Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாய்ப்பேச்சால் பயனேதுமில்லை; நியாயமான செயற்பாடே தேவை

Featured Replies

வாய்ப்பேச்சால் பயனேதுமில்லை; நியாயமான செயற்பாடே தேவை

 

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆகிய இரு­கட்­சி­க­ளும் ஒன்­றுக்­கொன்று மாறு­பட்ட பாதை­யில் பய­ணிக்­கும் இரு கட்­சி­க­ளே எனச் சிலர் கருதி வருகின்றனர்.

அதேபோன்று இந்தக் கட்சிகளின் தலை­வர்­கள் தாம் சார்ந்த கட்­சி­க­ளுக்கு உயி­ரைக் கொடுத்­து­ழைக்­கும் விசு­வா­சி­க­ளாக இருக்கின் றனர் எனப் பலர் கருதி வரு­கின்­ற­னர். ஆனால் நாட்­டின் அர­சி­யல் வர­லாற்றை நோக்­கும் போது இவை மிகைப்­ப­டுத்­தப்­பட்ட நம்­பிக்கை என்­பதை உணர இய­லும்.

ஐ.தே.கட்­சி­யி­லி­ருந்து டி.ஏ.ராஜ­பக்­ச ­வு­டன் வெளி­யேறிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்­டா­ர­நா­யகா சுதந்­தி­ரக் கட்­சியை நிறு­வி­னார். அதி­லி­ருந்து தான் இலங்கை அர­சி­ய­லில் கட்சி வில­கல் சம்­பி­ர­தா­யம் ஆரம்­ப­மா­கி­யது. அந்­த­வி­தம் கட்­சியை விட்டு வெளி­யே­றிய அவ்­வி­ரு­வ­ருக்­கும் ஐ.தே.கட்சி “குறி­சுட்டு” அடை­யாளப்­ப­டுத்­திக் கொண்­டது.

1972 ஆம் ஆண்­ட­ள­வில் ஐ.தே.கட்சி, உட்­கட்சி அதி­கா­ரப் போட்­டி­யால் தோல்­வி­யுற்ற நிலை­யி­லேயே இருந்து வந்­தது. டட்லி சேன­நா­ய­கா­வும் ஜே.ஆரும் தத்­த­மது அதி­கா­ரத்­தைப் பலப்­ப­டுத்­தும் போட்­டியைக் கடை­சி­யில் நீதி­மன்­றம் மூலம் தீர்த்­துக் கொண்­ட­னர்.

அந்த வேளை­யில் ஜேர்.ஆர்.சுதந்தி­ரக் கட்­சி­யில் இணை­ய­வுள்ளார் என்றும் கதை­யொன்று உலவி வந்­தது. அந்த அள­வுக்கு அவ்­வி­ரு­வ­ரி­டை­யே­யும் கடும் கருத்து மோதல்­கள் தலை­தூக்­கி­யி­ருந்­தன. கடை­சி­யில் தாமும் ‘‘ஒறி­யி­னல் யூ.என்.பிக்­கா­ரர்’’ தான் என்ற விதத்­தில் ஜே.ஆரும் தம்மை முன்­னி­லைப் ப­டுத்தி வந்­தார்.

ஆர்.பிரே­மா­தா­சவை தனியன் யானை எனக் குறிப்­பிட்டே ஐ.தே.கட்சி ஆத­ர­வா­ளர்­கள் அடை­யா­ளப்­ப­டுத்தி வந்­த­னர். ஐ.தே.கட்­சி­யின் முன்­னி­லைத் தலை­வர்­க­ளது பட்­டி­ய­லில் பிரே­ம­தா­ச­ வுக்கு முக்­கிய இடம் அளிக்­கப்­பட்டு இருந்­தது.

ஆனால் 1972 ஆம் ஆண்­டில் குடி­மக்­கள் முன்­னணி என்ற அமைப்பை உரு­வாக்கி பிரே­ம­தாச தமது அர­சி­யல் பய­ணத்தை முன்­னெ­டுத் தார்.

