Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“கேப்பாபுலவு” இது ஒரு இராணுவ பாசறை!- குமணன்

Featured Replies

desfw-1-696x364.png

கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.

இந்த பாரதியின் வரிகள் தமது சொந்தநிலங்களை படையினரிடம் தொலைத்து கேப்பாபுலவு மாதிரிக்கிராமம் என்னும் போர்வையில் இன்னும் ஒரு முகாமில் வசிப்பது போன்ற உணர்வில் வாழும் கேப்பாபுலவு மக்களுக்கு வெறும் வரிகளாக மட்டுமே இன்றும் இருக்கின்றது.தென்னைமரமும் பசும் சோலைகளும் பச்சைவயல்வெளியும் வயல்வெளியிடையே வீடும் அருகே நந்திக்கடல்வெளியும் வற்றாப்பளை கண்ணகி அருகிருந்து அருள்புரிய 2009க்கு முன் எழில்கொஞ்சும் வளம்பொருந்திய கிராமம் இன்று இராணுவ சிறைப்பிடிப்புக்குள் முடங்கிக்கிடக்கின்றது.

2009க்கு முன் கோவில் மணியோசை அதிகாலை துயிலெழுப்ப நந்திகடல்வெளியே வரும் காற்று தளுவி செல்ல தென்னைமரசோலைகளும் மா,பலா தோட்டமும் கேப்பாபுலவு என்னும் கிராமமே ஒரு குடும்பமாக வாழ்ந்தார்கள். என்ன வளமில்லை அடிப்படையில் நந்திக்கடலை நம்பி கடல்தொழில் செய்பவர்களும் விவசாயம் செய்பவர்களும் இங்கே ஏழைகளாக இருந்தாலும் சொந்த உழைப்பில் சோறு உண்டார்கள் தமது மூதாதையர்கள் தந்த சொத்தில் சுகமாய் வாழ்ந்தார்கள். இன்று நிலமிழந்து நிலையிழந்து வாழவழியற்ற ஏதிலிகளாய் இராணுவமும் அரசும் கேப்பாபுலவு என உலகுக்கு காட்சி பொருளாய்க்காட்டும் மாதிரிகிராமம் என்னும் இன்னொரு மெனிக்கபாம் முகாமில் இன்னும் வாழ்கின்றார்கள்.போருக்கு முன் சொந்த ஊரில் அதிகாலை கோவில்மணியோசையுடனும் குயில் கூவும் ஒலி ஓசையுடனும் ஆனந்தமாய் துயில் எழுந்த மக்கள் இன்று இராணுவ அணிவகுப்புக்கான ஆயத்த சமிக்கை ஒலி காதில் விழுந்து எரிச்சலூட்ட கேப்பாபுலவு இராணுவப்பாசறையில் புதிதாய் முளைத்த புத்தபெருமானின் கோவிலில் பிக்குமார் ஓதும் சத்தம் காதில்விழும் ஓசையுடனும் தமது கிராமமே பறிபோன எரிச்சலில் விரக்தியில் துயில் எழுகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்துவளமும் பொருந்திய ஊர்களில் கேப்பாபுலவும் அடங்கும் நந்திக்கடலை எல்லையாகவும் அருகே அடர்ந்த காட்டை சோலையாகவும் புதுக்குடியிருப்புக்கும் வற்றாப்பளைக்கும் இடையில் இருக்கும் அழகிய கிராமம்தான் கேப்பாபுலவு போருக்கு முன்பு இந்துக்களை பெரும்பான்மையாகவும் அவர்களோடு இணைந்து கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்த கிராமம்தான் கேப்பாபுலவு இந்த கிராமத்து மக்கள் வற்றாப்பளை கண்ணகி அம்மனையே தமது குலதெய்வமாக எண்ணி வாழ்ந்தார்கள் இறுதிப்போர் வன்னி மண்ணெங்கும் சூழவே தமது கிராமத்தை காக்கும் பொறுப்பை வற்றாப்பளை தாயவளிடம் விட்டுவிட்டு 2008ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் தமது சொந்த நிலங்களை விட்டு இடம்பெயர்ந்தார்கள்.யுத்தம் முடிந்து மெனிக்பாம் அகதிவாழ்க்கை முடித்து 2011ஆம் ஆண்டு தமது சொந்தமண்ணில் கால்பதிக்கும் ஆவலுடன் வந்த மக்களுக்கு கிடைத்து பெரும் ஏமாற்றமே சொந்த கிராமத்துக்கு பதிலாக அருகில் உள்ள சூரிபுரம் என்னும் இடத்தில் உள்ள காடுகளை அழித்து அங்கே கேப்பாபுலவு மாதிரி கிராமம் என்னும் போர்வையில் ஒரு திறந்தவெளி முகாமில் அடைக்கப்பட்டார்கள்.

