Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ . நா. வழங்கிய கால அவகாசத்தில் அரசாங்கம் என்ன செய்யப்போகிறது?

Featured Replies

ஐ . நா. வழங்கிய கால அவகாசத்தில் அரசாங்கம் என்ன செய்யப்போகிறது?

 

முடி­யு­மா­ன­வரை இரா­ஜ ­தந்­திர ரீதியில் செயற்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியை பெற்­றுக் கொள்ள அனை­வரும் பங்­க­ளிப்பை செய்­ய­வேண்டும். அர­சாங்கம் இந்த விட­யத்தில் நேர்­மை யுடன் செயற்­ப­டு­வது  அவ­சி­ய­மாகும். அதே­நேரம் அனைத்து தரப்­பி­னரும் இந்த விட­யங்­களை குழப்­பாமல் தேவை­யான ஆத­ர­வையும் பங்­க­ளிப்­பையும் வழங்­க­வேண்டும் 

 

யுத்­த­கா­லத்தில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­கு­வ­தற்கு இலங்­கைக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை இரண்­டு­வ­ருட கால அவ­கா­சத்தை வழங்­கி­யுள்­ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை குறித்த பிரே­ர­ணைக்கு அமை­வா­கவே இந்த கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதா­வது கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையின் படி 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இலங்­கைக்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட காலம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

காணாமல் போனோர் 

குறித்த அலு­வ­லகம் என் 

பது நீதி­மன்றம் அல்ல. 

மாறாக காணாமல்

 போனோ­ருக்கு என்ன

 நடந்­தது என்­ப­தனை 

 ஆராய்­வ­தற்­கான ஒரு பொறி­முறை மட்­டு­மே 

யாகும்

- வெளியு­றவு செயலர் 

எனினும் இக்­கா­லப்­ப­கு­திக்குள் போது­மான முன்­னேற்­றங்கள் வெளிக்­காட்­டப்­ப­டா­ததன் கார­ண­மா­கவே 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இக்­கா­லப்­ப­கு­திக்குள் அரசாங்கம் என்ன செய்­யப்­போ­கின்­றது என்­பதே தற்­போ­தைய கேள்­வி­யாகும்.

 இந்த கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்ள காலப்­ப­கு­திக்குள் மக்­க­ளுக்­கான நீதி நிலை­நாட்­டப்­ப­டுமா அல்­லது வழ­மை­போன்றே காலம் இழுத்­த­டிக்­கப்­ப­டுமா என்­பதே இங்கு முன்­வைக்­கப்­படும் விட­ய­மாக உள்­ளது. காரணம் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­த­தி­லி­ருந்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பா­டா­னது இழுத்­த­டிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­ற­தே தவிர அதற்­காக ஆரோக்­கி­ய­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.

இந்த நிலையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமக்கு நீதியை பெற்­றுத்­த­ரு­மாறு கோரி வீதியில் இறங்கி போராட ஆரம்­பித்­து­விட்­டனர். குறிப்­பாக பாதிக்­கப்­பட்ட மக்கள் விரக்தி நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர் என்றே கூறு­ம­ள­வுக்கு நிலைமை மோச­மா­கி­யுள்­ளது.

விசே­ட­மாக பாதிக்­கப்­பட்ட மக்­களை பொறுத்­த­வரை அவர்­க­ளுக்­கான நீதி எக்­கா­ரணம் கொண்டும் தாம­தப்­ப­டுத்­தப்­பட முடி­யா­த­தா­கவே உள்­ளது. யுத்த காலத்­திலும் அதற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் காணாமல் போன­வர்­களை தேடி­ய­வண்ணம் அவர்­களின் உற­வி­னர்கள் திண்­டா­டி­வ­ரு­கின்­றனர். காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தனை கண்­ட­றியும் நோக்கில் அந்த மக்கள் போரா­டி­வ­ரு­கின்­றனர்.

அவர்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுப்­பது தொடர்பில் அரசாங்கம் கடந்த காலங்­களில் நம்­பிக்கை அளிக்கும் வகையில் எத­னையும் செய்­ய­வில்லை. மாறாக மக்கள் மத்­தியில் அவ­நம்­பிக்கை ஏற்­படும் வகை­யி­லேயே நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. பாதிக்­கப்­பட்ட மக்கள் விட­யத்தில் இந்த காணாமல் போனோர் விவ­காரம் அதி முக்­கி­ய­மா­னது என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது.

