Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்குதானே ஆசைப்பட்டாய் முதல்வனே...

Featured Replies

இதற்குதானே ஆசைப்பட்டாய் முதல்வனே...

 

மத்­த­ளத்­துக்கு இரண்டு பக்கம் அடி என்றால் எடப்­பாடி பழ­னிச்­சா­மிக்கு நாலா பக்­கமும் அடி விழுந்து கொண்­டி­ருக்­கி­றது... தின­கரன் சொல்­வது போல எடப்­பாடி முதல்வர் பத­விக்கு வந்­தது ஒரு விபத்­துத்தான். அண்­ணாவும் கலை­ஞரும் எம்.ஜி.ஆரும் இறு­தி­யாக ஜெ. யும் அமர்ந்து ஆட்சி புரிந்த முதல்­வரின் சிம்­மா­ச­னத்தில் சசி­க­லாவின் குடும்ப தயவால் மாத்­தி­ரமே முதல்­வ­ரா­கி­யவர் எடப்­பாடி. இவர் ஜெய­ல­லிதா போல தி.மு.க.தலைவர் கரு­ணா­நி­தி­யுடன் போட்­டி­யிட்டு தேர்­தலில் வெற்­றி­பெறும் அளவு வல்­லமை படைத்­தவர் இல்லை. ஜெய­ல­லிதா உயி­ருடன் இருக்கும் வரை காலையில் இருக்கும் அமைச்­ச­ரவை மாலையில் இருக்­காது. அடிக்­கடி அமைச்­சர்­களின் பதவியை பறிப்பார். அந்த இடத்­துக்கு வேறு ஒரு­வரை பத­வியில் அமர்த்­துவார். இதனால் ஜெ. தலை­மை­யி­லான அ.தி.மு.க.வில் யார் யார் அமைச்­சர்கள் என்றே கூறு­வது கடி­ன­மா­ன­தாக இருந்­தது. ஜெய­ல­லி­தா­வினால் இரு­முறை பன்னீர் முதல்வர் நாற்­கா­லியின் ஓரத்தில் அமர்ந்­த­மை­யாலேயே அவ­ரது முகம் கொஞ்சம் மக்­க­ளுக்கு பரிச்­ச­ய­மாக மாறி­யது. இந்­நி­லையில் ஜெய­ல­லி­தாவின் மரணம்... சசி­க­லாவின் முதல்வர் பதவி என்னும் பேரா­சையின் மீது விழுந்த மண் என்­ப­னவே எட­ப்பாடி பழ­னி­ச்சாமி என்­ப­வரின் முகத்தை வெட்ட வெளிச்சம் போட்டு உல­குக்கு காட்­டி­யது. அதுவும் தான் முதல்­வ­ராக வேண்­டு­மென்று அவ­சர அவ­ச­ர­மாக அவர் கொண்டு வந்த நம்­பிக்கை கோரும் பிரே­ரணை, கூவத்தூர் கூத்து, தி.மு.க. வெளி­ந­டப்பு என்­பன இவரை முதல்­வ­ராக்­கி­யது. மக்­களை சந்­தித்து தேர்­தலில் வெற்­றி­பெ­ற­வில்லை. கூவத்­தூரில் எம். .எல்.ஏ.க்களுக்கு சுக போகங்கள் வழங்கி அவ­சர அவ­ச­ர­மாக சசி­க­லாவின் பின்­ன­ணி­யோடு தமி­ழக அரசின் முதல்­வ­ராக நாற்­கா­லியில் அமர்ந்த எடப்­பா­டிக்கு இன்று தனது பதவி முதல்வர் அல்ல.. முள்­ கி­ரீடம் என தெரிந்­தி­ருக்கும்.

