Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனோகரன் எழுதிய ''வெடிகுண்டு போலாகிய யுத்தநிறுத்த ஒப்பந்தம்''

Featured Replies

''வெடிகுண்டு போலாகிய யுத்தநிறுத்த ஒப்பந்தம்''

மனோகரன்

இலங்கை இனப்பிரச்சினையைச் சமாதான வழி முறைமூலம் தீர்ப்பதற்கான முதற்படியாக ஐந்து ஆண்டுகளின் முன்னர் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இப்போது ஒரு வெடிகுண்டு போலாகியிருக்கிறது. புரிந்துணர்வு உடன்படிக்கை செய்யப்பட்ட ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி இலங்கைத் தீவு முழு அச்சத்தில் இருந்ததே இதற்குச் சான்று.

உடன்படிக்கையின் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி பெரும் தாக்குதல்களோ படை நடவடிக்கைகளோ நிகழலாம் என்ற அச்சத்தில் மக்கள் திகிலடைந்திருந்தனர். எல்லைக் கிராமங்களிலிருந்தும் படை நிலைகளுக்கு அண்மையிலிருந்தும் தமிழர்கள் இடம் பெயர்ந்திருந்தனர். தொண்டு நிறுவனங்கள் கூட பெரும் தாக்குதல்களை அல்லது முழு அளவிலான யுத்தத்தை எதிர்பார்த்து தமது மனித நேயப் பணிகளுக்கான தயார் நிலையில் இருந்தன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச அங்கீகாரத்துடன் பெரும் வரவேற்புகளின் மத்தியில் செய்து கொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கை அதன் ஐந்தாண்டு நிறைவின் போது அதையிட்டே மக்கள் அஞ்சுகின்ற அளவுக்கு இலங்கையின் அரசியல் நிலைமைகள் மாறியிருக்கின்றன.

புரிந்துணர்வு உடன்படிக்கையையும் போர் நிறுத்த ஏற்பாட்டினையும் தொடக்கத்திலிருந்தே ஜே.வி.பியும் சிஹல உறுமயவும் எதிர்த்து வந்தன அந்தக் கட்சிகளைப் பெறுத்தவரையும் இந்த உடன்படிக்கைகள் மேற்குலகின் சதி என்றும் இது விடுதலைப்புலிகளுக்கு அதிக வசதிகளையும் அங்கீகாரத்தையும் அளிக்கின்றன என்ற நோக்குடனும் சிந்திக்கின்றன. சிங்களவர்களுக்கு ஆபத்தைத் தரும் வெடிகுண்டுகளே இந்த உடன் படிக்கைகள் என தொடர்ந்து கருதிவருகின்றன.

தொடர்ந்து நீடித்துச் செல்கின்ற போரைத் தணித்து இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்று மேலாதிக்கம் செலுத்துகின்ற இன்றைய அரசியல் ஒழுங்கின் படியே இந்த உடன்படிக்கைகளும் செய்துகொள்ளப்பட்டன. அவ்வாறு செய்யப்பட்டதால் இந்த உடன்படிக்கை குறித்து மேற்குலகம் அதிகம் நம்பிக்கையோடிருந்தது. இந்த உடன்படிக்கைகளின் தளத்தில் நின்று பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லலாம் என்றும் கருதியது.

புரிந்துணர்வு உடன்படிக்கையை முதலில் ரணில் தோற்கடித்தார் அவர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் செய்திருக்க வேண்டிய பொறுப்புக்களை செய்யத்தவறியதன் விளைவுகளின் தொடர்ச்சியே போர் நிறுத்த மீறல்களைச் சிறிலங்காப்படைகளும் அரசும் தொடர்ந்து செய்வதற்கு சாத்தியமான வாசல்களைத் திறந்தன. அவர் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு குறைந்தபட்சம் அவரே மதிப்புக் கொடுக்கவில்லை அதனை நடைமுறைப்படுத்தவும் அதனூடாக அதனை வலுப்படுத்தவும் அவர் தவறினார். அந்தத் தவறுகளின் விளைவுகளே அவர் தோற்கடிக்கப்பட்டதும் அவர் மீளமுடியாத பொறிக்குள் இப்போது சிக்குண்டிருப்பதும்.