அடுத்­த­தாக யுத்­த­கா­லத்தில் பொது மக்­க­ளிடம் இருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் இது­வரை பொது மக்­க­ளுக்கு மீள­ளிக்­கப்­ப­ட­வில்லை. குறிப்­பிட்ட அளவு காணிகள் விடு­விக்­க­ப்­பட்­டி­ருந்­தாலும் இன்னும் அதி­க­மான காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. காணி­களை இழந்த மக்­களும் தற்­போது வீதிக்கு வர ஆரம்­பித்­து­விட்­டனர். காணி விட­யத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் போராட்­டங்கள் தொடர்­கின்­றன.

அதே­போன்று அர­சியல் கைதிகள் விவ­கா­ரமும் இன்னும் தீர்க்­கப்­ப­டாமல் தொடர்­கின்­றது. மேலும் யுத்த காலத்தில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் சட்­டத்­துக்கு புறம்­பான செயற்­பா­டுகள் குறித்தும் நீதி எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அதே­போன்று நஷ்­ட­ஈடு வழங்கும் செயற்­பா­டுகள் குறித்தும் கவனம் செலுத்­த­வேண்டும். யுத்த காலத்தில் பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்னும் பொரு­ளா­தார ரீதியில் தேறாத நிலை­யி­லேயே உள்­ளனர். அவர்­களின் வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இதற்­காக அர­சாங்கம் நஷ்­ட­ஈடு வழங்கும் பொறி­முறை ஒன்றை உரு­வாக்க முன்­வ­ர­வேண்டும். இது தொடர்பில் அர­சாங்கம் தற்­கா­லி­க­மாகவா­வது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வேண்டும்.

எல்­லா­வற்­றுக்கும் மேலாக அர­சாங்கம் நீண்­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்­போ­யுள்ள தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுத்­தா­க­வேண்டும். இது தொடர்பில் இதய சுத்­தி­யுடன் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும். புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்­வுத்­திட்­டத்தை அர­சாங்கம் முன்­வைக்­க­வேண்டும்.

தற்­போ­தைய நிலையில் இந்த அனைத்து செயற்­பா­டு­க­ளுமே மந்த கதி­யி­லேயே உள்­ளன. அர­சாங்கம் தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து வரு­கின்ற இன­வாத ரீதி­யி­லான எதிர்ப்­புக்­க­ளையும் சமா­ளித்­துக்­கொண்டு இந்த நல்­லி­ணக்க மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது என்­பது இல­கு­வா­ன­தல்ல. ஆனால் அதற்­காக இந்த செயற்­பா­டு­களை தாம­தப்­ப­டு­த்­திக்­கொண்டும் இருக்க முடி­யாது.

கடந்த 11 ஆம் ஆம் திகதி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடரின் முதல்நாள் அமர்வில் உரை­யாற்­றிய ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை மீது அதி­ருப்­தியை வெளியிட்­டி­ருந்தார்.

குறிப்­பாக இலங்­கை­யா­னது சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம், மற்றும் சர்­வ­தேச மனித உரிமை சட்­டங்கள் மீறப்­பட்­ட­தாக கூறப்­படும் விட­யத்தில் நம்­ப­க­ர­மான பொறுப்­புக்­கூறல் பொறி­ மு­றையை முன்­னெ­டுக்­கா­விடின் இந்த விவ­காரம் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கிப் பய­ணிக்கும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதனை நிறைவேற்றுவது ஐ.நா. மனித உரிமை பேர­வையை தணிப்­ப­தற்­காக அர­சாங்கம் மேற்­கொள்ளும் முயற்­சி­யாக இருக்­கக்­கூ­டாது. மாறாக பாதிக்­கப்­பட்ட மக்­களின் வேத­னையை ஆராய்­வ­தாக அமை­ய­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்கள் தற்­போ­தைய நிலை­மையில் விரக்தி நிலையில் உள்­ளனர் எனவும் அவர் கூறி­யி­ருந்தார்.