தான் முதல்­வ­ராக வேண்டி எடப்­பாடி கொண்டு வந்த நம்­பிக்கை கோரும் தீர்­மானம் தமி­ழக அர­சி­யலில் பெரும் களே­ப­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமையை நம்மால் மறக்க முடி­யாது. ஜெய­ல­லிதா உயி­ருடன் முதல்­வ­ராக பதவி வகித்த போது இரண்டு முறை தன் பத­வியை இழக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அப்­போ­தெல்லாம் தனது விசு­வா­சத்­துக்கு பெயர் பெற்ற பன்­னீர்­செல்­வத்­தையே அவர் முதல்­வ­ராக்­கினார். அதன் வெளிப்­பாடு அவர் உயி­ரி­ழந்த பின்­னரும் அவ­ருக்கே முதல்வர் பதவி கிடைத்­தது. ஆனால் 75 நாட்கள் மருத்­து­வ­ம­னையில் இருந்த ஜெய­ல­லிதா எப்­படி உயி­ரி­ழந்தார். அவர் உயி­ரி­ழக்க என்ன காரணம் என்­பது இதுவரை மர்­ம­மா­கவே உள்­ளது.. அவ­ரது மரணம் பல்­வேறு சந்­தே­கங்­களை எழுப்­பி­ய­தோடு 75 நாட்கள் அவ­ரது அருகில் யாரையும் அனு­ம­திக்­காமல் சசி­கலா மட்­டுமே இருந்­த­மையால் ஜெ. மரணம் தொடர்­பி­லான இர­க­சியம் அவ­ருக்கு மட்­டுமே தெரியும் எனவும் அவர் வாய்­தி­றந்தால் மட்­டுமே உண்மை வெளிவரும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் இது தொடர்பில் பல பிர­ப­லங்கள் கேள்வி எழுப்­பி­ய­தோடு நீதி விசா­ரணை வேண்டும் என்று பல தரப்­பி­னரும் கோரிக்கை விடுத்தனர். பலர் இது தொடர்பில் பொதுநல வழக்­கு­களை கூட தொடர்ந்­தனர். ஆனால் அது தொடர்­பி­லான முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் எதுவும் நடை­பெ­ற­வில்லை. இந்­நி­லையில் பன்னீர் முதல்­வ­ரா­கி­யதும் பொதுச்­செ­ய­லாளர் யாரென்ற கேள்வி எழும்­பி­யது. அது­வரை எஃகு கோட்­டை­யாக அ.தி.மு.க.வை ஜெய­ல­லிதா கட்­ட­மைத்­தி­ருந்தார். அந்த இடத்­துக்கு வரு­வ­தற்­கான தகுதி அவ­ருக்கு பின்னர் யாருக்­குமே இல்லை. இந்­நி­லையில் ஜெய­ல­லி­தாவின் தோழி­யா­கயும் 30 வரு­டங்­க­ளுக்கு மேல் அவ­ரது நிழ­லாகவும் இருந்த சசி­கலா நிழலை நிஜ­மாக்க முயற்­சித்தார். ஜெய­ல­லி­தாவின் பாணியில் உடை­களை உடுத்­தினார். தலை­மு­டியை வாரினார். அவ­ரது வாக­னத்தில் பய­ணித்தார். அவ­ரது அறையை பயன்படுத்­தினார். இறு­தியில் ஜெய­ல­லி­தா­வா­கவே மாற முயற்­சித்தார். அதன் வெளிப்பாடு எஃகு கோட்­டைக்கு ஏக­ம­ன­தாக பொதுச் செய­லா­ள­ரா­கினார். தோழி பொதுச்­செ­ய­லா­ள­ரா­கி­யதை கூட ஏற்­றுக்­கொள்ள முடிந்­தது. ஆனால் அவர் முதல்வர் கனவில் மிதந்தார். அந்த கனவு இறு­தியில் அவரை சிறைக்குள் தள்­ளி­விட்­டது. இந்­நி­லையில் பன்னீர்செல்­வத்தின் இரா­ஜி­னாமா, ஜெ.சமா­தியில் மௌன விரதம், கூவத்­தூரில் எம்.எல். ஏ.க்கள் தங்க வைக்­கப்­பட்­டமை என்­பன 3 மாதத்­துக்குள் தமி­ழ­கத்தில் 3 ஆவது முதல்­வரை உரு­வாக்­கி­யது. அ.