Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Featured Replies

போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

 

 
vedha_illam

சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.

இதையடுத்து போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போயஸ் இல்ல சாலையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அந்த சாலை வழியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

http://www.dinamani.com/latest-news/2017/aug/17/போயஸ்-கார்டன்-இல்லத்துக்கு-பாதுகாப்பு-அதிகரிப்பு-2756939.html

  • தொடங்கியவர்

யார் வீட்டை... யார் நினைவிடமாக்குவது? திகு திகு தீபா

 
 

 போயஸ் கார்டன் வேதா நிலையம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லத்தை நினைவிடமாக்குவதாக அறிவித்தார். இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். 

 'சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி தர்மயுத்தத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். ஏற்கெனவே, சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்றினார். அடுத்து, ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதோடு, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன், வேதா நிலையம் இல்லம் அரசுடைமையாக்கப்படும் என்று தெரிவித்தார்.

போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கும் அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிடம் கருத்துக்கேட்க அவரது செல்போனில் தொடர்பு கொண்டோம். தீபா தரப்பில் நம்மிடம் பேசினார் அ.தி.மு.க. ஜெ. தீபா அணியின் தலைமை செய்தித் தொடர்பாளர்தலைமை செய்தித் தொடர்பாளர் பசும்பொன்பாண்டியன் பசும்பொன்பாண்டியன்.

"ஜெயலலிதா மறைந்து ஒன்பது மாதங்களாகின்றன. அவரது பூத உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்கூட நினைவிடம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தீபாவை பழிவாங்க, போயஸ் கார்டன் வீட்டை அரசுடைமையாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கான அனுமதியை தீபாவிடம் பெறவில்லை. போயஸ் கார்டன் வீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்துள்ளோம். முதல்வரின் அறிவிப்புக்கு உடனடியாக நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கவுள்ளோம்.

 

ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது கண்கெட்டப்பிறகு சூர்யநமஸ்காரம் போன்றது. கண்துடைப்புக்காக விசாரணை கமிஷன் அமைக்கப்படக்கூடாது. இந்த விசாரணை வளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள், சசிகலா குடும்பத்தினர் என சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரிக்க வேண்டும். விசாரணை கமிஷன் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்" என்றார்.

 

http://www.vikatan.com/news/tamilnadu/99401-this-is-our-house-slams-deepa.html

  • தொடங்கியவர்

சசி கட்டுப்பாட்டில் ஜெ. இல்லம்

 

 
Sasikala

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் தோட்ட இல்லம் தற்போது வரை அவரது தோழி சசிகலாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.

டிடிவி தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் சில தினங்கள் மட்டும் போயஸ் இல்லத்துக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், தினகரனுக்கும் தீபக்குக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தீபக் போயஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன்பின் இருவருமே ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வரவில்லை என அங்கு பணியில் உள்ள போலீஸார் தெரிவித்தனர்.

 

தனியார் பாதுகாப்பு

ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிய சிலர் மட்டும் அவ்வப்போது வந்து செல்கின்றனர். போயஸ் இல்ல பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாவலர்கள் தொடர்ந்து ‘ஷிப்ட்’ அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

வீட்டின் பராமரிப்பை ஏற்கெனவே பணியாற்றியவர்களே கவனித்துக் கொள்கின்றனர். வீட்டின் நிர்வாகம், கட்டுப்பாடு முழுவதும் தற்போது வரை சசிகலா குடும்பத்தினரிடமே உள்ளது. வேதா இல்லத்தின் அருகில் ஜெயா டிவி அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் இளவரசியின் மகன் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய, உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, பறிமுதல் செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லம் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்படவில்லை. போயஸ் தோட்டவீடு, ஜெயா டிவி அலுவலகம், நமது எம்ஜிஆர் பத்திரிகை ஆகிய அனைத்தும் சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இப்போது வரை இயங்கி வருகின்றன.

http://tamil.thehindu.com/tamilnadu/article19515211.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜெயலலிதா வீட்டை அரசு நினைவிடமாக்க முடியுமா? - சட்ட நிபுணர்கள் விளக்கம்

 

 
poes1jpg

வேதா நிலையம்   -  கோப்புப் படம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும். அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு, அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்

முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் யார் பெயரில் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால், அவர்களிடம் ‘பொது நோக்கத்துக்காக’ என்று சொல்லி அதற்கான நஷ்டஈடு கொடுத்துவிட்டு அரசு நினைவிடம் ஆக்கலாம். அதில் சட்டப்பிரச்சினை எதுவும் வரப்போவதில்லை.

மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி

முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விசாரணையை அப்போதே நடத்தியிருக்க வேண்டும். “ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்த வேண்டும்” என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா இறந்தவிதம் வேறாக இருப்பதால் மக்களுக்கு அதில் சந்தேகம் இருக்கிறது. அதனால் நீதி விசாரணை நடத்தியாக வேண்டிய நிலை. ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசு நினைவிடமாக மாற்றுவதில் பிரச்சினை எதுவும் இருக்காது. அவ்வாறு நினைவிடமாக ஆக்கக்கூடாது என எதிர்ப்பவர்கள் வழக்கு தொடர்ந்தால் அரசு அதை எதிர்கொள்ளும். “எனக்குப் பின்னால் என் சொத்துகள் எல்லாம் அதிமுக கட்சிக்கே சொந்தம்” என்று முதல்வர் ஜெயலலிதாவே ஒருமுறை கூறியிருக்கிறார். அதனால் அவரது இல்லத்தை அரசு நினைவிடமாக்குவதில் சிரமம் இருக்காது.

முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன்

முதல்வரின் 2 அறிவிப்புகளும் பொதுவான கோரிக்கைகள்தான். ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை அறிவிப்பு தாமதமான நடவடிக்கை. அப்போதே அறிவித்திருந்தால் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஜெயலலிதா வீட்டை அரசு நினைவிடமாக்குவதில் பிரச்சினை இருக்காது. இந்தப் பிரச்சினைகளைவிட நீட் தேர்வு, கதிராமங்கலம், நெடுவாசல், காவிரி தண்ணீர், சென்னை தண்ணீர் தட்டுப்பாடு, ரேஷன் பொருள் விநியோகம் போன்றவைதான் மக்களின் தீவிர பிரச்சினைகளாக உள்ளன. இந்த நிலையில் முதல்வரின் அறிவிப்பு மக்களிடம் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்

முதல்வரின் அறிவிப்புகள் அரசியல் காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளன. நீதி விசாரணையின் பரிந்துரைகளை அரசு ஏற்கலாம், ஏற்காமல்கூட இருக்கலாம். “அரசு ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டால், அதில் இருந்து வெளியே வருவதற்காக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு அதை இழுத்தடிக்கிறது” என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. நீதி விசாரணை கண்துடைப்புதான். இதற்குப் பதிலாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாம். ஜெயலலிதா வீட்டை எடுத்துக்கொள்ள அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19515204.ece

  • தொடங்கியவர்

‘ஜெ.வீட்டை நினைவிடமாக்குவதில் சட்டச் சிக்கல்!’ - பரபரப்புக்காக அறிவித்தாரா எடப்பாடி பழனிசாமி? #VikatanExclusive

 
 

ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை, அரசு நினைவிடமாக்குவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக, சட்ட நிபுணர்கள் சொல்கின்றனர். பரபரப்புக்காகவும் யாரையோ பழிவாங்குவதற்காகவும்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக தீபா தரப்பு குற்றம் சாட்டுகிறது. 

‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம்,’ என்று அழைக்கப்படும் இல்லம் அரசு நினைவிடமாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “என்னுடைய அனுமதி இல்லாமல் போயஸ் கார்டன் வீட்டை எப்படி அரசு நினைவிடமாக்கலாம்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் தீபா. முதல்வரின் அறிவிப்புக்கு நீதிமன்றத்தில் தடை பெறவும் தீபா முடிவுசெய்துள்ளார். இதற்கான பணிகளில் களமிறங்கியுள்ளனர், தீபா தரப்பு வழக்கறிஞர்கள்.

