Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு வருடங்களுக்கு பின் கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ

Featured Replies

இரண்டு வருடங்களுக்கு பின் கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ

 

தி.மு.க. தலைவர் கருணாநிதியை இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை சந்திக்க உள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு பின் கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ
 
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி சமீபத்தில் உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.

201708221026558316_1_karunanidhi._L_styv

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது பிறந்த நாளையொட்டி கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அவரது உடல் நலமும் விசாரித்தார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரிக்கிறார். அவருடன் திருப்பூர் துரைசாமி மற்றும் ம.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளும் செல்கிறார்கள்.

2015-ம் ஆண்டு அருள்நிதி திருமணத்தின் போது கருணாநிதியை வைகோ சந்தித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரை சந்தித்து உடல் நலம் விசாரிக்க வைகோ சென்றார். அப்போது தி.மு.க. தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வைகோ கருணாநிதியை சந்திக்காமல் திரும்பி விட்டார்.

2½ ஆண்டுகளுக்கு பிறகு வைகோ இன்று மீண்டும் கருணாநிதியை சந்திக்க உள்ளார்

http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/22102653/1103727/Vaiko-meets-Karunanidhi-today-evening.vpf

  • தொடங்கியவர்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கருணாநிதியைச் சந்தித்தார் வைகோ!

 
 

 

21035203_1573118509427346_1881097903_o_2

தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோபாலபுரம் சென்றார். வைகோவை தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். துரைமுருகன், ஆ.ராசா, வேலு, திருச்சி சிவா, ஐ.பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து, அவர் கருணாநிதியைச் சந்தித்தார். அவரது உடன் நலன் குறித்து, ஸ்டாலின் மற்றும உறவினர்களிடம் விசாரித்தார். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கருணாநிதியைச் சந்தித்தார் வைகோ. 

http://www.vikatan.com/news/tamilnadu/100019-vaiko-met-karunanidhi.html

  • தொடங்கியவர்

கருணாநிதியை சந்தித்தார் வைகோ; முரசொலி விழாவில் பங்கேற்பதாக அறிவிப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்த வைகோ

உடல்நலமின்றி வீட்டில் ஓய்வெடுத்துவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முரசொலி பவளவிழா மாநாட்டில் பேசப்போவதாகவும் வைகோ தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய்க்கிழமையன்று மாலை சுமார் எட்டு மணியளவில் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வைகோ தன் கட்சி நிர்வாகிகளுடன் வருகைதந்தார். அவரை, தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், துரை முருகன், கனிமொழி உள்ளிட்டவர்கள் அழைத்துச் சென்றனர்.

கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தன்னை முதன் முதலில் வைகோ என்று அழைக்க ஆரம்பித்தவர் கருணாநிதிதான் என்று குறிப்பிட்டார். அரசியலில் தன்னை எப்படி கருணாநிதி வளர்த்தெடுத்தார் என்பதையெல்லாம் நினைவுகூர்ந்த வைகோ, தற்போது கருணாநிதியைச் சந்தித்தபோது தன் கையை அவர் பிடித்துக்கொண்டு விடவேயில்லை என்று தெரிவித்தார்.

தான் நெகிழ்ந்துபோய் அழுததாகவும் அதைப் பார்த்து கருணாநிதியின் கண்களிலும் கண்ணீர் வந்ததாகவும் தெரிவித்த வைகோ, தான் போய்விட்டு மீண்டும் வருவதாகச் சொன்னதும் புன்னகைத்ததாகத் தெரிவித்தார்.

தன்னிடம் கருணாநிதி பேச முயன்றதாகவும் ஆனால், கழுத்தில் ட்ராக்யோஸ்டமி குழாய் பொருத்தப்பட்டிருப்பதால் அவரால் பேச முடியவில்லை என்றும் கூறினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்த வைகோ

கடந்த இரண்டு மாதங்களாக தன்னுடைய கனவில் தினமும் கருணாநிதி வருவதாகவும் அது ஏனென்று தனக்கு புரியவில்லையென்றும் வைகோ கூறினார்.

இந்தச் சந்திப்பின்போது, செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் முரசொலி பவளவிழா மாநாட்டில் கலந்துகொண்டு பேச வேண்டுமென மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாகவும் தான் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் வைகோ தெரிவித்தார். இந்தத் தகவலைக் கேட்ட கருணாநிதி மீண்டும் புன்கைத்ததாகவும் வைகோ கூறினார்,

விரைவில் கருணாநிதி குணமடைந்து உரையாற்றுவார் என்று நம்புவதாகவும் வைகோ தெரிவித்தார்.

கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்தே தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இதற்கு முன்பாக, கடந்த டிசம்பர் 17ஆம் தேதியன்று உடல் நலமின்றி காவிரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த கருணாநிதியைப் பார்ப்பதற்காக வைகோ வந்தபோது, தி.மு.க. தொண்டர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவரது கார் மீதும் தாக்குதல் நடத்தினர்.

http://www.bbc.com/tamil/global-41018121

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.