Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டின் தேவை விசுவாசமான தலைவர்களே!

Featured Replies

நாட்டின் தேவை விசுவாசமான தலைவர்களே!

 
 
நாட்டின் தேவை விசுவாசமான தலைவர்களே!
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

நாட்­டில் இன்று பேசிக் கொள்­வ­தற்கு எத்­த­னையோ பிரச்­சி­னைக்­கு­ரிய விட­யங்­கள் இருக்­கும் நிலை­யிலும் அடுத்து வரும் அர­ச­த­லை­வ­ருக்­கான தேர்­த­லில் எவ­ரெ­வர் போட்­டி­யி­டக் கூடும் என்­பது குறித்த எதிர்வு கூறல்­களே பல­ரது பேச்­சில் அல­சப்­ப­டும் முக்­கிய விட­ய­மாக இருந்து வரு­கின்­றது.

சுதந்­தி­ரக் கட்சி சார்­பில் மைத்தி­ரி­பால சிறி­சே­னவே போட்­டியி­டு­வார் எனச் சிலர் கூறிக் கொள்­கின்­ற­னர்.ஐக்­கிய தேசி­யக் கட்சி சார்­பில் ரணிலே அடுத்த அரச தலை­வர் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர் என மற்­றொரு தரப்­பி­னர் அடித்­துக் கூறு­கின்­ற­னர்.

இல்லையில்லை, நிச்­ச­ய­மாக கோத்­த­பா­ய­வும் அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டத் தம்­மைத் தயார்ப்­ப­டுத்தி வரு­கின்­றார் என்­பது பிறி­தொரு தரப்­பி­ன­ரது நம்­பிக்கை அந்த வகை­யில் 2020 ஆம் ஆண்­டின் அர­ச­த­லை­வர் பத­விக்­கான தேர்­த­லில் போட்­டி­யி­ட­வுள்ள புது­மு­கங்­கள் எவரெவ ரெ­ன­வும் ஒரு­சி­லர் எதிர்வு கூறத் தலைப்­பட்­டுள்­ள­னர்.

சமூக இணை­யத் தளங்­க­ளில், தாம் எதிர்­வ­ரும் அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் போட்­டி­யி­ட­வுள்­ள­தை அத்­த­கைய சில புது­மு­கங்­கள் சுய விளம்­ப­ரம் செய்­தும் வரு­கின்­ற­னர்.

முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு இவர்­க­ளெல்­லாம் அடுத்த அரச தலை­வர் தேர்­தல் குறித்து இப்­போ­தி­ருந்தே கடும் அக்­கறை காட்ட முயல்­வ­ தற்­கான கார­ண­மென்ன?

அர­ச­த­லை­வர் பத­விக்­கான தேர்­த­லில் போட்­டி­யி­ட கட்­டுப்­பா­டே­தும் கிடை­யாது மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த நாட்­டின் அரச தலை­வ­ராக வரக்­கூ­டு­மென எவர்­தான் எதிர்­பார்த்­தார்­கள்? ஆனால் அந்த அதி­ச­யம் நடை­பெற்று விட்­ட­தல்­லவா? ஆத­லால், எவர்­தான் அதற்கு முயற்­சித் தா­லும் அது நடக்­காது என்று கூற இய­லாதே என்று கூட ஒரு­சி­லர் கூற முற்­பட்­டுள்­ளார்களே? எது எப்­ப­டி­யான போதி­லும் அடுத்த அரச தலை­வர் பத­விக்­கான கன­வோடு பலர் செயற்­பட்டு வரு­ கின்­ற­னர் என்­பது மட்­டும் பொய் யல்ல.

மைத்­தி­ரி­பா­லவோ, தாம் அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டப் போவ­தில்லை எனக் கூறி­வ­ரு­கின்றார். தமது பத­விக்­கான அதி­கா­ரங்­கள் சில­வற்­றைக் கைவிட்­ட­தன் மூலம் நாட்­டின் அர­சி­யல் வழக்­கத்­தில் புதி­ய­தொரு அத்­தி­யா­யத்தை உரு­வாக்­கிக் காட்­டி­ய­வர் இந்த மைத்­தி­ரி­பால. ஆனால் அவர் மீண்­டும் அர­ச­த­லை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட மாட்­டார் என உறு­தி­யா­கக் கூறி­விட இய­லா­துள்­ளது.