தி.மு­.க.வை பன்னீர் தரப்பு, சசி­த­ரப்பு என்று இரண்­டாக உடைத்­தது. அந்த நேரத்தில் சசி­கலா சிறையில் இருந்து கொண்டே தமி­ழக ஆட்­சியை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் தனது விசு­வா­சி­யான எடப்­பா­டியை முதல்­வ­ராக்­கினார். அத்­தோடு சசி­கலா சிறையில் இருந்­த­மையால் தொடர்ந்து கட்­சியை தம் குடும்ப கட்­டு­ப்பாட்­டுக்குள் கொண்­டு­வரும் நோக்கில் தின­க­ர­னுக்கு துணைப் ­பொ­து­ச்செ­ய­லாளர் என்னும் பதவி கிடைத்­தது. இது­வரை அ.தி.மு.க. வில் இல்­லாத ஒரு பத­வி­யான துணைப்­பொ­துச்­செ­ய­லாளர் பதவி தின­க­ர­னுக்­காக உரு­வாக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் ஜெய­ல­லி­தாவின் தொகு­தி­யான ஆர். கே. நகர் இடைத்­தேர்தல் வந்­தது. அத்­தேர்­தலில் ஆரம்­பத்தில் தின­க­ர­னுக்கு எதிர்ப்பு ஏற்­பட்­டாலும் ஈட்டி எட்­டி­ய­வரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும் என்­ப­தற்­கிணங்க பணம் என்னும் ஆயு­தத்­தினால் தின­கரன் மீதான மக்­களின் எதிர்ப்­புகள் மக்­க­ளிடம் சம­ர­ச­மா­கி­யது. ஆயினும் அத்­தேர்­த­லினால் அ.தி.மு.க.வின் உத்­தி­யோகபூர்வ சின்­ன­மான இரட்டை இலை முடக்­கப்­பட்­டது. தின­கரன் தொப்பி சின்­னத்தில் வாக்கு கேட்டார். அவ­ருக்கு ஆத­ர­வாக அமைச்­சர்கள் அனை­வரும் களத்தில் குதித்­தனர். முதல்வர் எடப்­பா­டியும் தொப்­பி­யுடன் தின­க­ர­னுக்­காக பிர­சா­ரத்தில் ஈடு­பட்டார். தின­க­ர­னுக்கு பணத்­தினால் ஆத­ரவு பெரு­கி­யது. அந்த தேர்தல் நடை­பெற்று இருந்­தி­ருந்தால் தின­கரன் வெற்­றி­பெற்­றி­ருக்க கூடிய வாய்ப்­புகள் அதி­க­மாக இருந்­தன. ஆனால், அனைத்து மாநி­லங்­க­ளிலும் தன் கால்­களை ஆழப் பதிய வேண்டும் என்ற பேரா­சையில் இருக்கும் பா.ஜ.க.விற்கு தனது இயல்­புக்கு மாறான ஒருவர் அ. தி.மு.க.வின் உயர் பத­வியில் இருப்­பதில் அதி­ருப்­தியே. அதன் வெளிப்பாடு தின­க­ரனை இரட்டை இலைக்கு இலஞ்சம் கொடுத்­த­தாக சிறைக்கு அனுப்­பி­யது. மற்றும் அமைச்­சர்­களை மிரட்டும் வகையில் விஜ­யபாஸ்கர் உள்­ளிட்­டோரை வரு­­மான வரி சோத­னையில் சிக்க வைத்­தது. இதனால் எடப்­பாடி தொடர்ந்து தான் ஆட்­சியில் இருக்க வேண்­டு­மானால் பா.ஜ.க.வினை பகைத்­துக்­கொள்ளக் கூடாது என்ற முடி­வுக்கு வந்தார். தின­கரன் திஹார் சிறையில் அடைக்­கப்­பட்­டமை எடப்­பா­டிக்கு வாய்ப்­பாக மாறி­யது. அவர் தின­க­ரனை மறந்தார். சசி­க­லா­வையும் மறந்தார். டில்­லிக்கு மட்­டுமே பறந்தார். அது வரை சசியின் விசு­வா­சி­யாக இருந்­தவர் மோடியின் விசு­வா­சி­யாக மாறினார். இது சசி­த­ரப்பை அதிர்ச்­சி­ய­டைய வைத்­தது.

