Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவி அடி.. கழகத்தை அழி.. அதிமுகவை பிளவு படுத்திய பாஜக.. நமது எம்ஜிஆர் பரபரப்பு கவிதை!

Featured Replies

காவி அடி.. கழகத்தை அழி.. அதிமுகவை பிளவு படுத்திய பாஜக.. நமது எம்ஜிஆர் பரபரப்பு கவிதை!

 

 சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் இதழிலில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வெளியாகியுள்ள கவிதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது எம்ஜிஆர் நாளிதழில் கடந்த சில வாரங்களாகவே பாஜகவே திட்டி கவிதை எழுதி வருகின்றனர். முதல்வர், அமைச்சர்கள் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள நிலையில் நமது எம்ஜிஆரில் இன்று எழுதப்பட்டுள்ள கவிதை பாஜகவை கடுமையாக சாடியுள்ளது.

காவி அடி, கழகத்தை அழி என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த கவிதையில் உத்தர்காண்ட், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், பீகார், கோவா என பல்வேறு மாநிலங்களில் பாஜக பின் வாசல் வழியாக நுழைந்தது அதிகாரத்தை பிடித்ததாக எழுதப்பட்டுள்ளது.

ஆளுநர்கள்


ஆளுநர்கள்

புதுச்சேரி, மணிப்பூரில் ஆளுநர்களை அரசியல் ஏஜெண்டுகளாக்கியுள்ளதாகவும், நீதித்துறை, வருமானவரி, அமலாக்கப் பிரிவு, தேர்தல், ஆணையம், ஆகிய தன்னாட்சி அமைப்புகளை தலைகுனிய வைத்துள்ளது பாஜக என்று அந்த கவிதையில் குறிப்பிட்டுள்ளது.


விளைநிலங்கள்

 

விளைநிலங்கள்

பெட்ரோல் விலையை குறைப்போம், அமெரிக்க டாலரை 35 ரூபாய்க்குள் அடக்குவோம் என்று வாயாலே வடை சுட்டவர்கள். விளை நிலங்களை வெடிகுண்டு கிட்டங்கிகளாக்கியவர்கள் என்றும் கண்டித்துள்ளது அந்த கவிதை.

வெற்றுக்காகிதம்

 

வெற்றுக்காகிதம்

கரன்சியை வெற்றுக்காகிதமாக்கி கருப்புப் பணம் ஒழித்தோம் என்று கதையளப்பவர்கள் இவர்கள் முன்னின்று நடத்தியதெல்லாம் மோசடிகளே என்று குறிப்பிட்டுள்ளது.

மோடியா? லேடியா?

மோடியா? லேடியா? மோடியா? இந்த லேடியா என்று சவால் விட்ட இயக்கத்தை மூன்றாக பிளந்ததும் ஈரிலையை முடக்கி இன்னல்தந்ததும்தானே என்று கடுமையாக கண்டித்துள்ளது நமது எம்ஜிஆர்.


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/namathu-mgr-goes-against-bjp-292565.html

  • தொடங்கியவர்

நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் ஆசிரியர் நீக்கம்

நமது எம்.ஜி.ஆர். இதழின் ஆசிரியர் நீக்கம் Image captionஜெயலலிதாவுடன் மருது அழகுராஜ்

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக செயல்பட்டுவந்த "நமது எம்.ஜி.ஆர்" ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக அவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக சசிகலா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மருது அழகுராஜிடம் கேட்டபோது, அந்தச் செய்தியை உறுதிசெய்த அவர், "2008ஆம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதாவால் பணியில் அமர்த்தப்பட்டேன். இப்போது எழுதுகோல் பறிக்கப்பட்டிருக்கிறது" என்று மட்டும் தெரிவித்தார்.

சென்னையில் புதன்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டபோது, "நிர்வாகத்தின் கொள்கைகளை மீறி அவர் செயல்பட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்றார்.

சில நாட்களுக்கு முன்பு நமது எம்.ஜி.ஆர் நாளிதழில், "காவி அடி, கழகத்தை அழி" என்ற பெயரில் கவிதை ஒன்று வெளியானது. அந்தக் கவிதையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

மேலும், "மோடியா, இந்த லேடியா? எனச் சவால் விட்ட இயக்கத்தை மூன்றாகப் பிளந்ததும் ஈரிலையை முடக்கி இன்னல்கள் தந்ததும்" என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அந்த கவிதையை "சித்ரகுப்தன்" என்ற பெயரில் மருது அழகுராஜ் எழுதியிருந்தார். இந்த நிலையில், ஆசிரியர் பொறுப்பிலிருந்து மருது அழகுராஜ் நீக்கப்பட்டிருக்கிறார்.