வீட­மைப்­புத்­துறை அமைச்­சர் என்ற வகை­யில் பச்சை நிறத்­தில் வெளிர் மஞ்­சள் நிறத்­தை ­யும் இணைத்து தமது குடி­மக்­கள் முன்­னணி அமைப்பை நிறுவி ஐ.தே.கட்­சிக்­குள் தாம் தமக்­கெ­னத் தனிப்­ப­ய­ணத்தை முன்­னெ­டுத்­தார்.

 

ஜே.ஆரை மிரட்­டா­மல் மிரட்­டிய பிரே­ம­தா­ச­வின் உத்தி

அடுத்து வர­வி­ருந்த அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் வேட்­பா­ளர் நிய­ம­னம் தமக்­குக் கிட்­டாது போகு­மா­னால், அடுத்­த­தா­கத் தாம் முன்­னெ­டுக்­கும் நட­வ­டிக்கை குறித்த சமிக்­ஞையை பிரே­ம­தாச வெளிப்­ப­டுத்­திய பாணி அது. லலித் அது­லத் முத­லி­யும் காமினி திச­நா­ய­க­வும் ஜே.ஆருக்­குத் தண்ணி காட்­டி­விட்டு முன்­னேறி வந்த வேளை, பிரே­ம­தா­ச­வும் நாட்­டின் ஏழை எளிய மக்­க­ளது அபி­மா­னத் த­லை­வ­ரா­னார்.

ஐ.தே.கட்சி சார்­பான அர­சுத்­த­லை­வர் தேர்­தல் வேட்­பா­ள­ராக பிரே­ம­ தா­சவை அறிமுகப்படுத்தியதோடு, பிரேமதாச, ஏழை­க­ளின் மனதைக் கவர்ந்த தலை­வ­ரென ஜே.ஆர்.பகி­ரங்­க­மா­கப் புக­ழா­ர­மும் சூட்­டத் தவ­ற­வில்லை.

அந்தவிதம் அவர் தம்­மைக் கட்­சி­யின் வேட்­பா­ள­ராக நிய­ மிக்­காது விட்­டால், அதற்­காக மாற்று வழியை முன்­னேற்­பா­டாக பிரே­ம­தாச மேற்­கொண்டு வைத்­தி­ருந்­தார்.

காமினி திச­நா­ய­க­வும் லலித் அது­லத் முத­லி­யும் ஐ.தே.கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­போது அவ்­வி­ரு­வ­ரும் சுதந்­தி­ரக் கட்­சி­யில் இணை­யப் போவதா­கவே பல­ரும் நம்­பி­னர்.

ஆனால் ஜன­நா­யக ஐக்­கி­ய­ தே­சிய முன்­னணி என்­ற­பெ­ய­ரில் கட்­சி­யொன்றை நிறு­விச் செயற்­பட்­ட­தன் மூலம் குறிப்­பிட்ட ஒரு காலத்­துக் கா­வது அவர்­கள் ஐ.தே.கட்­சி­யி­னின்­றும் வில­கி­யி­ருந்­த­னர்.

தந்­தை­யா­ரின் பிறந்த வீட்­டுக்­குச் செல்­வ­தா­கக் கார­ணம் காட்­டினார் அனுரா

 

சுதந்­தி­ரக் கட்­சி­யின் முடிக்­கு­ரிய இள­வ­ர­ச­ரா­யி­ருந்த அனுரா பண்­டார நாய­க வின் உடம்­பில் ஓடு­வது நீல நிறக் குருதியே என்ற கதை­யும் சிங்­கள மக்­கள் மத்­தி­யில் உலவி வந்­த­துண்டு.

