Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவரை இலங்கைக் கடற்படை தாக்குவதை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மீனவரை இலங்கைக் கடற்படை தாக்குவதை

கண்டித்து நாளை சென்னையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மாநில மீன்பிடி அமைச்சர் தலைமை வகிப்பார்

பாக்குநீரிணையில் வைத்துத் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களைக் கொன்றும்இ தாக்கியும் வரும் இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசத்தைக் கண்டித்துஇ தமிழகத்தின் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது.

நாளை திங்கட்கிழமைஇ சென்னையில் உள்ள இலங்கையின் பிரதித் தூதரகத்தின் முன்னாள் நடத்தப்படவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி தலைமை வகிப் பார். மின்சக்தித்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியும் கண்டன ஊர்வலத்தில் பங்கு பற்றுவார்.

பாக்குநீரிணைக் கடற்பிரதேசத்தில் தொழில்செய்யும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலை செய்வதும்இ தாக்குதல் நடத்திக் காயமுறச் செய்வதும் அவர்கள் வைத்திருக்கும் மீன் மற்றும் கடல் வளங்களை பறித்தெடுப்பதுமாக

இலங்கைக் கடற்படையினர் அண்மைக் காலமாகப் பெரும் அட்டகாசம் புரிந்துவருகின்றனர்.

நேற்றும் கூட கச்சதீவுப் பகுதியில் வைத்து தமிழக மீனவர் ஒருவரை அவர்கள் சுட்டுக் கொன்றனர்; தாக்குதலில் மூவர் காயமடைந்தனர்.

பெப்ரவரி மாதத்தில் தமிழக மீனவர்கள் பல தடவைகள் தாக்கிக் காயப்படுத்தியும் சுட்டும் கொன்றது இலங்கைக் கடற்படை.

மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் இலங்கைக் கடற்படை நான்கு தடவைகள் அத்துமீறி நடந்ததாக தமிழக முதல் வர் கருணாநிதி சுட்டிக்காட்டியிருந்தார்.

இது விடயத்தைப் பிரதமர் மன்மோகன் சிங் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தும் இலங்கைக் கடற்படையினரின் கொடுமை தொடர்வதாக அவர் சலிப்படைந்து கருத்துத் தெரிவித்தார்.

""இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தினால் தமிழனுடைய கை மீன்பிடித்துக்கொண்டு மாத்திரம் இருக்கும் என்று கருதவேண்டாம்'' என்று இம்மாதம் ஐந்தாம் திகதிய ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.

இலங்கைக் கடற்படையினரின் தமிழக மீனவர் மீதான கொலைகள்இ தாக்குதல்கள்இ படகுகளைக் கவிழ்த்து அழித்தல் ஆகிய கொடூரச் செயல்கள் குறித்து ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் நாளை திங்கட்கிழமை மீன்பிடித்துறை அமைச்சர் ஜே.பி.பி. சாமி தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை பிரதித் தூதரகத்தின் முன்னால் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(அ)

http://www.uthayan.com/pages/news/today/01.htm

சென்னை: இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,

ராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும், மீனவர்களைத் தாக்குவதும், துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்துவது, கொலை செய்வது ஆகியவை தொடர் கதையாகி வருகிறது.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி பலமுறை கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அரசைக் கண்டித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால் இலங்கை படையினரின் தாக்குதல் நின்றபாடில்லை. தொடர்ந்து தமிழக மீனவர்களைச் சுட்டுப் படுகொலை செய்து வருகின்றனர். இதைக் கண்டிக்கும் வகையில், இலங்கை கடற்படையினர் திரும்பத் திரும்ப தாக்குதல் நடத்தினால் தமிழனுடைய கை, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் என்று மட்டும் கருத வேண்டாம் எனவும் கடுமையாக எச்சரித்திருந்தார் முதல்வர்.

இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி கிறிஸ்டோபர் என்ற மீனவர் பலியாகியுள்ளார். இரு மீனவர்களும் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து சென்னை டிடிகே சாலையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமை தாங்குகிறார். மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி முன்னிலை வகிக்கிறார். மத்திய, மாநில அமைச்சர்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை மாவட்ட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கழகத்தின் பல்வேறு அணியினர் பெரும் திரளாக இப்போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/03/11/dmk.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.