Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை, அரசுடமையாக்கும் பணியை, தமிழக அரசு துவக்கியுள்ளது.

Featured Replies

ஜெயலலிதா,Jayalalitha ,  போயஸ்கார்டன், Jayalalitha Boisakartan, அரசுடமை, Government Owned,தமிழக அரசு ,Tamilnadu Government,  வருவாய் துறை,Revenue Department,  தாசில்தார் , Tasildar, சட்ட பிரச்னை,  Legal Problem, இழப்பீடு , Compensation, வேதா நிலையம்,Veda home, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, Late Chief Minister Jayalalithaa,  முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, போலீஸ் பாதுகாப்பு,  Police Security, அ.தி. மு.க.,  ADMK, பன்னீர் அணி , Panneer team, சசிகலா, Sasikala, மயிலாப்பூர் தாசில்தார் ,Mylapore Tashildar,  கோத்தகிரி கோடநாடு எஸ்டேட், Kotagiri Kodanad Estate,

ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை, அரசுடமையாக்கும் பணியை, தமிழக அரசு துவக்கியுள்ளது.

 

ஜெயலலிதா,Jayalalitha ,  போயஸ்கார்டன், Jayalalitha Boisakartan, அரசுடமை, Government Owned,தமிழக அரசு ,Tamilnadu Government,  வருவாய் துறை,Revenue Department,  தாசில்தார் , Tasildar, சட்ட பிரச்னை,  Legal Problem, இழப்பீடு , Compensation, வேதா நிலையம்,Veda home, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, Late Chief Minister Jayalalithaa,  முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, போலீஸ் பாதுகாப்பு,  Police Security, அ.தி. மு.க.,  ADMK, பன்னீர் அணி , Panneer team, சசிகலா, Sasikala, மயிலாப்பூர் தாசில்தார் ,Mylapore Tashildar,  கோத்தகிரி கோடநாடு எஸ்டேட், Kotagiri Kodanad Estate,

தாசில்தார் தலைமையில், நேற்று வருவாய் துறையினர், வீட்டையும், நிலத்தையும் அள விட்டனர். சட்ட பிரச்னை ஏற்படும் முன், இழப் பீடு விஷயத்தில், அரசு முந்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சென்னை,போயஸ்கார்டன் பகுதியில்,மறைந்த முதல்வர், ஜெ., வசித்த, 'வேதா நிலையம்' வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில், ஜெ., இருந்த போது பணியாற்றிய ஊழியர்கள் தங்கியுள்ள னர். சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் வீடு உள்ளது.அவர்களிடமிருந்து வீட்டை மீட்டு, நினைவிடமாக மாற்ற வேண்டும் என, அ.தி. மு.க., தொண்டர்கள் மற்றும் பொது மக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அ.தி. மு.க., - பன்னீர் அணி சார்பில், கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.
 

வெளியேற்றம்


இந்தச் சூழ்நிலையில், 'ஜெ., வசித்த வீடு, அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு, பொது மக்கள்

பார்வைக்கு அனுமதிக்கப்படும்' என, 17ம் தேதி, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.உடனடி யாக,அந்த அறிவிப்பை செயல்படுத்தும் பணி யை,தமிழக அரசு துவக்கிஉள்ளது. அறிவிப்பு வெளியான மறுநாளே, போயஸ் கார்டன் இல்லத்தில்,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்த, தனியார் ஊழியர்கள் வெளியேற்றப் பட்டனர்.

அப்பொறுப்பை போலீசார் ஏற்றனர். வீட்டை சுற்றி, போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப் பட்டது. தற்போது, வீட்டில்தங்கி உள்ள பணி யாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்; மற்ற எவரும் அனுமதிக்கப்படுவதில்லை.ஜெ., வசித்த வீடு, 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.இந்த வீட்டிற்கு, ஜெ., அண்ணன் வாரிசுகளான, தீபா, தீபக் ஆகியோர் சொந்தம் கொண்டாடுகின்றனர். அவர்களிடம் பேசி, உரிய இழப்பீடு வழங்கி, வீட்டை அரசுடமையாக்க, அரசு முடிவு செய்துள்ளது.
 

விலை நிர்ணயம்


இந்நிலையில், நேற்று மயிலாப்பூர் தாசில்தார் தலைமையில், வருவாய் துறை ஊழியர்கள், ஏழு பேர், போயஸ் கார்டன் சென்றனர். ஜெ., வசித்த வீட்டையும், அதைச் சுற்றியுள்ள நிலத்தையும் அளந்து, விபரங்களை குறித்துக் கொண்டனர். வீட்டில் உள்ள பொருட்களின் விபரங்களையும் சேகரித்தனர்.

அந்த வீட்டுக்கு, விலை நிர்ணயம் செய்வதற் காகவே, இந்த நடவடிக்கை என, அரசு வட்டா ரத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில்,

 

சட்ட பிரச்னைஏற்படுவதற்கு முன், வீட்டிற்கு விலை நிர்ண யம் செய்து, வாரிசுதாரர்களிடம் பேசி, இழப்பீடு வழங்க, அரசு தீவிரம் காட்டி வருகிறது.
 

கோடநாட்டிலும் பாதுகாப்பு


மறைந்த ஜெ.,வின், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோட நாடு எஸ்டேட் பங்களாவில், ஏப்., 24ல், காவலாளி ஓம்பகதுார் என்பவர், கொலை செய்யப்பட்டார். பங்களாவின் ஜன்னல் கம்பி களை உடைத்து, பொருட்கள் கொள்ளையடிக் கப்பட்டது தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, கோடநாடு எஸ்டேட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ரகசிய கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. கெரடாமட் டத்தில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப் பட்டு, வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெ., வசித்த, சென்னை போயஸ் தோட்ட இல்லம், அவரது நினைவிடமாக மாற்றப்படும் என, தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட்டிலும் போலீஸ் பாதுகாப்பு, பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, எஸ்.பி., முரளிரம்பாவிடம் கேட்டபோது, ''கோடநாடு எஸ்டேட் பாதுகாப்பு, வழக்கமான நடவடிக்கை தான்; வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை,'' என்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1837445

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.