Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசமைப்பு உருவாக்கல் பணியை முடக்க ராஜபக்சக்கல் முயற்சி;லால் விஜேநாயக்க

Featured Replies

அரசமைப்பு உருவாக்கல் பணியை முடக்க ராஜபக்சக்கல் முயற்சி;லால் விஜேநாயக்க

 அரசமைப்பு உருவாக்கல் பணியை முடக்க ராஜபக்சக்கல் முயற்சி;லால் விஜேநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புப் பணிகளை முடக்குவதற்காக பல்வேறு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

குறுகிய அரசியல் இலாபத்திற்காக மஹிந்த அணியினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ள சட்டத்தரணி விஜேநாயக்க, இதன் ஒரு அங்கமாகவே அரசியல் யாப்பைத் தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதிய புரளியை கிளப்பிவிட்டுள்ளதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.

ஸ்ரீலங்காவின் மத்திய மாகாணத்தின் தலைநகரமான கண்டியில் அமைந்துள்ள மத்திய மாகாண சபையில் இன்றைய தினம் மைத்ரி – ரணில் அரசாங்கத்தின் உத்தேச 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கல் தொடர்பிலான மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவராக பணியாற்றிய சட்டத்தரணி லால் விஜேநாயக்க மத்திய மாகாண சபைக்கு இன்றைய தினம் விஜயம் செய்து மத்திய மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து திரும்பிய லால் விஜேநாயக்கவிடம், ஊடகவியலாளர்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கல் பணிகள் மீது முன்வைக்கப்பட்டுவருகின்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் புதிய அரசியல் யாப்பு தயாரிப்புப் பணிகளின் நிலவரங்கள் தொடர்பில் வினவினர்.

இதன்போது நாளை மறுதினமான செப்டெம்பர் 21 ஆம் திகதி ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அரசியல் யாப்புச் சபையான நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு பொதுமக்களின் கருத்துக்களுக்கு அது விடப்படும் என்றும் கூறினார்.

“அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்களது கருத்துக்கள் அடங்கிய அறிக்கை இரண்டு வருடங்களை அண்மிக்கின்றது. அதன் பின்னர் அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்ட நடவடிக்கைக் குழு இவற்றை ஆய்வுசெய்து அதிகாரப்பரவல், மனித உரிமைகள் உட்பட்ட விடயங்களுக்காக 6 குழுக்களை நியமித்தது. அந்தக் குழுக்களின் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டும் 6 மாதங்களாகின்றன. இப்போது தயாரிக்கப்பட்ட அறிக்கை 21ஆம் திகதி சபையில் சமர்பிக்கப்படவுள்ளது. அது பொதுமக்களுக்கும் பகிரங்கப்படுத்தப்படும். அவற்றிலுள்ள விடயங்கள் குறித்து மக்களுக்கு கருத்து கூறமுடியும். அவற்றையும் ஆய்வுசெய்த பின்னர் இணங்கிய இறுதி அறிக்கை தயாரிக்கப்படும். அரசியலமைப்பு அல்ல. அதற்குத் தேவையாக விடயங்களை உள்ளடக்கியே அறிக்கை தயாரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதேவேளை மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்புக்கு அமெரிக்காவிலிருந்தே உதவிகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாக மஹிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல நேற்றைய தினம் புதிய தகவலொன்றைத் தெரிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

கெஹலியவின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்று தெரிவித்த சட்டத்தரணி லால் விஜேநாயக்க கேஹேலிய ரம்புக்வெல அங்கம் வகிக்கும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுமு் அரசியல் யாப்பு வழி நடத்தல் குழுவிலும் அதேபோல் துணை குழுக்களிலும் அங்கம் வகிப்பதால் அவர்களிடமே இந்த சந்தேகத்தை கேஹேலிய வினவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“இவை பொய்யான பிரசாரமாகும். அமெரிக்கா இதனை செய்தால் ஏன் நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களும் ஒன்றுகூடவேண்டும்? பிரதமரின் தலைமையில் வழிநடத்தல் குழுவில் 11 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதில் பந்துல குணவர்தனவும் இருக்கின்றார். அவரிடம் கேளுங்கள் அவர் தயாரித்த அறிக்கையானது அமெரிக்காவிடம் கேட்டுவிட்டா செய்தார்? என்றார்.

குறிப்பாக புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டால் நாடு பிளவுபடும் என்று மஹிந்தவின் சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஒரு புதிய அமைப்பை உருவாக்கி நாடு தழுவிய ரீதியில்பிரசாரம் மேற்கொள்ள நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்தும் அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினராலும் முன்னவைக்கப்பட்டுவரும் பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்தும் சட்டத்தரணி லால் விஜேநாயக்கவிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த சட்டத்தரணி லால் விஜேநாயக்க “இதெல்லாம் அரசியல் இலாபத்திற்காக கூறுகின்ற பொய்க்கதைகளாகும். அரசியலமைப்பு உருவாக்கல் பணிகளில் கலந்துகொண்டு, இறுதியில் வெளியே வந்து இது அழிவுப்பாதை என்று பலதை கூறுகின்றனர். நாட்டில் உள்ள பிரச்சினை இதுதான். ஒன்றை செய்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். புதிய அரசியலமைப்பு உருவாக்கல் பணிகளை முடக்கினால் அரசாங்கத்திற்கு பாரிய தோல்வி ஏற்படும் என்ற குறுக்கு அரசியல் இலாபத்திற்காகவே அவர்கள் இதனை செய்கிறார்கள். அரசியலமைப்புச் சபையினால் உருவாக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகளே வெளியிடப்படுகிறது என்பதே தவிர, புதிய அரசியலமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை. மக்களுக்கு இன்னும் கருத்துக்களை அறிவிக்க முடியும். இப்போது அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து பலதரப்பட்ட வதந்திகள் பரப்பிவைக்கப்பட்டுள்ளன. ஆகவே அதனை தெளிவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். 21ஆம் திகதிக்குப் பின்னால் அந்தப் பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும்” என்றார்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/lal-wijenayake-comment-on-New-constitution-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.