நான் எனது பத­விக்­கா­லத்­தில் நாட்­டுக்கு நன்மை தரத்­தக்க பல செயற்­பா­டு­களை மேற்­கொண்­டேன். அவற்­றில் நிறை­ வேற்ற வேண்­டிய மேலும் சில திட்­டங்­கள் மீத­முள்­ளன. அவற்றை நிறை­வேற்­றித்­தர நான் மீண்­டும் மக்­கள் ஆணை­ யைக் கோரி நிற்­கி­றேன் என மைத்­தி­ரி­பால மீண்­டும் மக்­கள் முன் வர­மாட்­டார் எனக் கொள்ள இய­லாது.

சரி, ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீண்­டும் ஒரு தடவை அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட மாட்­டார் எனக் கூறி­விட இய­லாது. மூன்று தட­வை­கள் முயன்று தோற்­ற­போ­தி­லும் , நான்­கா­வது தட­வை­யாக முயன்று பார்க்­கும் தகுதி அவ­ருக்கு இல்­லா­ம­லில்லை. வென் றாலும் சரி தோற்­றா­லும் சரி, எது குறித்­தும் அலட்­டிக் கொள்­ளாத சுபா­வம் கொண்ட ரணில், மீண்­டு­மொரு முறை அரச தலை­வர் பத­விக்­கான பலப்­ப­ரீட்­சை­யில் இறங்­கி­னால் அதில் ஆச்­ச­ரி­யப்­பட எது­வு­மில்லை.

தென்­கி­ழக்கு ஆசிய வட்­ட­கை­யி­லேயே தகுதி வாய்ந்த அர­சி­யல்­வா­தி­யான ரணிலை நாட்­டின் அரச தலை­வ­ராக்­கு­வோம் எனக்­கூறி பலர் அவரை வேட்­பா­ள­ராக ஆக்க முயற்­சிக்­கக் கூ­டும்.

அதே­வேளை ‘‘இரண்டு கடை­க­ளி­லும் இருந்த பொருள்­க­லெல்­லாம் பழு­தாகி விட்­டுள்­ளன ’’ எனக் கார­ணம் கற்­பித்­துக்­கொண்டு, சில­வேளை ஜே.வி.பி தரப்­பின் சார்­பில் அனு­ர­கு­மார திச­நா­ய­க­வும் அரச தலை­வர் தேர்­த­லில் குதிக்­கக் கூடும்.

மறு­பக்­கத்­தில், மூன்­றா­வது எஸ்.எவ் நட­வ­டிக்கை எனக் கூறிக் கொண்டு சில­வேளை சரத் பொன்­சே­கா­வும் தேர்­தல் களத்­தில் பலப்­ப­ரீட்­சை­யில் ஈடு­பட முன்­வ­ரக் கூடும். ஜன­நா­யக நாடொன்­றில் இரா­ணுவ அதி­கா­ரி­யொ­ரு­வரை நாட்டை நிர்­வா­கிக்க அனு­ம­திப்­பது தவ­றென, இந்த நாட்டு மக்­கள் சரத் பொன்­சேகா முதல்­த­ட­வை­யாக அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யட்­ட­போதே தீர்­மா­ னித்து விட்­டி­ருந்­த­னர். 18 இலட்­சம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் நாட்டு மக்­கள் சரத்­பொன்­சே­காவை நிரா­க­ரித்­தி­ருந்­த­னர்.

போர்­வெற்­றி­யா­ள­ரான போதி­லும் நாட்டு மக்­கள் சரத்­பொன்­சே­கா­வி­டம் நாட்டை நிர்­வ­கிக்­கும் வாய்ப்­பைக் கைய­ளிக்க தயா­ராக இருக்­க­வில்லை.
கோத்­த­பாய அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் ஏன் போட்­டி­யி­டக் கூடாது என கோத்­த­ பா­ய­வுக்­காக வக்­கா­லத்து வாங்­கு­ப­வர்­கள் சிலர் இல்­லா­மல் இல்லை.

அதற்­கேற்­றாற்­போல் புதிய அமைப்­பொன்றை உரு­வாக்கி நக­ரங்­கள் , கிரா­மங்­கள் மத்­தி­யில் அது குறித்­துப் பரப்­புரை மேற்­கொள்ள கோத்­த­பாய ஆரம்­பித்­த­போதே, ஒரு சிலர் அவர் அரச தலை­வர் பத­வியை இலக்கு வைத்­துச் செயற்­ப­டு­ கிறார் என்று எதிர்­வு­கூ­ற­மு­னைந்­த­னர், கோத்­த­பாய அந்­தக் கருத்தை மறுத்­து­ரைத்­த­போ­தி­லும், அது பூர­ண­மான, உறு­தி­யான மறுத்­து­ரைப்­பாக இருக்­க­வில்லை.

