Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டையை உடைக்கும் தினகரன்!

Featured Replies

கோட்டையை உடைக்கும் தினகரன்!

 

ஆணவம்... ஃபோர்ஜரி... 420... தலைக்கனம்... மடியில் கனம்... அட்டைக்கத்திகள்...

 

மேலூர் திணறத் திணற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக் காட்டியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். எடப்பாடி அணி ஓங்கியப்பிறகு, தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் தினகரனுக்கு. சசிகலா குடும்பத்துக்கு இது வாழ்வா, சாவா யுத்தம். அதனால், உள்ளுக்குள் இருக்கும் பகைமை உணர்வுகளை ஒளித்துவைத்துக்கொண்டு ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றுசேர்ந்து மேலூரில் கவனத்தைக் குவித்தது. ஒரு நாள் முன்னதாகவே மேலூர் வந்துவிட்ட திவாகரன், எல்லா ஏற்பாடுகளையும் நேரில் பார்த்துத் திருப்தி அடைந்தார். ஜெயா டி.வி-யையும், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழையும் நிர்வகித்துவரும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனும் மேலூர் வந்து கட்சிக்காரர்களை முடுக்கி விட்டார். டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். மதுரை பப்பீஸ் ஹோட்டலைச் சசிகலா குடும்பமே வளைத்துப்போட்டதுபோல் தோற்றம் அளித்தது. ஹோட்டலைச் சுற்றி உளவுத்துறையினர் நோட்டமிட்டு, யார் யார் வருகிறார்கள் என நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர்.

p42a.jpg

மதுரை, தேனி என பல மாவட்டங்களில் தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் கிளைச் செயலாளர்கள் பலர் மூலம் கூட்டம் திரட்டப் பட்டது. எல்லா செலவுகளையும் சசிகலா குடும்பமே ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்கள்.   

முதலில் இந்த நிகழ்ச்சிக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்காமல் அமைதி காத்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு போட்டு அனுமதி வாங்கினர். அதன் பிறகுப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது போன்ற எல்லாவற்றையும், ஓர் அரசு விழாவுக்குச் செய்வது போன்றே போலீஸ் செய்தது. 

கூட்டம் சேர்ந்துவிட்ட தகவல் தெரிந்து, மாலை 5 மணிக்கு மேல்தான் தினகரன் ஹோட்டலில் இருந்து கிளம்பினார். ஹோட்டலில் இருந்து மேலூர் 30 கி.மீ தூரம். வழிநெடுக கிராமங்களில் வரவேற்பு கொடுத்து அசத்தினார்கள். கூட்டம் நடக்கும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்த நேரத்தில், கிட்டத்தட்ட மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார் தினகரன்.

அதிகம் பேரைப் பேசவிடாமல், ஆரம்பத்திலேயே மைக் முன் வந்துவிட்டார் தினகரன். செங்கோல், வீரவாள் எல்லாம் வாங்கிக்கொண்டு அவர் பேச ஆரம்பித்தார். தன்னை ஒதுக்கி வைத்த எடப்பாடி பழனிசாமி அணியை அவர் வார்த்தைக்கு வார்த்தை வறுத்தெடுத்தார். ‘ஃபோர்ஜரி’, ‘420’, ‘ஆணவம்’, ‘தலைக்கனம்’, ‘மடியில் கனம்’, ‘அட்டைக்கத்தியைச் சுற்றுபவர்கள்’ என்று சிரித்த முகத்தோடு சீற்றம் காட்டினார்.

