Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவிரி நதிநீர் வழக்கு

Featured Replies

சரவெடி,காவிரி,நதிநீர்,வழக்கில்,சுப்ரீம்கோர்ட்,அடுக்கடுக்காக,கேள்வி

காவிரி நதிநீர் வழக்கு விசாரணையின்போது, 'நீர் சேகரிப்பில் கவனம் செலுத்தாதது ஏன்' என, தமிழக அரசைக் கண்டித்துள்ள உச்ச நீதி மன்றம், அடுக்கடுக்காக, சரவெடி கேள்விகளை எழுப்பியுள்ளது. 'நதிநீர் பங்கீடு தொடர்பான விபரங்கள் குறித்து விளக்குவதற்கு, வல்லுனர் குழுவை அழைத்து வர வேண்டும்' என, தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சரவெடி,காவிரி,நதிநீர்,வழக்கில்,சுப்ரீம்கோர்ட்,அடுக்கடுக்காக,கேள்வி

காவிரி நதிநீரைப் பங்கிடுவது தொடர்பாக, காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்குகளை, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அமர்வு
விசாரித்து வருகிறது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந் துள்ள கர்நாடகாவின் வாதம் முடிந்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் வாதம்துவங்கி உள்ளது.
 

குடிநீர் பஞ்சம்:

தமிழக அரசின் சார்பில்
 

மூத்த வழக்கறிஞர்கள், சேகர் நபாடே, ஜி.உமாபதி, நேற்று வாதிட்டனர். அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:

குடிநீர், விவசாயம் உள்ளிட்ட நீர் தேவைகளுக் காக, பிற மாநிலத்துடன் போராட வேண்டிய
நிலையில் உள்ள தமிழகம், நீர் சேகரிப்பில் ஏன் கவனம் செலுத்தவில்லை.

வழக்குகளைமட்டும் தொடர்ந்தால் போதுமா? தற்போது தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் உள்ளது. நீர் மேலாண்மை திட்டங்களில் கவனம் செலுத் தியிருந்தால், இந்த நிலையை தவிர்த்திருக்கலாமே?
'மற்ற மாநிலங்களைப் போல், தமிழகத்தில் பெரிய நதிகள் ஓடவில்லை. மிகப் பெரிய அணைகள் இல்லை' என்கிறீர்கள். மேட்டூர் அணை போன்ற நீர் தேக்கங்கள் இருக்கும் போது, அதில் அதிக அளவில் நீரை தேக்கி வைக்க ஏன் முயற்சி எடுக்கவில்லை. கவனம் செலுத்தவில்லை.கிடைக்கும் நீரை சேமித்து வைத்திருந்தால், வறட்சி காலத்தில் பயன் படுத்த முடியும் என்பதில் தமிழக அரசு, ஏன் கவனம் செலுத்தவில்லை?இவ்வாறு நீதிபதி கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
 

நதிநீர் பங்கீடு


தொடர்பான தொழில்நுட்ப விபரங்களை அளிக்கக் கூடிய வல்லுனர் குழுவை, தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் அழைத்து வர வேண்டும் என்றும் அமர்வு

 

உத்தரவிட்டு உள்ளது. விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்க உள்ளது.

முறையாக கணக்கிடவில்லை: தமிழக அரசு காவிரி வழக்கில், தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சேகர் நபாடே, உமாபதி ஆகியோர் வாதிட்டதாவது:பல நுாறு ஆண்டுகளாக, காவிரி நீரை நம்பியே, காவிரி படுகை மக்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. நடுவர் மன்ற உத்தரவில், கர்நாடகாவுக்கு அதிக அளவு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது; இது, காவிரி நதிநீரை நம்பியிருக்கும் தமிழகம், புதுச்சேரிக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரியை நம்பியுள்ள மக்களின்எண்ணிக்கை, அவர்களது பொருளாதார சூழ் நிலை ஆகிய வற்றையும் கணக்கில் எடுத்து, உத்தரவு பிறப் பித்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

கர்நாடகாவில், இதுவரை இல்லாத கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்துக்கு, காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட முடி யாத நிலை உள்ளது; ஆனாலும், அவ்வப்போது தண்ணீர் திறந்து விடுகிறோம். கர்நாடக விவ சாயிகள், குறுகிய கால பயிர்களை பயிரிடவும், குடிநீர் தேவைக்காகவும், காவிரி நீர் பிடிப்பின் அணைகளிலிருந்து, இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படும்.

சித்தராமையா
கர்நாடக முதல்வர், காங்.,

http://www.dinamalar.com/news_detail.asp?id=1830488

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.