இதே­வேளை தமி­ழ­கத்தில் ஜெ. ஆட்­சியில் எதிர்க்­கப்­பட்ட மத்­திய அரசின் திட்­டங்­களை எல்லாம் ஆமாம் சாமி போட்டு ஏற்­றுக்­கொண்டார். நீட்­தேர்வு, விவ­சா­யிகள் பிரச்­சினை, ஹைட்ரோ கார்பன் பிரச்­சினை மற்றும் பல்­வேறு பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாமல் மக்கள் போராட்­டத்­துக்கு வழி­வ­குத்­தன. அரசுக்கு எதிராக போராடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதேவேளை, பல்­வேறு முத­லீட்­டா­ளர்­களும் தமி­ழ­கத்தில் இருந்து வெளி­யே­று­கின்­றனர். தமி­ழக மக்­களை வாட்டி வதைக்கும் குடிநீர்ப் பிரச்­சி­னையைத் தீர்க்க அரசு எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. தற்போது கவேரியில் அணைக்கட்ட கர்நாடாகவில் அனுமதி கொடுத்துள்ளது. மேலும் தமி­ழக அமைச்­சர்கள் ஒருவர் பின் ஒரு­வ­ராக சர்ச்­சை­களில் சிக்கி வரு­கின்­றனர். சுகா­தார அமைச்சர் விஜ­ய­பாஸ்கர் வீட்டில் வரு­மான வரித்­துறை சோதனை நடந்­தது. அமைச்சர் சரோஜா பெண் அதி­கா­ரியை மிரட்­டி­ய­தாக புகார் எழுந்­துள்­ளது. இதனால் ஆட்சி விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளாகி வரு­வ­தோடு தினமும் ஒரு போராட்டம் மாநில அர­சுக்கும் மத்­திய அர­சுக்கும் எதி­ராக நடை­பெற்று வரு­கின்­றது. எடப்­பாடி அரசு செயற்­திறன் அற்­றது என்ற குரல் ஒலிக்க ஆரம்­பித்­தது. இவ் ஆட்சியை அது­வரை தமி­ழக எதிர்க்­கட்சித் தலைவர் ஸ்டாலின் பினாமி ஆட்சி என விமர்­சித்து வந்தார். அதற்கு வலு­சேர்­ககும் வகையில் முத­லா­வ­தாக கன­மாக ஒலித்­தது ரஜி­னியின் குரல். சிஸ்டம் தமி­ழ­கத்தில் சரி­யில்லை. போருக்கு தயா­ரா­குங்கள் என்று வெளிப்ப­டை­யாக குரல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கமல்­ஹா­சனின் குரலும் தற்­போது தொடர்ந்து ஒலிக்­கி­றது. இது­வரை ஊழல் ஆட்சி என்று கூறிய கமல் இப்­போது ஏன் இன்னும் முதல்வர் பதவி வில­காது உள்ளார்? ஏன் அவரை பதவி வில­கு­மாறு தமி­ழக கட்­சிகள் கோராமல் உள்­ளன என்று நேர­டி­யாக குரல் கொடுத்து விட்டார். இதனை எடப்­பாடி நிச்­ச­ய­மாக எதிர்­பார்­த்தி­ருந்­தி­ருக்க மாட்டார். ஆனால், கமலின் பேச்சு தீ போல இப்­போது பற்­றி­விட்­டது. கமலை தொடர்ந்து பா.ம.க., நாம் தமிழர் கட்சி, காங்­கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க. என அனைத்து கட்­சி­களும் வலு­வாக தமது குரலை எடப்­பா­டிக்கு எதி­ராக பதிவு செய்ய தொடங்கி விட்­டன. அத்­தோடு தின­கரன் அண்­மையில் மதுரை மேலூரில் நடத்­திய பொதுக்­கூட்டம் நிச்­சயம் எடப்­பா­டியை கலக்­க­ம­டைய வைத்­தி­ருக்கும். அக்­கூட்­டத்தின் போது எடப்­பா­டியை தின­கரன் கடு­மை­யாக வசை பாடினார். அ.தி.மு.க. வை காப்­பாற்ற வேண்­டிய பொறுப்பு தனக்கு உள்­ள­தா­கவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்­தேனும் கட்­சியை காப்­பாற்­றுவேன் எனவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார். அத்­தோடு ஏறிய ஏணியை மிதித்து விட்­டனர். அமைச்­சர்கள் திருந்த வேண்டும். இல்லையே. திருத்­தப்­ப­டுவர். அவர்­க­ளுக்கு ஆபத்து நிச்­சயம் உண்டு என எச்­ச­ரித்­துள்ளார். இந்த பொதுக்­கூட்­டத்தை தொடந்து தின­க­ர­னுக்கு 40 எம். எல்.ஏ.