Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தில் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் : ஜனாதிபதி

Featured Replies

சர்வதேசத்தில் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் : ஜனாதிபதி

 

 
 

எமது மக்கள் மத்­தியில் நில­விய சமூக முரண்­பா­டு­களே ஆயுத போராட்டம் வரையில் சென்­ற­டைந்­தன. யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட போதிலும் நாட்­டினை பிள­வு­ப­டுத்தும் சக்­திகள் சர்­வ­தேச ரீதியில் இன்றும் செயற்­பட்டு வரு­கின்­றன  என்று   ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

maithripala-sirisena.jpg

 

இனி ஒரு­போதும் நாட்டில் ஒரு  யுத்தம் ஏற்­ப­டாத  யதார்த்­த­மா­னதும் நிரந்­த­ர­மான ஒரு சமா­தா­னத்தை உரு­வாக்கும் நாட்­டினை கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது ஒரே நோக்­க­மாகும். இன்­னொரு யுத்­தத்­திற்கு இட­ம­ளிக்க முடி­யாது. அவ்­வா­றான ஒரு நாட்­டினை உரு­வாக்க சகல தரப்­பி­னரும் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

சக­வாழ்வு குறித்த சர்வ மதத் தலை­வர்­களை ஒன்­றி­ணைத்த மத சக­வாழ்வு மாநாடு நேற்று கொழும்பு பண்­டா­ர­ந­ாயக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் சிறப்பு அதி­தி­யாக கலந்­து­கொண்ட ஜனா­தி­பதி உரை­யாற்றும் போதே இதனை குறிப்­பிட்டார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் மூல­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த மாநா ட்டில் பெளத்த  மாநா­யக்க தேரர்கள், இந்து மதத் தலை­வர்கள், கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய மதத் தலை­வர்கள் மற்றும் அர­சியல் பிர­மு­கர்கள் சிவில் மற்றும் சர்­வ­தேச பிர­தி­நி­திகள் என அனை­வரும் கலந்­து­கொண்­டனர். .  

மத சக­வாழ்வு மாநாடு ஒன்று கூட்­டப்­பட்டு சமூக ஒற்­று­மை­யினை பலப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வதை எண்ணி நான் மகிழ்ச்சி அடை­கின்றேன். அமைச்சர் மனோ கணே­சனின் அமைச்சின் மூல­மாக இவ்­வாறு ஒரு நகர்வு முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. மிகவும் வர­வேற்­கத்­தக்­கது. மிக நீண்ட கால­மாக  இந்த நாட்டில் மூவின மக்கள் மத்­தியில் பல்­வேறு முரண்­பா­டுகள், கோபங்கள், சந்­தே­கங்கள், அதி­ருப்­திகள் இருந்து வந்­துள்­ளன. 

இதன் விளை­வாக மூன்று தசாப்­த­கால யுத்தம் ஒன்­றுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. இது இறு­தியில் ஆயு­தத்தின் மூல­மாக முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இந்த நாட்­டினை பிள­வு­ப­டுத்த போரா­டிய பயங்­க­ர­வா­திகள்  ஆயு­தத்தின் மூல­மாக தோற்­க­டிக்­கப்­பட்­டனர். எனினும் யுத்தம் தோற்­க­டிக்­கப்­பட்ட போதிலும் யுத்­தத்தின் மூல­மாக உரு­வான கருத்­தி­யலை இன்னும்  எம்மால் தோற்­க­டிக்க முடி­யா­துள்­ளது. 

இந்த நாட்டில் உள்ளே இவ்­வி­ட­யங்கள் பேசப்­ப­டாத போதிலும் எமது நாட்­டிற்கு வெளியில் சர்­வ­தேச ரீதியில் பிரி­வி­னை­வாத கொள்­கையும் கருத்­தி­யலும் உள்­ளன. இதனை ஆயு­தத்­தினால் தோற்­க­டிக்க முடி­யாது. ஒரு கருத்­தி­யலை தோல்­வி­ய­டைய செய்ய வேண்டும் என்றால் அதை இன்­னொரு கருத்­தி­ய­லினால் தான்  செய்ய  முடியும். இந்த கருத்­தி­யல்­களை   கலந்­து­ரை­யாடல், ஆலோ­ச­னைகள் மூல­மாக மாத்­தி­ரமே முன்­னெ­டுக்க முடியும். அந்த நிலைப்­பாடு இன்று படித்த சமூ­கத்தின் மூல­மாக முன்­னெ­டுக்­க­ப்பட்டு  வரு­கின்­றது. 

