Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோருக்கான அலுவலகம் பாதிக்கப்பட்டோரின் பங்களிப்பு அவசியம்

Featured Replies

காணாமல் போனோருக்கான அலுவலகம் பாதிக்கப்பட்டோரின் பங்களிப்பு அவசியம்

Sp10-1788b9ba3554b74bf3c2920d5c149cd71c57ce52.jpg

 

தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐ.நா. குழு வலியுறுத்தல்

 

  • வலுக்­கட்­டா­ய­மாக பெறும் குற்­ற­ஒப்­புதல்   வாக்­கு­மூ­லங்­களில் தங்­கி­யி­ருத்தல் 
  • சுதந்­தி­ரத்­துக்­கான உரி­மைக்கு    மதிப்­ப­ளிப்­ப­தில்லை  
  •  விளக்க மறி­யலை அதி­க­ளவில்  பயன்­ப­டுத்­துதல்   
  • காலம் கடந்த சட்ட முறை­மைகள்  சித்­தி­ர­வ­தைகள் தொடர்­கின்­றன  
  •  பயங்­க­ர­வாத தடை    சட்­டத்தை நீக்­குங்கள் 

 

(ரொபட் அன்­டனி) 

காணாமல் போனோர் தொடர் பில் ஆராய்­வ­தற்­கான அலு­வ­ல கம் உட­ன­டி­யாக தொழிற்­பாட்­டுக்கு வர­வேண்டும். இதனை அரசாங்கம் விரைந்து உறு­திப்­ப­டுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்தும் செயற்­பாட்டில் பாதிக்­கப்­பட்டோர், சிவில், சமூக அமைப்­பினர் இடம்­பெ­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று இலங்­கைக்கு விஜயம் செய்த தன்­னிச்­சை­யாக தடுத்­து­வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­குழு உறுப்­பி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை இலங்கை அர­சாங் கம் உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும். தாம­த­மின்றி அந்த சட்­டத்தை அகற்­றி­வி­டு­மாறு அர­சாங்­கத்தை கோரு­கின் றோம். அத்­துடன் அதற்கு பதி­லாக தயா­ரிக்­கப்­படும் புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மூ­ல­மா­னது சர்­வ­தேச தரங்­க­ளுக்கு அமை­வாக இருக்­க­வேண்டும். பொலிஸ் நிலை­யங்­களில் சட்­டத்­த­ர­ணியின் பிர­சன்னம் இன்றி தடுத்­து­வைக்­கப்­பட்­டோரை அதி­கா­ரிகள் விசா­ரணை செய்யும் விடயம் பற்றி கவ­லைப்­ப­டு­கிறோம் என்றும் ஐ.நா. செயற்­குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்­டுள்ள ஜெனிவா பிரே­ர­ணையின் பிர­காரம் விசேட பொறுப்பு கூறல் பொறி­மு­றையை முன்­வைக்­கு­மாறு  அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கிறோம் என்றும் ஐ.நா. செயற்­கு­ழுவின் பிர­தி­நி­திகள் குறிப்­பிட்­டுள்­ளனர்.  

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட தன்­னிச்­சை­யாக தடுத்­து­வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­குழு உறுப்­பி­னர்­க­ளான ஹோஸே அன்­ரோ­னியோ, எலினா ஸ்டீனட், லீ டொமே, ஸிட்­டோன்ஜி ரோலன்ட் ஆகியோர் தமது விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்­பும்முன் நேற்று கொழும்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்து தமது மதிப்­பீ­டு­களை வெ ளியிட்­ட­போதே இவற்றைக் குறிப்­பிட்­டனர்.

இதன்­போது அவர்கள் தமது முதற்­கட்ட மதிப்­பீட்டு அறிக்­கை­யையும் வெளி­யிட்­ட­துடன் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கும் பதி­ல­ளித்­தனர். செய்­தி­யாளர் சந்­திப்பில் ஐ.நா. பிர­தி­நி­திகள் தொடர்ந்து தகவல் தெரி­விக்­கையில்,

எமது இலங்கை விஜ­யத்தின் போது நாங்கள் தடுப்பு முகாம்கள், பொலிஸ் நிலை­யங்கள், சிறைச்­சா­லைகள், விளக்­க­ம­றியல் சிறைச்­சா­லைகள் உள்­ளிட்ட 30 இடங்­க­ளுக்கு விஜயம் செய்து நிலை­மை­களை ஆராய்ந்தோம்.

அத்­துடன் அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள், பொலிஸ் மற்றும் உயர்­மட்ட விசா­ரணை பிரி­வு­களின் அதி­கா­ரிகள், முப்­ப­டை­களின் தள­ப­திகள், உள­வுப்­பி­ரிவு பிர­தா­னிகள், குடி­வ­ரவு குடி­ய­கழ்வு கட்­டுப்­பாட்­டாளர் நாயகம், பிர­தம நீதி­ய­ரசர், சட்­டமா அதிபர், நீதித்­துறை முக்­கி­யஸ்­தர்கள், சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் உள்­ளிட்­டோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள சுமார் நூறு­பேரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினோம்.

