Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முழுமையான உறுப்பினர்களின் பிரசன்னமின்றி நடைபெற்ற பாராளுமன்றின் 70 ஆவது ஆண்டு நிறைவு அமர்வு

Featured Replies

முழுமையான உறுப்பினர்களின் பிரசன்னமின்றி நடைபெற்ற பாராளுமன்றின் 70 ஆவது ஆண்டு நிறைவு அமர்வு

p14-921ce1384457ad4813f81b545e4d9365b347be2e.jpg

 

சார்க் நாடுகளின் சபாநாயகர்களுக்கு கௌரவம்
(ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்)

இலங்­கையில் பாரா­ளு­மன்ற ஜன­நாயகம் நிலை­நாட்­டப்­பட்டு 70ஆண்­டுகள் நிறை­வ­டை­வதை முன்­னிட்டு நடை­பெற்ற விசேட பாரா­ளு­மன்ற அமர்வு சார்க் நாடு­களின் சபா­ நாய­கர்­களின் பங்­கேற்­புடன் சிறப்­பாக நடை­பெற்­றது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இந்த விசேட அமர்வு நடை­பெற்­றி­ருந்­தது.  பாது­காப்பு பலப்­ப­டுத்தப் பட்­டி­ருந்த நிலையில் சார்க் நாடு­களின் தேசியக் கொடிகள் மற்றும், இலங்கை நாட்டு தேசியக் கொடி­களால் பாராளுமன்ற வளாகம் அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. பாரா­ளு­மன்­றத்தின் இரு­பு­றமும் முப்­ப­டை­யினர் அணி­வ­குத்து நிற்­கையில் பிற்­பகல் 1.30அளவில் விசேட பிர­தி­நி­திகள் வருகை ஆரம்­பித்­தது. 

வௌிநா­டு­களின் உயர்ஸ்­தா­னி­கர்கள் வருகை இடம்­பெற்­ற­போது பாரா­ளு­மன்­றத்தின் பிர­தான வாயி­லுக்கு அருகில் பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால, குழுக்­களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் மற்றும் பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம் ஆகியோர் அவர்களை வர­வேற்­றனர். அவர்­க­ளுக்கு செங்­கம்­பள வர­வேற்பு அளிக்­கப்­பட்டு பாரா­ளு­மன்ற கல­ரிக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர். அத­னை­ய­டுத்து சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவின் வருகை இடம்­பெற்­றது.

சார்க் நாட்டு சபா­நா­ய­கர்கள் வருகை

அதனைத் தொடர்ந்து சார்க் நாடு­களின் சபா­ந­ய­கர்கள் வருகை இடம்­பெற்­றது. பாரா­ளு­மன்ற பிர­தான வாயிலின் படிக்­கட்­டுக்கு அருகில் சாபா­நா­யகர் கரு­ஜெ­ய­சூ­ரிய தலை­மையில் பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால, குழுக்­களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம் ஆகியோர் அவர்­களை வர­வேற்­றனர்.

முத­லா­வ­தாக, ஆப்­கா­னிஸ்தான் நாட்டின் சபா­நா­ய­கரும், அத­னை­ய­டுத்து முறையே, பங்­க­ளாதேஷ், பூட்டான், இந்­தியா, மாலை­தீவு, நேபாளம் ஆகிய நாடு­களின் சபா­நா­ய­கர்கள் வருகை தந்­த­போது அவர்கள் வர­வேற்­கப்­பட்டு அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.

பிர­தமர் ஜனா­தி­பதி வருகை

அத­னை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வருகை இடம்­பெற்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சாபா­நா­யகர் கரு­ஜெ­ய­சூ­ரிய தலை­மையில் பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால, குழுக்­களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம் ஆகியோர் வர­வேற்­றனர். பிர­த­மரும் வர­வேற்கும் குழு­வி­ன­ருடன் இணைந்து கொண்­ட­த­னை­ய­டுத்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வருகை இடம்­பெற்­றது.

