Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டத்தை மீறியதுக்காய் தண்டனை பெற்ற குடும்பத்துக்கு நட்ட ஈடு இது இலங்கையின் கேவலமான நிலை

Featured Replies

சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைக்கு பதிலளித்து கெஹலிய உரை

சவுதி அரேபியாவில் அண்மையில் சிரச்சேதம் செய்யப்பட்ட 4 இலங்கையர்களை அந்தத் தண்டனையிலிருந்து மீட்க இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்ற குற்றச் சாட்டையும் மறுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலனோம்பு அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல, அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஏற்பவே மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற சவுதி அரேபியாவில் சிரச்சேதம் செய்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் இறுதியில் பதிலளிக்கும் போதே அமைச்சர் ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.

இந்த பிரேரணையை சபைக்கு சமர்ப்பித்து பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில்;

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சவூதி அரேபியாவில் 4 இலங்கையர்களுக்கு எதிராக சிரச்சேதம் செய்து தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களில் 3 பேருக்கு மரண தண்டனையும் ஒருவருக்கு 15 வருட சிறைத் தண்டனையுமே முதலில் விதிக்கப்பட்டிருந்தது. எனினும், இவர்கள் குறித்து இலங்கை அரசாங்கம் போதிய கவனம் எடுத்துக் கொள்ளாததனால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தவரும் மரண தண்டனைக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால், பிற நாடுகள் உதாரணமாக சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பலரை அந்நாட்டு அரசாங்கம் நேரடியாக தலையிட்டு காப்பாறியிருக்கிறது. ஆனால், எமது நாட்டிலும் வெளிநாட்டமைச்சு இருந்தும் மேற்குறித்த 4 இலங்கையர்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதேவேளை, விசாரணைகளும் மொழி பெயர்ப்புகள் எதுவுமின்றி அரபு மொழியிலேயே நடந்துள்ளன. இந்த நால்வருக்கும் எதிராக சட்ட விரோத ஆயுத கொள்முதல் மற்றும் வைத்திருத்தல், வாகன கடத்தல், சவூதி அரேபிய பிரஜையொருவரை காயப்படுத்தியமை போன்ற குற்றச் சாட்டுகளே முன்வைக்கப்பட்டிருந்தன. இவை மரண தண்டனைக்குரிய குற்றங்கள் அல்ல. இவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது இந்த நாட்டுக்கே வெட்கக்கேடு. எனவே, அவர்களை காப்பாற்ற தவறிவிட்ட நிலையில் அவர்களது குடும்பத்தினர்களுக்கு நட்டஈடாவது வழங்கப்பட வேண்டும் என்றார்.

விஜித ஹேரத் எம்.பி.

இதைத் தொடர்ந்து விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவிக்கையில்;

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களில் அதிகமானோர் சவூதி அரேபியாவில் தான் இருக்கிறார்கள். சுமார் மூன்றரை இலட்சம் பேர் அங்கு பணிபுரிந்து பாரியளவு அந்நிய செலாவணியை நாட்டுக்கு ஈட்டித் தருகின்றனர். இதேநேரம், சவூதி அரேபியாவில் 2 இலங்கை கிளைத் தூதரகங்கள் இருக்கின்றன. அங்கு போதிய வசதிகள் இல்லை.

4 இலங்கையர்களையும் 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு இவ்வாண்டில் தண்டனை நிறைவேற்றப்படும் வரை சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகங்கள் இவ்விடயம் தொடர்பில் சரியாக செயற்படவில்லை. சட்டத்தரணிகளை சந்திக்கும் வாய்ப்பும் 4 இலங்கையர்களுக்கும் வழங்கப்படவில்லை.

இவர்களது உறவினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தபோது (2005 இல்) அவரை சந்தித்து விடுதலை செய்து தருமாறு கோரியிருந்தனர். ஜனாதிபதியும் அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அன்று உறுதியளித்திருந்தபோதும் அது நடக்கவில்லை. இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை அரசின் குறைபாடு இருந்திருப்பது தெரிகிறது.

இவ்வாறான விவகாரங்களில் பிறநாடுகளுடன் ஒப்பிடும்போது எமது நாடு பின்னணியிலேயே இருக்கிறது. சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பல பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை அந்நாட்டு அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு நாட்டுக்கு மீளப்பெற்றுள்ளது. இதேபோல், அமெரிக்காவினால் கியூப நாட்டவர்கள் 5 பேர் தடுத்துவைக்கப்பட்டபோது கியூப அரசாங்கம் அவர்களை விடுவித்துக் கொள்வதற்கென உலகம் முழுவதிலும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் என பல முன்னெடுப்புகளை மேற்கொண்டது. இத்தனைக்கும் அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால், எமது நாட்டுக்காக உழைக்க சென்றவர்களின் தண்டனையை குறைத்துக் கொள்ளக்கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் இவ்விவகாரத்தில் முறையாக செயற்படவில்லை. அவர் இலங்கையர்களை அரேபியர்களைவிட அடிமைத்தனமாக நடத்துவதாக ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன. வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் நிலைமை தொடர்பாக ஆராய தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டால் சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.

எப்படியிருப்பினும் 4 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டாகிவிட்டது. எனவே, அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்க்கையைக் கொண்டு செல்லுமளவிற்கு நட்டஈடு வழங்குவதுடன் இனியாவது இவ்வாறான துர்திர்ஷடமான நிலைமைகள் ஏற்படாமலிருக்க வழிப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.

அமைச்சர் ரம்புக்வெல்ல

இதேவேளை, விவாதத்தின் இறுதியில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதிலளித்து பேசுகையில்;

சவூதி அரேபியாவில் சிரச்சேதம் செய்து தண்டனை நிறைவேற்றப்பட்ட 4 இலங்கையர்களை தண்டனையிலிருந்து விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை ஏற்கமுடியாது. முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்க அவரது ஆட்சிக் காலத்தின்போது இவ்விவகாரம் தொடர்பில் சவூதி அரேபிய மன்னருக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியிருக்கிறார். அத்துடன், எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஊடாக 4 இலங்கையர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

இதேநேரம், பாலியல் வல்லுறவு, கொலை, ஆயுதக் கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் என்பன சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்குரிய குற்றமென சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டுகிறது. அதற்கமைய, ஆயுத கொள்ளை குற்றத்தின் பேரிலேயே இலங்கையர்கள் நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

எமது நாட்டு சிறைச்சாலையிலும் 144 வெளிநாட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள். எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமையவே அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். பிரச்சினைகளை நாம் யதார்த்தமாக பார்க்க வேண்டும்.

இதேநேரம், 15 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர் மேன்முறையீடு செய்தபோதே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான சிக்கல்களை தவிர்த்துக் கொள்வது தொடர்பில் தெரிவுக்குழுவொன்று நியமிப்பது குறித்து எதிர்காலத்தில் யோசனை செய்வோம். அத்துடன், நால்வரினதும் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேநேரம், இனிவரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு அந்நாடுகளின் சட்டங்கள் மற்றும் பண்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், இனிவரும் காலங்களில் மேற்குறித்தது போன்ற சம்பவங்கள் நடக்காதென எந்த உறுதிமொழியும் வழங்க முடியாது என்றார்

http://www.thinakkural.com/news/2007/3/12/...s_page23121.htm

இப்படி கோமாளிகள் அங்கம் வகிக்கும் அரசில் சிறுபான்மையினருக்கு எங்க மரியாதை இருக்க போகுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.