Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கல்களுக்குள் சிக்கும் வடக்கு மாகாணசபை

Featured Replies

சிக்கல்களுக்குள் சிக்கும் வடக்கு மாகாணசபை
 

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தலைமையிலான வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் வாரியம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.  

வடக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் இன்னமும், சுமார் ஒரு வருடம் வரையே இருக்கின்ற நிலையில், மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இந்த மாற்றம், பல்வேறு இழுபறிகளின் பின்னர்தான் நடந்தேறியிருக்கிறது.  

image_49cd0725cd.jpg

முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போது, விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சை, சிவநேசனிடம் கையளித்திருக்கிறார்.  

சுகாதார அமைச்சர் பதவி, மருத்துவர் குணசீலனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  
மூன்று மாத காலத்துக்கு என தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களான, அனந்தி சசிதரனும், சர்வேஸ்வரனும் நிரந்தர அமைச்சர்களாகத் தொடர்ந்தும் பதவி வகிக்கவுள்ளனர்.  

டெனிஸ்வரனிடம் இருந்த அமைச்சுகளைப் பகர்ந்து கொண்டுள்ளதன் மூலம், முதலமைச்சரும், தற்காலிக அமைச்சர் என்று பதவியேற்ற அனந்தி சசிதரனும் இப்போது கூடுதல் அதிகாரங்களைப் பெற்றவர்களாக மாறியுள்ளனர்.  

image_346359fe2d.jpg

வடக்கு மாகாணசபையில் கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த பல்வேறு குழப்பங்களுக்குப் பின்னர், இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.  

புதிய அமைச்சர்கள் நியமனத்தின் பின்னால், இடம்பெற்ற பல்வேறு குழப்பங்களும், புதிய அமைச்சர்கள் அடுத்த ஒரு வருட காலத்தில் எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும், முக்கிய கவனிப்புக்குரிய விடயங்களாக மாறியிருக்கின்றன.  

இந்தப் புதிய அமைச்சர்கள் நியமனத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரன், பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. அமைச்சர்கள் தெரிவில் அவர் கடைப்பிடித்த அணுகுமுறைகளே பல்வேறு குழப்பங்களுக்குக் காரணமானது.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன், 2013 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், தனது அமைச்சர்களைத் தெரிவு செய்த போது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பரிந்துரைகளை எவ்வாறு புறக்கணித்தாரோ, அதுபோலவே, இந்த முறையும் செயற்பட்டிருந்தார்.  

image_0df2518b3c.jpg

2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபையின் முதலாவது அமைச்சர்கள் வாரியம் அமைக்கப்பட்டபோது, ஈ.பி.ஆர்.எல்எவ்வின், பரிந்துரைக்கமைய, சர்வேஸ்வரனை நியமிக்காமல், அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பொ. ஐங்கரநேசனை அமைச்சராக நியமித்தார்.  

இப்போது, அதேநிலை கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக் கட்சியான டெலோவுக்கு ஏற்பட்டிருக்கிறது.   

டெனிஸ்வரனுக்குப் பதிலாக, தமது கட்சியின் சார்பில் விந்தன் கனகரத்தினத்தை அமைச்சராக நியமிக்குமாறு டெலோ உயர்மட்டம் பரிந்துரைத்தது. ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவரை அமைச்சராக நியமிக்காமல், மன்னார் மாவட்டத்தில் இருந்து டெலோ சார்பில் போட்டியிட்ட குணசீலனை சுகாதார அமைச்சராக நியமித்திருக்கிறார்.  

இதன் மூலம் டெலோவின் பரிந்துரை உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. இது அந்தக் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.   

முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அவரைக் காப்பாற்றுவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தவர்கள் டெலோவின் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கமும் விந்தன் கனகரத்தினமும் தான்.  

image_d153b12e61.jpg

இவர்கள் இருவருக்குமே, அமைச்சர் பதவி மீது ஒரு கண் இருந்தது உண்மை.   தற்காலிக அமைச்சர்கள் நியமனத்தில்போது, அமைச்சராகப் பொறுப்பேற்க முடியுமா என்று தன்னிடம் முதலமைச்சர் கேட்டதாகவும், தான் அதை மறுத்து விட்டதாகவும், சிவாஜிலிங்கம் கூறியிருந்தார்.    ஆனாலும், டெலோவின் உயர்மட்டக் குழுவில், சிவாஜிலிங்கத்துக்கா, விந்தனுக்கா அமைச்சர் பதவியைக் கொடுக்கலாம் என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இருந்து இருவரும் அமைச்சர் பதவியைக் குறி வைத்திருந்தனர் என்பதும், அதை ஏற்கத் தயாராக இருந்தனர் என்பதும் உறுதியானது.  