இலங்கை தற்­போது ஐக்­கிய நாடுகள் சபை­யு­டனும், சர்­வ­தேச சமூ­கத்­து­டனும் இணைந்து செயற்­ப­டு­கின்­றமை தொடர்பில் எமது செயற்­குழு பாராட்­டு­கின்­றது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை அர­சாங்கம் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நாம் அவ­தா­னத்தில் கொள்­கிறோம். பல­வந்­த­மாக காணா­மல்­போதல், தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் போன்ற விட­யங்­களை ஆராய்தல் தொடர்­பாக விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அண்­மையில் உரு­வாக்­கப்­பட்ட காணாமல் போனோர் அலு­வ­லகம் உட­ன­டி­யாக தொழிற்­பாட்­டுக்கு வர­வேண்டும். இதனை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்த வேண்டும். இந்த செயற்­பாட்டில் பாதிக்­கப்­பட்டோர், சிவில் சமூக அமைப்­புக்கள் இடம்­பெ­ற­வேண்டும். அது­மட்­டு­மன்றி உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு ஒன்­றையும் நட்­ட­ஈடு வழங்கும் நிகழ்ச்­சி­திட்டம் ஒன்­றையும் உட­ன­டி­யாக ஸ்தாபிக்­கு­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கிறோம்.

அத்­துடன் ஜெனிவா பிரே­ர­ணையின் பிர­காரம் பொறுப்பு கூறல் பொறி­மு­றையை முன்­வைக்­கு­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கிறோம். கடந்­த­கால மீறல்­களை ஆரா­யாமல் தன்­னிச்­சை­யாக தடுத்­து­வைத்தல் தொடர்­பாக ஆராய முற்­ப­டு­வது அவற்றை குறைத்து மதிப்­பி­டு­வ­தாக அமையும்.

இலங்கை தற்­போது அமைதி நிலைக்கு திரும்­பி­யுள்­ளது. எனவே தற்­போது சட்­டத்தின் ஆட்சி உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். சுதந்­தி­ரத்தை தடுக்கும் எந்த செயற்­பா­டு­களும் இடம்­பெ­றக்­கூ­டாது. எனினும் எமது செயற்­கு­ழு­வா­னது சுதந்­தி­ரத்­திற்­கான உரி­மைக்கு மதிப்­ப­ளிக்­காத தன்­மையை காண்­கின்­றது. குறிப்­பாக சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­துவோர் நீதித் துறை­யினர் மற்றும் ஏனைய அதி­கார சபைகள் தனி­நபர் சுதந்­தி­ரத்­திற்­கான உரி­மை­க­ளுக்கு இன்னும் மதிப்­ப­ளிக்­க­வில்லை.

தனி­ந­பர்­களின் சுதந்­தி­ரத்தை இழக்க செய்யும் தற்­போ­தைய அதி­கா­ரங்கள் பரந்­து­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு விரி­வாக்­கப்­பட்­டுள்­ளன. அதா­வது பொலிஸ் நிலை­யங்கள், சிறைச்­சா­லைகள், இளம் வய­தி­ன­ருக்­கான இல்­லங்கள், முதியோர் இல்­லங்கள், மன­நல சுகா­ர­தார நிலை­யங்கள், முன்னாள் போரா­ளு­க­ளுக்கும், போதை­வஸ்­துக்­க­ளுக்கு அடி­மை­யா­னோ­ருக்கும் நலி­வுறும் சூழ்­நி­லையில் வாழ்­வோ­ருக்கும் உரிய புனர்­வாழ்வு நிலை­யங்கள் இவற்றுள் அடங்கும்.

மிக அதி­க­ள­வாக விளக்­க­ம­றியல் சிறை­களை பயன்­ப­டுத்­துதல். காலம்­க­டந்த சட்­ட­மு­றை­மைகள், சித்­தி­ர­வ­தைகள், வலுக்­கட்­டா­ய­மாக பெறும் குற்­ற­ஒப்­புதல் வாக்­கு­மூ­லங்­களில் தங்­கி­யி­ருத்தல், தடுத்து வைப்­ப­தற்­கான செயற்­திறன் குறைந்த மாற்­று­வ­ழிகள் என்­பன உட­ன­டி­யாக மறு­சீ­ர­மைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

1979ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­கு­மாறு அர­சாங்­கத்தை கோரு­கின்றோம். இந்த சட்டம் நான்கு தசாப்­தங்­க­ளாக தன்­னிச்­சை­யாக தடுத்­து­வைப்­ப­தற்கு முக்­கிய கார­ணி­யாக அமைந்­துள்­ளது. தடுத்து வைக்­கப்­பட்டோர் குறிப்­பாக கைது­செய்­யப்­படும் தரு­ணத்­தி­லி­ருந்து அவர்­களின் தொடக்க வாக்­கு­மூ­லத்தை பதி­வு­செய்­த­வற்கு முன்னர் சட்ட உதவி பெறும்­வ­கை­யி­லான உரி­மை­களை அனு­ப­விப்­ப­தில்லை.