நமது எம்.ஜி.ஆர். இதழின் ஆசிரியர் நீக்கம் Image caption"நமது எம்.ஜி.ஆர்" நாளிதழில் வெளியான கவிதை

தமிழகத்தில் ஆளும் அதிமுக, தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக சசிகலா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் என மூன்று அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. இதில் "நமது எம்.ஜி.ஆர்" நாளிதழ், டிடிவி தினகரன் தரப்பு கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இதில், முதல்வர் பழனிச்சாமி அணியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சொல்படி செயல்படுவதாக விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இரு தரப்பினரும், தொடர்ந்து பிரதமர் மோதியைச் சந்தித்தும் வருகின்றனர்.

அண்மையில் நடந்து முடிந்த குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களின்போதும், மூன்று அணியினரும் பாரதிய ஜனதா கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களான ராம்நாத் கோவிந்தையும், வெங்கய்ய நாயுடுவையும் முறையே ஆதரித்தன.

ஆனால், டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதெல்லாம் பழனிச்சாமி அணியினர், யாருக்கோ பயப்படுவதாக குற்றம்சாட்டி வந்தார். மேலும், நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் தொடர்ந்து மத்திய அரசை விமர்சிக்கும் கட்டுரைகளும் வெளியாகி வந்தன.

இந்நிலையில்தான், அந்தப் பத்திரிகையின் பொறுப்பிலிருந்து மருது அழகுராஜ் நீக்கப்பட்டிருக்கிறார்.

http://www.bbc.com/tamil/india-40951645

  • தொடங்கியவர்

சோனியா விசாரித்த ‘நமது எம்.ஜி.ஆர்’ கவிதை!

 

 

‘காவி அடி... கழகத்தை அழி..!’ - இது ஆகஸ்ட் 12-ம் தேதி    அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான ‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்’ வெளியிட்ட கவிதை. அரசியல் சதுரங்க வேட்டையில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியரையே காவு வாங்க வைத்தது.

‘உத்தரகாண்ட்டில் ருத்ர தாண்டவமாடி... அருணாசல பிரதேசத்தில் அத்துமீறி அடாவடிகள் நடத்தி... கோவாவில் காங்கிரஸின் குடிகெடுத்து... பீகாரில் லாலு-நித்தீஷைப் பிரித்து பின்வழியே அதிகாரப் பீடத்தைப் பிடித்து... அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரச் செங்கோலை முடக்கி... புதுச்சேரி நாராயணசாமிக்குப் புதுசு புதுசா தொல்லைகளை அடுக்கி... மணிப்பூரில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக மகுடத்தைப் பறித்து... ஆளுநர்களை அரசியல் ஏஜெண்டுகளாக்கி அக்கிரமங்கள் நடத்தி... தன்னாட்சி அமைப்புகளைத் தலைகுனிய வைத்து... அரசியல் அரிப்புக்கு அவற்றை சொறிகின்ற ஆயுதமாக்கி... ஜனநாயகப் படுகொலைகளை சகஜங்களாக்கி...’ என்று காட்டமாக மத்திய அரசை விமர்சிக்கும் அந்தக் கவிதை, ‘மோடியா? இந்த லேடியா? எனச் சவால் விட்ட இயக்கத்தை மூன்றாகப் பிளந்தும், ஈரிலையை முடக்கி இன்னல்கள் தந்ததும்தானே!’ என்று முடிகிறது.

p36.jpg

‘நமது எம்.ஜிஆர்’ நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், ‘சித்ரகுப்தன்’ என்ற புனைப்பெயரில் எழுதிய கவிதை இது. அன்று காலை நாளிதழ் வெளியான உடனே டெல்லி வரை பரபரக்க வைத்துவிட்டது இந்தக் கவிதை. அன்று காலையே ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் பணியாற்றும் ஒருவரை ப.சிதம்பரம் தொடர்புகொண்டு, ‘‘இன்று ஏதோ கவிதை வெளியாகி இருக்கிறதாமே! அதன் மொழியாக்கத்தை சோனியா காந்தி அவசரமாகக் கேட்டார்’’ என்று சொல்லி, ‘நமது எம்.ஜி.ஆர்’ பிரதியைக் கேட்டதாக சொல்லப்படுகிறது. ‘அதற்குள்ளாக டெல்லி வரை இது பரவிவிட்டதா?’ என எல்லோரும்  பரபரக்க  ஆரம்பித்தனர். சோனியா விசாரித்த தகவல் தெரிந்து, அரசியல் வட்டாரம் அலெர்ட் ஆகிவிட்டது. டெல்லி பி.ஜே.பி வட்டாரமும் கொந்தளித்தது. இதைத் தொடர்ந்து மத்திய உளவுத் துறையின் உயர் அதிகாரி ஒருவர், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் மருது அழகுராஜைத் தொடர்புகொண்டு, ‘‘நீங்கள் கவிதை எழுதுவதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை. இந்தக் கவிதையை யார் சொல்லி வெளியிட்டீர்கள்?’’ என்று விசாரித்திருக்கிறார்.

