Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சரை ராஜினாமா செய்யக் கோராதது ஏன்? - கமல் கேள்வி

Featured Replies

முதலமைச்சரை ராஜினாமா செய்யக் கோராதது ஏன்? - கமல் கேள்வி

 

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பல்வேறு கருத்துகளை ட்விட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். 

நடிகர் கமல்ஹாசன்.

 

தமிழக அரசில் உள்ள ஊழல்கள் குறித்து அமைச்சர்களுக்கு டிஜிட்டல் வடிவில் புகார் அனுப்புங்கள் என்று தமிழக மக்களுக்கு கமல் வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து, தமிழக அரசின் இணையதளத்திலிருந்து அமைச்சர்களின் அதிகாரபூர்வ இ-மெயில் முகவரிகள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முட்டைகள் குறித்தும் கமலின் ட்விட்டரில் பதிவிட்டார். இந்தநிலையில், கமலின் மற்றொரு ட்வீட் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது. அதில், ‘அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் காரணமாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்றால், தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்தும், எந்த அரசியல் கட்சியும் முதலமைச்சரின் ராஜினாமாவைக் கோராதது ஏன்?. எனது குறிக்கோள் தமிழகத்தை முன்னேற்றம் அடையச் செய்வதே. என்னுடைய குரலுக்கு வலுச் சேர்க்கும் துணிவு யாருக்கெல்லாம் இருக்கிறது?. தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அதற்கான கருவி மட்டுமே. கருவியின் முனை மழுங்கிவிட்டால் வேறு கருவிகளைக் கண்டறிவோம். ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும், லெல்வோம்’ என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். இதுவரை முதலமைச்சர் குறித்து நேரடியாக எந்தவொரு விமர்சனமும் செய்யாத கமல், இந்த ட்வீட் மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/99174-kamal-haasans-tweet-targets-tn-cm-edappadi-palanisamy.html

  • தொடங்கியவர்

கமலுக்கு பதில் சொல்ல முடியாது - திமுக; கமலின் மலிவு அரசியல் புரியவில்லை - அதிமுக

TWITTERபடத்தின் காப்புரிமைTWITTER

தமிழக முதல்வரின் ராஜிநாமாவை கோரும் விவகாரத்தில் கமல் ஹாசன் வெளியிடும் டிவீட்டுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று திமுக கூறியுள்ளது. இந்த விஷயத்தில் கமலின் மலிவு அரசியலை புரிந்து கொள்ள முடியவில்லை என்று அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

இது குறித்து மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, "கமலுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. கருத்து தெரிவிக்கக் கூடிய அளவுக்கு கமலை மிக முக்கிய நபராக நான் கருதவில்லை" என்றார்.

  •  

அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், "கமல் ஒரு பொதுவான கருத்தைக் கூறியுள்ளார். தற்போதுள்ள கட்சிகள் கூர் மழுங்கி விட்டால் கூர் ஆன வேறொரு அமைப்பை தேட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். திமுகவை குறிப்பிட்டு அவர் கருத்து வெளியிட்டுள்ளதாக எடுத்துக் கொள்ளக் கூடாது" என்றார்.

"அதிமுகவுக்கு எதிராக ஏற்கெனவே கமல் கருத்து வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய இளங்கோவன், அவரது எண்ணத்தை பிரதிபலிக்கும் கட்சியாக திமுக உள்ளது" என்றார்.

TWITTERபடத்தின் காப்புரிமைTWITTER

தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி தனியாகவும் அக்கட்சியின் அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரு பிரிவினர் தனியாகவும் உள்ளனர்.

இந்நிலையில் கமல் ஹாசனின் டிவிட்டர் பதிவு குறித்து தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் பிபிசி தமிழிடம் கூறுகையில், ""இதுவரை ஜாடை மாடையாகவும் மறைமுகமாகவும் அரசியல் பேசி வந்த கமல்ஹாசன் நேரடியாக அரசியலுக்கு வர முடிவெடுத்து விட்டது அவரது டிவிட்டர் பதிவு மூலம் தெளிவாகிறது" என்றார்.

"திராவிட இயக்கத்தை தாண்டி தமிழகத்தில் யாரும் கொடி கட்டி விட முடியாது என்ற நாஞ்சில் சம்பத், திமுகவும் அதிமுகவும் மழுங்கி விட்டன என்கிற தொணியில் கமல் பதிவிட்ட கருத்து, திமுகவுக்கு பொருந்துமே தவிர அதிமுகவுக்கு அது பொருந்தாது" என்றார்.

"தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்படவில்லை என்றும் கமல ஹாசன் என்கிற ரட்சகருக்காக தமிழகம் இப்போது காத்திருக்கவும் இல்லை" என்றும் நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டார்.

தமிழக முதல்வரின் ராஜிநாமாவை கோரும் கமலின் கண்களுக்கு, ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உத்தர பிரதேசத்தில் எழுபது குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தெரியவில்லையா?" என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பினார்.

ஒரு கண்ணில் வெண்ணையையும், மறுகண்ணில் சுண்ணாம்பையும் வைத்துக் கொண்டு ஒரு சராசரி அரசியல் நடத்துவோரை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், விலையும் நிலையும் புரிந்த கலைஞனான கமல், ஏன் மலிவான அரசியலை நடத்துகிறார் என்பது எனக்குப் புரியவில்லை" என்றார் நாஞ்சில் சம்பத்.

http://www.bbc.com/tamil/india-40936851

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.