Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய பொறிமுறை யோசணையை முன்வைக்கவுள்ள ஹுசைன்?

Featured Replies

புதிய பொறிமுறை யோசணையை முன்வைக்கவுள்ள ஹுசைன்?

 

உள்­நாட்டில் தேர்தல் தொடர்­பான பர­ப­ரப்­புக்கள் சூடு­பி­டித்­துள்ள நிலையில் அதே­கா­லத்தில் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பான விட­யங்கள் தீவி­ர­ம­டைய ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. தேர்தல் காலத்தில் இலங்­கையில் பல்­வேறு விட­யங்கள் பிர­சா­ரப்­ப­ணி­களின் போது பேசப்­ப­ட­வுள்ள நிலையில் ஜெனிவா விவ­கா­ரமும் முக்­கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அதா­வது எதிர்­வரும் பெப்­ர­வ­ரி­மாதம் 27ஆம் திக­தி­யி­லி­ருந்து மார்ச் மாதம் 23 ஆம் திக­தி­வரை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்ள நிலையில் தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் அதுவும் பேசு­பொ­ரு­ளாக இருக்கும் என்று கரு­தப்­ப­டு­கின்­றது.

இந்தக் கூட்டத் தொடர் இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக காணப்­ப­டு­கின்­றது. அதா­வது ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ரணை 2017 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டு வருட நீடிப்­புக்கு உள்­ளா­கி­யது.

அந்­த­வ­கையில் 2019ஆம் ஆண்டு வரை அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டிய இந்த பிரே­ரணை எவ்­வாறு 2017ஆம் ஆண்­டி­லி­ருந்து 2018 ஆம் ஆண்டு மார்ச் வரை அமுல்­ப­டுத்­தப்­பட்­டது என்­பது தொடர்­பான மீளாய்வு இம்­முறை 37 ஆவது கூட்டத் தொடரில் செய்­யப்­ப­ட­வுள்­ளது.

எனவே, இந்தக் கூட்டத் தொடர் இலங்­கைக்கு மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக அமை­ய­வி­ருக்­கி­றது. அதா­வது வழ­மை­போ­லன்றி இம்­முறை ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான விவ­காரம் தீவி­ர­மான நிலையை எட்­ட­வுள்­ள­துடன் இலங்கை மீது கடும் அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­ப­டு­மென எதிர்­பார்க்­க­வும்­ப­டு­கி­றது.

இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் இது­வரை நீதி கிடைக்­காமல் காத்­துக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அதற்­கான செயற்­பா­டுகள் இது­வரை ஆரோக்­கி­ய­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு பர­வ­லா­கவே காணப்­ப­டு­கின்­றது. அதா­வது மக்கள் நீதிக்­காக தொடர்ச்­சி­யாக போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்ற போதிலும் அந்தப் போராட்டம் தொடர்ந்தும் கானல் நீரா­கவே மாறிக்­கொண்­டி­ருப்­ப­தாக விசனம் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

நீதிக்­காக முன்­னெ­டுக்­கப்­படும் இந்தப் போராட்­டங்கள் தொடர்பில் அர­சாங்கம் உரிய முறையில் கவனம் செலுத்­து­வ­தில்லை என்ற விட­யங்கள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இங்கு உண்­மையில் எவ்­வா­றான சூழல் நில­வி­யது என்­பது தொடர்­பான விளக்­கத்தை நாம் பார்க்­க­வேண்­டி­யுள்­ளது. கடந்த மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

 யுத்தம் முடிந்­ததும் யுத்­தத்­தின்­போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் இடம்­பெற்­ற­தா­கவும் இதனால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஒரு நீதிப்­பொ­றி­மு­றையின் கீழ் நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்­டு­மென சர்­வ­தேச மட்­டத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டது. அதா­வது நீதி வழங்­கு­வ­தற்­கான இந்த நீதிப்­பொ­றி­மு­றை­யா­னது நம்­ப­க­ர­மா­ன­தாக அமை­ய­வேண்டும் எனக் கூறப்­பட்­டது.

அத்­துடன் யுத்தம் முடி­வ­டைந்­தவுடன் ஒரு­சில தினங்­களில் ஐக்­கிய நாடுகள் முன்னாள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்­கைக்கு விஜயம் செய்து அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் கூட்­ட­றிக்­கை­யொன்­றையும் வெளி­யிட்டார். அதில் பல்­வே­று­பட்ட விட­யங்­களும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன. அதா­வது யுத்த காலத்தில் நிகழ்ந்­த­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்­பாக நம்­ப­க­ர­மான விசா­ரணை நடத்­தப்­பட்டு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்டும் என கூறப்­பட்­டி­ருந்­தது.