ஜெயலலிதா,ஜெ. தீபா,தீபக்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. ஜெ. தீபா அணியின் மாநில தலைமைச் செய்தித் தொடர்பாளர் பசும்பொன்பாண்டியன், "ஒரு இடத்தை அரசு நினைவிடமாக்க வேண்டுமென்றால், அந்த இடத்துக்குச் சொந்தமான வாரிசுதாரர்களிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பரபரப்புக்காகவும் யாரையோ பழிவாங்கும் நோக்கத்திலும் 'ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு, அரசு நினைவிடமாக்கப்படும்' என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அந்த வீட்டின் வாரிசுதாரர்களில் ஒருவரான தீபாவிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை. இதுதொடர்பாக, தீபா தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது. அதில், ஜெயலலிதாவின் வீடு தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, முதல்வரின் அறிவிப்புக்கு முதலில் தடை வாங்க உள்ளோம்” என்றார்.

இதற்கிடையில், தீபாவின் சகோதரர் தீபக், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை அரசு நினைவிடமாக்கும் செய்தியை டிவி, செய்தித்தாள்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன். அந்த வீட்டை நினைவிடமாக்குவதில் எனக்கும் விருப்பம்தான். ஆனால், நினைவிடமாக்குவது தொடர்பாக அந்த வீட்டின் வாரிசுதாரர்களில் ஒருவரான என்னிடம் யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை. யாரிடமும் கேட்காமல் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள். அந்த வீட்டின் ஆவணங்கள் என்னுடைய பாட்டி சந்தியா பெயரில் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பிய கடிததத்தில், முதலில் 9.8.2017 என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து, 9-ம் தேதியை அடித்துவிட்டு 16-ம் தேதி என்று திருத்தப்பட்டுள்ளது. அப்படியென்றால், போயஸ் கார்டன் வீடு அரசு நினைவிடமாக்கும் தகவல், முன்கூட்டியே தீபக்கிற்கு தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டப் பொறியாளர் எஸ்.எஸ். பாலாஜிஅரசு நினைவிடமாக்குவதுகுறித்து சட்டப் பொறியாளர் எஸ்.எஸ். பாலாஜி கூறுகையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், மக்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகள்குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வி, வேலை, பேச்சுரிமை என்ற வரிசையில் சொத்துரிமையும் இடம் பெற்றியிருந்தன. 1977-ம் ஆண்டு, 44-வது சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பிரிவு 300ஏ-யின் படி, ஒரு சொத்து அரசுக்குத் தேவை என்று கருதப்படும் சூழ்நிலையில், அதை சட்டரீதியாக அரசு எடுத்துக்கொள்ள சட்டத்தில் வழிவகை உள்ளது. அதன்படி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை, அரசு நினைவிடமாக்க வேண்டுமென்றால், வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கிப் பெற்றுக்கொள்ள சட்டத்தில் இடமுள்ளது. பொதுவாக, சாலை விரிவாக்கம், பூங்கா போன்ற மக்கள் பயன்பாட்டுக்கு இடம் தேவைப்படும்போது, அதை எடுத்துக்கொள்ள அரசுக்கு உரிமை உள்ளது. அதன்படி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டையும் அரசு நினைவிடமாக மாற்ற அரசுக்கு உரிமை உள்ளது. இருப்பினும், இதுதொடர்பான இறுதி முடிவை நீதிமன்றம் எடுக்கும்” என்றார். தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக்கும்போது, சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் புகழேந்திஅ.தி.மு.க. தொண்டர்கள் அணி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியையும் கட்சியையும் அனுபவிக்க, ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க விசாரணை கமிஷன், போயஸ் கார்டன் இல்லம் நினைவிடம் என்று அவசரகதியில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தினகரனின் மிரட்டலிலிருந்து தப்பிக்கவும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணையவும் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டின் விரிவாக்கம், சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ளது. இதுபோன்ற சிக்கல்களை எல்லாம் சட்ட நிபுணர்களுடன் ஏன் முதல்வர் கலந்து ஆலோசிக்கவில்லை?

 

மேலும், எடப்பாடி பழனிசாமி முதல்வராகி ஆறு மாதங்களுங்கு மேலாகிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியை திருப்திப்படுத்தவே ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விசாரணை கமிஷன்மூலம் ஜெயலலிதா மரணத்தில் மறைந்துள்ள உண்மைகள் வெளி வருமா என்பது சந்தேகம்தான். அதுபோல, போயஸ் கார்டன் வீடும் நினைவிடமாக்குவதில் உள்ள சிக்கல்களுக்கு முதலில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அதை முறைப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்க வேண்டும்” என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/99487-legal-issues-raised-in-edappadi-palanisamys-poes-garden-memorial-plan.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.