Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவிலாறு, சம்பூர், வாகரை வெற்றிகளை குறைத்து மதிப்பிடுவது தேசத்துரோகம்: சிங்கள நாளேடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசத்துரோகம்: சிங்கள நாளேடு

ஜவியாழக்கிழமைஇ 8 மார்ச் 2007இ 18:41 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கையைப் பாதுகாக்கும் முகமாக மாவிலாறுஇ சம்பூர்இ வாகரைப் பிரதேசங்களைக் கைப்பற்றி சிறிலங்காப் படைகள் பெற்றுக்கொண்ட வெற்றிகளுக்கு எதிராக செயற்படுத்தப்படவுள்ள தேசத்துரோக சதித்திட்டத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை வெளிவந்த சிங்கள நாளேடான 'தினமின' தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கின்றது.

"மாவிலாறுஇ சம்பூர்இ வாகரை வெற்றிகளை குறைத்து மதிப்பிடும் தேசத்துரோக சதித்திட்டம்" என்று தலைப்பிடப்பட்ட அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் படை நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு விடுதலைப் புலிகளுக்கு நாட்டைக் காட்டிக் கொடுப்பது இந்த சதித்திட்டத்தின் நோக்கமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

படையினர் தமது உயிரைத் தியாகம் செய்து விடுவித்துக்கொண்ட கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தி பொது நிர்வாகத்தை உருவாக்க அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை குழப்புதல் இந்த அரசாங்க விரோத தேசத்துரோக சதித்திட்டத்தின் பிறிதொரு நோக்கமாகும். இந்த தேசத்துரோக சதித்திட்டத்தை தோற்கடிக்க அணிதிரளுமாறு தேசப்பற்றுக்கொண்ட அரசியல்வாதிகளும்இ தேரர்களும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த இராணுவ வெற்றிகள் யாவும் விடுதலைப் புலிகளுக்கு கையூட்டு வழங்கும் உடன்படிக்கை ஒன்றின் மூலம் பெற்றுக்கொண்ட வெற்றி என வெளிப்படுத்த சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முயற்சிக்கின்றனர். இந்த வெற்றிகளை கையூட்டு வழங்கிப் பெற்றுக்கொண்டதாகக் காட்டும் போலி ஒலிநாடாக்களையும் துண்டுப்பிரசுரங்களையும் தயாரிக்கும் பணியை அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

இந்த சதித்திட்டப் பிரசாரத்தின் நோக்கம் வீரம் கொண்ட படையினரின் வெற்றியை சிறுமைப்படுத்துதலும்இ படையினரின் உளவியலை பாதிப்புறச் செய்தலும்இ குறுகிய அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுதலும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அரச தலைவரினால் அமுல்படுத்தப்பட்டுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்களை குழப்புதலும்இ அரச தலைவருக்கும் அரசாங்கத்திற்கும் இழுக்கைத் தேடிக் கொடுப்பதும் இந்த சதித்திட்டத்தின் மற்றுமொரு நோக்கம் என்று அரசியல் விமர்சகர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்" என்ற செய்தியுடன் சிங்கள தீவிரவாத கட்சிகளைச் சோந்த எல்லே குணவன்ச தேரர்இ விமல் வீரவன்சஇ ஹேமகுமார நாணயக்கார ஆகியோரின் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது.

அவை வருமாறு:

'சதித்திட்டம் குறித்து அவதானம் தேவை': எல்லே குணவன்ச தேரர்

"சிறிலங்காப் படையினரால் வெற்றிகளைப் பெற முடியாது என்ற அபிப்பிராயத்தை சிலர் பல தசாப்தங்களாக முன்னெடுத்துக் கொண்டிருந்தனர். எனினும் தற்போதைய அரச தலைவரின் செயற்பாடுகளினால் எமது படையினர் இராணுவ வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழர்களையும் பாதுகாத்துக் கொண்டு இந்த வெற்றிகள் பெறப்பட்டுள்ளமை சிறப்பு அம்சம் என்றே கூற வேண்டும். இந்த வெற்றிகளைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும் இந்த நாட்டில் இருக்கின்றனர்.