‘‘நமது கட்சித்தொண்டர் ஒருவர் பேசிய காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். தான் நெல்லையில் இருந்து வருவதாகவும், இந்தக் கூட்டத்துக்கு வரும் பலருக்கும் தொந்தரவு கொடுத்துத் தடுப்பதாகவும் கூறினார். இப்படி இடையூறு செய்துவருகின்றனர். பஸ்களில் வருவதற்கு அனுமதி வழங்காமல் தடுத்துள்ளனர். தொழிற்சங்கத்தினர் இங்கு வருவதற்கு விடுப்பு கேட்டுள்ளனர். ‘வேலையை விட்டு விலக்கி விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர்.

p42c.jpg

இதற்கெல்லாம் யார் காரணம்? 30 பேரைச் சேர்த்துக்கொண்டு தலைமைச் செயலகத்தில் கண்களை மூடிய நிலையில் செயல்படுகின்றனர். எம்.எல்.ஏ-க்களை கடத்திக்கொண்டு போய் சென்னையில் ஒளித்துவைத்துள்ளனர். அவர்கள் மூலமே, ஒளித்துவைத்தவர்கள் ஒழிக்கப் படுவார்கள்.  அறைக்குள் இருந்து சொகுசாகத் தீர்மானம் போடுபவர்கள் இப்போது சற்று யோசித்துப்பார்த்தால் தெரியும்... அம்மாவிடம் யார் அவர்களை அறிமுகம் செய்துவைத்ததென்று.

கோட்டையில் இருந்துகொண்டே எல்லாவற்றையும் செய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அபகரித்துக்கொண்டு கொல்லைப்புற வழியாகச் சென்றுவிடலாம் என்று நினைக்காதீர்கள். மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்களுக்குத் தேவையானதைச் செய்யுங்கள். மக்கள் நலன் கருதித் திட்டங்கள் தீட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு ஃபோர்ஜரி வேலையைச் செய்யக் கூடாது. எம்.எல்.ஏ-க்களை விட தொண்டர் படைதான் பெரிது’’ என்ற தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தையும் விட்டு வைக்கவில்லை.

‘‘அம்மாவின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும், நீதி விசாரணை வேண்டும் என்று கேட்கிறார்கள். அப்படி நீதி விசாரணை நடத்தினால் அவர்கள்தான் மாட்டுவார்கள். நீதி விசாரணைக்கு நான் தயார். நீதி விசாரணை நடத்த நானும் கோரிக்கை வைக்கிறேன். தர்ம யுத்தம் நடத்துவோம் என்று தர்மத்துடனே யுத்தம் நடத்துகின்றனர்’’ என்று பேசினார் தினகரன்.

p42b.jpg

தங்களுக்கு இவ்வளவு பிரச்னைகளையும் கொடுக்கும் பி.ஜே.பி-யைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாதது குறித்து பலரும் தினகரனிடம் வருத்தப்பட்டார்கள். “நாம் பி.ஜே.பி-யை எதிர்க்கும் நேரம் இதுவல்ல. தொண்டர்கள் செல்வாக்குத் தங்களுக்குத்தான் எனச் சொன்ன ஓ.பன்னீர்செல்வத்தின் வார்த்தைகளை இனி பி.ஜே.பி நம்பாது. உண்மையான மக்கள் செல்வாக்கு நமக்குத்தான் என்பது இப்போது உறுதியாகிவிட்டது” எனச் சொல்லியிருக்கிறார் தினகரன். ஆனாலும், ‘பி.ஜே.பி-க்கு எதிராகப் பாய்ச்சல் காட்டுவார்’ என எதிர்பார்த்து வந்த கூட்டத்துக்கு தினகரன் ஏமாற்றத்தையே கொடுத்தார் என்கிறார்கள் கட்சியினர்.

- செ.சல்மான், சே.சின்னதுரை
அட்டைப் படம்: வீ.சதீஷ்குமார்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்



‘‘குடும்ப ஆதிக்கம் குறையாது!’

