Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூதர்களின் மட்டக்களப்பு விஜயம் குறித்து அமைச்சுகளிடையே கருத்து முரண்பாடு ஆளை ஆள் சாடும் வாதப்பிரதிவாதம்

Featured Replies

தூதர்களின் மட்டக்களப்பு விஜயம் குறித்து அமைச்சுகளிடையே கருத்து முரண்பாடு ஆளை ஆள் சாடும் வாதப்பிரதிவாதம்

கொழும்பு,மார்ச்5

வெளிநாட்டுத் தூதுவர்கள் பலர் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று கடந்த மாதம் 27ஆம் திகதி ஹெலிக்கொப்டர்கள் மூலம் மட்டக்களப்புக்குச் சென்று தரையிறங்கிய சமயம், விடுதலைப் புலி களின் மோட்டார்த் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் இலங்கை அரசின் மூன்று அமைச்சுகளி டையே கருத்து முரண்பாட்டை உருவாக்கியிருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளி யிட்டிருக்கின்றன.

இலங்கை வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சு ஆகியவற்றின் உயர்மட்டத்தினரிடையிலேயே இந்த விவகாரம் கருத்து முரண்பாட்டை உருவாக்கியிருக்கின்றது.

அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மன் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பல வெளி நாட்டு இராஜதந்திரிகள் அடங்கிய குழு வினரை இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க, மட்டக்களப்பு நிலை மைகளை நேரில் காட்டுவதற்காகக் கூட் டிச் சென்றபோதே இந்தக் குழப்பம் ஏற்பட் டது என்பது தெரிந்ததே.

இச்சம்பவம் இடம்பெற்ற சமயம் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச் சர் றோஹித போகொல்லாகம தமது சீன விஜயத்தை இடைநடுவில் கைவிட்டு அவசர அவசரமாக நாடு திரும்பினார்.

மட்டக்களப்புச் சம்பவத்தால் குழப்ப முற்றிருந்த இராஜதந்திர வட்டாரங்களைச் சமாளிக்கும் விதத்தில், கொழும்பில் உள்ள தூதுவர்களை அவர் விரைந்து மாநாடு ஒன் றுக்கு அழைத்து, அவர்களுடன் உரையாடி னார்.

வெளிவிவகார அமைச்சர்

இராஜதந்திரிகள் தலைநகருக்கு வெளியே அதுவும் யுத்தப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளுக்கு செல்லும் விஜயம் தொடர் பாக வழமையான இராஜதந்திர முறைகள்

இங்கு பின்பற்றப்படவில்லை என்று கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், இத்தகைய வெளிநாட்டு இராஜதந்திரிகளின் விஜயத்துக்கு அவர் களுக்குப் பொறுப்பான வெளிவிவகார அமைச்சின் அனுமதி பெறப்படவில்லை என்றும் கூறினார். ஆக, பாதுகாப்பு அமைச் சிடம் மட்டுமே அனுமதி பெறப்பட்டிருக் கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

அதேசமயம் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளோ இத்தகைய விஜயங்களை ஆரம்பம் முதலேயே தாங்கள் எதிர்த்து வந்திருக்கின்றனர் எனக் கூறியிருக்கின் றார்கள்.

இதேபோன்ற கருத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜ பக்ஷவும் வெளியிட்டிருக்கின்றார்.

""இந்த மோசமான சம்பவம் நேர்ந்த மைக்கு நான் பெறுப்பேற்க முடியாது. இத்தகைய பிரதேசங்களுக்குச் செல்ல விரும்பிய இராஜதந்திரிகளும் இதற்கான பொறுப்பை பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.

""இத்தகைய விடயங்களில் சர்வதேச, உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏன், இராஜதந்திரி மட்டத்தினர் கூட இத் தகைய விவகாரங்களில் தலையிடுவதை நான் எப்போதுமே எதிர்த்தே வந்துள்ளேன். இத்தகைய பிரதேசங்களுக்கு செல்லவேண் டாம் என நான்கூறிவந்துள்ள போதிலும் அவர்கள் அதனை செவிமடுக்கவே இல்லை. அப்படிச் செய்யாதீர்கள் என்று நான் கூறினால், என் மீது பல குற்றங் களைச் சுமத்துகின்றார்கள். நான் தமிழர் களுக்கு எதிரானவன் என்றும், இந்த இடங் களுக்கு இவர்களைச் செல்லவிடமால் செய்வதன் மூலம் எதையோ மூடிமறைக் கிறேன் என்றும் கூட குற்றம் சுமத்துகின் றார்கள்.

இவ்விடயம் குறித்து, தூதுவர்களை மட்டக்களப்புக்கு அழைத்துச் சென்ற அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் கருத்து வெளியிடுகையில்,தூதுவர்களை அங்கு அழைத்துச் செல்லவேண்டாம் என யாரும் தமக்கு ஆலோசனை கூறவில்லை என் றார் .

""மனிதபிமான உதவிகளை வழங்கு வது தொடர்பான ஆலோசனைக் குழுவின் கூட்டத்திலேயே தூதுவர்களை மட்டக் களப்புக்கு அழைத்துச் செல்லும் முடிவு எடுக்கப்பட்டது. அந்த ஆலோசனைக் குழுவில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் உள்ளனர். அந்த ஆலோ சனைக் குழுக் கூட்டம் கடந்த 20ஆம் திகதி என் தலைமையில் நடைபெற்றபோது மேற்படி முடிவு எடுக்கப்பட்ட சமயம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அங்கு பிரசன்னமாகியிருந்தார். வெளிவிவ கார அமைச்சின் மேலதிக செயலாளர் மடுவ கெதரவும், வெளிவிவகார அமைச் சின் பொதுசனதொடர்புப் பிரிவின் பணிப் பாளர் நாயகம் ரவிநாத் ஆரியசிங்கவும் கூட அப்போது அங்கு இருந்தனர். அது மாத்திரமல்ல, பணிப்பாளர் நாயகமும் அந்த ஹெலிகொப்டரில் எங்களுடன் இருந்தார். என்றார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க.

http://www.uthayan.com/pages/news/today/01.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.