Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி மீறிவிட்டது!

Featured Replies

ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி மீறிவிட்டது!

 

ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி மீறிவிட்டது!

உள்ளுராட்சி தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மீறிவிட்டது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்  குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி இடையில் அண்மையில் இடம்பெற்ற  முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து அண்மையில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

கலந்துரையாடலின் இறுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தமக்குள் இருந்த  பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாகவும் அறிவித்திருந்தனர்.அன்றை கூட்டத்தில் ஆசனப்பங்கீடுகள் குறித்தும் கலந்துiராயடப்பட்டிருந்தது.

குறிப்பாக அதில் வலி மேற்கு பிரதேச சபை, முதல் இரண்டு வருடங்கள் புளொட்டுக்கும் இறுதி இரண்டு வருடங்கள் தமிழரசுக்கட்சிக்கும் என இணக்கம் காணப்பட்டதுடன், மானிப்பாய் பிரதேச சபை முதல் இரண்டு வருடம் தமிழரசுக்கட்சிக்கும் இறுதி இரண்டு வருடங்கள் புளொட்டுக்கும் என இணக்கம் காணப்பட்டு 3 கட்சி தவைர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இது குறித்து மீண்டும் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில்  கூட்டம் கூட்டபட்டது. அதில் தமிழரசுக்கட்சி வலி மேற்கு பிரதேச சபையை முழுமையாக தாம் எடுத்துக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் ஏமாற்றம் அடைந்த புளொட் அமைப்பு தாம் இதற்கு இணங்க முடியாது எனவும், தமிழருசுக்கட்சியின் அதிகாரத்தை வைத்தே இதை எடுத்துக்கொண்டுள்ளீர்கள் என தெரிவித்து கூட்டத்தில் இருந்து முறுகல் நிலையில் வெளியேறியுள்ளனர்.  

இது குறித்து புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனை தொடர்பு கொண்டு கேட்ட போது, எமக்கு சபைகள் பிரித்து கொடுப்பது தொடர்பில் முன்னர் கலந்துரையாடப்பட்ட போது  இணக்கம் தெரிவித்திருந்தனர்.  பின்னர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி அதை மீண்டும் பறித்துக்கொண்டுள்ளனர். இதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை உறுதிமொழி வழங்கி ஏமாற்றி விட்டனர்

https://news.ibctamil.com/ta/internal-affairs/sitharthan-speeach-in-jaffna

  • தொடங்கியவர்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இருந்து புளொட் ஒதுங்கும்?
 

எஸ்.நிதர்ஷன் 

தேர்தல் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் இணக்கம் காணப்பட்ட விடயங்களில், இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகச் செயற்படுவது தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ள புளொட் அமைப்பு, தேர்தலில் இருந்தே ஒதுங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாகத் தெரியவருகின்றது. 

இதேவேளை, கூட்டமைப்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை மீறி, தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் தன்னிச்சையாகச் செயற்பட்டு வருவதால், இத்தேர்தலில் இருந்தே ஒதுங்கியிருக்கும் நிலையை எடுக்க வேண்டும் என, கட்சியின் உயர் மட்டத்தினர் கட்சித் தலைமைக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அறியமுடிகிறது.   

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/உள்ளூராட்சிமன்றத்-தேர்தலில்-இருந்து-புளொட்-ஒதுங்கும்/71-208903

  • தொடங்கியவர்

தமி­ழ­ர­சுக்­கட்சி மீறி­விட்­டது புளொட் கடும் அதி­ருப்தி

 

(ஆர்.ராம்)

உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாக வீட்டுச் சின்­னத்தில்   கள­மி­றங்­கு­வ­தற்கு கூட்­ட­மைப்பின் பங்­கா­ளி­கட்­சி­க­ளுக்­கி­டையில் செய்து கொள்­ளப்­பட்ட ஆச­னப்­பங்­கீடு குறித்த புரிந்­து­ணர்வு ஒப்­பந்த்­தினை தமி­ழ­ர­சுக்­கட்சி மீறி­விட்­ட­தாக தமி­ழீழ மக்கள் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) கடும் அதி­ருப்தி வௌியிட்­டுள்­ளது. 

உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் எதிர்­வரும் பெப்­ர­வரி 17ஆம் திக­திக்கு முன்­ன­தாக நடை­பெறும் என தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­துள்ள நிலையில் தற்­போது வேட்பு மனுக்­களை தாக்கல் செய்யும் செயற்­பா­டுகள் சூடு­பி­டித்­துள்­ளன.

இவ்­வா­றி­ருக்­கையில் முன்­ன­தாக வடக்­கி­ழக்கில் மட்டும் தனித்துப் போட்­டி­யிடும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினுள் உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் சர்ச்­சைகள் எழுந்­தி­ருந்­தன. மூன்று சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு பின்­னரும் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டாத நிலை­மையே நீடித்து வந்­தி­ருந்­தது.

இத்­த­கைய நிலையில் குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் தங்­போது இருக்கும் பங்­கா­ளிக்­கட்­சி­களில் ஒன்­றான தமிழிழ விடு­தலை இயக்கம் (ரெலோ) தமிழர் விடு­தலை கூட்­ட­ணி­யின்­ உ­தய சூரியன் சின்­னத்தில் உத­ய­மா­கி­யி­ருக்கும் புதிய கூட்­ட­ணியில் இணைந்து கொள்­வது தொடர்­பான பேச்­சுக்­க­ளையும் முன்­னெ­டுக்­கின்ற அள­விற்கு நிலைமை சென்­றி­ருந்­தது.

எவ்­வா­றா­யினும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒற்­றுமை தற்­போ­தைய சூழலில் அவ­சியம் எனவும் ஆசனப் பங்­கீட்­டுக்­கான பிரிந்­து­செல்­வ­தென்­பது பொருத்­த­மற்­ற­தெ­னவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் விடுத்த அறி­வு­றுத்­த­லுக்கு அமை­வாக கடந்த 9ஆம் திகதி சனிக்­கி­ழமை அவ­ரு­டைய தலை­மையில் கொழுப்பில் உள்ள எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான நீண்ட கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றி­ருந்­தது.

இந்தக் கலந்­து­ரை­யா­டலின் ஈற்றில் மூன்று கட்­சி­களும் தனித்­த­னி­யாக எத்­தனை உள்­ளு­ராட்சி மன்­றங்கள், பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்ற மன்­றங்­களில் 50சத­வீதம் தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கும், பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுக்கு தலா 25சத­வீதம் என்றும் தலைவர், பிரதி தலைவர் பத­வி­களில் பிரச்­சினை காணப்­படும் மன்­றங்­களில் தலா இரண்­டரை ஆண்­டுகள் வீதம் பதவி வகிப்­ப­தெ­னவும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்டு ஈற்றில் பங்­கா­ளி­கட்­சி­களின் தலை­வர்­களான மாவை.சோ.சேனா­தி­ராஜா, செல்வம் அடைக்­க­ல­நாதன், சித்­தார்த்தன் ஆகியோர் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்­றிலும் கைச்­சாத்­திட்­டனர்.