வழங்கப்பட்டது 20 பேர்ச் காணியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு என்று சொல்லப்படும் குடில் ஒன்று கேப்பாபுலவு வெறும் பேரளவில் உலகுக்கு காட்டுவதற்கான ஒரு மாயை கிராமம்தான் இங்கே குயில் கூவுவதில்லை தென்னைமரங்களுக்கிடையே காற்றுவீசுவதில்லை சொந்த கிராமத்தின் கலையிழந்து எப்போவது ஒருநாள் எமது கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தில் குடியமர்த்துவார்கள் என்ற ஏக்கத்தில் கேப்பாபுலவு கிராமத்தின் ஆரம்பத்தில் வீதியை மறித்து இந்தியாவின் கதவுபோல அமைக்கப்பட்டுள்ள படைத்தலைமையக வாயிலூடாக தங்கள் கிராமத்தை இன்றும் அந்தவளியால் போகும்போதெல்லாம் பார்க்கின்றார்கள் இந்த கேப்பாபுலவு மக்கள்.இன்றும் விரக்தியுடன் தமது சொந்த கிராமத்துவாசலில் இராணுவத்தின் குகைக்கு முன்னால் தமது சொந்தநிலத்த்தை கேட்டு இன்றுடன் 200ஆவது நாளாக  போராடிவரும் மக்களில் சிலரின் மனக்குமுறல்கள் இவை ….

கேப்பாபுலவில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த விவேகானந்தன்(வயது 60) என்பவரின்ஏங்கங்கள் “கேப்பாபுலவில எங்கட சொந்தக்காணிக்குள்ள நாங்கள் போகோணும் போகோணும் எண்டு ஆசைப்பட்டு மாதிரி கிராமத்தில் காத்திருக்கும்போது நங்கள் பலமுறை பலரால் ஆசைவார்த்தைகள் காட்டி நாளை உங்கள் நிலங்கள் தருவோம் அடுத்தமாதம் தருவோம் நீங்கள் போங்கோ என எத்தனையோ தரம் ஏமாற்றப்பட்டோம்,நாமும் அந்த அரசாங்கம் வரும் இந்த அரசாங்கம் வரும் வரேக்க எங்கட காணிகள் கிடைக்கும்.என்று ஆசையோட வாக்குப்போட போனோம் ஆனால் எதுவும் இதுவரை கிடைக்கல நாங்கள் எங்கட இடத்தில எப்புடி வாழ்ந்தம் என்று இந்த ஆமிக்காரனுகளுக்கு தெரியுமோ??அவங்கள் சொல்லுறாங்கள் நீங்கள் இப்போ இருக்கிற இடம் நலம்தானே அங்க இருங்க நாங்கள் உங்களுக்கு வீடுகட்டி தந்திருக்கு எல்லாம் செய்து தந்திருக்கு நீங்க மாதிரி கிராமத்தில இருங்க இது ஆமி ஆக்களுக்கு வேணும் எண்டு சொல்லுறாங்கள்.எங்களுக்கு எங்கட இடம்தான் வேணும் .

என்ட கண்ணில என்ன இல்லை மா பலா தென்னை தேசி, எல்லாம் இருக்கு எனக்கு ஒண்டும் கடைல வாங்க தேவையில்லை ஆனால் இப்ப இருக்கிற முகாமில எல்லாமே கடையில தான் வாங்கி சீவிக்கவேண்டி கிடக்கு “இவரின் எண்ணங்கள் என்றும் தந்து சொந்தமண்ணை நோக்கியதாகவே இருக்கின்றது.தனது கிராமத்தில் சந்தோசமாக வாழ்ந்த நாட்களை எண்ணி எண்ணியே தற்போது போராடடம் நடைபெற்றுவரும் படைத்தலைமையக வாயிலில் நின்று அடிக்கடி தூரத்தே தெரியும் தனது வீடடையும்தோட்டத்தையும் எட்டிப்பார்க்கின்றார் இவர்.தள்ளாத தனது 71வயதில் தனது சொந்த மண்ணில் சென்று உயிரைவிடவேண்டும் என்ற ஏக்கத்துடன் படைமுகாம் வாசலில் காத்திருக்கும் மனோன்மணி என்ற வயது முதிர்ந்தவர் இவர் ‘கேப்பாபுலவு விடுறம் கேப்பாபுலவு விடுறம் எண்டு எத்தனையோ தடவை சொல்லிட்டினம் இன்னும் எங்கட இடம்விடேல்ல நான் என்ட சொந்த வீட்டிலேபோய்த்தான் சாக்கோணும் எண்ட ஏக்கத்தில இருக்கிறன்.எங்களை என்னவிதப்பண்ணியும் எங்கட இடத்துக்கு விடோணும் எண்டு ஆவலோட கேக்கிறம்.அதுவரைக்கும் இந்த போராடடத்தை விட்டு போகமாட்டம் ,எங்கட இடத்தில இருந்து வாழ்ந்த நிம்மதியும் சந்தோஷமும் எட்டுவருஷமா நாங்கள் அனுபவிக்கேல்ல தண்ணிகூட இல்லாமல் நாங்கள் இந்த முகாமில படுறபாடு எங்கட இடத்தில எத்தனையோ வளமான தண்ணியள் என்ன வருமானங்களை என்ன, தோட்டம் துரவு என்ன எல்லாம் செய்து நாங்கள் கோழியளோ ஆடுகளோ மாடுகளோ வளமாய் எல்லாம் வச்சு வாழ்ந்துவந்தனாங்கள் இப்ப ஒண்டும் எங்களுக்கு உதவாத வண்ணத்தில பிள்ளைகளையும் இழந்து பொருள்பண்டத்தையும் இழந்து காணி பூமிகளையும் இழந்து போட்டு இப்ப தவிச்சுக்கொண்டு இருக்கிறம்.எங்களுக்கு எங்கட இடத்தை தாங்கோ எங்களுக்கு வேற ஒண்டும் வேண்டாம் அதே காணும்..200 நாட்களாக  இன்றும் இதே ஏக்கங்களுடன் அந்த கிராமத்தின் படைத்தலைமையக வாயிலில் இரவு பகலாக காத்துக்கிடக்கின்றார்கள்.

