Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வு முயற்சியை எதிர்த்து நாட்டை மீண்டும் குட்டிச்சுவராக்க கூடாது...கூட்டமைப்பின் செயற்பாடு பாராட்டத்தக்கது என்கிறார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

Featured Replies

அரசியல் தீர்வு முயற்சியை எதிர்த்து நாட்டை மீண்டும் குட்டிச்சுவராக்க கூடாது

5-ee2553349c808d8b31fb2ebaffb519f5899df075.jpg

 

கூட்டமைப்பின் செயற்பாடு பாராட்டத்தக்கது என்கிறார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்
(ஆர்.ராம்., எம்.எம்.மின்ஹாஜ்)

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வின் ஊடாக அரசியல் தீர்வைக் காணவேண்டும். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது  

அரசியல்...

இன்றியமையாத தாகும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அவற்றை தவறவிட்டமை வரலாறாக உள்ளது. புதிய அரசியல் யாப்புக்கான முயற்சியினை பொது எதிரணியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நாடு பிளவுபடும் என்று அவர்கள் பொய் உரைக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்து அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது 13 பிளஸ் தீர்வை வழங்கத் தயார் என்று தெரிவித்திருந்தார். அன்று அவ்வாறு கூறியவர்கள் இன்று தீர்வு முயற்சியினை குழப்ப முனைவது கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை மீதான ஐந்தாம் நாள் விவாதம் நேற்று அரசியல் யாப்பு சபையில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

எமது நல்லாட்சி அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்துள்ளது. அரசியல் தீர்வுக்கு முன்னொருபோதும் இல்லாத சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். 62 இலட்சம் மக்கள் இதற்கான ஆணையை வழங்கியுள்ளனர்.

புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் பொது எதிரணியினர் பொய்யுரைகளை கூறி வருகின்றனர். புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சியை குழப்புவதற்கு தென்னிலங்கையில் உள்ள இனவாத சக்திகள் முயன்று வருகின்றன. இத்தகையவர்கள் பௌத்த மகா சங்கத்தினரையும் குழப்பி வருகின்றனர்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண முன்னர் முயற்சிக்கப்பட்ட போதும் அந்த முயற்சிகள் கைக்கூடவில்லை. இவ்வாறு எத்தனையோ சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டுள்ளோம். ஒப்பந்தங்கள் பல செய்யப்பட்டுள்ள போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால்தான் கொடூர யுத்தம் ஏற்பட்டது.

தற்போதைய அரசியல் தீர்வு முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றார். வடக்கு, கிழக்கில் சுயாட்சி அடிப்படையிலான சமஷ்டி தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது விட்டுக்கொடுப்புடன் தீர்வைக் காண வேண்டும் என்ற அக்கறையில் செயற்படுவது பாராட்டத்தக்கதாகும். வழங்கப்படுகின்ற அரசியல் தீர்வானது தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக அமைய வேண்டும். இல்லையேல் பெரும் அழிவுகளை சந்தித்த தமிழ் மக்கள் அரைகுறை தீர்வு வழங்கப்படுமானால் அரசாங்கத்தின்மீது அதிருப்தி கொள்ளும் நிலை ஏற்படும்.

பொது எதிரணியினர் அதிகாரப் பகிர்வின் ஊடான அரசியல் தீர்வு முயற்சியை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 13 பிளஸ் தீர்வைத் தருவேன் என்று இந்தியா சென்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான குழுவினர் தற்போது தீர்வு முயற்சியை எதிர்ப்பது கவலைக்குரிய விடயமாகும். தற்போதைய நிலையில் கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும். அரசியல் சுயநலன்களுக்காக தற்போதைய சந்தர்ப்பத்தை எதிர்ப்பதன் மூலம் நாட்டை மீண்டும் குட்டிச்சுவராக்க எவரும் முயலக்கூடாது.

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.