Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் திடீரெனத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ நாயக்காவை அழைத்துப் பேசியமை பல்வேறு ஊகங்களுக்கு வழி சமைத்திருக்கின்றது.

இனப்பிரச்சினை விவகாரத்தில் பௌத்த சிங்களத் தீவிரப் போக்கைக் கடைப்பிடித்துஇ வடக்கு கிழக்கில் இராணுவ முனைப்புடன் விடயங்களைக் கையாண்டு வருவதால் ஜனாதி பதி மஹிந்தருக்கு தென்னிலங்கையில் செல் வாக்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐ. தே. கட்சிஇ ஜனா திபதித் தேர்தலை அடுத்துஇ உடைந்து துண்டாகி பலமிழந்துஇ தடுமாறிப்போய் நிற்கிறது. அதேசம யம்இ தமது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அரசல் புரசலாக ஆரம்பித்திருக்கும் உட்கட்சிப் பூசலையும், கட்சித்தலைமைக்கு எதி ரான கிளர்ச்சியையும் ஜனாதிபதி எதிர்கொள்கிறார்.

தமது செல்வாக்கு வளர்ந்து, எதிர்க்கட்சிகள் பலமிழந்து தடுமாறும் சமயத்தில் ஒரு திடீர்ப் பொதுத்தேர்தலை நடத்தி நாடாளுமன்றப் பலத்தை உறுதிப்படுத்திக்கொண்டால், கட்சிக் குள் தமக்கு எதிராகக் கிளம்பும் புகைச்சலையும் ஒரேயடியாக அமுக்கி விடலாம் எனக் கருதுகிறார் போலும் ஜனாதிபதி.

அதனால்தான் அவரது தந்திரோபாயச் சிந் தனை பொதுத்தேர்தல் குறித்துச் சிரத்தை காட்டு கின்றது.

ஆனால் ஜனாதிபதி மஹிந்தரின் திடீர்ப் பொதுத் தேர்தல் திட்டம், அண்மையில் ஐ. தே. கட்சியிலிருந்து அணிமாறி, அதற்குப் பரிசாக அமைச்சர் பதவி யைப் பெற்றுக்கொண்ட 18பேர் அணியின் வயிற் றில் புளியைக் கரைக்கவும் தவறவில்லை. அணி மாறியதால் இப்போது திரிசங்கு நிலையில் தவிக் கின்றார்கள் அவர்கள்.

திடீர்ப் பொதுத்தேர்தல் ஒன்று வருமானால் தாம் இதுவரை கொடிகட்டிப் பறந்த ஐ. தே. கட்சியில் தமக்கு இடமே வழங்கப்படமாட்டாது என்பதும்இ ஆளும் தரப்பு வேட்பாளர் பட்டியலில் கெஞ்சிக் கூத்தாடி இடம்பெற்றாலும்இ அந்தக் கட்சி வாக்காளர் கள்இ அதுவரை எதிர்த்தரப்பிலிருந்து நேற்று வந்து சேர்ந்தவர்களுக்குத் தமது வாக்குகளை அளித்து அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக்க மாட்டார்கள் என்பதும் இந்த அணியினருக்கு நன்கு தெரியும்.

எனவே திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்று வரு மானால் அவர்களின் அரசியல் எதிர்காலம் சூனிய மாகிவிடும் என்பதும் நிச்சயம். "அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டமாதிரி' ஜனாதிபதி மஹிந் தரை நம்பி இ ஐ. தே. கட்சியைக் கை விட்டு அரசுப் பக்கம் தாவியவர்களின் நிலைமைமாறிவிடும்.

அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் ஜனாதி பதி மஹிந்தரின் வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் இரகசியத்தைத் துருவித் துருவி ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு ஒரு விடயம் "பளிச்' செனப் புலப்படும். அது வாக்குறுதிகளை வாரி வழங்கி, அதன்மூலம் இலக்குகளை அடைவதும், இலக்குகளை எட்டியதும் வாக்குறுதிகளை மறந்து விடுவதுமான "அரசியல் சாணக்கியத்தில்' கைதேர்ந் தவர் ஜனாதிபதி மஹிந்தர் என்பதுதான்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பௌத்த சிங்களக் கட்சிகளான ஜே. வி. பி.இ ஜாதிக ஹெல உறுமய போன்றவை எல்லாவற்றுடனும் பல உடன்பாடுகளை எழுத்தில் செய்தார் அவர். அவை எல்லாம் பின்னர் தண்ணீர் மேல் எழுதப் பட்டவை போலாயின.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் தரப்போடும் கூட அவர் ஓர் உடன் பாடு கண்டார் என்றும், அதன் மூலமே தேர்தலை வென்றார் என்றும், வென்ற கையோடு அவர் தம் புத்தியைக் காட்டிவிட்ட காரணத்தினாலேயே அவர் பதவியேற்ற கையோடு தமது பதிலடிக் கை வரிசையைப் புலிகள் காட்டத் தொடங்கினார்கள் என்றும் பேச்சடிபடுகின்றது. ஆனால் அதன் உண்மை, பொய் இனித்தான் அம்பலமாகவேண்டும்.

இதேபோன்றதே, அமைச்சுப் பதவியை ஏற் பதற்காக அரசுப்பக்கம் தாவிய இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்றவற்றின் அனுபவமும் கூட. அரசுப் பக் கம் தாவுவதற்காக அவர்களுக்கு உறுதியளிக்கப் பட்ட எவையுமே பின்னர் செயற்படுத்தப்படவே யில்லை என்பதுதான் அந்த அணிகளின் ஆதங்கம்.

அதுபோலவே, புலிகளுடனான "ஜெனிவா 1' அமைதிப் பேச்சுகளின்போது மஹிந்த அரசினால் உடன்பாடு கண்டு எழுத்தில் உறுதியளிக்கப் பட்ட விடயங்கள் பின்னர் செயலுருப் பெறவேயில்லை. அவற்றுக்கு மாறான நடவடிக்கைகளே களத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு உறுதி மொழி வழங்கிஇ உடன்பாடு கண்டு, வாக்குறுதி தந்த விடயங்களைச் செயற் படுத்துவதில் அதிபர் மஹிந்தரின் கீர்த்திக்கு உள்ள தகைமை உலகறிந்தது.

அதுபோலவே ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்து அதிலிருந்து கணிசமான எம். பிக்களை அரசுப்பக்கம் சாயச் செய்தபோதும் இப்போதைக் குப் பொதுத் தேர்தல் எதையும் நடத்துவதற்கு அரசு முற்படாது என்று அவர்களுக்கு உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால், அந்த உறுதிமொழியும் மற்றைய உறுதி மொழிகள் போல காற்றில் பறந் தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற நிலைமை தான் உருவாகி வருகின் றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று பத்து நாட்களுக்குள், மாவீரர் தின உரை ஒன்றை ஆற்றிய விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், ""நடைமுறை அரசியலில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி என அதிபர் மஹிந்த ராஜபக்ஷ கருதப்படுகிறார்'' என்று குறிப்பிட்டி ருந்தார்.

வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், பின்னர் அவற்றைப் பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்து விடுவதுமான மூன்றாம் தர அரசியலின் யதார்த் தத்தைத் தாம் நன்கு புரிந்துகொண்ட யாதார்த்த வாதி என்பதை மஹிந்தர் உண்மையில் தவறா மல் நிரூபித்தே வருகிறார்

உதயன்

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.