Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஐ.நா கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் ஐ.நா கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஜபுதன்கிழமைஇ 14 மார்ச் 2007இ 18:11 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ

மனித உரிமைகள் சபையில் மகிந்த சமரசிங்கவினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் போதுமானவை அல்ல. எனவே இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்.

மேற்கண்டவாறு வலியுறுத்தப் போவதாக அமெரிக்க நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹியூமன் றைட் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதன் மூத்த சட்டத்துறை ஆலோசகர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்ததாவது:

மக்கள் தேவையில்லாது துன்பத்தை அனுபவிப்பது நிறுத்தப்பட வேண்டும்இ எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு உண்மையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எனவே நீண்டகால ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புக் குழு இதற்கு அவசியமானது.

மகிந்த சமரசிங்கவின் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கான அழைப்பை வரவேற்கிறோம். இந்த பிரச்சினைகளின் கடுமையான நிலைமைகளை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மிக விரைவாக இலங்கைக்கு செல்வார்கள் என நாம் நம்புகிறோம்.

எனினும் அரசினாலும் விடுதலைப் புலிகளினாலும் கடுமையாக மீறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இது போதுமானதாக இருக்காது என அவர் தெரிவித்தார்.

வடக்கு - கிழக்கில் இடம்பெற்று வரும் மோதல்களினால் 200இ000 மக்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 15இ000 மக்கள் இந்தியாவிற்கு சென்றுள்ளதாகவும் அது மேலும் தெரிவித்ததுடன் இடம்பெயர்ந்த மக்கள்இ அரச ஆதரவு பெற்ற துணை இராணுவக்குழுக்களினால் இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.

இதனிடையே சிறிலங்காவில் இடம்பெற்று வரும் வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தாம் கவலை கொண்டுள்ளதாகவும்இ சிறிலங்கா ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சுவிற்சர்லாந்தின் வெளிவிவகாரத்துறையின் தலைவர் மைகேலின் கமி றே தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=31121

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.