மகிந்த தமது அரச தலை­வர் பதவியை இழக்க முக்­கிய கார­ணம் கோத்­த­பா­யவே மகிந்­த­வின் அரசு பத­வி­யி­ழக்க வேண்டி நேர்ந்­த­மைக்­குப் பல கார­ணங்­கள் உள்­ளன. அவற்­றுள் உள்­ளக ரீதி­யில் மிக முக்­கி­ய­மான கார­ண­மொன்­றாக அமைந்­தது, அப்­போ­தைய பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளர் கோத்­த­பா­ய­வின் நட­வ­டிக்­கை­க­ளின் தாக்­கமே அர­சி­ய­லும் இரா­ணு­வ­மும் வெவ்­வே­றான இரு பிரி­வு­களே என்­பதை உணர முடி­யா­தி­ருக்­கும்­வரை, நாடொன்று பாது­காப்­பற்ற நிலை­யில் இருக்­கவே நேரும். குறித்த அந்த நாட்­டின் தலை­விதி சிக்­கல் நிறைந்­த­தா­கவே இருக்­கும்.

இரா­ணு­வத் தரப்­பின் தலை­மை­கள் அர­சி­ய­லில் பிர­வே­சிப்­ப­தால் ஏற்­ப­டும் போரா­பத்­துக்­கு­றித்­துப் பாகிஸ்­தான் போன்ற நாடு­கள் உதா­ர­ணம் காட்­டி­யுள்­ளன.

கோத்­த­பாய மற்­றும் சரத்­பொன்­சேகா போன்ற இந்த நாட்­டின் இராணு­வத் தரப்­பைச் சார்ந்­தோர் குறித்து ‘ஜன­வரி 8 புரட்­சி­யில் கண்­கண்ட சாட்சிகள்’ என்ற தலைப்­பி­லான சிங்­கள வர­லாற்று நூலில் கீழ்க் கண்­ட­வாறு விவ­ரிக்­கப்­பட் டுள்­ளது.

கோத்­த­பாய இலங்கை இரா­ணு­வத்­தின் கஜபா றெஜி­மேந்து படைப் பிரி­வைச் சேர்ந்­த­வ­ரா­யி­ருந்­தார். சரத் பொன்­சே­காவோ சிங்­க­ள­றெ­ஜி­மேந்து படைப் பிரி­வைச் சேர்ந்­த­வ­ரா­யி­ருந்­தார். கோத்­த­பா­யவை விட சரத்­பொன்­சேகா ஓராண்டு காலத்­தால் மூத்த நிலை அதி­கா­ரி­யாய் இருந்­தார்.

இரு­வ­ருக்­கு­மி­டையே பொது­வான இயல்­பு­க­ளா­கப் பல இருந்­தன. அவற்­றில் அர­சி­யல் குறித்த அனு­ப­வமோ அறிவோ இரு­வ­ரும் கொண்­டி­ரா­தி­ருந்­த­தும் ஒரு ஒற்­றுமை. அர­சி­யல்வாதி­க­ளுக்கு இரா­ணு­வம் குறித்த தெளிவு இல்­லா­தி­ருந்­தமை போன்று இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்­கும் அர­சி­யல் அறிவோ அனு­ப­வமோ வாய்த்­தி­ருக்­க­வில்லை. 2010 ஆம் ஆண்­டின் அரச தலை­வர் தேர்­த­லில் சரத் பொன்­சேகா போட்­டி­யி­டாது இருந்­தி­ருந்­தால், அவ­ரது உரு­வச் சிலை­கள் வடக்கு கிழக்­குப் பகு­தி­கள் தவிர்ந்த நாட்­டின் ஏனைய பகு­தி­க­ளில் நாற்­சந்­தி­க­ளில் நிறு­வ­ப்­பட்­டி­ருக்­கும்.

அது மட்­டு­மன்றி எதிர்­கா­லத்­தில், மேலும் நூறு வரு­டங்­க­ளுக்­கா­வது அவர் போரை வென்று கொடுத்த ஒப்­பற்ற இரா­ணு­வத்­த­ள­ப­தி­யாக வர­லாற்­றில் இடம்
பி­டித்­தி­ருந்­தி­ருப்­பார்.

