Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஒருமித்த நாடு" யோசனையை அகற்றுவதற்கு தீவர முயற்சி

Featured Replies

"ஒருமித்த நாடு" யோசனையை அகற்றுவதற்கு தீவர முயற்சி

 

நீண்­ட­கா­லத்தின் பின்னர் நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்­வுத்­திட்­டத்தை அடை­வ­தற்கு கிடைத்­தி­ருக்­கின்ற சந்­தர்ப்பம் கைந­ழு­விப்­போய்­வி­டுமோ என்ற கேள்வி பர­வ­லா­கவே எழ ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது.

குறிப்­பாக தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து சரி­யான தீர்வு வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு முன்­வைக்­கப்­ப­டுமா என்று வர­லாறு முழு­வதும் இருந்­து­வரும் சந்­தேகப் பார்வை மீண்டும் ஒரு­முறை வலுப்­பெற்­றி­ருக்­கின்­றது என்று கூறலாம்.

அந்­த­ள­வுக்கு நிலை­மைகள் பார­தூ­ர­ம­டைய ஆரம்­பித்­துள்­ளன. அதா­வது புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வந்து அத­னூ­டாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு முன்­வைக்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்­பி­லி­ருந்த மக்­களின் நம்­பிக்கை பல­வீ­ன­ம­டைய ஆரம்­பித்­துள்­ளது.

குறிப்­பாக நீண்­ட­கா­லத்­துக்குப் பின்னர் கிடைக்­கப்­பெற்ற சந்­தர்ப்­பத்தில் நாடு பய­ன­டை­யாதா என்ற ஏக்­கத்தில் மக்கள் உள்­ளனர். ஆனால் தென்­னி­லங்­கையை பொறுத்­த­வரை வர­லாற்றை மீண்டும் திரும்­பிப்­பார்க்கும் வகை­யி­லான நகர்­வு­க­ளி­லேயே ஈடு­பட்­டு­வ­ரு­வதை காண முடி­கின்­றது.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லிலும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் இந்த நாட்டு மக்கள் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யான மாற்றம் ஒன்றை எதிர்­பார்த்தே ஆணையை வழங்­கினர். அதா­வது புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்கி அத­னூ­டாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சாங்கம் தீர்­வு­கா­ண­வேண்டும் என்ற எதிர்­பார்ப்பு அர­சாங்­கத்­துக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு இருக்­கின்­றது.

அந்த நோக்­கத்­துக்­கா­கவே மக்கள் புதிய அர­சாங்­கத்­துக்கு வாக்­க­ளித்­தனர் என்­ப­தனை ஒரு தர்க்­க­மாக முன்­வைக்­கலாம். 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்­த­வொரு கட்­சிக்கும் பெரும்­பான்மை பலம் கிடைக்­கா­மையின் கார­ண­மாக அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யான மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்­பார்க்­க­வில்லை என்று நாங்கள் கருத முடி­யாது. மக்கள் அதனை எதிர்­பார்த்­தனர். காரணம் தேர்­தலில் போட்­டி­யிட்ட இரண்டு பிர­தான கட்­சி­களும் அர­சியல் ரீதி­யான மறு­சீ­ர­மைப்பு என்ற விட­யத்தை மிகவும் பல­மான வகையில் வலியுறுத்தியதை யாரும் மறுக்க முடி­யாது.

அந்­த­வ­கை­யி­லேயே ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­த­போது தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான அரிய சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ள­தாக அனை­வரும் எதிர்­பார்த்­தனர்.

அதற்­கேற்ற வகையில் தேசிய அர­சாங்­கமும் பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்றி புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பணி­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது. ஆனால் இங்­குதான் பிரச்­சி­னையே ஆரம்­பிக்­கின்­றது. அதா­வது அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யா­னது பிர­தான வழி நடத்தல் குழுவை நிய­மித்து முக்­கிய மூன்று விட­யங்கள் குறித்து ஆராய்ந்­தது. அதா­வது தேர்தல் முறை மாற்றம் அதி­காரப் பகிர்வு மற்றும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் ஆகிய மூன்று விட­யங்­களை இந்த பிர­தான வழிநடத்தல் குழு ஆராய்ந்­தது.