ஆனால் இடை­யில் எனது தந்­தை­யா­ரின் பிறந்த வீட்­டுக்­குச் செல்­கின்­றேன் எனக் கடி­தம் அனுப்­பி­விட்டு சுதந்­தி­ரக் கட்­சியை விலகி ஐ.தே.கட்­சி­யில் அனுரா இணைந்து கொண்­டார்.

சந்­தி­ரிகா சுதந்­தி­ரக்­கட்சி என்ற மரத்­தின் நடு வைரம் போன்று செயற்­பட்­ட­வர். அவ­ரும் கூட வேறு கட்சி யொன்றை உரு­வாக்­கி­ய­வரே.

2005 ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்­த­வுக்கு ஆதர­வ­ளிக்காது ரணி­லுக்கு மறை­மு­க­மாக ஆத­ர­வ­ளித்­தாக சந்­தி­ரிகா குறித்து விமர்­சிக்­கப்­பட்­ட­துண்டு.

2015 ஆம் ஆண்­டின் தேர்­த­லின் வெளிப்­ப­டை­யா­கவே அவர் சுதந்­தி­ரக் கட்சிக்கு எதி­ராக ஐ.தே.கட்­சிக்கு ஆத­ர­வ­ளித்­தார் 1982 ஆம் ஆண்டு ஒக்­டோ­பர் மாதம் 20 ஆம் திக­தி அரச தலை­வர் தேர்­தல் வேளை­யில் அனு­ர­ாபண்­டார நாயக்கா, மைத்­தி­ரி­பால சேன­நா­யக்கா தரப்­பி­னர்­கள் சுதந்­தி­ரக் கட்சி வேட்­பா­ளர் ஹெக்­டர் கொப்­பே­க­டு­வைத் தோற்­க­டிக்­கும் நோக்­கு­டன் ஐ.தே.கட்சி வேட்­பா­ளர் ஜே.ஆருக்கே ஆர­த­வா­கச் செயற்­பட்­ட­னர்.

இதன் கார­ண­மாக சுதந்­தி­ரக் கட்­சிக்கு நாட்டு மக்­கள் மத்­தி­யல் இருந்து வந்த மதிப்பு வீழ்ச்சி கண்­டது. பசில் ராஜ­பக்ச, மைத்­தி­ரி­பால சேன­நா­யக, பி.பி.ஜி.கலு­கல்ல, எஸ்.டி.ஆர்.ஜய­ரத்ன போன்ற அவ்­வே­ளைய சுதந்­தி­ரக் கட்சி அர­சி­யல் பிர­மு­கர்­கள் ஐ.தே.கட்­சி­யின் வேட்­பா­ளர் ஜே.ஆருக்கு ஆத­ர­வா­கப் பகி­ரங்­க­மா­கவே பரப்­புரை செய்­த­னர்.

அன்று சுதந்­தி­ரக் கட்சி சார்­பாக அரச தலை­வர் வேட்­பா­ள­ரைத் தோற்­க­டித்து சுதந்­தி­ரக் கட்­சி­யைக் காப்­பா­ற்று­மாறு பரப்­புரை செய்த பசில் ராஜ­பக்ச தரப்­பி­னர். இன்று சுதந்­தி­ரக் கட்­சி­யின் முன்­ன­ணித் தலை­வர்­க­ளா­கத் தம்மை நிலை நிறுத்த முயல்­கின்­ற­னர்.

முதன்மைக் கட்­சி­கள்  இரண்­டின் மத்­தி­யி­ல்  வேற்­று­மை­யி­லும் ஒற்­றுமை

அந்த வகை­யில் சுதந்­தி­ரக்­கட்சி மற்­றும் ஐ.தே.கட்சி ஆகி­யவை வேறு­பா­டு­கள் கொண்ட இரு கட்­சி­கள் எனக் கூறி­னா­லும் இவ்­விரு தரப்­பி­னர்­கள் மத்­தி­யி­லும் நெருங்­கிய இணக்­கம் நில­வு­கி­றது. ஆரம்­பத்­தில் டி.எஸ்.சேன­நா­ய­க்காவி­டம் ஐ.தே.கட்­சி­யின் தலை­மைப் பொறுப்பை மகன் ட்டலி சேன­நா­ய­க்காவிடம் கைய­ளிக்­காது எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­ய­க்காவி­டம் கைய­ளித்­தி­ருந்­தால் இன்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி ­யென்று ஒன்று இருந்­தி­ருக்க மாட்­டாது.