வாக­னத்­தொ­ட­ரணி சகிதம் வருகை தந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பிர­தமர், சபா­நா­யகர் தலை­மை­யி­லான குழு­வினர் செங்­கம்­பள வர­வேற்­ப­ளித்து பாரா­ளு­மன்ற பிர­தான வாயி­லான செப்­புக்­க­தவு வரையில் அழைத்துச் சென்றனர் அத­னை­ய­டுத்து அவர்கள் இரண்­டா­வது மாடியில் உள்ள ஜனா­தி­பதி, பிர­த­மரின் சந்­திப்புக் கூடத்­திற்கு அழைத்து சென்று அம­ரவைக்கப்பட்டனர்.

விசேட அமர்வு ஆரம்பம்

இத­னை­ய­டுத்து விசேட அமர்­வுக்­கான மணி ஒலிக்­கப்­பட்டு சரி­யான 2.30இற்கு விசேட பாரா­ளு­மன்ற அமர்வு ஆரம்­ப­மா­னது. செங்கோல் அணி­வ­குப்­புடன் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய சபா­மண்­ட­பத்­திற்குள் பிர­வே­சிக்க சபையில் கூடி­யி­ருந்த அனைத்து உறுப்­பி­னர்­களும் எழுந்து நின்று மரி­யாதை செலுத்­தினர்.

அத­னை­ய­டுத்து சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் அமர்வு ஆரம்­ப­மா­னது. அக்­கி­ரா­ச­னத்தில் அமர்ந்த சபா­நா­யகர் இலங்­கையில் பாரா­ளு­மன்ற ஜன­நாகம் நிலை­நாட்­டப்­பட்டு 70ஆண்­டுகள் நிறை­வ­டை­வதை முன்­னிட்­டடு விசேட அமர்வு நடை­பெ­று­வ­தாக அறி­வித்­த­தோடு வரு­கை­தந்­தி­ருக்கும் சார்க் நாடு­களின் சபா­நா­ய­கர்கள், மற்றும் முக்­கி­யஸ்­தர்கள், மதத்­த­லை­வர்கள் ஆகி­யோரை வர­வேற்றார்.

நிறைந்­தி­ருந்த கலரி

விசேட அமர்வு ஆரம்­ப­மான போது பாரா­ளு­மன்ற பார்­வை­யாளர் கலரி முழு­மை­யாக நிறைந்­தி­ருந்­தது. விசேட அதி­தி­க­ளுக்­கான கல­ரியில் சார்க் நாடு­களின் சபா­நா­ய­கர்கள் அமர்ந்­தி­ருக்­கவும் இரு­ம­ருங்­கிலும் உள்ள கல­ரி­களில் உயர்ஸ்­தா­னி­கர்கள், இரா­ஜ­தந்­திர சேவை­யா­ளர்கள், சர்வ மதத்­த­லை­வர்கள், முப்­ப­டையின் தள­ப­திகள் என பலர் அமர்ந்­தி­ருந்­தனர்.

பிரே­ர­ணையை முன்­மொ­ழிந்தார் பிர­தமர்

அத­னை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இலங்­கையில் பாரா­ளு­மன்ற ஜன­நாயகம் நிலை­நாட்­டப்­பட்டு 70ஆண்கள் நிறை­வ­டை­வதை முன்­னிட்ட விசேட அமர்­வுக்­கான பிரே­ர­ணையை முன்­மொ­ழிந்து உரை­யாற்­றினார். இதன்­போது சபையில் வரு­கை­தந்­திந்த சார்க் நாடு­களின் சபா­நா­ய­கர்­க­ளுக்கு விசேட வர­வேற்பை வழங்­கு­வ­தாக குறிப்­பிட்டார்.