படையினரின் மனோபலத்தைக் குலைத்து அனைத்துலக நிறுவனங்களின் தாளத்திற்கு ஆடுவதே இவர்களின் நோக்கமாகும். மேற்கத்தேய சக்திகளின் சேனைப் படைகள் இங்கு இருக்கின்றனர். சமய குருமார்கள்இ ஊடகவியலாளர்கள்இ கலைஞர்கள்இ புத்திஜீவிகள் என்ற போர்வையில் அவர்கள் இருக்கின்றனர். அவர்களின் உண்மையான உருவங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

சீத்தையில் பெனியன் உடுத்தி கிராமத்தில் வாழ்ந்த ஒருவர் இன்று நாட்டின் தலைவராகியிருக்கின்றார். அதனை இந்தச் சக்திகளினால் ஜீரணிக்க முடியவில்லை. முன்பு அரச தலைவர் பிரேமதாச பதவியேற்ற பின்பும் இவ்வாறான சூழல் ஒன்று ஏற்பட்டது. ரொஸ்மீட் பிளேஸ்இ கேம்பிறிஜ் பிளேஸ்இ பான்ஸ் பிளேஸ்இ சினமன் கார்டின் நபர்களுக்கும் தலைச்சுற்றல் ஏற்பட்டு விட்டது. இதனாலேயே அனைத்துலக சக்திகளின் கங்காணிகளாக இவர்கள் செயற்படுகின்றனர்" என்றார் அவர்.

'நாம் எப்போதும் படையினருடனேயே': விமல் வீரவன்ச

"படையினர் தமது உயிரைத் தியாகம் செய்து நடத்தும் போராட்டத்திற்கு நாம் மனோதிடத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். எமது பிரச்சினைகளில் தலையிட மேற்கத்தேய சக்திகளின் உதவி தேவையில்லை.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை வைத்துக்கொண்டு பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடிக்க முடியாது. மனித உரிமை மீறல்களைக் காட்டி அரசாங்கத்தின் மீது இச்சக்திகள் குற்றம் சுமத்துகின்றன.

மனித உரிமை மீறல் பிரச்சினைக்கு அனைத்துலக சக்திகளின் தலையீடு அவசியம் இல்லை. அன்று வீதிகளில் சடலங்கள் கிடந்த போது பட்டலந்த சித்திரவதைக் கூடத்தைக் கைப்பற்றிய போது இந்த அனைத்துலக சக்திகள் எங்கே சென்றிருந்தன?" எனக் கேள்வியெழுப்பினார்.

'பணத்திற்கு அடிமையாகி காட்டிக் கொடுப்புகள் நடைபெறுகின்றன': ஹேமகுமார நாணயக்கார

விடுதலைப் புலிகளுடன் இணைந்து எமது நாட்டைக் காட்டிக் கொடுக்க ஒரு தரப்பினர் இருக்கின்றனர். அவர்கள் ஜனநாயக அரசியல் கட்சிகள் என்ற போர்வைக்குள் மறைந்திருந்தே இப்பணிகளை மேற்கொள்கின்றனர்.

என்.ஜி.ஓவிலிருந்து பெறப்படும் பணத்திற்காக இந்த கேவலமான காரியங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். படையினர் கிழக்கில் பாலைவனங்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்று சிறீபதி கூறிய கருத்தை பெரிதுப்படுத்திக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் கயந்த கருணாதிலக்க அதனையே திருப்பிஇ திருப்பிக் கூறிக் கொண்டிருக்கின்றார். ஆறாம் வகுப்பில் மட்டுமே கல்வி கற்ற ஒருவருக்குக்கூட கிழக்கில் பாலைவனங்களே இல்லை என்று தெரியும்" என்றார்.

http://www.eelampage.com/?cn=31049

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.