Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனிசாமி, பன்னீர் செல்வம், தினகரன் என, மூன்று அணிகள் உருவாகி, குழப்பம் ஏற்பட்டுள்ளதால், அந்தக் குழப்பத்தை சாதகமாக்க, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்;

Featured Replies

நம்பிக்கையில்லா ,தீர்மானம்,கொண்டு,வர,தி.மு.க.,வியூகம்!

அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனிசாமி, பன்னீர் செல்வம், தினகரன் என, மூன்று அணிகள் உருவாகி, குழப்பம் ஏற்பட்டுள்ளதால், அந்தக் குழப்பத்தை சாதகமாக்க, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்;

 

நம்பிக்கையில்லா ,தீர்மானம்,கொண்டு,வர,தி.மு.க.,வியூகம்!

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும், வியூகம் வகுத்துள்ளார். 'கோடிகள் குவிக்க, இது தான் சரியான தருணம்' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும், பேரம் பேசி வருகின்றனர். இதனால், தவித்து வரும், முதல்வர் பழனிசாமி, தி.மு.க.,வின் தந்திரத்தை முறியடித்து, ஆட்சியை தக்க வைக்க, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில், பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.பின், அவரை முதல்வர் பதவியிலி ருந்து, ராஜினாமா செய்ய வைத்து, அ.தி.மு.க., வின் தற்காலிக பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முதல்வராக விரும்பி னார். ஆனால், சசிகலாவுக்கு எதிராக, பன்னீர் செல்வம் போர்க்கொடி துாக்கியதால், அ.தி.மு.க.,வில் இரண்டு அணி உருவானது.
 

சொத்து குவிப்பு


வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்து, அவர் சிறை சென்றார். அதனால், முதல்வராக பழனி சாமி தேர்வு செய்யப்பட்டார். பிப்., 18ல், முதல் வர் பழனிசாமி தலைமையிலான அரசு, சட்ட சபையில் நம்பிக்கை ஓட்டு கோரி, வெற்றி பெற்றது.சட்டசபையில், ஒரு முறை நம்பிக்கை

தீர்மானம் கொண்டு வரப் பட்டு, அதில், அரசு வெற்றி பெற்று விட்டால்,அடுத்த ஆறு மாதங் களுக்கு, அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது.

இதன்படி, வரும், 20ல், ஆறு மாதம் முடிகிறது. எனவே, இந்த கெடு முடிந்த பின், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை, சட்டசபை யில் கொண்டு வர, 10சதவீத எம்.எல்.ஏ.,க்
களின் ஆதரவு தேவை. அவர்கள் இது தொடர் பாக, சபாநாயகருக்கு கடிதம் அளிக்க வேண்டும். அதன்பின், அதன் மீது முடிவு எடுக்கப்படும். அந்த வகையில், தி.மு.க., சார்பில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு, போதுமான எம்.எல்.ஏ.,க்கள் பலம் உள்ளது.

அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனிசாமி, பன்னீர் செல்வம், தினகரன் என, மூன்று அணிகள் உரு வாகி, குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ள தால், ஆட்சியை கவிழ்க்கும், இந்த வியூகத்தை, தி.மு.க.,செயல் தலைவர் ஸ்டாலின் வகுத் துள்ளதாகக் கூறப்படுகிறது.

'ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில், ஆட்சி மாற்றம் உருவாகும் சூழ்நிலை ஏற்படும்; தேர் தலை சந்திக்க தயாராகுங்கள்' என, தங்கள் கட்சி யின் மாநில,மாவட்ட நிர்வாகிகளுக்கு, ஸ்டாலின் ஏற்கனவே ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

குதிரை பேரம்


முதல்வர் பழனிசாமி அரசை காப்பாற்ற, கூவத்துார் சொகுசு விடுதியில், எம்.எல்.ஏ.,க் கள் தங்க வைக்கப்பட்டு இருந்த போது, பெரிய அளவில் குதிரை பேரம் நடந்தது. தற்போது, தி.மு.க., வின் ஆட்சி கவிழ்ப்பு வியூகம் வெளி யாகி உள்ளதால், 'கோடிகளை குவிக்க, இது தான் சரியான தருணம்' என, அ.தி.மு.க., -

 

எம்.எல்.ஏ.,க்கள், பலர் முடிவுக்கு வந்துள்ளனர். இதற்காக, பல தரப்பிலும், ரகசிய பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, தினகரன், பன்னீர் அணிகளால், நெருக்கடியை சந்தித்து வரும் முதல்வர் பழனி
சாமி, தி.மு.க.,வின் திட்டத்தை முறியடித்து, தன் முதல்வர் பதவியையும், ஆட்சியையும் தக்க வைக்க, பகீரத முயற்சி மேற்கொண்டு வருவதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை


சமீபத்தில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், தினகரன் -
பன்னீர் அணியைச் சேர்ந்த, முக்கிய பிரமுகர் கள், ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, முதல்வர் பழனி சாமியை பலவீன மாக்க, பன்னீர்செல்வம் அணியினரின் ஆதரவை, தினகரன் அணியினர் கேட்டுள்ளனர்.

தினகரனின், இந்த காய் நகர்த் தல்களை, பழனி சாமியும் அறிந்து உள்ளார். இதனால், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு, முதல்வர் பழனிசாமியின் அணியும் முயற்சித்து வருகிறது.
 

ஒரே விமானத்தில் 3 அணியினர்


சென்னையில் இருந்து திருச்சிக்கு, பன்னீர் செல்வம், பழனிசாமி ஆதரவாளரான அமைச்சர் விஜயபாஸ்கர், தினகரன் ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகிய மூவரும், நேற்று ஒரே விமானத்தில் சென்றுள்ளனர்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில், மூவரும், 20 நிமிடங்கள் ஒன்றாக சந்தித்து பேசி உள்ளனர். அப்போது, அணிகள் இணைப்பு உட் பட, பல விஷயங்கள் குறித்து பேசப்பட்ட தாகத் தெரிகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1828144

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.