Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எதிரணி குறி

Featured Replies

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எதிரணி குறி

2-399ed057c46938f24c1c6bb37e91c5ab79644c71.jpg

 

(ஆர்.யசி)
இணங்கினால்தான் இணைப்புக் குறித்த பேச்சு தொடரும் : சுதந்திரக்கட்சி குழுவிடம் திட்டவட்டமாக எடுத்துரைப்பு

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் இணைந்து போட்­டி­யிட வேண்­டு­மானால் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யினை தமக்கு வழங்க வேண் டும். அதற்கு இணக்கம் தெரி­வித்தால் மட்­டுமே அடுத்தகட்ட விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யாட முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சிக் குழு­வி­ன­ரிடம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யி னர் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்­ளனர். 

உள்­ளூ­ராட்சி தேர்­தலில் இரு தரப்­பி­னரும் இணைந்து போட்­டி­யி­டு­வது குறித்து ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியைச் சேர்ந்த மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அடங்­கிய குழு­வி­ன­ருக்கும் பொது எதி­ர­ணியைச் சேர்ந்த மூவ­ர­டங்­கிய குழு­வி­ன­ருக்­கு­மி­டையில் நேற்று முன்­தினம் இரவு சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது.

இந்த சந்­திப்­பின்­போதே இவ்­வி­டயம் குறித்து வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை இன்­றைய தினம் சந்­தித்­து­பே­ச­வுள்ள ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் குழு இவ்­வி­டயம் குறித்து எடுத்­துக்­கூறி ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாட்டை அறிந்த பின்னர் நாளை மீண்டும் பொது எதி­ர­ணியின் குழு­வி­னரை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் தம்மில் இருந்து பிரிந்து செயற்­பட்­டு­வரும் பொது எதி­ர­ணி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வது குறித்து தொடர்ச்­சி­யாக பேச்­சு­வா­ரத்­தை­களை நடத்­தி­வரும் நிலையில் நேற்று முன்­தினம் இரவு இரு தரப்­பி­ன­ருக்கும் மத்­தியில் முக்­கி­ய­மான பேச்­சு­வார்த்­தை­யொன்று இடம்­பெற்­றுள்­ளது.

குறித்த பேச்­சு­வா­ரத்­தையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி சார்பில் அமைச்­சர்­க­ளான நிமல் சிறி­பால டி சில்வா, அனுர பிரி­ய­தர்­சன யாப்பா மற்றும் பிர­தி­மைச்சர் லசந்த அல­கி­ய­வன்ன ஆகி­யோரும் பொது எதி­ர­ணியின் சார்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மஹிந்த யாப்பா அபே­வர்­தன, சி.பி. ரத்­நா­யக மற்றும் பவித்ரா வன்­னி­யா­ராச்சி ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

குறித்த சந்­திப்பில் பொது எதி­ர­ணி­யினர் முன்­வைத்த நிபந்­த­னை­களில் பிர­தா­ன­மான எந்­த­வொரு நிபந்­த­னை­யையும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஏற்­று­கொள்ள முடி­யாத நிலையில் இந்த சந்­திப்பு முடி­வைந்­துள்­ள­தாக தெரிய வரு­கின்­றது.

குறிப்­பாக பொது எதி­ர­ணி­யினர் முன்­வைத்த நிபந்­த­னை­களில் இரு தரப்­பி­னரும் இணைந்து எதிர்­கா­லத்தில் ஆட்­சி­யினை அமைப்­ப­தாயின் பிர­தமர் பிர­தமர் பத­வி­யையும், கட்­சியின் தலைமைப் பத­வியும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்­கப்­பட வேண்டும் என கூறப்­பட்­ட­துடன் இந்த அர­சாங்கம் பத­வி­யி­லி­ருக்கும் வரையில் பாரா­ளு­மன்­றதின் எதிர்க்­கட்சி தலைவர் பத­வி­யினை பொது எதி­ர­ணி­யி­ன­ருக்கு வழங்க வேண்டும் எனவும் கோரப்­பட்­டுள்­ளது. இந்தக் கோரிக்­கை­களே நேற்று முன்­தினம் இடம்­பெற்ற கூட்­டத்­திலும் பொது எதி­ர­ணி­யி­னரால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் பொது எதி­ர­ணியின் நிபந்­த­னிகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி குழு­வினர் எவ்­வி­த­மான தீர்­மா­னங்­க­ளையும் அறி­விக்­க­வில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைமை மற்றும் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­ட­வேண்­டிய தேவை உள்­ள­தா­கவும் கூறி சந்­திப்பை நிறைவு செய்­துள்­ளனர்.