ஆனால், இவர்கள் இருவருமே இப்போது இலவு காத்த கிளிகளாகியிருக்கின்றனர்.  
சுகாதார அமைச்சர் பதவியை அந்த துறை சார்ந்த ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, டெலோவின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட மருத்துவ கலாநிதி குணசீலனுக்கு கொடுத்திருக்கிறார் முதலமைச்சர். துறைசார் அனுபவம் பெற்றவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவது கூடுதல் பொருத்தமே என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.  

அதற்காக, ஏனையவர்களால் அந்த அமைச்சை நிர்வகிக்க முடியாது என்று அர்த்தமில்லை. அமைச்சர் பதவி என்பது, ஒரு நிர்வாகப் பதவியே தவிர, சுகாதார அமைச்சர், மக்களுக்கு வைத்தியம் பார்க்க வேண்டிய ஒருவர் அல்ல.   

மாகாணசபை ஒன்றுக்கு மருத்துவர் ஒருவர் தெரிவு செய்யப்படாது போனால், சுகாதார அமைச்சராக எவரும் பதவியேற்காமல் இருந்து விடுவதில்லை.  

எனவே, துறைசார் அனுபவமுள்ளவர்களைத் தான் அமைச்சர்களாக நியமிக்க முடியும் என்ற வாதம் எல்லா விடயங்களிலும் எல்லா நேரங்களிலும் பொருத்தமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.  

image_fd2a8124ee.jpg

அதேவேளை, டெலோவினால் பரிந்துரைக்கப்பட்ட விந்தனையோ, அவருக்கு அடுத்தபடியாகக் கட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்த சிவாஜிலிங்கத்தையோ அமைச்சராக நியமித்தால், யாழ்ப்பாண மாவட்டத்தின் ஆதிக்கமே அமைச்சர்கள் வாரியத்தில் மேலோங்கும்.   ஏனென்றால், ஏற்கெனவே அமைச்சர்கள் வாரியத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான முதலமைச்சர் விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன் என மூவர் இருந்தனர். இந்த நிலையில் ஐந்து பேர் கொண்ட அமைச்சர்கள் வாரியத்தில் நான்கு பேர் ஒரே மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது அநீதியானது.  இப்போதைய நியமனத்தின் மூலம், மன்னார் மாவட்டத்துக்கு மீண்டும் அமைச்சர்கள் வாரியத்தில் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது.   

அதுபோலவே, அமைச்சர்கள் வாரியத்தில் இதுவரை காலமும் புறக்கணிக்கப்பட்டு வந்த புளொட்டுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கும், இம்முறை வாய்ப்பு அளித்திருக்கிறார் முதலமைச்சர். விவசாய அமைச்சராக சிவனேசன் நியமிக்கப்பட்டதன் மூலம் இந்தக் குறை நீக்கப்பட்டுள்ளது.   ஐங்கரநேசன் மற்றும் குருகுலராசா ஆகியோர் பதவி விலகிய பின்னர், தற்காலிக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டபோது, சிவனேசனுக்கு அமைச்சர் பதவியை வழங்கும் வாய்ப்பை முதலமைச்சர் நிராகரித்திருந்தார்.  

ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன், தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு இருப்பதாகத்தாம் அறிந்திருப்பதாலேயே அமைச்சராக நியமிக்க முடியவில்லை என்று, அதற்கு முதலமைச்சர் காரணம் கூறியிருந்தார்.  

எனினும், முதலமைச்சரின் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்திருந்த சிவநேசன், முதலமைச்சரால் தமக்கு எழுதப்பட்ட கடிதம் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டது குறித்தும் விசனம் வெளியிட்டிருந்தார்.  