மேலூர் கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்தார் தினகரன். ஆனால், 20 பேர் மட்டுமே வந்திருந்தார்கள். இதில் சசிகலா குடும்பம் சோர்ந்துபோனாலும், திரண்டு வந்த கூட்டம் அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

“ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணைக்குத் தாராளமாக உத்தரவிடுங்கள். அப்போதுதான் உண்மை வெளியே வரும்” என்று தினகரன் பேசுவார் என்பதை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்புகள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதைப் பேசச் சொல்லி சசிகலாவிடமிருந்தே உத்தரவு வந்ததாகச் சொல்கிறார்கள்.

p42.jpg

‘ஆட்சி முக்கியமில்லை... கட்சிதான் முக்கியம்’ என்பதை உணர்த்த, அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகப் பாணியில் அமைக்கப்பட்டிருந்தது மேடை. பிரமாண்டமான மேடையில் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்களே உட்கார இடம் இல்லாமல் நிற்க, திவாகரன் மகன் ஜெயானந்த் நடுநாயகமாக அமர்ந்திருந்தது பலரையும் எரிச்சலில் தள்ளியது. இடதுபுறம் தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் யாரையும் சட்டை செய்யாமல் அமர்ந்திருந்தார். அவருடைய மைத்துனரான ஜவஹர், திவாகரனின் வலதுகரமான தேவா உள்ளிட்டோர் மேடையை ஆக்கிரமித்துக் கொண்டு நின்றனர். “இவங்களோட குடும்ப ஆதிக்கம் குறையவே குறையாது போலிருக்கே...” என சீனியர் நிர்வாகிகள் பலரும் புலம்பினார்கள்.


‘‘பெயர் தெரிய வேண்டாம்ணே!’’

ழக்கமாகக் கட்சிக் கூட்டங்களுக்குப் பத்து வாகனங்களில் ஆதரவாளர்களைக் கூட்டிவரும் நிர்வாகிகள், ‘‘நான் 20 வண்டியில ஆட்களைக் கூட்டி  வந்தேன்’’ என மிகைப்படுத்திக் கணக்கு காட்டுவார்கள். ஆனால், மேலூர் கூட்டத்தைப் பொறுத்தவரை இது அப்படியே உல்டாவானது. ‘‘நான் எத்தனை வண்டி வேண்டும்னாலும் அனுப்பி வைக்கிறேன். ஆனால், நான்தான் அனுப்பினேன்னு என் பெயர் வெளியே தெரிய வேண்டாம்ணே’’ என சில எம்.எல்.ஏ-க்களும், மாவட்டச் செயலாளர்களும் சசிகலா குடும்பத்தின் முக்கியத் தலைகளிடம் சொன்னார்களாம். அப்படி சிலர் ஆட்களை அனுப்பியும் வைத்திருக்கிறார்கள். மதுரை மட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களில் இருந்தும் கொங்கு பகுதியில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் ஆட்களைத் திரட்டி வந்திருந்தார்கள்.

‘கட்சியில் பெரும்பாலானவர்கள் மதில் மேல் பூனையாகவே இருக்கிறார்கள். நம்முடைய செல்வாக்கை நிரூபித்துக்காட்டினால், நம் பக்கம் சாய்ந்துவிடுவார்கள்’ என்று நம்புகிறது சசிகலா குடும்பம்.

‘‘சில எம்.எல்.ஏ-க்களை இந்தக் கூட்டத்துக்கு வரக் கூடாது எனக் கடத்திச் சென்றுவிட்டார்கள்’’ என்று தினகரன் தன் பேச்சில் சொன்னார். நெருக்கடி தாங்க முடியாமல், இரண்டு எம்.எல்.ஏ-க்கள் மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டதும் நடந்தது. தினகரனுக்கு ஆதரவாக இருந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.போஸை அமைச்சர் உதயகுமார் மடக்கிச் சென்னைக்குக் கூட்டிச் சென்றுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. நாம் ஏ.கே.போஸிடம் பேசினோம். ‘‘எனக்கு உடம்பு சரியில்லைங்க. கால்ல கட்டு போட்டிருக்கேன். அதனாலதான் வரலை. என்னை யாரும் கடத்தலை’’ என்றார் அவர்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.