இந்தச் சந்­திப்பு குறித்து பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த யாப்பா அபே­வர்த்த தெரி­விக்­கையில், எமது சந்­திப்பு எவ்­வி­த­மான இணைக்­கப்­பாடும் இன்­றியே முடி­வ­டைந்­தது. நாம் எமது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக உள்ளோம். இன்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தேசிய அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து செயற்­படும் நிலை­மையில் எம்மால் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் இணங்கி செயற்­பட முடி­யாது. அவ்­வா­றான நிலையில் பொது இணைக்­கப்­பாடு எட்­டப்­பட வேண்­டு­மாயின் தேசிய அர­சாங்­கத்தின் காலம் முடி­வுக்கு வரும் வரையில் பாரா­ளு­மன்­றதின் எதிர்க்­கட்சி தலைவர் பத­வி­யினை எமக்கு வழங்க வேண்டும். இந்த நிபந்­த­னைக்கு இணக்கம் தெரி­விக்கும் பட்­சத்தில் நாம் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் இணைந்து செயற்­ப­டு­வது குறித்து அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை கையாள முடியும். ஏனைய நிபந்­த­னைகள் குறித்து பின்னர் சிந்­திக்க முடியும்.

ஏனைய சிறிய கார­ணிகள் குறித்து இப்­போதே இரு தரப்­பி­னரும் இணக்கம் கண்­டுள்ளோம். எவ்­வாறு இருப்­பினும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பதி­லை­ய­டுத்தே நாம் அடுத்­த­கட்ட நகர்­வுகள் குறித்து சிந்­திக்க முடியும். இந்­நி­லையில் மீண்டும் நாளை மறு­தினம் ( நாளை 28) ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் எமக்கு இடையில் சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இந்த சந்­திப்பில் அவர்­களின் பதிலை நாம் எதிர்­பார்த்­துள்ளோம் எனக் குறிப்­பிட்டார்.

அமைச்சர் நிமல் கருத்து

சந்­திப்பு குறித்து அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்­வா­விடம் வின­வி­ய­போது அவர் கூறி­ய­தா­வது, இரண்டு தரப்­பி­னரும் இணைந்து செயற்­ப­டு­வதே கட்­சி­யையும் இரண்டு தரப்­பையும் பலப்­ப­டுத்தும். அதற்­கா­கவே நாம் இணைந்து செயற்­பட பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இரண்டு தரப்­பிலும் இணக்கம் காணக்­கூ­டிய விட­யங்­களில் நாம் வெற்றி கண்­டுள்ளோம். எனினும் ஒரு­சில விட­யங்­களில் நாம் தொடர்ந்தும் சிந்­திக்­க­வேண்­டிய தேவை உள்­ளது.

எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நாம் குறித்த விட­யங்கள் தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து தீர்­மா­னத்தை எடுக்­க­வுள்ளோம். நாளை மறு­தினம் ( நாளை) மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் குழு­வினர் பொது எதி­ர­ணி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வார்கள். எவ்­வாறு இருப்­பினும் இப்­போது இணக்கம் கண்­டுள்ள கார­ணி­களை அடிப்­ப­டை­யாக வைத்து உள்­ளூ­ராட்சி தரப்­பிலும் இணக்கம் காணக்­கூ­டிய விட­யங்­களில் நாம் வெற்றி கண்டுள்ளோம். எனினும் ஒருசில விடயங்களில் நாம் தொடர்ந்தும் சிந்திக்கவேண்டிய தேவை உள்ளது.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாம் குறித்த விடயங்கள் தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கவுள்ளோம். நாளை மறுதினம் ( நாளை) மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குழுவினர் பொது எதிரணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். எவ்வாறு இருப்பினும் இப்போது இணக்கம் கண்டுள்ள காரணிகளை அடிப்படையாக வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை இணைந்து எதிர்கொள்ளவே முயற்சித்து வருகின்றோம். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.