தற்காலிக அமைச்சர்கள் நியமனத்தின்போது, படுகொலைக் குற்றச்சாட்டைக் காரணம் காட்டி ஒதுக்கி வைத்த சிவனேசனை, இப்போது முதலமைச்சர், அமைச்சராக நியமிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்.   

அதுமாத்திரமன்றி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரையில், அவர் நிரபராதியே என்றும் கூறியிருக்கிறார்.  

சட்டத்தின்படி எந்தத் தவறைச் செய்திருந்தாலும், தகுதிவாய்ந்த நீதிமன்றம் ஒன்றினால் குற்றம் காணப்படும் வரையில், சந்தேகநபர் ஒருவர் நிரபராதியே.   

வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவருக்கு எதிராக விசாரணைக் குழுவினால் குற்றம்சாட்டப்படாத போதிலும், அவர்கள் மீது மற்றொரு விசாரணைக் குழுவை அமைக்கப் போவதாகக் கூறி, கட்டாய விடுப்பில் செல்லுமாறு கோரியவர்தான் முதலமைச்சர்.  அதுதான் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு இட்டுச் சென்றது.  

பின்னர், இது இயற்கை நீதிக்கு அப்பாற்பட்டது என்று இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டிய பின்னர் தான், முதலமைச்சர் இறங்கி வந்தார்.   

இப்போதும் கூட டெனிஸ்வரனின் பதவி நீக்கத்துக்கு முதலமைச்சர் எந்த முறையான காரணத்தையும் முன்வைக்கவில்லை. ஆனால், சிவனேசனின் நியமனம் தொடர்பாகக் கேள்வி எழுப்பிய போது முதலமைச்சர், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதிதான் என்று கூறியிருக்கிறார்.   இது முதலமைச்சரின் முன்னுக்குப் பின் முரணான செயலாகவே உள்ளது. இந்த விடயத்தில் மாத்திரம் அவர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.  

அனந்தி சசிதரன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கிய போது, “தற்காலிக ஏற்பாடு தான், மூன்று மாதங்களுக்கே அவர்கள் பதவியில் இருப்பார்கள்” என்றே முதலமைச்சர் கூறியிருந்தார்.  

ஆனால், இப்போதுள்ள நிலையில், அவர்களின் பதவிகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. இது முன்னரே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் முதலமைச்சர், அதை இன்னமும் நேர்மையான முறையில் வெளிப்படுத்தியிருக்கலாம்.  

தமிழரசுக் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்று அறிவிக்கப்பட்ட பின்னர், அனந்தி சசிதரனை அந்தக் கட்சியின் சார்பில், அமைச்சராக நியமிப்பதாக முதலமைச்சர், அறிவித்திருந்தார்.  

அதே முதலமைச்சர், டெலோவில் இருந்து இடைநிறுத்தப்பட்டதைக் காரணம் காட்டி, டெனிஸ்வரனை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது, முரணான செயல்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர்கள் நியமனத்தில் கட்சித் தலைவர்களின் தலையீட்டை முற்றாக நிராகரித்திருக்கலாம். அதன் மூலம் அமைச்சர் பதவிக்குத் தகுதியானவர்கள் என்று தான் கருதுவோரை சுதந்திரமாக தெரிவு செய்திருக்கலாம்.  
ஆனால், பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில், கட்சிகளின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்வதாக ஒரு முடிவை எடுத்த பின்னர், அதற்கு முரணாக அவர் முடிவுகளை எடுத்தது நியாயப்படுத்தக் கூடிய செயல் அல்ல.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி தனித்து முடிவெடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கும், முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கும் வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.  

முதலாவது அமைச்சர்கள் வாரியத்திலும் அமைச்சர்களை முதலமைச்சரே தெரிவு செய்தார். இப்போதும் அவ்வாறே செயற்பட்டிருக்கிறார்.  

முன்னைய அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்கத் தயாராக இருக்கவில்லை.  

ஆனால், இப்போது, நியமித்துள்ள அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு அதிகம்.   