க்­களின் ஆத­ரவு வெளிப்­ப­டை­யாக உள்­ளமை தெரி­ய­வந்­தது. மேலும் பலர் எடப்­பாடி தரப்பில் இருந்­து­கொண்டே தின­க­ரனை ஆத­ரிப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எடப்­பா­டியை அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்ள இந்த பொது­க்கூட்­டத்­தி­லி­ருந்து தப்­பிக்க அவர் மீண்டும் பன்­னீ­ருடன் கூட்­டு­வைக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார். அதற்­கி­ணங்க தின­க­ரனை கட்­சி­யி­லி­ருந்து ஒதுக்­கி­ய­தோடு ஜெய­ல­லிதா மரணம் குறித்து விசா­ரணை நடத்த விசா­ரணை ஆணை­யகம் ஒன்றை அமைக்­கப்­போ­வ­தாக அறி­வித்­துள்ளார். இந்த ஜெ. மரண விசா­ரணை என்­பதே ஒரு கண்­து­டைப்பு போன்­றதே. ஏனெனில் இறந்­தது. முதல்வர். இது தொடர்பில் ஓய்வு பெற்ற நீதி­பதி முன்­பான விசா­ரணை என்­பது உண்­மையில் கண்­து­டைப்பே. உண்­மை­யான விசா­ரணை நடத்த வேண்­டு­மானால் சி.பி.ஐ. விசா­ர­ணையே உகந்­தது. ஆனால் பன்­னீ­ருடன் கூட்­ட­மைத்து ஆட்­சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் தற்­போது ஓய்வு பெற்ற நீதி­ப­திகள் தலை­மையில் விசா­ரணை அமைக்­க­ப்படும் என்று தெரி­வித்­துள்ளார். இது ஆரோக்­கி­ய­மா­னது அல்ல.

தொடந்து தின­கரன் எடப்­பாடி ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்­கான வியூ­கங்­களை வகுத்­துள்­ளாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

 தங்­களை ஓரம்­கட்­டிய இந்த அரசை கவிழ்க்க வேண்டும் என்­பதில் தற்­போது தின­கரன் தரப்பு தீவி­ர­மாக உள்­ளது. எம்.எல்.ஏ.க்களின் பலம் இருப்பின் நம்­பிக்கையில்லா தீர்­மா­னத்தை கொண்டு வந்து எடப்­பாடி அரசை கவிழ்க்­கலாம். கமல் முதல்வர் பதவி விலக ஏன் யாரும் இது­வரை கோர­வில்லை என்­ற­துமே சீமான் உள்­ளிட்டோர் அரசை மாற்ற அரசுக்கு எதி­ராக களத்தில் இறங்கி போராட தாம் தயார் என்று தெரி­வித்­துள்­ளனர். மறு­பக்கம் மக்கள் தொடர்ந்து ஏதா­வது ஒரு பிரச்­சி­னைக்கு தினமும் போராடு­கின்­றனர். பல இடங்­களில் எடப்­பாடி பங்குபற்றும் நிகழ்­வு­களின் போது கறுப்புக்கொடி காட்டி பொது­மக்கள் சிலர் எதிர்ப்பை பதிவு செய்­துள்­ளனர். தி.மு.க. வேறு நம்­பிக்­கை­யில்லா பிரேரணை கொண்டு வருவோம் என்று அச்சுறுத்துகின்றது. ஜெ. இருக்கும் போதே குறைந்த வித்தியாசத்திலேயே தி.மு.க. கடைசி தேர்தலில் ஆட்சியை தவறவிட்டது. தற்போதைய நிலைமையில் தேர்தல் ஒன்று வந்தால் தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதேவேளை தேர்தலுக்கு தயாராகுமாறு ஸ்டாலின் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இவை அனைத்தும் எடப்பாடியின் முதல்வர் கிரீடத்தை முள் கிரீடம் போன்றதாகவே மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. மேலும் மீதமுள்ள 4 வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்து விட வேண்டும். ஆட்சி கவிழ்ந்தால் இனி வாழ்நாளில் எப்போதும் பழனிச்சாமிக்கு முதல்வர் நாற்காலி கிடைக்காது. ஏன் ஜெ. இல்லாத அடுத்த தேர்தலில் எம்.எல். ஏ.பதவி கிடைக்குமா என்பதே கேள்விக்குறிதான். ஆதலால் முள்கீரிடமானாலும் பரவாயில்லை... வலிகளை மறைத்து இந்த முதல்வர் கிரீடத்தை தொடர்ந்து சூட்டிக்கொள்வோம் என்ற ஆசையிலேயே எடப்பாடி உள்ளார்.. ஆனால் முட்கள் தலையை காயப்படுத்தி தீராத வேதனைகளையும் காலத்தால் அழிக்க முடியாத வடுக்களை கூட உருவாக்கக் கூடும்...