சபைக்கு வந்த ஜனா­தி­பதி

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரையை ஆரம்­பித்து ஒரு­சில நிமி­டங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சபைக்குள் பிர­வே­சித்தார். பிர­த­ம­ருக்கு அருகில் ஒதுக்­கப்­பட்­டி­ருந்த ஜனா­தி­ப­திக்­கு­ரிய ஆச­னத்தில் அமர்ந்­தி­ருந்தார். அதன்­போது ஜனா­தி­ப­தியை பிர­தான உரையை ஆற்­று­மாறு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய அறி­வித்தார்.அதனைத் தொடர்ந்து ஜனா­தி­பதி தனது உரையைத் தொடர்ந்தார்.

வழி­மொ­ழிந்த எதிர்க்­கட்­சித்­த­லைவர்

ஜனா­தி­ப­தியின் உரையை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரையைத் தொடர்ந்தார். அத­னை­ய­டுத்து பிர­த­ம­ரினால் முன்­மொ­ழி­யப்­பட்ட பிரே­ர­ணையை வழி­மொ­ழிந்து எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் உரை­யாற்­றினார்.

தொடர்ந்த உரைகள்

எதிர்க்­கட்­சித்­த­வைரின் உரையை அடுத்து சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல உரை­யாற்­றினார். அவ­ரை­ய­டுத்து ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுத் தலைவர் அமைச்சர் நிமல் ஸ்ரீ பால டி சில்வா, ஆளும் தரப்பு பிர­தம கொர­டாவும் பாரா­ளு­மன்ற அலு­வல்கள் அமைச்­ச­ரு­மான கஜந்த கரு­ணா­தி­லக, எதிக்­கட்சி பிர­தம கொற­டாவும் ஜே.வி.பி.தவை­ரு­மான அநு­ர­கு­மரா திஸா­நா­யக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் கக்கிம், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி, கூட்டு எதிர்க்­கட்­சியின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன ஆகியோர் உரை­களை ஆற்­றி­னார்கள். அவர்­க­ளை­ய­டுத்து சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய நன்றி உரையை ஆற்­றினார்.

நிரம்­பாத உறுப்­பி­னர்­களின் ஆச­னங்கள்

இலங்­கையில் பாரா­ளு­மன்ற ஜன­நாகம் நிலை­நாட்­டப்­பட்டு 70ஆண்­டுகள் நிறை­வ­டை­வதை முன்­னிட்ட நடை­பெற்ற விசேட பாரா­ளு­மன்ற அமர்வில் பங்­கேற்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை வெகு­வாக குறைந்தே காணப்­பட்டால் பெரு­ம­ள­வான ஆச­னங்கள் வெற்­றி­ட­மாக இருந்­தன.

சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வங்­க­ளான அமைச்சர் மனோ­க­ணேசன், ஆறு­முகன் தொண்­டமான், முத்து சிவ­லிங்கம், சிவ­சக்தி ஆனந்தன், போன்­ற­வர்கள் சபைக்கு சமு­ம­ளித்­தி­ருக்­காத அதேநேரம் பெரும்பான்மை தரப்பில் குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சமுகமளித்திருக்கவில்லை.

பின்வரிசையில் விஜேதாஸ

அதேநேரம் அமைச்சுப்பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்த விஜேதாஸ ராஜபக்ஷ முதற்தடவையாக நேற்றையதினம் சபைக்கு வருகைதந்திருந்ததோடு பின்வரிசையில் அமர்ந்திருந்தார். அத்துடன் மேலும் சில உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகச் சென்றுகொண்டிருக்கையிலேயே சபைக்குள் பிரவேசித்துவிட்டு சற்று நேரத்தின் பின்னர் வௌியேறிச் சென்றிருந்தனர்.

ஒத்திவைப்பு

இதேவேளை பிற்பகல் 4.05இற்கு சபை நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 9ஆம் திகதி பிற்பகல் 1மணி வரையில் ஒத்தி வைக்கப்படுவதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்ததையடுத்து நடவடிக்கைள் நிறைவுக்கு வந்தன.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.