ஏனென்றால், மீண்டும் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்தால், அதற்கு பொறுப்புக்கூறும் நிலை தனக்கு வரும் என்பது முதலமைச்சருக்கு நன்றாகவே தெரியும்.   
எனவே, அமைச்சர்களை கவனிப்பதில் தான் எஞ்சிய ஓர் ஆண்டையும் முதலமைச்சர் கழிக்கப் போகிறார். அத்தகைய விழிப்பு நிலை, முதலமைச்சருக்குச் சோர்வையே தரும்.

அது வடக்கு மாகாணசபையைத் திறம்பட வழிநடத்துவதற்கு வழி வகுக்குமா என்பது சந்தேகம்தான்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிக்கல்களுக்குள்-சிக்கும்-வடக்கு-மாகாணசபை/91-202839

  • தொடங்கியவர்

வாதங்களின் வலிமை

 
 

வடக்கு மாகாண சபை குழம்­பிக் கிடக்­கி­றது. அமைச்­ச­ர­வை­யில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட குழப்­பம் இரண்டு மாதங்­க­ளா­கத் தீரா­மல் தொடர்ந்து கொண்டே இருக்­கி­றது. நேற்­று­முன்­தி­னம்­தான், புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்­றுக் கொண்­டது. ஆனால், அது­வும் எத்­தனை நாளைக்கு நீடிக்­குமோ தெரி­யாது. அதில் இரு­வ­ரின் நிலை அவர்­க­ளது கட்­சி­ க­ளி­னால் அந்­த­ரத்­தில் தொங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது.

முத­ல­மைச்­ச­ருக்கு அதைப்­பற்­றி­யெல்­லாம் கவ­லை­யில்லை. தான் நினைத்­த­தனை, அது நல்­லதோ கெட்­டதோ, அத­னால் கட்­சி­க­ளுக்­குள் பிளவு வரு­கி­றதோ இல்­லையோ, மக்­க­ளுக்கு நன்மை கிடைக்­கி­றதோ இல்­லையோ செயற்­ப­டுத்­தியே ஆக­வேண்­டும். அவ்­வ­ள­வு­தான் அவ­ரது எண்­ணப்பாங்கு. அத­னால் இந்­தப் பிரச்­சினை இப்­போ­தைக்­குத் தீரும் போலத் தெரி­ய­வில்லை. சபை தொடர்ந்­தும் குழம்­பிப்­போய் இருப்­ப­தற்­கான அத்­தனை வழித் தடங்­க­ளை­யும் முத­ல­மைச்­சர் உரு­வாக்கி விட்­டி­ருக்­கி­றார்.

ஆனால், இந்­தப் பிரச்­சினை ஆரம்­பித்­த­போது முத­ல­மைச்­ச­ரின் ஆத­ர­வா­ளர்­கள் ஒரு விமர்­ச­னத்தை வைத்­தார்­கள். அதில் அவர்­கள் கூறி­ய­தெல்­லாம் வடக்கு மாகாண சபை­யைக் குழப்­பு­வ­தென்­பது கொழும்பு அர­சின் நிகழ்ச்சி நிரல் என்­ப­து­தான். அந்த நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்­பவே தேசி­யக் கூட்­ட­மைப்­பின், குறிப்­பா­கத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் நாட­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சில­ரும் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் சில­ரும் செயற்­ப­டு­கி­றார்­கள் என்­றார்­கள் அந்த விமர்­ச­கர்­கள்.

‘‘புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் கொழும்பு அரசு தமிழ் மக்­க­ளுக்கு எந்­தத் தீர்­வை­யும் தரப்­போ­வ­தில்லை. வடக்கு கிழக்கு இணைப்­புக் கிடை­யாது, ஒற்­றை­யாட்சி நீக்­கப்­ப­டப்­போ­வ­தில்லை, கூட்­டாட்­சிக்­கான அதி­கா­ரப் பகிர்வு இல்லை. இவை எது­வும் இல்­லாத ஓர் அரை­கு­றைத் தீர்­வைத் திணிக்­கவே கொழும்பு முயல்­கி­றது. அப்­ப­டித் தமிழ் மக்­க­ளைக் கொழும்பு ஏமாற்­று­வது குறித்து அவர்­கள் விழித்­துக் கொண்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே வடக்கு மாகாண சபை­யைக் குழப்பி, அதன் மீது தமிழ் மக்­க­ளின் கவ­னத்­தைக் குவிக்­கப் பண்­ணி­யி­ருக்­கி­றார்­கள். கொழும்பு அர­சின் முக­வர்­க­ளான தமிழ் அர­சுக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சில­ரும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுமே இந்­தக் குழப்­பங்­க­ளுக்­குக் கார­ணம்’’ என்­றார்­கள்.