மேலும் பிர­தான வழி நடத்தல் குழு ஆறு உப குழுக்­களை நிய­மித்து பல விட­யங்­களை ஆராய்ந்­தது. அந்த குழுக்­களின் அறிக்­கை­களும் முன்­வைக்­கப்­பட்­டு­விட்­டன. தொடர்ந்து பிர­தான வழிநடத்தல் குழு­வுக்கு அர­சியல் கட்­சி­க­ளினால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னைகள் அடங்­கிய இடைக்­கால அறிக்கை வெ ளியி­டப்­பட்டு அது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் விவா­தமும் நடை­பெற்­றுள்­ளது.

இந்­நி­லையில் இந்த இடைக்­கால அறிக்­கையில் உள்ள கட்­சி­களின் நிலைப்­பா­டு­களை பார்த்த தரப்­புக்­களே கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­து­வ­ரு­கின்­றன. குறிப்­பாக இந்த இடைக்­கால அறிக்­கையில் உள்ள ஒரு­சில விட­யங்­களை முன்­வைத்து கடும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

விசே­ட­மாக பௌத்த தேரர்­களும் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ராக கள­மி­றங்­கி­வ­ரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அதா­வது ஒரு­மித்த நாடு என்று தமி­ழிலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­மையே தற்­போ­தைய பிர­தான பிரச்­சி­னைக்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. குறிப்­பாக இந்த ஒரு­மித்த நாடு என்ற விடயம் கடும் எதிர்ப்பை ஒரு சிலர் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதே­வேளை இந்த எதிர்ப்­புக்­களை சமா­ளிக்க அர­சாங்கம் சில வியூ­கங்­களை வகுத்­துக்­கொண்­டி­ருப்­பதை காண முடி­கின்­றது. குறிப்­பாக இந்த எதிர்ப்­புக்­களை சமா­ளிக்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வாரம் ஒரு அறி­விப்பை வெளியிட்­டி­ருந்தார். அதா­வது மூன்­று­வி­த­மான சர்­வ­கட்சி மாநா­டு­களை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக ஜனா­தி­பதி அறி­வித்­தி­ருந்தார். அதா­வது சர்­வ­கட்சி, சர்­வ­மத, மற்றும் புத்­தி­ஜீ­விகள் மாநா­டுகள் நடத்­தப்­பட்டு அர­சி­ய­ல­மைப்பு செயற்­பாடு தொடர்பில் தெளிவு­ப­டுத்­தல்கள் முன்­னெ­டுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஜனா­தி­பதி இந்த அர­சி­ய­ல­மைப்பு மற்றும் நல்­லி­ணக்க விட­யத்தை முன்­னெ­டுப்­பதில் பாரிய கடி­னங்­களை எதிர்­கொண்­டு­வ­ரு­கின்றார் என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். எனவே ஜனா­தி­பதி எதிர்­வ­ரு­கின்ற பந்­து­க­ளுக்கு பாது­காப்பு ரீதி­யான துடுப்­பாட்­டத்­தையே முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்றார்.

அந்­த­வ­கை­யி­லேயே தென்­னி­லங்­கையில் வெகுவாக எழுந்­துள்ள எதிர்ப்­ப­லையை சமா­ளிக்கும் வகையில் ஜனா­தி­பதி இந்த சர்­வ­கட்சி, சர்­வ­மத மற்றும் புத்­தி­ஜீ­விகள் மாநாட்டை நடத்­து­வ­தாக அறி­வித்­தி­ருந்தார்.

ஆனால் அர­சாங்­கத்தின் இந்த அறி­விப்பு காலத்தை இழுத்­த­டிக்கும் ஒரு செயற்­பா­டாக அமைந்­து­வி­டுமா என்ற சந்­தேகம் எழு­வ­தாக கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்­தி­ருந்தார். இவ்­வாறு அதி­ரடி அறி­விப்­புகள் தினம் வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி என்­ப­ன­வற்­றுக்கு இந்த ஒரு­மித்த நாடு என்ற விட­யத்தில் பாரிய தலை­யி­டியை தென்­னி­லங்கை அர­சியல் தரப்­புக்கள் ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றன . இந்­நி­லையில் இந்த ஒரு­மித்த நாடு என்ற விட­யத்தை அகற்­றி­வி­டு­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டுமா என்ற சந்­தே­கங்­களும் எழுந்­துள்­ளன.