செய்ட் அல் ஹுசேன் கூறு­வ­தைப்­போன்று பாதிக்­கப்­பட்ட மக்கள் பாரிய விரக்தி நிலைக்கு தள்­ளப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர். எனவே விரைந்து அவர்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தா­க­வேண்டும். குறிப்­பாக காணாமல் போனோர் குறித்து ஆராயும் நோக்கில் அலு­வ­லகம் ஒன்றை நிறு­வு­வ­தற்­காக அர­சாங்கம் சட்­டத்தை நிறை­வேற்­றி­யுள்­ளது.

எனவே விரைந்து அந்த அலு­வ­ல­கத்தை நிறு­வு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். கடந்­த­வாரம் நியூயோர்க்கில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து உரை­யா­டி­யி­ருந்த ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலு­வ­ல­கத்­துக்கு சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வா­றான உறுப்­பி­னர்­களை நிய­மிக்­க­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் இந்த காணாமல் போனோர் தொடர்­பாக ஆராயும் அலு­வ­லகம் குறித்து கருத்து வெளியிட்­டி­ருந்த வெளிவி­வ­கார அமைச்சின் செய­லாளர் பிரசாத் காரி­ய­வசம் காணாமல் போனோர் தொடர்­பாக ஆராயும் அலு­வ­ல­க­மா­னது நீதி­மன்றம் அல்ல என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறி­யி­ருப்­ப­தா­வது, காணாமல் போனோர் குறித்த அலு­வ­லகம் என்­பது நீதி­மன்றம் அல்ல. மாறாக காணாமல் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்­ப­தனை ஆராய்­வ­தற்­கான ஒரு பொறி­முறை மட்­டு­மே­யாகும். அத­னூ­டாக காணாமல் போன­வர்கள் குறித்து ஆராய்ந்து தீர்வு வழங்­கப்­படும், ஐக்­கிய நாடுகள் சபையும் சர்­வ­தே­சமும் இந்த அலு­வ­ல­கத்தை அமைக்க நாங்கள் எடுத்த முயற்­சியை வர­வேற்­றுள்­ளன   

நாட்டில் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்க எமக்கு கால அவ­காசம் தேவைப்­ப­டு­கின்­றது. அத­னால்தான் நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேர­வை­யிடம் கால அவ­காசம் கோரி­ய­துடன் கால அவ­கா­சமும் வழங்­கப்­பட்­டது. வழங்­கப்­பட்­டுள்ள இரண்டு வருட கால அவ­காசம் போது­மா­னதா என்று கூற முடி­யாது. ஆனால் நாங்கள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவோம்.

ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் இலங்கை மீது அதி­ருப்தி வெளி­யிட்­ட­தாக நாங்கள் கரு­த­வில்லை. அவர் மனித உரிமை ஆணை­யாளர் என்ற வகையில் கருத்து வெளியிட்­டுள்ளார். அதனை அதி­ருப்­தி­யாக நாங்கள் பார்க்­க­வில்லை. அவர் என்ன கூறி­னாலும் நாங்கள் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யுடன் இணைந்து பய­ணிப்போம். இவ்­வாறு வெளிவி­வ­கார அமைச்சின் செய­லாளர் பிரசாத் காரி­ய­வசம் இந்த விவ­காரம் குறித்து கருத்து வெளியிட்­டுள்ளார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யுடன் இணைந்து பய­ணிக்க அர்ப்­ப­ணிப்­புடன் இருப்­ப­தாக அர­சாங்கம் தெரி­விப்­பது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் அந்த அர்ப்­ப­ணிப்­பா­னது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டை இழுத்­த­டித்­துக்­கொண்டு செல்­வ­தாக

காணாமல் போனோர் 

குறித்து ஆராயும் 

அலு வ­ல­கத்­துக்கு சக­லரும் 

ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய 

வா­றான உறுப்­பி­னர்­களை 

நிய­மிக்­க­வேண்டும்

- செய்ட் அல் ஹுசேன் 

 அமை­யக்­கூ­டாது. மாறாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டை அர­சாங்கம் இதய சுத்­தி­யுடன் முன்­னெ­டுக்­க­வேண்­டி­யது முக்­கி­ய­மாகும்.