‘‘எனக்கு யாரும் சொல்லவில்லை. எதையெல்லாம் எப்படி எழுதலாம் என ஜெயலலிதா எனக்குப் பலமுறை வழிகாட்டுதல்கள் கொடுத்திருக்கிறார். அந்த அடிப்படையில் எழுதப்பட்ட கவிதையே அது’’ என விளக்கம் கொடுத்திருக்கிறார் மருது அழகுராஜ். விஷயம் இதோடு முடிந்துவிடும் என அவர் நினைத்தார். ஆனால், அப்படி ஆகவில்லை.

‘நமது எம்.ஜி.ஆர்’ முழுக்க முழுக்க சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இப்போது உள்ளது. இதன் நிர்வாகியாக இருப்பவர், இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன். இந்த நாளேட்டில் தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்பான செய்திகள், இடையில் இருட்டடிப்பு செய்யப்பட்டன. சில நாள்களில் மீண்டும் எடப்பாடி தொடர்பான செய்திகள் இடம்பெற்றன. ‘தினகரன் நியமனம் செல்லாது’ என  எடப்பாடி அணியினர் தீர்மானம் போட்டபிறகு, எடப்பாடி அணியின் அரசியல் செய்திகள் வருவதில்லை. ஆனால், மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளை எதிர்க்கும் கவிதைகளும் கட்டுரைகளும் தவறாமல் இடம்பெற்றுவந்தன.

p36a.jpg

பி.ஜே.பி., பல்வேறு மாநிலங்களில் பின்புறவழியாக ஆட்சியைப் பிடிப்பதாகவும், வருமானவரித் துறை மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் அந்தக் கவிதையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. ‘‘ஏற்கெனவே பல வழக்குகளில் சிக்கியிருக்கும் இந்தப் பிரச்னையான சூழலில், இந்தக் கவிதையே உங்களை உள்ளே தள்ளிவிடும்’’ என்று டி.டி.வி.தினகரனிடம் அவரைச் சுற்றியிருப்பவர்கள் அச்சத்தைக் கிளப்பியிருக்கிறார்கள். இந்தக் கவிதையை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து டெல்லிக்கு மத்திய உளவுத்துறை அனுப்பியதாகவும், அது ஆட்சியாளர்கள் கண்ணில்பட்டதும், அவர்கள் கொதித்துப் போனதாகவும் தினகரனுக்கும் சொல்லப்பட்டது. பதறித் துடித்த தினகரன், மேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ‘‘இப்போது ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளேட்டின் பொறுப்பை உறவினர் விவேக் ஜெயராமன் கவனித்துவருகிறார். அந்த நாளேட்டின் கறுப்பு ஆடுகளாக இருந்தவர்களை அவர் நீக்கிவிட்டார். பி.ஜே.பி-க்கு எதிராக எழுதியவர்களையும் இந்நேரம் அவர் நீக்கியிருப்பார்” என்று அறிவித்தார்.

அவர் ‘கறுப்பு ஆடு’ என்றெல்லாம் சொல்லியிருப்பது மருது அழகுராஜையே என்கிறார்கள். அவரை சசிகலா குடும்பத்தினர் அவமானப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு ‘சில நாள்கள் ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள்’ எனச் சொல்லி அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது. மருது அழகுராஜைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர், ‘‘தொண்டர்களின் மனக்குமுறலைத்தான் கவிதை வடிவில் எழுதியிருந்தேன். அது, தினகரனுக்கு மனவருத்தத்தையோ நெருடலையோ தந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் மதுரையில் அவ்வாறு தினகரன் பேசியிருக்கிறார் என்று கருதுகிறேன். இந்த விஷயத்தில் இதற்கு மேல் பேசும் மனநிலையில் நான் இல்லை” என்றார்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.