இரா­ணு­வத்தை நிர்­வ­கிப்­ப­தற்­கும் அர­சொன்றை நிர்­வ­கிப்­ப­தற்­கும் நிறை­யவே வேறு­பா­டு­கள் உள்­ளன. மேற்­கு­றித்த விதத்­தில் குறிப்­பிட்ட அந்த வர­லாற்று நூலில் குறிப்­பிட்­டி­ருந்த அந்த நூலின் ஆசி­ரி­யர், இந்­திய அர­சி­ய­லில் இடம்­பெற்ற சம்­ப­வ­மொன்­றை­யும் உதா­ர­ணம் காட்டி எழு­தி­யி­ருந்­தார். இந்­திய உப கண்டத்தின் முத­லா­வது இரா­ணுவ பீல்ட் மார்­ஷல் பத­வி­வ­கித்த சாம் மானி­க் ஷேவ் 1972 ஆம் ஆண்­டில் இந்­திய பாகிஸ்­தான் போரில் இந்­தி­யா­வுக்கு வெற்றி தேடிக் கொடுத்த இரா­ணுவ அதி­கா­ரி­யா­வார்.

அந்த வேளைய இந்­தி­யத் தலைமை அமைச்­சர் இந்­திரா காந்­தியை நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தோற்­க­டிக்க ஓய்வு பெற்ற இரா­ணு­வ­பீல்ட் மார்­ஷ­லான சாம் மாணிக் ஷெவ் வைப் பயன்­ப­டுத்த எதிர்க்­கட்­சி­கள் வியூ­கம் வகித்­ததை தலைமை அமைச்­சர் இந்­தி­ரா­காந்தி ஏதோ Îஒரு வகை­யில் தெரிந்து கொண்­டார். பீல்ட் மார்­ஷ­லைத் தமது உத்­தி­யோ­க­பூர்வ வாகஸ்­த­லத்­துக்கு அழைப்­பித்த தலைமை அமைச்­சர் இந்­தி­ரா­காந்தி, ‘‘நீங்­கள் வாழ்­நாள் முழு­வ­தும் தேசிய வீர­ராக மதிப்­புப்­பெற்ற ஒரு­வரே.

உங்­க­ளுக்கு இன்று எதி­ரி­கள் என்று எவ­ரும், எங்­கும்­கி­டை­யாது. நீங்­கள் அர­சி­ய­லில் பிர­வே­சித்­தால் உங்­க­ளது அர­சி­யல் ஆத­ர­வா­ளர்­கள் உங்­களை ஒரு­பக்­கத்­தி­லி­ருந்து இழுக்க முயல்­வர். ஆனால் ஏனைய பக்­கங்­க­ளில் உங்­க­ளுக்கு எதி­ரி­கள் உரு­வா­வர். இவற்­றைச் சீர்­தூக்­கிப் பார்த்து அர­சி­ய­லில் பிர­வே­சிப்­பதா, இல்­லையா என்­ப­தைத் தீர்­மா­னி­யுங்­கள்’’ எனக்­கூ­றி­னா­ராம். கடை­சி­யில் தாமொரு இரா­ணுவ வீர­ரே­யன்றி அர­சி­யல்­வா­தி­யல்ல எ ன்ற முடிவை மேற்­கொண்­டா­ராம் அந்த பீல்ட் மார்­ஷல்.

வட­கொ­ரியா தனது தன்­னிச்­சை­யான, ஆண­வப் போக்­கான நிர்­வா­கத்­தால் அழி­வின் பக்­கத்­தைத் தேர்ந்­தெ­டுத்­துக் கொண்­டுள்­ளது. நல்­லாட்சி மற்­றும் கொடூர ஆட்சி என்­ப­வற்றை ஒரே தேசத்­தில் காண விரும்­பி­னால் தென் மற்­றும் வட­கொ­ரியா பக்­கங்களை நோக்­கு­வது பய­னு­டைத்து. ஜன­நா­யக ரீதி­யில் செயற்­ப­டும் தென்­கொ­ரிய அரசு, இன்று உல­கின் முன்­னேறி வரும் நாடு­க­ளில் முக்­கிய இடம் வகிக்­கி­றது. அதனு டன் எல்லையைப் பகிரும் வட­கொ­ரி­யாவோ அழி­வுப் பாதை­யில் பய­ன­ளிக்­கும் உலக நாடு­க­ளில் முன்­னிலை வகித்து வரு­கின்­றது. இரண்­டாம் உலகப் போரின் பின்­னர் எந்­த­வொரு வேளை­யி­லும் மற்­றொரு பெரும் போருக்கு வழி வகுத்து நிற்­கும் நாடாக வட­கொ­ரியா இன்று திகழ்­கி­றது.