இல்லையென்றால் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒரு வெற்றி பெற்ற நிகழ்வாக அதன் ஐந்தாண்டு நிறைவில் அவர் மதிப்புடன் கொண்டாடியிருப்பார். ஆனால் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டிய நிகழ்வுகளில் ஒரு இடத்திலாவது ரணிலின் பிரசன்னத்தையோ முக்கியத்துவத்தையோ காணமுடியவில்லை. குறைந்தது அதுபற்றி ஒரு சிறு அபிப்பிராயத்தைக் கூட அவரால் தெரிவிக்க முடியத ஒரு நெருக்கடி நிலைக்குள் அவர் தள்ளப்பட்டார். பரிந்துணர்வு உடன்படிக்கையின் முக்கிய பங்காளியாக இருந்த அவர் பற்றி எவரும் எதுவும் பேசாத ஒரு நிலையும் தோன்றிவிட்டது.

இந்த உடன்படிக்கையின் தோல்விக்கு அடுத்த காரணம் மேற்குலகமே. ரணிலும் சந்திரிகா மற்றும் மகிந்த ராஜபக்ஷவும் யுத்த நிறுத்த மீறல்களைச் செய்து புரிந்துணர்வு உடன்படிக்கையில் எஞ்சிய பகுதிகளையும் செயலிழக்கச் செய்யும் நிலைக்குக் கொண்டு சென்ற போது மேற்குலகம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சிறிலங்கா அரசின் தொடர்ச்சியான போர்நிறுத்த மீறல்கள் குறித்தும் புரிந்துணர்வு உடன்படிக்iiயை பலமிழக்கச் செய்யும் அதன் நோக்கம் குறித்தும் விடுதலைப்புலிகள் பல தடைவகள் பகிரங்கமாக எச்சரித்திருந்தார்கள். ஆதனைவிட உடன்படிக்கை சந்தித்த நெருக்கடிகள் குறித்த அபாயத்தையும் அவர்கள் சர்வதேச சமூகத்துக்க தெரியப்படுத்தியிருந்தனர். அதனைவிட சிறிலங்கா அரசாங்கமே இந்த உடன்படிக்கைகளை தான் மதிக்கவில்லை என்பதனை மிகத் தெளிவாக சர்வதேசத்திற்கு வெளிப்படுத்திவிட்டிருந்தது.

போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவை சிறிலங்கா அரசு கையாண்ட விதம் இதில் முக்கியமானது. கண்காணிப்புக்குழுவை விமர்சிக்கத் தொடங்கியதில் இருந்து கண்காணிப்புக் குழு மீதான தாக்குதல்கள் வரையில் இதனை அவதானிக்கலாம். தனது திட்டமிட்ட நடவடிக்கைகளின் மூலம் கண்காணிப்புக் குழுவை அது முடக்கியது. கண்காணிப்புக் குழு பிரதிநிதிகள் ஒரு கட்டத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தமக்கு முக்கியமானது என்று சொல்லுமளவுக்கும் தீர்மானிக்குமளவக்கும் சிறிலங்கா அரசு நுட்பமாக இந்தத் தந்திரேபாயத்தைச் செய்தது. இதன் மூலம் புரிந்துணர்வு உடன்படிக்கையின் மையப் பகதியில் நோய் பிடிக்கத் தொடங்கியது. இவ்வளவுக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் அங்கம் பெற்றவர்கள் இந்தப்பணிக்காக உடன்பட்ட நாடுகளில் இராணுவ உயர்பதவிகளில் இருந்தவர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

சிறிலங்கா படையியல் நோக்கில் சிந்திக்கின்றது என்பதை போர்நிறுத்தக் கண்காணிப்பக் குழுவும் சர்வதேச சமூகமும் ஏன் கவனிக்காமல் விட்டன? போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் படிப்படியாக மக்களும் நமபிக்கை இழந்தார்கள. விடுதலைப்புலிகளும் நம்பிக்கை இழந்தனர். தொடர்ந்து போர்நிறுத்த உடன்படிக்கையின் நிலைமை என்ன என்ற கேள்விகள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டன அப்போதும் கண்காணிப்புக்குழுவும் நோர்வேயும் சர்வதேச சமூகமும் மௌனமாகவே இருந்தன. அந்த மௌனத்தை சாதகமாகப் பயன்படுத்தி சிங்களத்தரப்பு தொடர்ச்சியான இராணுவ மேலாதிக்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. அதன் விளைவுகளே அது மேற்கொண்ட வலிந்த போர் நடவடிக்கைகள். வுலிந்த போர் நடவடிக்கைகள் புரிந்துணர்வு உடன்படிக்கையை அதன் அர்தத்தில் இல்லாமலாக்கிவிட்டன.

இப்போது இராணுவ வன்முறைகளில் மூன்று லட்சத்துக்கு Nமுற்பட்ட தமிழ் மக்கள் அகதிகளாகியிருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். வாகரை, சம்பூர் கஞ்சிக்குடிச்சாறு போன்ற பிரதேசங்கள் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.