Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எங்கே கருணாஸ்..?' - தேடுதல் பணியில் தினகரன் அணி

Featured Replies

'எங்கே கருணாஸ்..?' - தேடுதல் பணியில் தினகரன் அணி

 

கருணாஸ்

'என்னுடைய ஆதரவு தினகரனுக்குத்தான்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமே நேரிடையாகத் தெரிவித்தவர் கருணாஸ் எம்.எல்.ஏ. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் கருணாஸைத் தேடி வருகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.

அ.தி.மு.க-வில் அணிகள் இணைந்த பிறகு, அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கொடி பிடித்துள்ளனர். ஆளுநர் வித்யாசாகரைச் சந்தித்த தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ-க்கள் தனித் தனியாகக் கடிதம் கொடுத்தனர். அதில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். இந்த ஆட்சிக்கு நாங்கள் கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளனர். 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் நடவடிக்கைகளைக் கவனித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 'தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களால் ஆட்சிக்கு 
சிக்கல் ஏற்படுவதற்கு முன் அவர்களின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டும்' என்று விவாதித்துள்ளனர். மேலும், தி.மு.க. தரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டால் அதை எதிர்கொள்வது தொடர்பாகவும் விரிவாக ஆலோசித்துள்ளனர். அப்போது, தோழமைக் கட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மூவரையும் நம்பக்கம் இழுத்துவிட வேண்டும் என ஆலோசித்துள்ளனர்.

அப்போது, குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, 'கருணாஸின் ஆதரவு தினகரனுக்கு என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். அதன்பிறகு அவரிடம் பேசி எந்தப் பயனும் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார். அப்போது பேசிய அமைச்சர் ஒருவர், 'பேச வேண்டிய வகையில் பேசினால் எல்லாம் சரியாகிவிடும். தமிமுன் அன்சாரியைத் தவிர தனியரசு, கருணாஸை நமக்கு ஆதரவு தெரிவிக்க வைத்துவிடலாம' எனக் கூறியிருக்கிறார். அப்போது, 'கருணாஸ் எம்.எல்.ஏ எங்கே இருக்கிறார்?' என விசாரித்திருக்கிறார் முதல்வர். ஆனால், அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் தீவிர தேடுதலில் இறங்கியுள்ளனர். 

கருணாஸ்

 

இதற்கிடையில் தினகரன் ஆதரவாளர்களும், கருணாஸ் எம்.எல்.ஏ எங்கே என்று ரகசிய விசாரணையில் களமிறங்கியுள்ளனர். அப்போது, கருணாஸ் எம்.எல்.ஏ-வின் கார், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓர் இடத்திலும், அவரது செல்போனின் சிக்னல் வடபழனியிலும் இருப்பதாக மட்டுமே தகவல் கிடைத்துள்ளது. ஆனால் கருணாஸை அவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லையாம். இதுகுறித்து கருணாஸ் தரப்பில் விசாரித்தபோது, 'அவர் வழக்கம்போல மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரது முடிவை ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்' என்கின்றனர். தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் தினகரன் தரப்பும் முயற்சி செய்துவருகின்றன. 'இதில் பா.ஜ.க-வுடன் அதிக நெருக்கத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதால், தமிமுன் அன்சாரியின் ஆதரவு அவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லை' என்கின்றனர் மனிதநேய ஜனநாயக கட்சியினர். தனியரசு மற்றும் கருணாஸைப் பேச்சுவார்த்தையின் மூலம் தங்கள் பக்கம் இழுப்பதற்கு முதல்வர் தரப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/99971-ttv-dinakaran-team-in-search-for-mla-karunas.html

  • தொடங்கியவர்

கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆதரவு யாருக்கு? - உரிய நேரத்தில் முடிவு எடுப்பதாக அறிவிப்பு

 

முதல்வர் பழனிசாமியின் அரசுக்கு ஆதரவளித்து வந்த கருணாஸ், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகியோர் தற்போது தினகரன் பக்கம் சாய்ந்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.

அதிமுக கடந்த 2016-ல் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தபோது, பல்வேறு கட்சிகள் ஆதரவளித்தன. ஆனால், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு 2, முக்குலத்தோர் புலிப்படை- 1, கொங்கு இளைஞர் பேரவை- 1, சமக-1, இந்திய குடியரசு கட்சி- 1 என 6 தொகுதிகளை மட்டும் கூட்டணிக்கு அளித்தார். ஆனால், இந்த 6 பேரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர். இதில், தமிமுன் அன்சாரி (நாகை), கருணாஸ் (திருவாடானை), உ.தனியரசு (காங்கேயம்) ஆகிய 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இவர்கள் மூவரும் தொடர்ந்து அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.

ஓ.பி.எஸ் பிரிந்து சென்று, முதல்வராக பழனிசாமி பதவியேற்றதும், பெரும்பான்மை நிரூபிக்கும்போதும், பேரவைத் தலைவர் தனபால் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும் அதிமுக கொறடாவின் உத்தரவை ஏற்று அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்நிலையில் மூன்று எம்எல்ஏக்களும் தற்போது தினகரனுக்கு ஆதரவளித்து கடிதம் அளித்திருப்பதாகவும், அதை கருத்தில் கொண்டே, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், தினகரனுக்கு ஆதரவாக 22 எம்எல்ஏக்கள் உள்ளனர் என தெரிவித்ததாக தினகரன் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், பாஜக பக்கம் நெருங்கியுள்ளதால் முதல்வர் பழனிசாமி அரசுக்கு தமிமுன் அன்சாரியும் முதலில் இருந்தே சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளதால் கருணாஸும் ஆதரவளிக்க வாய்ப்பில்லை என்றும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனியரசு ஆதரவளிக்கலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக 3 பேரும் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் கூறியதாவது: தமிழக அரசியல் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மத்திய அரசின் வரம்பு மீறிய தலையீட்டால் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொண்டர்களின் கருத்தை அறிந்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19544312.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.