உல­கையே அச்­சு­றுத்­துகிறார்
வட­கொ­ரிய அர­ச தலை­வர்

இன்­றைய யுகத்­தில் ஏகா­தி­பத்­தியவாத மன­நோ­யால் பீடிக்­கப்­பட்டு, உல­கையை போர்ப் பீதி­யில் ஆழ்த்தி வரும் வட­கொ­ரி­யா­வின் அதி­பர் கிம் யோங் உன் தமது தந்­தை­யின் மறை­வை­ய­டுத்து நாட்­டின் ஆட்சி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிக் கொண்ட ஒரு­வ­ரா­வார். இரா­ணு­வத்­தில் கட­மை­யாற்றி நான்கு நட்­சத்­திர பதக்­கம் ஈட்­டியவரான தனது மாமா மீது சதிக்­குற்­றம் சாட்டி சாவுத் தண்­டனை விதித்­துத் தீர்ப்­ப­ளித்­த­வர் இந்த கிம்­யோங் உன்.

மூன்று நாள்­க­ளாக உணவோ நீரோ வழங்­காது பசி­யோடு கட்டி வைத்­தி­ருந்த 120 நாய்­கள் அடங்­கிய கூட்­டுக்­குள் தனது மாம­னைத் தள்­ளு­வித்து சில நிமி­டங்­க­ளுக்­குள்­ளேயே அந்த நாய்­க­ளால் கடித்­துக் குத­றிக் கொன்று உண்­ணப்­பட்ட தனது மாம­னது எலும்­பு­க­ளைப் பார்த்­துத் கிம்­யோங் உன் திருப்­தி­ய­டைந்தார் என்று ஹொங்­கொங்­கி­லி­ருந்து வெளி­யா­கும் பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.
தற்­போது அமெ­ரிக்­கா­வுக்­குச் சவால் விடுத்து நாட்டை மட்­டு­மல்ல உல­கத்­தையே பயங்­கர ஆபத்­தின் பக்­கம் இழுத்­துச் செல்­கி­றார் அந்த கிம்­யோங் உன்.

உல­கம் ஜன­நா­ய­கத்­துக்­குத் தான் மதிப்­ப­ளிக்­கி­றது. இரா­ணுவ அதி­கா­ரி­க­ளால் நிர்­வ­கிக்­கப்­ப­டும் நாட்­டில் ஒழுக்­கம் சிறப்­பாக கடைக்­கொள்­ளப்­பட்­டா­லும், சுதந் தி­ரம் சிறைப்­ப­டுத்­தப்­பட்ட நிலையே நில­வு­கி­றது.

அத்­த­கை­ய­வர்­க­ளது கைக­ளில் ஒரு நாட்­டின் நிர்­வா­கம் அகப்­ப­டு­மா­னால் அந்த நாடு கடை­சி­யில் அழி­வை­யும் இழப்­பை­யுமே சந்­திக்க நேரி­டும்.
எகிப்­தின் தலை­ந­கர் கெய்­ரோ­வில் ஆரம்­பித்த இளை­ஞர்­க­ளது எழுச்சி, எகிப்­தின் இரா­ணுவ நிர்­வா­கத்தை ஒழித்­துக்­கட்­டு­வ­தில் வெற்­றி­கண்­டது. அதே­போல ஏகா­தி­பத்­திய வழி­யில்­யே­மன்­நாட்டை நிர்­வ­கித்த அப்­துல்லா செல்­லா­வின் தலை­வி­தி­யும் இளை­ஞர் எழுச்­சி­யா­லேயே முடிவு செய்­யப்­பட்­டது.

தம்மை விட இரு­பது வயது இளை­ய­வ­ரான தனது இளம் மனை­விக்கு நாட்­டின் வளங்­கள் அனைத்­தை­யும் மட்­டற்ற விதத்­தில் வழங்கி டியூ­னி­சியா நாட்­டையே குட்­டிச்­சு­வ­ராக்கி நிர்­வ­கித்த பென் அலி­யின் இர­க­சி­யங்­கள் விக்­கி­ லீக்ஸ்­ஸால் வெளிப்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து பென்­அ­லி­யின் ஆட்சி அகற்­றப்­பட்­டது.

எனவே இரா­ணு­வப் பின்­ன­ணி­யில் நாடு­களை நிர்­வ­கிப்­பது தற்­கா­லிக நிர்­வா­க­மாக மட்­டுமே அமைய நேரும். இன்­றைய உலகு, சுதந்­திர வாழ்க்­கையை நாடும் மக்­க­ளது உல­கா­கும். அத்­த­கைய உல­குக்­குத் தேவைப்­ப­டு­வது விசு­வா­ச­ மான அர­சி­யல் தலை­வர்­களே!

http://newuthayan.com/story/34205.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.