ஒரு மாநி­லத்தின் முதல்வர் அதா­வது , மக்­களின் தலைவர் என்­பவர் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும். மக்­களால் மக்­க­ளுக்­கான மக்­க­ளது ஆட்சி என்­பது தேர்­தலில் நிற்­காமல் சில செல்­வாக்­கு­களை பயன்­ப­டுத்தி அடையக் கூடிய ஒன்­றல்ல. தமி­ழகம் என்­பதில் மாறி மாறி அ.தி.மு.க., தி.மு.க என்­பன ஆட்­சிக்கு வந்­தாலும் மக்­களே அவ் ஆட்­சி­யா­ளரை தெரிவு செய்­தனர். ஊழல், பணப்­பட்­டு­வாடா என ஆயிரம் எதிர்­ம­றை­யான கருத்­துக்கள் ஆட்­சி­யா­ளர்கள் மீது சுமத்­தப்­பட்­டாலும் முதல்­வ­ராக கூடி­ய­வர்கள் மக்­க­ளினால் வாக்­க­ளித்து தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவே இது­வரை இருந்­தனர். காம­ரா­ஜரும் அண்­ணாவும் கரு­ணா­நி­தியும் எம்.ஜி.ஆரும் ஜெய­ல­லி­தாவும் மக்­க­ளது நேரடி ஆத­ரவை பெற்று ஆட்சிபீடம் ஏறி­ய­வர்கள். முதல் வர் என்ற இடத்தை அவ்­வ­ளவு எளி­தாக அவர்கள் பெற­வில்லை. பின்னர் அவ்­வி­டத்தை தக்க வைத்­துக்­கொண்­டதும். அவர்­களின் தனித்­தி­ற­மையே. நடப்பில் கரு­ணா­நிதி, ஜெய­ல­லிதா என்ற இரு சிங்­கங்கள் பல தசாப்­தங்கள் ஆட்சி புரிந்த சிம்­மா­ச­னத்தில் ஒருவர் சந்­தர்ப்பம் கிடைத்து விட்­டது என்று அம­ரு­வது என்­பது எளி­தான விட­ய­மல்ல. அர­சியல் சாணக்­கியம், மக்கள் செல்­வாக்கு, அத் ­தோடு அந்­த­ளவு ஆளு­மையும் திற­மையும் அவ­சியம். முதல்வர் நாற்­காலி என்­பது ஒரு மின்­சார கதிரை போன்­றதே.. அதனை இயக்க தெரிந்­த­வரால் மட்­டுமே அதில் தொடர்ந்து அமர முடியும்.. பிர­த­ம­ரையே வீடு தேடி வர­வைத்த வல்­லமை, மாநி­லத்தில் இருந்து கொண்டே மத்­திய அரசை ஆட்டி வைத்த திறமை, பெருமை படைத்த தமி­ழக முதல்­வர்கள் அமர்ந்த இடத்தில் அதற்கு ஈடான திற­மையும் தகு­தியும் இல்­லாத ஒருவர் அமரும் பட்­சத்தில் அவர்­க­ளுக்கு பதவி என்­பது பாறாங்கல் போன்­றதே.. வெளியே சிரித்­துக்­கொண்டு முதல்­வ­ராக அமர்ந்­தாலும் உள்­ளத்தில் தினம் தினம் ஆட்சி கவிழ்ந்து விடுமோ, பதவி பறிபோய் விடுமா என்ற பயத்தில் தூக்கத்தை தொலைத்து முதல்வர் எனும் மகுடத்தை முள் கிரீடமாக சுமந்து கொண்டிருப்பதே விதியாகும் தவிர... வேறொன்றும் இல்லை

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-19#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.