இருப்­பினும் யாழ்ப்­பா­ணத்தில் புளொட்­டுக்கு இரண்டு உள்­ளு­ராட்சி மன்­றங்­களும் மூன்­றா­வதில் விகி­தா­சார அடிப்­ப­டையில் பங்­கீடு அளிப்­ப­தென்றும் எனினும் அவை எந்த மன்­றங்கள் என்­பது தொடர்­பிலும் பின்னர் கலந்­து­ரை­யா­டு­வ­தென்றும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில் நேற்று முன்­தினம் இரவு இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யி­ன­ருக்கும், புளொட்­டிற்கும் இடை­யி­லான சந்­திப்­பொன்று நடை­பெற்­றி­ருந்­தது. இச்­சந்­திப்பின் போது புளொட் தரப்பில் அதன் தலைவர் சித்­தார்த்தன் எம்.பி தலை­மை­யி­லான குழ­வினர் கலந்து கொண்­டி­ருந்­தனர். அதே­போன்று தமி­ழ­ர­சுக்­கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை.சோ.சேனா­தி­ராஜா எம்.பி தலை­மை­யி­லான குழ­வினர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போது புளொட், தமக்கு வாக்­கு­றதி அளித்­ததன் பிர­காரம் மானிப்பாய், உடுவில் ஆகி­ய­வற்றை முழு­மை­யா­கவும் மற்றும் வலி மேற்கில் தமக்­கான விகி­தா­சா­ரத்­தி­னையும் வழங்க வேண்டும் என்று கோரி­ய­தோடு ஏற்­க­னவே சாவ­கச்­சே­ரிக்­கான வேட்­பு­ம­னுவில் தமது கட்சி உறுப்­பி­னர்­களின் பெயர்கள் உள்­ளீர்க்­கப்­ப­ட­வில்லை அதே­போன்று தான் திரு­கோ­ண­ம­லையில் உள்ள நான்கு சபை­க­ளிலும் தமது கட்­சியின் உறுப்­பி­னர்கள் உள்­ளீர்க்­கப்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அது தொடர்பில் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யா­னது முழு­மை­யான எவ்­வித பதில்­க­ளையும் வழங்­கா­த­தோடு வலி.மேற்கில் பங்­கீட்­டினை வழங்­கு­வ­தற்கு தாம் தயா­ராக இல்­லை­யென்றும் அது தமது கட்­சிக்கு முழு­மை­யா­கவே வேண்டும் என்றும் அழுத்­த­மாக கூறி­யது. இதனால் இரு­த­ரப்­பி­ன­ரி­டை­யேயும் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் ஏற்­பட்ட நிலையில் ஏற்­க­னவே கைச்­சாத்­தான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் மீறப்­ப­டு­கின்­றது என புளொட் சுட்­டிக்­காட்­டி­யது.

எனினும் இரு தரப்­பி­ன­ரி­டை­யேயும் எவ்­வி­த­மான இணக்­கப்­பா­டு­களும் எட்­டாப்­ப­டா­த­தோடு புளொட் தலைமை தமி­ழ­ர­சுக்­கட்சி மீது அதி­ருப்­தியை வௌிட்ட நிலையில் கூட்டம் நிறை­வுக்கு வந்­தி­ருந்­தது.

இது­கு­றித்து புளொட் தலைவர் சித்­தார்த்தன் எம்.பி தெரி­விக்­கையில், நாம் ஏற்­க­னவே ஆசனப் பங்­கீடு தொடர்பில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்றில் கைச்­சாத்­திட்­டுள்ளோம். தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சின்­னத்­தினை நாம் பயன்­ப­டுத்­து­வதால் அந்த அதி­கா­ரத்தின் நிமித்தம் அவர்கள் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தினை மீறிச் செயற்­ப­டு­கின்­றார்கள். இதன் கார­ண­மாக எட்­டப்­பட்ட இணக்­கப்­பா­டுகள் உடைக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வி­டயம் குறித்து எமது மத்­திய குழு கூடி ஆராய்ந்த பின்னர் நாம் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­கள் குறித்த அறி­விப்போம் என்றார்.

இதேவேளை, இலங்கை தமிழரசுக்கட்சியுடன் ஆசனப்பங்கீடு தொடர்பில் புளொட் அமைப்பு முரண்பட்டுள்ள நிலையில் அந்த அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாது விலகியிருக்குமாறு அவ்வமைப்பின் தலைமைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. மேலும் புளொட் என்பது கட்டமைக்கப்பட்ட அமைப்பாகவே செயற்பட்டு வந்துள்ள நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் விட்டுக்கொடுப்புக்களைச் செய்வது பொருத்தமற்ற அரசியல் நகர்வாக அமையும் எனவும் குறித்த சிரேஷ்ட உறுப்பினர்கள் தலைமைக்கு அறிவுத்தல் விடுத்து வருவதாக புளொட்டின் உள்ளடகத் தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.