இது தொடர்பில் எம்­மிடம் கருத்து வெளி­யிட்ட புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு ஆத­ரவு வழங்கும் கட்சி ஒன்றின் உறுப்­பினர் ஒரு­மித்த நாடு என்ற விட­யத்தை வைத்து அர­சாங்­கத்­தினால் புதிய அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்ற முடி­யாது. எனவே விரைவில் ஒரு­மித்த நாடு என்ற விட­யத்தை நீக்­கி­விட்டே வரைபை முன்­வைக்­க­வேண்­டி­வரும் என்று சுட்­டிக்­காட்­டினார்.

அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது விரைவில் ஒரு­மித்த நாடு என்ற விடயம் யோச­னை­க­ளி­லி­ருந்து நீக்­கப்­பட்­டு­வி­டுமோ என்ற கேள்வி எழு­கின்­றது. பாரா­ளு­மன்ற விவா­தத்தில் கடந்த புதன்­கி­ழமை உரை­யாற்­றிய பிர­த­மரின் கூற்றை பார்க்­கும்­போது இது­போன்ற சந்­தேகம் எழு­கின்­றது.

அதா­வது கூட்டு எதிர்க்­கட்சி முன்­வைத்­துள்ள நிலைப்­பாட்­டி­லேயே நாமும் உள்ளோம். எம்மால் இணக்­கப்­பாட்­டுக்கு வர முடியும். நானும் சிங்­க­ளவன் தான். நாம் சிங்­க­ள­வர்­களை அழிக்க முனை­ய­வில்லை. ஒற்­றை­யாட்சி மற்றும் பெளத்த மதத்­துக்­கான முன்­னு­ரி­மையை நீக்கும் நோக்கம் எமக்கு இல்லை. எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­களை முன்­னெ­டுத்து முன்­செல்­வதா அல்­லது இடை­நி­றுத்தி விட்டு அழித்து விடு­வதா என்­ப­தனை மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும் என்று பிர­தமர் கூறி­யுள்ளார்.

அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தாயின் பொதுமக்­களின் ஆத­ரவும் ஆலோ­ச­னை­களும் அவ­சி­ய­மாகும். அதன்­பி­ர­கா­ரமே அர­சி­ய­ல­மைப்பு வரைபு வரும். இதில் எந்­த­வொரு மறை­முக தன்­மையும் கிடை­யாது. எனவே இது தொடர்பில் விரி­வாக ஆராய்ந்து அதன்­பின்­னரே இறுதி அறிக்­கையை நாம் முன்­வைப்போம். மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்ற முடி­யாத பட்­சத்தில் திருத்­தங்கள் செய்­யப்­பட்டு அமைச்­ச­ர­வையில் முன்­வைக்­கப்­பட்டு மீண்டும் பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்டு வந்து மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றுவோம் என்றும் பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார்.

அந்­த­வ­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வரைபு வரும்­போது ஒரு­மித்த நாடு என்ற பதம் இல்­லாமல் ஒற்­றை­யாட்சி என்ற விடயம் மட்­டுமே வருமா என்ற சந்­தேகம் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் இது தொடர்பில் இலங்­கையின் மூத்த சர்­வ­தேச ஊட­க­வி­ய­லாளர் அமல் ஜய­சிங்க குறிப்­பி­டு­கையில்,

ஒரு­மித்த, ஒற்­றை­யாட்சி, ஐக்­கிய போன்ற வார்த்தை பிர­யோகங்­களை வைத்­துக்­கொண்­டி­ருந்தால் ஒன்றும் செய்ய முடி­யாது. குறிப்­பாக இலங்­கையை பொறுத்­த­வரை அர­சியல் தலை­வர்­க­ளுக்கு ஒரு எதிர்­பார்ப்பு இருக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அவ்­வாறு அர­சியல் எதிர்­பார்ப்பு இருந்தால் மட்­டுமே தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னையை தீர்க்க முடியும்.

