Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா - இலங்கை ஒப்பந்தத்தின் இரகசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா - இலங்கை ஒப்பந்தத்தின் இரகசியம்

[14 - March - 2007]

ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஷ்ரீலங்காவுக்கும் இடையில் அண்மைக்காலமாக அதிகரித்து வந்துள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொடர்புகளை உறுதிசெய்யும் வகையில் இரண்டு நாடுகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நேரடியான யுத்த உதவிகளை வழங்கும் ஒப்பந்தமாக இல்லாது ஷ்ரீலங்கா படையினருக்கு அவசரமாகத் தேவைப்படும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து உதவிப் பொருட்களையும் வழங்குவதாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அத்தியாவசிய வழங்குதல்களும், பரஸ்பர சேவையும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு நாடுகளும் தமது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளையும் பொருட்களையும் ஒன்றுக்கொன்று பரிமாறிக்கொள்ள முடியும்.

ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய சோஷலிஸ்ட் சோவியத் குடியரசு (யூ.எஸ்.எஸ்.ஆர்.) எனப்பட்ட ரஷ்யாவுடன் தீவிரமான பனிப்போரில் ஈடுபட ஆரம்பித்த காலத்திலிருந்தே இவ்வாறான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை ஏனைய நாடுகளுடன் செய்து வந்துள்ளது. இவ்வாறு அமெரிக்கா செய்து கொண்ட முதலாவது முக்கிய ஒப்பந்தம் "நேட்டோ" (NATO) எனப்படும் வடஅத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பாகும். அந்த ஒப்பந்தத்துக்கு ஏற்ப அதில் அங்கத்துவம் வகிக்கும் நாடு ஒன்றின் பாதுகாப்புப் படையினருக்கு யுத்த நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் அனைத்து அவசர பாதுகாப்பு உதவிகளையும் அமெரிக்காவோ இன்னொரு நாடோ வழங்குதல் வேண்டும். அவ்வாறு ஒரு நாட்டால் வழங்கப்படும் பாதுகாப்பு உதவிகளுக்குச் சமமான பெறுமதியுள்ளது என்று கருதப்படும் சேவைகளையோ நிதி உதவிகளையோ ஒரு சந்தர்ப்பத்தில் திரும்ப வழங்கவேண்டிய கடப்பாடு உதவிபெற்ற நாட்டுக்கு உண்டு. இதுவே, அவ்வாறான ஒப்பந்தங்களின் அடிப்படையாகும்.

இவ்வாறான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் மூலம் ஒரு நாட்டின் பாதுகாப்புப் படையினர் தமக்கு அவசரமாகத் தேவையான உணவு, எரிபொருள், ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மற்றும் உபகரணங்களையும் மற்றொரு அங்கத்துவ நாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. இந்த வகையில் ஷ்ரீலங்கா படையினரும் மேற்படியான உதவிகளை அமெரிக்காவிடமிருந்து பெறும் சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆயினும், எந்த சந்தர்ப்பத்திலும் இந்த ஒப்பந்தம் நேரடியாக யுத்தத்துக்கு இராணுவ உதவி வழங்கும் ஒப்பந்தமாக அமையாது என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி ஷ்ரீலங்காவிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில்; "வழங்கலும் பரஸ்பர சேவையும் ஒப்பந்தம்" என்ற ஒப்பந்தம் ஒன்று ஷ்ரீலங்கா அரசுக்கும் ஐக்கிய அமெரிக்கா அரசுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டதாகவும் இதில் ஷ்ரீலங்கா சார்பாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் ஐக்கிய அமெரிக்கா சார்பாக றொபேட் ஓ. பிளேக் கைச் சாத்திட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வமான அறிக்கை எதனையும் ஷ்ரீலங்கா அரசு வெளியிடாதது குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சரும் பாதுகாப்புப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல பி.பி.சி. சிங்கள சேவைக்கு இதுபற்றிக் கூறுகையில்; அந்த ஒப்பந்தம் பற்றிய விபரம் எதிர்காலத்தில் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஐக்கிய அமெரிக்கா இவ்வாறான பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை இதுவரை சுமார் 84 நாடுகளுடன் செய்திருக்கும் நிலையில் ஷ்ரீலங்கா அரசு தற்போது அமெரிக்காவுடன் செய்திருக்கும் ஒப்பந்தம் விசேடமான ஒப்பந்தம் அல்ல எனவும் ஆயினும், ஷ்ரீலங்காவின் பிராந்திய நிலையைப் பொறுத்தவரையில் இந்த ஒப்பந்தம் பிரத்தியேகமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரீலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தத்தால் அண்டைய நாடாகிய இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு காரணமாகவே மேற்படி ஒப்பந்தம் விசேட தன்மையை உடையதாக உள்ளது.

ஷ்ரீலங்காவின் உள்நாட்டு யுத்த நிலைமை சம்பந்தமாக அமெரிக்க அரசு அதன் நிலைப்பாட்டை பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டு வந்துள்ளது. ஷ்ரீலங்கா படையினருக்குப் பயிற்சிகளும் மற்றும் பாதுகாப்பு உதவிகளும் வழங்குவதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தில் படையினரைப் பலப்படுத்துவதே நோக்கம் என்பதை அமெரிக்க அரசு ஏற்கனவே, அறிவித்துள்ளது. எனவே, தற்போது ஐக்கிய அமெரிக்கா ஷ்ரீலங்காவுடன் செய்துள்ள இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க அரசின் மேற்படி நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. மேலும், அமெரிக்க தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த ஒப்பந்தம் எந்தவொரு வகையிலும் இராணுவ ஒப்பந்தம் அல்ல எனக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இரண்டு நாடுகளும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தேவைகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தமாகவே அது அமைந்திருப்பது தெளிவு.

