Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச பயங்கரவாதத்துக்கு துணைபோகும் சர்வதேசம்

Featured Replies

துணைபோகும் சர்வதேசம்

மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் இலங் கையின் வண்டவாளம் இப்போது சர்வதேச சமூகத் தின் முன்னால் தண்டவாளம் ஏறிக்கொண்டிருக் கின்றது.

ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசு எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் நிர்வாகத்தி னால் "சட்டத்தின் ஆட்சி' என்ற பெயரின் கீழ் மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகளின் சீத்துவம் என்ன வென்பது இப்போது வெளிப்படையாகவே தென் படத் தொடங்கியுள்ளது.

"சட்டத்தின் ஆட்சி' நிலவுவதாகக் கூறப்படும் தென்னிலங்கையில் வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே ஆயுதங்களோடு சீருடையினர் நிறுத்தப்பட்டிருக் கும் தலைநகர் கொழும்பில் வெள்ளை வானில் நவீன ரக ஆயுதங்களோடு வரும் இனந்தெரியாத குழு வினர், சர்வ சாதாரணமாக, சாவகாசமாக, இந்தத் தடை நிலைகளைத் தாண்டி ஆள்களைக் கடத்திச் செல் வதும், கடத்தப்பட்டோரின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவித்து பெரும் தொகைப் பணம் கப்பமாக அற விடுவதும், கடத்தப்படுவோர் பின்னர் காணாமலே போய்விடுவதும் தங்கு தடையின்றி "வழக்கமாக' நடந்தேறுகின்றன.

அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமி ழர் தாயகப் பகுதிகளிலும், இவ்வாறு "இனம் தெரியாத குழுவின்' கணக்கில் படுகொலைகளும், அச்சுறுத்தல் களும், கப்பம் அறவிடுதலும் என மனித உரிமை மீறல் கள் கொடி கட்டிப் பறப்பதை இப்பத்தியில் பல தடவைகள் நாம் சுட்டிக்காட்டியாகிவிட்டது.

இவ்வாறு நிலைமை மோசமடைந்திருப்பதற் கான பிரதான காரணத்தை இப்போது கோடிட்டுக் காட்டியிருக்கின்றது சர்வதேச ஜூரிகள் அமைப்பு.

"பயங்கரவாதம்' மற்றும் "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்' என்பவற்றால் சட்டத்தின் ஆட்சி யிலும் மனித உரிமைகள் பேணப்படுவதிலும் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து விசாரணை செய் வதற்காக ஜெனிவாவை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழுவி னால் 2005இல் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச ஜூரி கள் அணியே தனது நீண்ட, விரிவான அவதானிப்புகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் இக்காரணத்தை வெளியிட்டிருக்கின்றது.

பயங்காரவாத எதிர்ப்புச் சட்டவிதிகள் என்ற பெயரில் அரசு கொண்டுவந்துள்ள ஒழுங்கு விதி களும், அதன் கீழ் வழங்கப்பட்டுள்ள கட்டுமட்டில்லா அதிகாரங்களுமே அரச படைகள் வகைதொகை யின்றி மனித உரிமை மீறல்களில் ஈடுபடவும், சட் டத்துக்கு முரணான கொலைகளைத் தங்குதடை யின்றிப் புரியவும் இடமளிக்கின்றன என்ற உண் மையை அந்த சர்வதேச ஜூரிகள் அம்பலப்படுத்தி யிருக்கின்றனர்.

அரச துருப்புகளால் சட்டத்துக்கு விரோதமான கொலைகள், சித்திரவதைகள், வேண்டுமென்றே ஆள்களைக் காணாமற் போகச்செய்தல், முறையற்ற தடுத்து வைப்புகள் என்பன மேற்கொள்ளப்படு கின்றன என்று உண்மையை அம்பலப்படுத்தியிருக் கும் அந்த ஜூரிகள், இவ்வாறான நிலைமை தொடர் பாகத் தங்களின் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டி ருக்கின்றனர்.