தமது சொந்த நிலங்கள் கிடைக்கும் காத்திருக்கும் மக்கள் இந்த நாட்டில் உள்ள ஏனைய இனத்தவர்கள் போல் தமது சொந்த கிராமத்தில் சொந்த நிலத்தில் வாழத்தான் ஆசைப்படுகின்றார்களே தவிர இவர்கள் கேட்பது ஒன்றும் தனிநாடு அல்ல இவர்களின் பூர்வீக கிராமமான கேப்பாபுலவு ,சீனியாமோட்டை,சூரிபுரம்,பிலக்குடியிருப்பு ,பிரம்படி எல்லாம் சேர்த்த பூர்வீக நிலத்தில் இராணுவ, வசமுள்ள 138 குடும்பங்களின் 482 ஏக்கர் நிலங்களை மட்டும்தான்.இந்த 482 ஏக்கர் நிலங்களை இந்த இராணுவம் அருகில் உள்ள காடுகளிலோ அரச நிலங்களிலோ பெற்றுக்கொள்ளமுடியும் ஆனால் வேண்டும் என்றே இந்த மக்களின் நிலங்களில் பாரிய படைத்தளங்களை அமைத்து உல்லாச விடுதிகளையும்,நவீன உணவகங்களை நீச்சல் தடாகங்களையும் அமைத்துள்ளனர்.

இந்த மக்களின் வருமானங்களை விற்கின்றனர் அனுபவிக்கின்றனர். தென்பகுதியிலிருந்து வரும் தமது உறவினர்கள் இந்த வளங்களையும் வசதிவாய்ப்புகளையும் அனுபவிக்க வாய்ப்பு கொடுக்கின்றனர்.ஆனால் இந்த கிராமத்து மக்களோ தமது சொந்த நிலத்துக்கு செல்லவேண்டும் என்ற ஆசையில் படைத்தலைமையாக வாயில் கதவுக்கு அருகே போனால் மிருகங்களை விரட்டுவதுபோல் இராணுவத்தால் விரட்டப்படுகின்றனர் .ஏன் இந்த நல்லிணக்கம்??? இதுதான் நீங்கள் கூறும் எல்லோரும் ஒன்றாக இந்த நாட்டில் வாழவேண்டும் என்ற நல்லிணக்கமா?? நீங்கள் நல்லிணக்கம் ஏற்படுத்துகின்றோம் என்று உலகுக்கு காட்டும் நாடகம் இதுவா?? தமிழர்களுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்துவிட்டோம் என்று கூறுவது நீங்கள் இதைதானா??இந்த மக்களின் நிலங்களை விழுங்கியுள்ள இராணுவம் அதனை ஆக்கிரமித்து அதிலே உல்லாச வாழ்க்கை வாழ இந்த மக்களோ மாதிரிகிராமம் என்னும் முகாமில் எப்போதுவரை வாடுகின்றார்களோ அப்போதுவரை கேப்பாபுலவு ஒரு இராணுவ பாசறைதான்…

-குமணன்

http://www.quicknewstamil.com/2017/09/16/கேப்பாபுலவு-இது-ஒரு-இராண/

 

  • தொடங்கியவர்

தொலைந்த வாழ்விற்காய் ஏங்கும் மனிதர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.