இந்­நி­லையில் அமெ­ரிக்­காவில் நடந்து முடிந்த ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் மெது­வான பயணம் ஒன்றை முன்­னெ­டுக்க ஆத­ரவு வழங்­கு­மாறு சர்­வ­தேச சமூ­கத்­தி­டமும் ஐக்­கிய நாடுகள் சபை­யி­டமும் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உரையின் முக்­கிய பகு­தி­வ­ரு­மாறு: நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்­கா­கவும் மனித உரி­மை­யையும் சுதந்­தி­ரத்­தையும் பலப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும் இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஐக்­கிய நாடுகள் சபையும் சர்­வ­தேச சமூ­கமும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும்.      

அத்­துடன் 30 வருட யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு மெது­வான பய­ணத்­துடன் தீர்­வு­காண்­ப­தற்கு ஐக்­கிய நாடுகள் சபையும் சர்­வ­தேச சமூ­கமும் உத­வ­வேண்டும். விரை­வான பயணம் ஆபத்­துக்­களை ஏற்­ப­டுத்தும் என்­பதால் மெது­வான பய­ணத்­துக்கு உதவி வழங்­கு­மாறு சர்­வ­தே­சத்தை கோரு­கின்றேன்.

சில இன­வாத சக்­திகள் 30 வருட கால பிரச்­சி­னைக்கு மிக அவ­ச­ர­மான மற்றும் குறு­கி­ய­கால தீர்­வு­களை எதிர்­பார்க்­கின்­றனர். ஆனால் எனது அர­சாங்கம் ஜன­நா­ய­கத்­தையும் மனித உரி­மை­யையும் சுதந்­தி­ரத்­தையும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­கின்­றது

இதே­வேளை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யினால் இலங்கை மீது குற்­றச்­சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் பிரே­ர­ணை­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த பிரே­ர­ணை­க­ளையும் யோச­னை­க­ளையும் சாத­க­மாக பரி­சீ­லிப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் தயா­ராக இருக்­கின்­றது.  

இவையே ஜனா­தி­ப­தியின் பொதுச் சபை உரையின் முக்­கிய அம்­சங்­க­ளாகும். ஜனா­தி­ப­தியும் அர­சாங்க உயர்­மட்­டத்­தி­ன­ரும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் விட­யத்தில் அர்ப்­ப­ணிப்­புடன் இருப்­ப­தா­கவே காட்­டிக்­கொள்­கின்­றனர். ஆனால் அவை விரைந்து முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.  

அர­சாங்­கத்­துக்கு இந்த விட­யத்தில் தென்­னி­லங்­கையில் பாரிய தடைகள் உள்ளன என்பதனை மறந்துவிடக்கூடாது. அந்த தடைகளையும் தாண்டி அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கும்போது அதனை குழப்பும் வகையில் தமிழர் தரப்பும் செயற்படக்கூடாது. இனவாத நகர்வுகள் எந்தப் பக்கத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டாலும் அவை அழிவையே தரும் என்பதனை மறந்துவிடக்கூடாது.

எனவே முடியுமானவரை இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ள அனைவரும் பங்களிப்பை செய்யவேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் நேர்மையுடன் செயற்படுவது அவசியமாகும். அதேநேரம் அனைத்து தரப்பினரும் இந்த விடயங்களை குழப்பாமல் தேவையான ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கவேண்டும்.

அந்தகையில் 2019 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை உரிய முறையில் பயன்படுத்தி அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட அனைவரும் முன்வரவேண்டும். 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை எவ்வாறு இதில் செயற்படுகின்றது என்பது குறித்த மீளாய்வு அறிக்கைகள் ஜெனிவாவில் தாக்கல் செய்யப்படும். அந்தவகையில் 37 ஆவது ஜெனிவா கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் தீர்க்கமானதாக காணப்படும். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்களின் கோணத்திலிருந்து இந்த இதனை பார்க்கவேண்டியது அவசியமாகும். 

ரொபட் அன்­டனி

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-30#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.