"பயங்கரவாதம்' என்பது குறித்து தெளிவாக வும், திட்டவட்டமாகவும் வரையறுக்கப்படாத நிலை யில் விசாலமான கருத்து நிலைப்பாட்டுடன் பயங்கரவாதத் தடுப்பு விதிகளும், அவசரகாலச் சட்ட ஏற்பாடுகளும் மீள அறிமுகப்படுத்தப்பட்டி ருக்கின்றன. இவை எவரையும் இச்சட்டத்தின் கீழ் பயங்கரவாதச் செயலுடன் தொடர்புடைய சந்தேக நபராக்கித் தடுத்து வைக்கவும், திட்டமிட்ட முறை யில் மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளவும் வாய்ப்பையும் வசதியையும் ஏற்படுத்தியிருக்கின் றன என்றும் சர்வதேச ஜூரிகள் அணி எடுத்து விளக்கி உள்ளது.

இத்தகைய சட்ட விதிகளின் கீழ் கருத்துச் சுதந் திரம் மறுக்கப்படுவதும் ஊடகங்களின் குரல்வளை நசுக்கப்படுவதும் மற்றொரு பிரச்சினையாக விஸ்வ ரூபம் எடுத்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அமைப்புகளும் தேசிய ரீதியிலான மனித உரிமைகள் ஸ்தாபனங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த நிலைமை தொடர் பாகத் தமது கண்டனத்தையும் கவலையையும் வெளி யிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை இனப்பூசலின் விளைவாக நேரடி மோத லில் ஈடுபட்டிருப்பவை இரண்டு தரப்புகள். ஒரு புறம் விடுதலைப்புலிகள். மறுபக்கத்தில் இலங்கை அரசுத் துருப்புகளும் அவற்றின் அங்கீகாரம், அனு சரணை, ஒத்துழைப்பு, வழிகாட்டல் ஆகியவற்றின் கீழ் இயங்கும் துணைப்படைகளும்.

இதில் ஒரு தரப்பான விடுதலைப்புலிகளைப் "பயங்கரவாதிகள்' என முத்திரை குத்தி, அவர்களைத் தடைசெய்து, துள்ளிக்குதிக்கும் தங்களை மனித உரிமைகள் பேணப்படும் விவகாரத்தின் சர்வதேசக் காவலர்கள் எனப் பிரகடனப்படுத்தும் மேற்குலக நாடுகள், மறு தரப்பான அரசின் "பயங்கரவாதம்' குறித் துக் கண்டும் காணாமலுமான போக்கைக் கடைப் பிடிப்பதே இன்று நிலைமை இவ்வளவு மோசமாகி விபரீதமான கட்டத்தை அடைந்ததற்குப் பிரதான காரணமாகும்.

தன்னைச் சட்ட ரீதியான அரசு என்றும், ஜனநாயக ஆட்சியின் காவலன் என்றும் பிரகடனப்படுத்தி நிற்கும் இலங்கை அரசின், பயங்கரவாதத்தைக் கண் டும் காணாமலும் கண்டிக்கவும், தண்டிக்கவும் திராணியும் தெளிவுமற்று இருக்கும் சர்வதேச சமூகம், அதன் மூலம் அரச பயங்கரவாதத்துக்கு ஒத் துழைத்து, ஊக்குவித்து, ஆதரவு வழங்குகின்றது என்பதே அர்த்தம்.

விடுதலைப் போராளிகளை "பயங்கரவாதிகள்' எனச் சித்திரித்து, அடையாளப்படுத்தி, அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைக்கு முயலும் சர்வதேச சமூகம், அரச பயங்கரவாதம் குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வாளாவிருப்பதன் மூலம் அதற் குத் துணைபோய், அதனை ஊக்குவித்து வளர்க்கின் றது என்பதே பொருள்.

அரச பயங்கரவாதத்தின் ஆட்சியை கட்டுப்படுத் தப்படுவதற்குத் தன்னால் இயன்ற அனைத்து வழி முறைகள் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கவேண் டிய சர்வதேச சமூகம், அந்த அரச பயங்கரவாதத் தைத் தூண்டிவிடும் வகையில் செயற்படுவதன் மூலம் அந்த அதற்கு வெளிப்படையாகத் துணை போகின்றது என்றே கருதவேண்டும்.

இனிமேலாவது திருந்துமா சர்வதேச சமூகம்?

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.