ஏனெ­னில் ஐ.தே.கட்சி உரு­வாக்­கப்­பட்ட வேளை ஜே. ஆரை­ விட பண்­டா­ர­நா­ய­க்காவுக்கே முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. பண்­டா­ர­நா­யக்கா கட்­சி­யின் உப தலை­வ­ரா­கப் பதவி வகிக்க, ஜே.ஆர்.வெறும் உப பொரு­ளா­ள­ரா­கவே பதவி வகித்­தார்.

அந்த வகை­யில் ஐ.தே.கட்­சி­யின் ஆரம்­ப­கா­லத்­தில் பண்­டா­ர­நா­யக்கா அந்­தக் கட்­சி­யின் முக்­கிய தலை­வ­ராக விளங்­கி­யி ­ருந்­தார்.

அந்த வகை­யில் நோக்­கும்­போது மேற்­கு­றிப்­பிட்ட இவ்­விரு கட்­சி­க­ளுக்­கி­டையே காணக்­கூ­டிய இணைப்­புப் போன்றே, காண­இ­ய­லாத இணைப்­புக்­க­ளும் பல­வுள்­ளன. கார­ணத்­து­ட­னேயோ, கார­ண­மின்­றியோ தற்­போது மக்­கள் பல்வேறு தரப்­புக்­க­ளா­கப் பிள­வு­பட்­டுள்­ள­னர்.

ஆண்ட தரப்­புக்­கள்  மத்­தி­யி­லான பிணக்கே நாட்­டைக் குட்­டிச்­சு­வ­ராக்­கி­யது

அறு­பது ஆண்­டு­கள் காலத்­துக்கு மேலாக இந்­தப் பிளவு, நாட்­டைப் பின்­னோக்கி இட்­டுச் சென்­றுள்­ளது. நல்­லி­ணக்க அரசு ‘அச்­சாறு’ போலா­கி­யுள்­ள­மைக்­குக் கார­ணம், பல பிரி­வு­க­ளா­கப் பிள­வு­பட்­டுப் போயுள்­ளமை கண்டு திருப்­தி­யு­றும் மனி­தர்­களே. ஒன்­றி­ணைந்து பய­ணிப்­ப­தென்­பது இது­வரை எமக்கு முன்­பின் தெரி­யா­த­தொன்று.

சர்­வ­ஜன வாக்­கு­ரி­மைப் பலத்தை ஈட்­டிய ஆசி­யா­வின் முத­லா­வது நாட்­ட­வர்­கள் இலங்­கை­யர்­கள் ஆன­போ­தி­லும், தற்­போ­தும் கூட, மனித வாழ்க்கை ‘பிரி­வினை’ என்ற அத்­தி­யா­யத்­துள் சிறைப்­பட்­டுள்­ளது. இந்த அரசை நாளை கவிழ்த்­து­வி­டு­வோம். அடுத்த மாதத்­துள் கவிழ்த்து விடு­வோம் என்று மார்­தட்­டும் நபர்­கள்தான், இந்த நல்­லி­ணக்க முயற்­சியை நாச­மாக்­கு­ப­வர்­கள்.

