Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலோ இண்டியன் வாலாஸ்........

Featured Replies

:icon_idea: சில தமிழர்கள் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும் என்று அறிவுடையோர் போல் பேசுகிறார்கள். :D

ஆனால், ஏன் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய‌ வேண்டும்?

அவர்கள் தீவிரவாதிகள் அல்லவே. அவர்கள் சுதந்திரப் போராளிகள்.

உலகில் எந்த மூலையிலாவது சுதந்திரம் கேட்டு போராடுபவர்களை, இவர்கள் சுந்திர தியாகிகள் என்று எந்த அடக்குமுறை அரசாவது அங்கீகரித்திருக்கிறதா? புலிகள் தீவிரவாதிகள் என்று தமிழராக இருந்துகொண்டே நீங்கள் சொன்னால் உண்மையில் தமிழரின் நலனுக்காகத் தான் இப்படி சொல்கிறீர்களா என்ற சந்தேகம் வராதா?

அமெரிக்கா சுதந்திரம் கேட்டு யுத்தம் செய்யும்போது பிரித்தானியர்கள் அவர்களை தீவிரவாதிகள் என்றார்கள். ஏன் மகாத்மா காந்தி போராடும்போது தியாகி என்று பிரித்தானியா அரசு கௌரவித்ததா? தென் ஆபிரிக்காவிலும் இதே நிலமை தான். அல்ஜீரியர்கள், ஃபிரான்ஞ்சு அரசை எதிர்த்து போராடும்போதும் இதே நிலமை தான். ஏன் உலகில் எல்லா நாடுகளிலும் இதே நிலமை தான். சும்மா புலிகளுக்கு எதிர்ப்பு என்பதற்காக தமிழினத்தை ஒழிக்க வழி கோலாதீர்கள்.

அமெரிக்காவின் உலக ஆட்சி குறைந்து கொண்டு வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அனேகமாக எல்லோரும் அமெரிக்காவை வெறுக்கத் தொடங்கி விட்டார்கள். ஆதலால், இனி யார் உலகை ஆழப்போவார் என்று யோசித்து அவரை கைக்குள் போடவேண்டும். எங்கள் பிராந்தியத்தைப் பொறுத்த வரையில் இந்தியா, சீனா தான் இருக்கிறது. இதில் எவர் பலம் வாய்ந்தவராக வருவார் என்று நீங்களே தீர்மானியுங்கள்.

இலங்கை அரசால் புலிகளை ஒழிக்க முடியவில்லை. இந்திய அரசாலும் ஒழிக்க முடியவில்லை. இந்திய‍‍ இலங்கை கூட்டரசாலும் புலிகளை ஒழிக்க முடியவில்லை.

ஆகவே வல்லவனை எதிர்ப்பதை விட வளைத்துப் போடுவது தான் வல்லரசாக வர எத்தணிப்பவருக்கு நல்லது என்று நினைக்கிறேன். அதிலும் இந்தியாவின் அயல் நாடு தமிழீழம். சீனா வளைத்துப்போட்டால், இந்தியாவின் புற்றுநோயாகி விடும்!

அதன் பிறகு என்ன நடக்கும் என்று சீனாவின் கையில் தான் இருக்கும். இந்தியாவிற்குள் எல்லோரும் ஒற்றுமையாய் வாழவில்லை. அப்பப்போது குண்டு வெடிக்குது, அப்பப்போது மதக் கலவரம் என்று நடக்குது. போதாததற்கு மதத்திற்கு என்று ஒதுக்கீடுகள் வேறு. இது போதும் இந்தியாவை பிரிக்க. இப்போது பிரியாமல் இருப்பதற்கு காரணம் எந்த மாநிலமும் சுயேட்சையாக தன்னை பொருளாதாரத்தில் தக்க வைத்துக் கொள்ள முடியாமை. எப்போது ஒரு மாநிலம் தன்னை பொருளாதார ரீதியில் [நாடாக] தக்க வைத்துக் கொள்ள முடியுமோ, எப்போது அது இந்திய அரசுடன் முரண்படுகுதோ அப்போது அந்த மாநிலம் பிரிவினையைப் பரிந்துரைக்கும். அப்போ சீனா முழு உதவி கொடுக்கும். ஏன் பாகிஸ்தானும் கொடுக்கும். சீனா இராணுவ உதவி கொடுத்தால் மட்டுமே போதும் [வட கொரியாவிற்கு கொடுத்தது போல்]. அப்போது தமிழீழத்தின் நேச நாடாக இந்தியா இருக்காவிடில், தமிழீழம் வாயிலாக இந்திய பிரிவினைவாதிகளுக்கு சீனா உதவி செய்ய தமிழீழ மக்கள் அனுமதிப்பார்கள் [நாங்கள் கஷ்டப்படும்போது எங்களுக்கு சீனா தானே உதவியது, அதற்காக என்று]. இலங்கை ஏற்கனவே சீனாவின் நேச நாடுதான் [சிறீமாவோ பண்டார நாயக்கா காலத்திலிருந்து]. போதாததற்கு பாகிஸ்தானின் நேச நாடு கூட [சொல்லவா வேண்டும்?]. பிறகென்ன ரஷ்யா எப்படி பிரிந்ததோ அப்படி தான் இந்தியா பல கூறாகப் போய்விடும்.

இவற்றை எல்லாம் தொலைநோக்குச் சிந்தனையுடன் இந்தியா சிந்திக்குமானால், இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கும். உண்மையில் றோ [RAW] விற்கு புத்தி இருக்கா என்று வருங்காலம் பதில் சொல்லட்டும்.

[சுட்டதில் ஒட்டியது....... :P]

மீண்டும் சொல்லுகிறேன்.புலிகள் தமிழினத்தின் தலைமை! அவர்கள் இந்தியாவிலிருந்து ஆயுதம் கடத்தவில்லை.இந்தியாவிலிருந்

இந்தியா சிதற வேண்டும் என்று எண்ணும் நாடுகள் வரிசையில்

1) பாகிஸ்தான்

2) சிரிலங்கா

எதை எடுத்துக் கூறினாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான். பட்டால் தான். தமிழீழத்தவன் இந்தியா இந்தியாவாக இருப்பதுதான் தனக்கும் தமிழகத்த தமிழ் மக்களுக்கும் பாதுகாப்பு என்று நினைப்பவன்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் விடயத்தில் எமது தலைவரைச் சரிவரப் புரிந்துகொள்ளும்வரை றோவிற்கு புத்திவருவதற்கு நோ சான்ஸ். தலைவரைச் சரிவரப் புரிந்துகொள்வதென்பது.... அதுவும் றோவிற்கு நோ சான்ஸ். ஆகவே ஈழத்தமிழர் விடயத்தில் றோவிற்குப் புத்தி வருவதென்பதும் நோ சான்ஸ்.

ரூ இன்ரு ரூ இன்ரு ரூ

டுட்டுடூ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.