ஆயினும், அண்மைய நாடாகிய இந்தியாவைப் பொறுத்தவரை இது வேறுபட்ட பிரச்சினையாகும். கடந்த காலங்களில் ஐக்கிய அமெரிக்கா ஷ்ரீலங்காவுடன் உறவுகளைப் பலப்படுத்தி வந்தது இந்தியாவுக்குப் பொறுக்க முடியாத விடயமாகவே இருந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அமெரிக்காவுடன் நெருங்கி நட்புடைய நிலைப்பாட்டை கடைப்பிடித்த வேளையில் இந்திய அரசு வடக்கே செயற்பட்டு வந்த ஆயுதக் குழுக்களுக்கு யுத்தப் பயிற்சிகளையும் நிதியுதவிகளையும் வழங்கியது. எனவே, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதை அப்பொழுது இந்தியா சகித்துக் கொள்ளாத நிலையிலிருந்தது.

இவ்வாறு ஐக்கிய அமெரிக்காவும் ஷ்ரீலங்காவும் செய்துகொண்ட பாதுகாப்பு பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றி இந்திய பிரபல ஆங்கில நாளேடாகிய "த ஹிந்து" பத்திரிகை கருத்துத் தெரிவிக்கையில்; ஐக்கிய அமெரிக்கா ஷ்ரீலங்காவுடன் இவ்வாறான ஒரு ஒப்பந்தம் செய்வதற்கு பல வருடங்களாக எதிர்பார்த்திருந்ததாகவும் ஆயினும், எதிர்பார்ப்பு தொடர்ந்து காலதாமதமாக வந்துள்ளதென்றும் தெரிவித்துள்ளது. இந்திய மற்றுமொரு முன்னணி ஆங்கில நாளேடாகிய "இந்துஸ்தான் ரைம்ஸ்" தெரிவிக்கையில்; அமெரிக்கா ஷ்ரீலங்காவுடன் ஒப்பந்தம் செய்யும் நிலைப்பாடு இந்தியாவின் எதிர்ப்பு காரணமாகவே தாமதமாகி வந்துள்ளது எனவும், ஆயினும், இந்தியாவின் ஆதிக்காத்திலுள்ள இந்தப் பிராந்தியத்தில் ஐக்கிய அமெரிக்கா மத்தியஸ்த ரீதியில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா சாதகமாக ஆலோசிக்கக்கூடும். இதற்குக் காரணம் அண்மைக் காலங்களில் இந்தியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையே நட்புறவான தொடர்புகள் அதிகரித்து வந்துள்ளதாகும். இந்த அடிப்படையில் ஷ்ரீலங்காவிலுள்ள உள்நாட்டுப் பிரச்சினையை உரிய மார்க்க ரீதியில் அணுகி உதவிசெய்யும் நாடுகளாக இந்தியாவும் ஐக்கிய அமெரிக்காவும் உள்ளன எனவும் இதனாலேயே இந்திய அரசு இவ்வாறு ஐக்கிய அமெரிக்காவும் ஷ்ரீலங்காவும் செய்துகொண்ட பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் "இந்துஸ்தான் ரைம்ஸ்" குறிப்பிட்டுள்ளது.

இதனை உறுதிசெய்யும் வகையில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த தகவல்களில் இவ்வாறு அமெரிக்காவுக்கும், ஷ்ரீலங்காவுக்கும் இடையேயான ஒப்பந்தம் பற்றி இந்தியாவுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இந்திய அரசின் ஆதரவு பெறப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். தற்போதுள்ள யுத்த நிலைமையில் அமெரிக்க ஷ்ரீலங்கா இரண்டு நாடுகளினதும் பாதுகாப்புப் பிரிவினருக்கிடையே கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் இரு நாட்டினதும் இராணுவ பிரிவுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகும்.

எவ்வாறாயினும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட இராணுவ உதவிகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் முக்கியமாகக் கருதப்படுவதுபோலவே இந்தச் சந்தர்ப்பத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக வெளியிடப்படும் அரசியல் கருத்துகளும் விடயங்களும் மிக முக்கியமானவையாகும். -லங்காதீப விமர்சனம்: 11.03.2007-

தினக்குரல்

நன்றி கருப்பி,

இந்திய அரசும், காங்கிரசு கட்சியும் தமிழர்களை பொருத்தவரை மாற்றாந்தாய் மனதுடனே நோக்குகின்றன. எனக்கு தெரிந்தவரை அமேரிக்காவின் உதவி(தலையீடு) என்பது இன்னோரு ஈராக்கிய சரித்திரமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கருப்பி,

இந்திய அரசும், காங்கிரசு கட்சியும் தமிழர்களை பொருத்தவரை மாற்றாந்தாய் மனதுடனே நோக்குகின்றன. எனக்கு தெரிந்தவரை அமேரிக்காவின் உதவி(தலையீடு) என்பது இன்னோரு ஈராக்கிய சரித்திரமே.

every state in india view Tamils as their enemies.... including the Dravidian states whose languages are very close and born from Tamil.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி சொல்லுங்கோ வெங்கட் இந்த காங்கிறிஸ் ஆட்சிக்கு வருவதற்கு நல்லதொரு ஆயுதமாக தமிழர்களாகிய எம்மைக் கையாலுகின்றனர் அதை விடஅமெரிக்காஇலங்கையிள்கால் ஊன்றுவதற்கும் நாங்கள்தான் ஆயுதமாக அமையப்போகின்றோமோ அப்படிநடக்கவீடமாட்டோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.