ஊழல், மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் மீதான விசா­ர­ணை­யைத் தொடர்ந்து அண்­மை­யில் தனது பத­வியை முத­ல­மைச்­ச­ ருக்­கா­கத் தியா­கம் செய்த வடக்கு மாகாண சபை முன்­னாள் விவ­சாய அமைச்­சர் பொ. ஐங்­க­ர­நே­சன்­கூட இந்­தக் குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருந்­தார். அவ­ரைப் போன்ற முத­ல­மைச்­ச­ரின் ஆத­ர­வா­ளர்­கள் பல­ரும்­கூட இது போன்ற விமர்­ச­னங்­ களை முன்­வைத்­தி­ருந்­தார்­கள்.

இது ஒரு தர்க்க நியா­யத்­தின் படி­யான விமர்­ச­னம்­தான். 2016ம் ஆண்­டுக்­குள் எட்­டப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்ட ஒரு தீர்வு 2017ஆம் ஆண்­டி­லும் எட்­டப்­ப­டாது என்று தோன்­று­கின்ற அர­சி­யல் சூழல்­நி­லை­யில் அதன் மீதான கவ­னக் குவிப்பை குலைக்­கும் முயற்­சி­கள் எடுக்­கப்­ப­ட­லாம் என்­பதை நிரா­க­ரிக்க முடி­யாது என்­பது நியா­ய­மா­ன­து­தான்.

ஆனால், அந்த முயற்­சிக்­கான பங்­கா­ளி­கள் யார் என்­ப­து­தான் இப்­போது கேள்வி. கடந்த இரண்டு வாரங்­க­ளாக மாகாண சபை­யில் நடந்­து­வ­ரும் குழப்­பங்­க­ளில் தமிழ் அர­சுக் கட்சி எந்த வகை­யி­லும் நேர­டித் தொடர்­பைக் கொண்­டி­ருக்­க­வில்லை. முத­ல­மைச்­ச­ரும், அவரை அந்­தப் பத­வி­யில் போரா­டித் தக்க வைத்த கட்­சி­க­ளுமே நேர­டி­யா­கச் சம்­பந்­தப்­பட்­டுள்­ளன. தன்­னு­டைய நேர்மை அர­சி­யல் என்று முத­ல­மைச்­சர் எண்­ணும் அர­சி­ய­லின் முன்­பா­கத் தன்­னைப் பாது­காத்த கட்­சி­கள் ஒரு பொருட்டே இல்லை என்று அவர் எடுத்­தெ­றிந்­து­விட்­டார். இப்­போது அமைச்­ச­ர­வை­க் குழப்­பத்துக்கு அதுவே கார­ணம்.

“அர­சி­யல் கட்­டாக்­கா­லி­களை எல்­லாம் கட்­சி­யில் வைத்­தி­ருக்­கவே முடி­யாது” என்று ரெலோ அமைப்பு அறி­வித்­தி­ருக்­கும் நிலை­யில், இந்­தப் பிரச்­சினை இப்­போ­தைக்கு முடி­வுக்கு வராது என்­பது நிச்­ச­யம். அப்­ப­டி­யா­னால் கொழும்பு அர­சின் நிகழ்ச்சி நிரலை இப்­போது முன்­னெ­டுத்­துச் செல்­ப­வர்­கள் யார்? முத­ல­மைச்­ச­ரும் முன்­னாள் ஆயு­தக் குழுக் க­ளுமா? இல்லை எல்­லோ­ருமே ஒரே குட்­டை­யில் ஊறிய மட்­டை­கள்­தானா? அப்­ப­டி­யா­னால் அதில் முத­ல­மைச்­சர் மட்­டும் எப்­ப­டிப் புனி­த­ரா­கு­வார்?

http://newuthayan.com/story/22796.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.