அந்த அர­சியல் ரீதி­யான எதிர்­பார்ப்பு இல்­லா­விடின் இந்தப் பிரச்­சி­னையை தீர்க்க முடி­யாது. இவ்­வாறு தைரி­ய­மான அர­சியல் முடிவை எடுப்­ப­தற்கு கட்­சி­த் தலை­வர்கள் தயங்­கும்­போது இந்த ஒரு­மித்த நாடு என்ற விட­யத்தை பேசிக்­கொண்­டி­ருப்­பது காலத்தை வீண­டிக்கும் செயற்­பாடு என்றே நான் கரு­து­கின்றேன்.

மாறாக தற்­போது உட­ன­டி­யாக அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆம் திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான தீர்­மா­னத்தை எடுக்­க­வேண்டும். குறிப்­பாக இதில் காணப்­ப­டு­கின்ற ஒத்­தி­சைவு பட்­டி­யலை நீக்கி காணப்­ப­டு­கின்ற அதி­கா­ரங்­களை அமுல்­ப­டுத்­த­வேண்டும். இதனை செய்­வதே தற்­போது மக்­களின் எதிர்ப்­பின்றி செய்ய முடி­யு­மான ஒரு வழி­யாக அமைந்­தி­ருக்­கின்­றது.

அத­னை­வி­டுத்து ஒரு­மித்த நாடு, ஐக்­கிய நாடு என்று பேசிக்­கொண்­டி­ருந்தால் ஒன்றும் நடக்­காமல் போய்­விடும். காரணம் எமது நாட்டில் இந்த தேசிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான அர­சியல் எதிர்­பார்ப்பு தலை­வர்­க­ளிடம் இல்லை. அதா­வது இவ்­வாறு ஏதா­வது நட­வ­டிக்கை எடுத்தால் தமது கட்­சிக்கு ஆபத்து ஏற்­பட்­டு­விடும் என்று அர­சியல் தலை­வர்கள் அச்­ச­ம­டை­கின்­றனர் என்று அவர் குறிப்­பி­டு­கின்றார்.

மூத்த ஊட­க­வி­ய­லாளர் அமல் ஜய­சிங்க கூறு­வ­தைப்­போன்று அர­சியல் தலை­வர்­களின் அர­சியல் எதிர்­பார்ப்பு என்­பது இங்கு மிக முக்­கி­ய­மா­கின்­றது. குறிப்­பாக கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் கடும் விட்­டுக்­கொ­டுப்­புடன் தீர்வு விட­யத்தில் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றார். அந்த விட்­டுக்­கொ­டுப்பு தென்­னி­லங்கை தலை­வர்­க­ளிடம் உள்­ளதா? சம்­பந்­தனின் விட்­டுக்­கொ­டுப்பு இறுதியில் வீணடிக்கப்பட்டுவிடுமா என்பதே இங்கு பிரதான விடயமாகவுள்ளது.

என்று மில்லாதவாறு தமிழர் தரப்பு தலைமை இவ்வாறு அரசியல் ரீதியான விட்டுக் கொடுப்புடன் செயற் படும்போது அது குறித்து அரசாங்கம் சிந்திக்கவேண்டியது அவசியமாகும்.

 ""அரசாங்கம் சர்வதேசத்திற்கும் மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும் இந்த நாட்டில் நிலையான சமாதானத்தினை ஏற்படுத்தும் நோக்கிலும் நிலையானதும் நியாயமானதுமான அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவேண்டும்.

நாட்டில் உயர் ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புச் செய்கின்றோம். பிரச்சினைகள் உள்நாட்டில் தீர்த்துக்கொள்ளப்படுவதற்கு விரும்புகின்றோம். அவ்வாறு தீர்த்துக்கொள்ளப்படும் பட்சத்திலேயே சர்வதேச அழுத்தங் களிலிருந்து விடுபடமுடியும்"" இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான இரு பிரதான கட்சிகளும் இந்த விடயம் குறித்து சிந்தித்து தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வின் அவசியத்தை புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும். அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதைப் போன்று சம்பந்தனை வெறுங்கையுடன் அரசாங்கம் அனுப்பிவிடக்கூடாது. இது குறித்து தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் சிந்திக்கவேண்டியது அவசியமாகும். 

ரொபட் அன்­டனி

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.