 ஆனால் அதற்கு பின்னர் எதுவும் ஆரோக்­கி­ய­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. தொடர்ந்து 2009ஆம் ஆண்டின் இறு­திப்­ப­கு­தியில் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை ஒரு பிரே­ர­ணையைக் கொண்­டு­வந்­தது. அந்தப் பிரே­ர­ணையில் இலங்கை வெற்­றி­பெற்­றது.

எனினும் தொடர்ச்­சி­யாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்டும் விட­யத்தில் ஆரோக்­கி­ய­மான நட­வ­டிக்­கைகள் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு இலங்கை நம்­ப­க­ர­மான உள்­ள­க ­வி­சா­ர­ணையை மேற்­கொண்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்டும் என வலி­யு­றுத்தி ஒரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது.

அந்த பிரே­ரணை அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட நிலையில் ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரி­மை­பே­ர­வையில் அது மேல­திக வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டது. ஆனால் அப்­போ­தைய மஹிந்த ராஜ­ப க் ஷ அர­சாங்கம் அதனை முழு­மை­யாக நிரா­க­ரித்­தது. அதன்­பின்னர் 2013 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் அமெ­ரிக்கா உள்­ளிட்ட சில நாடு­க­ளினால் மற்­று­மொரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது.

அந்தப் பிரே­ர­ணை­யிலும் உள்­ள­க­வி­சா­ர­ணையில் நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டது. ஆனால் அப்­போ­தைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் அத­னையும் நிரா­க­ரித்­தது. இந்­நி­லையில் 2014ஆம் ஆண்டு ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வை­யினால் மற்­று­மொரு பிரே­ரணை இலங்கை தொடர்­பாக கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்தப் பிரே­ர­ணையில் சற்று வித்­தி­யா­ச­மான பரிந்­துரை முன்­வைக்­கப்­பட்­டது.

இலங்­கையில் நடந்­த­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள், தொடர்­பாக ஐக்­கி­ய­நா­டுகள் மனி­தா­பி­மான அலு­வ­லகம் ஒரு விசா­ர­ணையை நடத்­த­வேண்­டு­மென அந்தப் பிரே­ர­ணையில் கூறப்­பட்­டது.

எனினும் அத­னையும் நிரா­க­ரித்த அப்­போ­தைய மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ அர­சாங்கம் ஐ.நா.வின் குறித்த விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தில்லை என்றும் விசா­ர­ணை­யா­ளர்­களை இலங்­கைக்குள் அனு­ம­திப்­ப­தில்லை என்றும் அறி­வித்­தது. எனினும் ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் ஜெனி­வா­வி­லி­ருந்­த­வாறு விசா­ரணை நடத்­தி­யது. அந்த விசா­ரணை அறிக்கை தயா­ரா­கிக்­கொண்­டி­ருந்­த­போது இலங்­கையில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­டது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் புதிய அர­சாங்கம் உரு­வா­கி­யது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக பத­வி­யேற்றார். புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் ஐக்­கி­ய­நா­டுகள் சபை­யு­டனும் சர்­வ­தேச சமூ­கத்­து­டனும் சுமு­க­மான உறவை பேண ஆரம்­பித்­தது. அதன்­பின்னர் சர்­வ­தேச சமூ­கமும் ஐக்­கி­ய­ நா­டுகள் சபையும் இலங்­கை­மீ­தான அழுத்­தங்­களை குறைத்­த­துடன் ஆத­ரவு வழங்க ஆரம்­பித்­தது. அதற்­கேற்­ற­வ­கையில் புதிய அர­சாங்­கமும் சர்­வ­தே­சத்­திற்கும் ஐ.நா.விற்கும் பல வாக்­கு­று­தி­களை வழங்­கி­யது.

அதன் பின்­னரே 2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான ஒரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அந்தப் பிரே­ர­ணையில் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுடன் கூடிய வகையில் நீதிப்­பொ­றி­முறை விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மெனக் கூறப்­பட்­டி­ருந்­த­துடன் அந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் அனு­ச­ர­ணையும் வழங்­கி­யி­ருந்­தது.

அதன் பின்னர் பாதிக்­கப்­பட்ட மக்கள் விட­யத்தில் ஒரு­சில ஆரோக்­கி­ய­மான நட­வ­டிக்­கைகள் இலங்கை அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­பட்­டி­ருந்­தாலும் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யத்தில் விரை­வான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றி­ருக்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்­பித்­தனர். குறிப்­பாக காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் காணா­மல்­போனே தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­தக்­கோரி போராட்­டங்­களை ஆரம்­பித்­தனர். மாதக்­க­ணக்கில் வீதி­களில் தொடர் போராட்­டங்கள் இடம்­பெற்­றன.