எனவே நாம் சரி­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முன்­வ­ர­வேண்டும். இதில் மதத் தலை­வர்­களின் ஒத்­து­ழைப்பும் வழி­காட்­டலும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். இதில் பெளத்த விகாரை, இந்துக் கோவில், கிறிஸ்­தவ ஆலயம், இஸ்­லா­மிய பள்­ளி­வாசல் ஆகிய எதிலும் முரண்­பா­டுகள் இருக்­காது என நான் நம்­பு­கிறேன். மதத் தலை­வர்கள் எப்­போ­துமே  சரி­யான விட­யத்­தி­னையே சமூ­கத்தில் முன்­வைத்து வரு­கின்­றனர்.

எமது நாட்டில் சக­வாழ்வு இல்­லாத கார­ணத்­தினால் தான் இன்றும் நாம் சக­வாழ்வு பற்றி பேசி வரு­கின்றோம். இதற்கு சந்­தே­கமும், நம்­பிக்கை இன்­மையும், முரண்­பா­டு­க­ளுமே கார­ண­மாக அமை­கின்­றன. ஆகவே ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நம்­பிக்­கை­யையும், சந்­தே­க­மற்ற போக்­கி­னையும் முரண்­பா­டுகள் இல்­லாத உற­வி­னையும் ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. இதில் தடைகள் உள்­ளன. சகல தரப்­பிலும் கடும்­போக்­கா­ளர்கள் உள்­ளனர். 

இன்று உலகம் எதிர்­கொள்ளும் சகல யுத்­தங்­க­ளுக்கும் இதுவே கார­ண­மாக அமை­கின்­றது. இது மனித பரி­ணா­மத்தில் இருந்து இன்­று­வரை  உள்­ளது. எனினும் இந்த முரண்­பா­டு­களை தோற்­க­டிக்க வேண்டும். அதில் மதத் தலை­வர்­களின் தத்­து­வங்கள், போத­னைகள் மிக முக்­கிய இடத்தை வகிக்­கின்­றன. சமூ­கத்தில் சகவாழ்வு பற்­றிய ஒரு பிரச்­சினை உள்ள கார­ணத்­தினால் தான் இவ்­வா­றான மாநா­டு­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. முன்­னேற்றம் கண்ட நாடு­களில் ஆயுதம் ஏந்த விரும்­பமாட்­டார்கள். அவர்கள் சமூக நோக்கில் நம்­பிக்கை வைத்­துள்­ளனர். 

நாம் நல்­லி­ணக்கம், சக­வாழ்வு பற்றி பேசும் போது சிலர் எங்­களை ஏளனம் செய்­கின்­றனர். எனினும் நாம் மகிழ்ச்­சி­ய­டைய சில கார­ணிகள் உள்­ளன. இன்று மாண­வர்கள் முதல் பெரி­ய­வர்கள் வரை  இந்த நாட்டின் நல்­லி­ணக்கம் சக­வாழ்வு பற்றி அறிந்­துள்­ளனர். அனை­வ­ரதும் உரி­மைகள் குறித்து பெரும்­பா­லான மக்கள் அறிந்து வைத்­துள்­ளனர். 

இதில் மதத் தலை­வர்­களின் பூரண ஒத்­து­ழைப்பு எம்மை பலப்­ப­டுத்தும். சமூ­கத்­தையும் ஒன்­றி­ணைக்கும். அர­சாங்­க­மாக நாம் நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப சகல நட­ வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். சரி­யான கோணத்தில் எதிர்­கா­லத்தை பார்க்கும் சூழலை நாம் அமைக்க முயற்சிக்கின்றோம். சகோதரத்துவத்துடன், அமைதியாக வாழக்கூடிய சூழலை நாம் எதிர்பார்க்க முடியும். யுத்தம் ஒன்று இல்லாத நாட்டினை எம்மால் உருவாக்க முடியும். அதற்கான நகர்வுகளை முன்னெ டுப்போம். இனி ஒருபோதும் ஒரு யுத்தம் ஏற்படாத ஒரு யதார்த்தமானதும் நிரந்த ரமான ஒரு சமாதானத்தை உருவாக்கும் நாட்டினை கட்டியெழுப்புவதே எமது ஒரே நோக்கமாகும். இன்னொரு யுத்தத்திற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறான ஒரு நாட்டினை உருவாக்க சகல தரப்பினரும் கைகோர்த்து செயற்படுவோம்.  

http://www.virakesari.lk/article/28166

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.