Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருப்ப தால்,கடும் கோபமடைந்துள்ள தினகரன், அவர்களை மிரட்டத் துவங்கி உள்ளார்.

Featured Replies

அ.தி.மு.க., ADMK, அமைச்சர்கள்,ministers, தினகரன், Dinakaran, மிரட்டல்,  threat, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, சர்ச்சை, controversy,சசிகலா ,Sasikala, மதுரை மேலூர் , Madurai Melur,பொதுக்கூட்டம்,public meeting,  ஓ.எஸ்.மணியன்,OS Maniyan, ராதாகிருஷ்ணன்,Radhakrishnan,  ராஜு,  Raju,விஜயபாஸ்கர் , Vijayapaskar, திருடன்,  Thief,விசாரணை கமிஷன் , Investigation Commission, எம்.எல்.ஏ.,MLA,அமைச்சர் சீனிவாசன், Minister Srinivasan, ராஜினாமா , resignation, அமைச்சர் ஜெயகுமார், Minister Jayakumar,

 

 

அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருப்ப தால்,கடும் கோபமடைந்துள்ள தினகரன், அவர்களை மிரட்டத் துவங்கி உள்ளார். 'என் பக்கம் சேராவிட்டால், நான் சொல்வதை கேட்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றும், 'சர்ச்சை படங்களை வெளியிடுவேன்' என்றும், அமைச்சர்களை அச்சுறுத்த ஆரம்பித் துள்ளார். அமைச்சர்களிடையே, தனக்கு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்தி, முதல்வர் பழனிசாமியை பயமுறுத்தவும், தினகரன் திட்டமிட்டுள்ளார்.

 

அ.தி.மு.க., ADMK, அமைச்சர்கள்,ministers, தினகரன், Dinakaran, மிரட்டல்,  threat, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, சர்ச்சை, controversy,சசிகலா ,Sasikala, மதுரை மேலூர் , Madurai Melur,பொதுக்கூட்டம்,public meeting,  ஓ.எஸ்.மணியன்,OS Maniyan, ராதாகிருஷ்ணன்,Radhakrishnan,  ராஜு,  Raju,விஜயபாஸ்கர் , Vijayapaskar, திருடன்,  Thief,விசாரணை கமிஷன் , Investigation Commission, எம்.எல்.ஏ.,MLA,அமைச்சர் சீனிவாசன், Minister Srinivasan, ராஜினாமா , resignation, அமைச்சர் ஜெயகுமார், Minister Jayakumar,

அ.தி.மு.க.,வில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தலையீடு இல்லாமல், சுதந்திர மாக செயல்பட, முதல்வர் பழனிசாமி முடிவு செய்தார். அதற்கு, முழு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பக்கம் நிற்கின்றனர். ஒரு அமைச்சர் கூட, தினகரன் பக்கம் சேரவில்லை.
 

முதல் பொதுக்கூட்டம்


தன் ஆதரவு பலத்தை காட்ட, தினகரன், மதுரை மேலுாரில், முதல் பொதுக்கூட்டத்தை நடத்தி னார். அந்த கூட்டத்திற்கு, ஒரு அமைச்சர் கூட

போகவில்லை. ஆரம்பத்தில், சசிகலாவையும், தினகரனையும் வெளிப்படையாக ஆதரித்த அமைச்சர்கள், ஓ.எஸ்.மணியன், ராதாகிருஷ் ணன், ராஜு, விஜயபாஸ்கர் உள்ளிட்டவர் களிலும், ஒருவர் கூட, மதுரை பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

இதனால், கடும் கோபம் அடைந்துள்ள தினக ரன், அமைச்சர்களுக்கு எதிராக, பகிரங்க மிரட் டல் விடத் துவங்கி உள்ளார். ஜெ., வகுத்த பாதையில், அமைச்சர்கள் நடக்கவில்லை என்றால், கடும் நடவடிக்கை எடுக்கப் போவதா கவும் அச்சுறுத்தி உள்ளார்.
 

நெருக்கடி


அதோடில்லாமல், சசிகலா காலில் விழுந்து, பதவி பெற்றஅமைச்சர்களின் படங்களை வெளி யிட்டு, அவர்களை வழிக்கு கொண்டு வரவும், தினகரன் திட்டம் தீட்டிஉள்ளார். இது போன்ற அச்சுறுத்தல்கள் வாயிலாக, அமைச்சர்களை ஆதரவாளர்களாக்கி, பழனிசாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், அவர் முடிவு செய்துள் ளார்.இது தொடர்பாக, சென்னையில், நேற்று தினகரன் அளித்த பேட்டி:

அ.தி.மு.க.,வுக்கும், இந்த அரசுக்கும் தொடர்பு கிடையாது. சிலர், அ.தி.மு.க., தலைமை அலு
வலக அறையில் அமர்ந்து, தீர்மானம் நிறை வேற்றி, அது தான் உண்மை எனக் கூறி வரு கின்றனர். கட்சியை கொல்லைப்புறமாக கைப் பற்ற, சில அமைச்சர்களும், நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள், இது போன்ற தவறான செயலைகைவிட்டு, சரியான

 

பாதையில் செல்ல வேண்டும்;இல்லையெ னில் திருத்தப்படுவர். ஜெ., வகுத்து தந்த பாதையில் செல்லாவிட்டால், அவர்களுக்கு ஆபத்து நிச்சயம்.

தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க., தொண்டர் களுக்கும், யார் திருடன் என்பது, நன்றாக தெரியும். அதற்கு, விசாரணை கமிஷன் பதில் கூறும். சில, எம்.எல்.ஏ.,க்களிடம் பணம் கொடுத்து,'தினகரனுடன் சென்றால், தொகுதி தேவை களை செய்து தர மாட்டோம்' என மிரட்டி வைத்துள்ளனர்.
 

காலில் விழுந்தார்


'திருடனாக பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என, அமைச்சர் சீனிவாசன் உட்பட அனைவருக்கும், என் பதிலாக தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் சீனிவாசன், 10 ஆண்டுகளாக எங்கிருந்தார் என, தேட வேண்டி இருந்தது. அவர் வேண்டு மானால், பொருளாளர் பதவியை ராஜினாமா செய்யட்டும்; நான் வேறு ஆள் போட்டுக் கொள்கிறேன்.

அவருக்கு வயதாகி விட்டது. 'இருக்கும் வரை பார்த்துக் கொள்ளலாம்' என, நினைக்கிறார். அவர், சசிகலா காலில் விழுந்து கும்பிட்டதை எல்லாம் வெளியிட்டால், அசிங்கமாகி விடும். பொருளாளர் பதவி வழங்கியதும், சசிகலா காலில் விழுந்தார்.
 

பயம் வந்துவிட்டது


என் காலில் விழ முயன்றபோது, நான் தடுத் தேன். அமைச்சர்கள் அனைவரும், ஏப்., 10 வரை, எனக்காக ஓட்டு கேட்டனர். அடுத்த ஒரு வாரத்தில், அவர்களுக்கு பயம் வந்து விட்டது.
அமைச்சர் ஜெயகுமார், எனக்காக ஓட்டு கேட்டார். நாங்கள் கொடுத்த, நிதி அமைச்சர் பதவி, மீனவர் அணி செயலர் பதவியில் தான் இருக்கிறார்.

தற்போது, எப்படியாவது பன்னீர் காலை பிடித்து சேர்த்து, ஒன்று சேரலாம் என, நினைக்கின்ற னர்; ஆட்சியை காப்பாற்றலாம் என திட்டம் போடுகின்றனர்கட்சிஇருந்தால்தான்,ஆட்சியை காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1835371

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.