பினர்.

அதனால், பிப்ரவரியில் தாக்கல் செய்த பட் ஜெட்டில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு, 'புரொவி ஷனல்' எனப்படும், சொத்துகளை தற்காலிக மாக முடக்கும் அதிகாரத்தை வழங்கினார். அந்த அஸ்திரத்தை, முதன்முறையாக, விஜயபாஸ்கர் மீது, வருமான வரி அதிகாரிகள் பிரயோகித்து உள்ளனர்.
 

விஜயபாஸ்கர் கைது?


'குட்கா' வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்காததால், அதை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என,எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.தி.மு.க., தொடுத்த வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்றமும், அதை யொட்டிய கருத்தையே கூறியுள்ளது. இந்த வழக்கில், மத்திய கலால் துறையினரும் லஞ்சம் பெற்றுள்ளதால், அவர்களுக்கும், வருமான வரித்துறை கடிதம் எழுதி உள்ளது.
எனவே, இவ்வழக்கு, விரைவில், சி.பி.ஐ.,க்கு மாறலாம். அப்போது, விஜயபாஸ்கர் கைதாகும் வாய்ப்பு உள்ளதாக, வருமான வரித்துறையினர் கூறுகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1824664

  • தொடங்கியவர்

அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்களை முடக்கிய புதுக்கோட்டை நிலப்பதிவாளர் பணியிட மாற்றம்

 
vijayabaskar1


புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கிய புதுக்கோட்டை நிலப்பதிவாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சோட்டை மாவட்ட நிலப்பதிவாளராக இருந்த சசிகலா, விருதுநகர் மாவட்ட நிலப்பதிவாளராக  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் இருந்த விஜயபாஸ்கரின் 100 ஏக்கர்  நிலத்தை முடக்க வருமான வரித்துறை உத்தரவிட்டது. 

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட நிலப்பதிவாளராக இருந்த சசிகலா அதனை செயல்படுத்தினார். இந்த நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

http://www.dinamani.com/tamilnadu/2017/aug/02/அமைச்சர்-விஜயபாஸ்கர்-சொத்துக்களை-முடக்கிய-புதுக்கோட்டை-நிலப்பதிவாளர்-பணியிட-மாற்றம்-2748473.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.