அதன்­பின்னர் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெற்ற ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 33 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­தற்கு சர்­வ­தேச சமூகம் தயா­ரா­கி­யது. எனினும் இலங்­கையின் கோரிக்­கைக்கு அமைய 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்த மேலும் இரண்­டு­வ­ரு­ட­காலம் அவ­காசம் வழங்­கப்­பட்­டது.

அந்த அவ­காசம் வழங்­கப்­பட்டு ஒரு­வ­ருடம் முடி­வ­டை­யப்­போ­கின்­றது. இந்­நி­லையில் இக்­கா­லப்­ப­கு­தியில் பிரே­ரணை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன என்­பது தொடர்­பா­கவே இம்­முறை கூட்டத் தொடரில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

கடந்த மூன்­று­வ­ரு­ட­கா­லப்­ப­கு­தியில் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் ஆக்­கப்­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பதே பொது­வான குற்­றச்­சாட்­டாக உள்­ளது. அதா­வது காணா­மல்­போனோர் விட­யத்தில் ஒரு அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டாலும் அந்த அலு­வ­லகம் இது­வரை தொழிற்­ப­ட­வில்லை. இது­போன்று பல்­வேறு விட­யங்கள் நிலு­வை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன.

இவை தொடர்பில் சர்­வ­தேச மட்­டத்தில் தொடர்ந்தும் வலி­யு­றுத்­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் இது­வரை முழு­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கை மீது ஆத­ரவு போக்கை கடைப்­பி­டித்து வந்த சர்­வ­தேச சமூகம் தற்­போது மீண்டும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது.

விசே­ட­மாக காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­திற்கு தீர்­வு­காண வேண்டும். காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும், பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­ப­ட­வேண்டும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வேண்டும் போன்ற பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் சர்­வ­தேச சமூ­கமும் ஐக்­கி­ய­நா­டுகள் சபையும் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே இம்­முறை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதில் இலங்கை தொடர்­பாக முக்­கி­ய­மான விட­யங்கள் ஆரா­யப்­ப­ட­வுள்­ளன. விசே­ட­மாக இதன்­போது கார­சா­ர­மான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பில் கார­சா­ர­மான ஒரு அறிக்­கையை முன்­வைப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதா­வது மேலும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்கும் வகையில் அவர் பரிந்­து­ரை­களை முன்­வைப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அது­மட்­டு­மன்றி சர்­வ­தேச நாடு­களும் இலங்கை மீது அதி­ருப்­தியை வெளி­யிடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஏற்­க­னவே கடந்த சில மாதங்­க­ளாக ஐ.நா. மனித உரிமை பேர­வையில் சர்­வ­தேச நாடுகள் தொடர் விச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றன. எனவே, இம்­முறை கூட்டத் தொடரில் வலு­வான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டலாம். மேலும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் இலங்கை தொடர்­பாக பல்­வேறு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்கும் என எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது.

சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை, சர்­வ­தேச மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் போன்ற அமைப்­புக்கள் இலங்­கையின் முன்­னேற்றம் தொடர்பில் அதி­ருப்­தியை வெளிக்­காட்டும் என கூறப்­ப­டு­கின்ற நிலையில் இலங்கை அர­சாங்­கமும் தனது தரப்பு நியா­யங்­களை ஜெனி­வாவில் எடுத்­து­வைக்க உள்­ளது. அதா­வது தென்­னி­லங்­கையில் காணப்­ப­டு­கின்ற இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் பாரிய சவால்­க­ளு­ட­னேயே இந்த செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக இலங்கை அர­சாங்கம் ஜெனி­வாவில் எடுத்­துக்­கூறும்.

ஆனால் எந்­த­ள­வுக்கு அர­சாங்­கத்­துக்கு இம்­முறை ஜெனிவாவில் வழமைப்போன்று ஆதரவு கிடைக்கும் என்பதனை கூற முடியாது. மேலும் அரசாங்கம் மூன்று வருடங்களாகியும் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதால் இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை மீது புதிய பொறிமுறை யோசனை முன்வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இது தொடர்பில் புதிய யோசனைகளை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையானது ஒரு புதிய நம்பகரமான பொறிமுறையை 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையின் கோட்பாடுகளுக்கு அமைய முன்னெடுக்கவேண்டும் என யோசனையை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதாவது நேரடியாக அரசாங்கம் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்க தயங்குவதால் தென்னிலங்கையில் எதிர்ப்பு ஏற்படாத வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் ஒரு பொறிமுறையை முன்னெடுக்குமாறு செய்ட் அல் ஹுசைன் யோசனை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடர் பரபரப்பாகவே இருக்கப்போகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் உள்நாட்டில் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஜெனிவா விவகாரமும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது என்பதே யதார்த்தமாகும். 

ரொபட் அன்­டனி  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-23#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.