Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை ஆழ்கடலின் அடியில் திருக்கோணேஸ்வர ஆலயம்

Featured Replies

-த.மனோகரன்-

திருகோணமலை என்றவுடன் நெஞ்சிலே நிழலாடுவது திருக்கோணேஸ்வர ஆலயமாகும். காலத்தால் முந்தியது இதிகாச புராணகாலத்திலும் சிவத்தலமாக விளங்கியது இவ்வாலயம் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன.

இதிகாசங்களில் பாரதத்திற்கு முந்தியது இராமாயணம். இராமாயணக்காலம் இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பர் பலர். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பர் வேறு சிலர். எவ்வாறாயினும் இலங்கையின் வரலாறு என்று குறிப்பிடப்படும் காலத்திற்கு முற்பட்டது திருக்கோணேஸ்வரம் என்பது வரலாற்றுக் குறிப்புகளூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உண்மையாகும்.

விஜயன் இலங்கையில் கரையொதுங்கிய போது அவனுடன் வந்தொதுங்கிய உபதிஸ்ஸன் என்ற பிராமணன் இலங்கையின் வடக்கேயிருந்த நகுலேஸ்வரத்திற்கும், கிழக்கேயிருந்த திருக்கோணேஸ்வரத்திற்கும், தெற்கேயிருந்த தொண்டீஸ்வரத்திற்கும், மேற்கேயிருந்த திருக்கேதீஸ்வரத்திற்கும், முன்னேஸ்வரத்திற்கும் சென்று வழிபட்டதாக மகாவம்சம் போன்ற புத்ததுறவிகளால் எழுதப்பட்ட நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றை ஆய்வுசெய்த அறிஞர்களும் இலங்கையின் ஆதிசமயம் இந்து சமயமே, ஆதிக்குடிகள் இந்துக்களே என்பதை உறுதி படக் கூறியுள்ளனர்.

தர்க்க ரீதியாக நோக்குமிடத்து கூட உலகில் வழக்கிலுள்ள பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் தோற்றம் பெற முன்பே இந்துசமயம் மக்களால் கைக்கொள்ளப்பட்டது என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். பௌத்த மதத்தைப் பின்பற்றுவோர் வணங்கும் புத்தபிரானே பிறப்பால் ஒரு இந்துவாவார் என்பதால் இந்து சமயம் பௌத்த சமயம் தோற்றம் பெறுமுன்பே வழக்கிலிருந்தது என்பது உறுதியானது.

விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே இந்நாட்டில் இந்துசமயம் செழிப்புற்றிருந்ததென்று புத்த பிக்குவான வண.வல்பொல ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார். இவரெழுதிய பௌத்த வரலாறு என்னும் நூலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குவைறோஸ் என்கின்ற போர்த்துக்கேய வரலாற்றாசிரியர் தான் எழுதிய இலங்கைச் சரித்திரம் என்ற நூலில் திருக்கோணேஸ்வரக் கோயில் கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதெனக் கூறும் கல்வெட்டொன்று இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறிருந்தபோதும் கடல்கோளால் பண்டைய கோணேஸ்வரத் திருக்கோயில் கடலில் அமிழ்ந்து விட்டதென்று கூறப்படுவதை நாம் அறிவோம். இது வெறும் கதையென்று கூற முடியாது என்பதை கடலடி ஆய்வாளர்களான ஆர்தர்.ஸி.கிளார்க் மற்றும் மைக்வில்சன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள் வெளிக்கொண்டு வந்து நிரூபணம் செய்துள்ளன.

ஆங்கிலேயர்களான இவ்விருவரும் 1956 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கியுள்ள பண்டைய திருக்கோணேஸ்வரத்தைத் தமது கடலடி ஆய்வின் மூலம் கண்டுபிடித்தாலும் அதைத் தொடர்ந்து ஆய்வு செய்ய ஏற்பட்ட தடைகள் பண்டைய வரலாற்றுப் பொக்கிஷத்தை கடலின் அடியிலேயே மறைந்திருக்கச் செய்துவிட்டன.

மேற்படி இரு ஆய்வாளர்களால் நீரில் மூழ்கியுள்ள கோணேசராலயத்தின் தரை குலைந்த சித்திரவேலைப்பாடுகளுடனும், கோயிலின் கூரையும் தண்ணீரின் கீழிலிருந்து படமாக எடுக்கப்பட்டன.

ஆர்தர் ஸி.கிளார்க் இலங்கையின் தலைசிறந்த விஞ்ஞானி, அறிஞர் எனப் போற்றப்படுபவர். அவ்வாறான அறிஞர், விண்வெளியைப் பற்றி ஆய்வு செய்பவர் கடலடியில் தான் கண்டுபிடித்த பழம்பெரும் வரலாற்றுச் சான்றை தொடர்ந்து ஆய்வு செய்யாது விட்டதன் மர்மம்தான் புரியவில்லை. கோணேசர் கோயிலின் பழமை உறுதிப்படுத்தப்படும் போது இந்துக்களின் பழம்பெரும் இருப்பும் உறுதிப்படுத்தப்பட்டு விடும் என்ற காழ்ப்புணர்ச்சி தொடர்ச்சியான ஆய்வுக்குத் தடை செய்ததோ யாரறிவார்?

கடலுக்கடியில் மூழ்கிய கப்பல்களை வரலாற்று சின்னங்களாக தொல்பொருள் பொக்கிஷமாகப் பேண வேண்டுமென்று கூறப்படும் இன்றைய காலத்தில் கருங்கற்களால் சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்து கடலில் மூழ்கியுள்ள ஒரு இந்துக்கோயிலை மறந்து விடுவது பொருத்தமில்லை.

கடலுக்கடியில் பல்வேறு நாகரிக, வரலாற்றுச்சின்னங்கள் மறைந்துள்ளன. அவற்றை ஆராய வேண்டுமென்று முனையும் அறிவுலகம் பண்டைய திருக்கோணேஸ்வரத் திருக்கோயில் தொடர்பில் என்ன செய்யப்போகின்றது.

http://www.thinakkural.com/news/2007/3/4/a...s_page22616.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.