நல்­லி­ணக்­கத்­தின் பெறு­ம­தியை உண­ரா­த­வர்­களே, என்ன செய்­தா­வது இந்த அர­சைக் கவிழ்க்­கா­த­தேன் என அங்­க­லாய்க்­கி­றார்­கள். அது­சரி, இந்தக் கூட்டு அர­சைக் கவிழ்த்­து­வி­டக் கங்­க­ணம் கட்டி நிற்­கும் இந்­தத் தரப்­பி­ன­ரது எதிர்­பார்ப்­புத் தானென்ன?உண்­மை­யில் ஆட்சி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றும் நோக்­கி­லேயே இவர்கள் இத்­தனை தூரம் தலை­யால் கிடங்கு கிண்ட முயல்­கின்­ற­னர்.

 

அர­சில் இணைந்து செயற்­ப­டும்  சுதந்­தி­ரக் கட்சி அமைச்­சர்­க­ளது மன ஆதங்­கம்

‘‘முன்­னர் அமைச்­சர்­க­ளா­கப் பதவி வகித்த நாம், தற்­போது இந்த ஐ.தே.கட்­சி­கா­ரர்­க­ளின் கீழ் பிரதி அமைச்­சர்­க­ளாக இருக்க நேர்ந்­துள்­ளது. இதை எம்­மால் பொறுத்­துக் கொள்ள இய­லாது.

எமது ஆளை தலைமை அமைச்­ச­ராக்­கியே ஆக வேண்­டும்’’ என அர­சில் அங்­கம் வகிக்­கும் சுதந்­தி­ரக் கட்­சிப் பிரதி அமைச்­ச­ ரொ­ரு­வர், கூட்டு எதி­ர­ணித் தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ரு­வ­ரி­டம் தமது மனக்­கு­றை­யைக் கொட்­டித் தீர்த்­துள்­ளார்.

அதற்கு அந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரோ ‘‘அர­சில் அங்­கம் வகிக்­கும் சுதந்­தி­ரக் கட்­சித் தரப்­பி­னர் துணிச்­ச­லோடு அர­சி­லி­ருந்து வெளி­யேறி எமது பக்­கம் வந்­தால் நாளையே ஆட்சி அதி­ கா­ரம் எமது கையில்’ என்று பதி­ல­ளித் தா­ராம்.

உல­குக்கே உதா­ர­ணம் காட்­டும் வகை­யில் நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்ப முதன் மைக் கட்­சி­கள் இரண்­டும் ஒன்­றி­ணைந்து மேற்­கொள்­ளும் அர­சி­யல் பய­ணம் பெறு­ம­தி­யா­னது. துர­திஷ்­ட­வ­ச­மாக எம்­மில் பலர் இதற்கு எதி­ரா­கச் செயற்­ப­டு­கின்­ற­னர்.

ஆனால் சிர­ம­மான செயற்­பாடு அது. சுதந்­தி­ரக் கட்­சி­யி­லி­ருந்து வில­கிச் செல்ல முயல்­வோரை டிசெம்­பர் மாதம் வரை பொறுமை காக்­கு­மாறு அரச தலை­வர் கோரு­கி­றார். தலைமை அமைச்­சரோ ‘‘2020 ஆம் ஆண்டு வரை இந்த அரசை நிர்­வ­கிக்­கத் தமக்­குப் பல­முள்­ள­தெ­ன­வும், புரட்­சி­யொன் றின் மூலமே வேண்­டு­மா­னால் அர­சைக் கவிழ்க்க முடி­யும் என­வும் சூளு­ரைக்­கி­றார்.

சமா­தா­ன­மும் சுபீட்­ச­மும் நில­வும் நாடொன்­றில் வாழ்­வ­தற்­கான நிலையை உரு­வாக்­கு­வதா? இல்­லையா? என்­பது குறித்து நாட்டு மக்களே முடிவு செய்­தாக வேண்­டும். அதை விடுத்து எந்­தக் கதை­யைக் கூறு­வ­தா­லும் பய­னே­தும் கிடை­யாது.’

சிங்கள மூலம்: கீர்த்தி ரூபசிங்க
தமிழில்: வீஎஸ் ரீ

http://newuthayan.com/story/26572.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.