விசே­ட­மாக பொலிஸ் நிலை­யங்­களில் சட்­டத்­த­ரணி பிர­சன்­ன­மின்றி தடுத்­து­வைக்­கப்­பட்­டோரை அதி­கா­ரிகள் விசா­ரணை செய்யும் விடயம் தொடர்பில் கவ­லைப்­ப­டு­கிறோம். தற்­போ­தைய நிலையில் இலங்கை சிறைச்­சா­லை­களில் 20598 பேர் உள்­ளனர். இவர்­களில் 11009 பேர் விசா­ர­ணைக்­காக தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளனர். அதா­வது அரை­வா­சிக்கும் மேற்­பட்டோர் விசா­ர­ணைக்கா காத்­தி­ருக்­கின்­றனர்.

இலங்­கையில் விசா­ர­ணைக்­காக காத்­தி­ருப்­ப­வர்கள் தடுத்­து­வைக்­கப்­ப­டு­வது மூன்று முதல் நான்கு வருட காலத்தை கொண்­டி­ருப்­ப­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. எனினும் இறுதி தீர்ப்பு வழங்­கும்­போது இந்த விசா­ரணை காலத்தில் தடுத்­து­வைக்­கப்­பட்ட காலப்­ப­குதி கவ­னத்தில் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. சிலர் விசா­ர­ணைக்­காக நீண்­ட­காலம் தடுத்­து­வைக்­கப்­பட்டு பின்னர் எந்­த­வி­த­மான குற்­றச்­சாட்­டு­மின்றி விடு­த­லை­செய்­யப்­ப­டு­கின்­றனர். எந்­த­வி­த­மான நட்­ட­ஈடும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தில்லை.

அர­சாங்கம் பிணை வழங்கும் செயற்­பாட்டை ஊக்­கு­விக்க வேண்டும். விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­த­வேண்டும். நீதி­மன்ற செயற்­பா­டு­க­ளையும் துரி­தப்­ப­டுத்த வேண்டும். இறுதி தீர்ப்பு வழங்­கும்­போது விசா­ரணை காலத்தில் தடுத்து வைக்­கப்­பட்ட காலப்­ப­குதி கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்டும்.

பொலிஸ் நிலை­யங்கள், குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு, பயங்­ர­கா­ர­வாத தடுப்­புப்­பி­ரிவு ஆகி­ய­வற்றில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளிடம் குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லங்கள் பெறு­தற்­காக சித்­தி­ரை­வ­தைகள் மேற்­கொள்­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எந்­த­வொரு குற்­ற­ஒப்­புதல் வாக்­கு­மூ­லமும் நீதி­பதி முன்­பா­கவே வழங்­கப்­ப­ட­வேண்டும். இலங்­கையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் சட்ட ரீதி­யாக அதனை சவா­லுக்கு உட்­ப­டுத்­து­வது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான சாச­னத்தின் கடப்­பா­டு­களை நிறை­வேற்­று­மாறு ஐ.நா. செயற்­குழு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்­றது. தற்போதைய நிலைமையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 69பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 59 பேர் தமிழர்கள். மேலும் 17பேர் இன்னும் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் வவுனியாவில் இருந்த ஒரு வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றியுள்ளனர். ஆனால் அங்கு ஒரு தமிழ் மொழிப்பெயர்பாளர் மட்டுமே இருக்கின்றார். இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக ஆராயவேண்டும். கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தற்போதைய நிலைமையில் எந்தவொரு தமிழ் பேசும் நீதியரசர்களும் இல்லை என எமது குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இதுதொடர்பில் நீதியானமுறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கேள்வி:- நீங்கள் ஜோசப் முகாமுக்கு விஜயம் செய்தீர்களா? அங்கு நிலைமை எப்படி உள்ளது?

பதில்:- ஆம் நாம் விஜயம் செய்தோம். அந்த இராணுவ தளத்திற்கும் நாம் விஜயம் செய்தோம். அந்த வளாகத்தின் அனைத்து பகுதிகளையும் பார்ப்பதற்கு நாம் அனுமதிக்கப்பட்டோம். நாம் சில கூடங்களுக்கும் விஜயம்செய்தோம். எனினும் அங்கு எதுவும் அசாதாரணமாக இருப்பதை நாம் அவதானிக்கவில்லை.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.