Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிய கோதாவில் பெரிய மல்­யுத்தம்

Featured Replies

சிறிய கோதாவில் பெரிய மல்­யுத்தம்

 

தற்­போது 2015 ஆண்டு உரு­வான நல்­லாட்­சியின் மூல­பிதா மாது­ளுவாவே சோபித தேரர் உயி­ருடன் இல்லை. இதற்கு ஒத்­து­ழைத்த சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்­கவும் இப்­போது முழுப்­பங்­க­ளிப்­பையும் வழங்­கு­வ­தாக இல்லை. இப்­போது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வ­ராக மைத்­திரி ஆகி­யும்­கூட அக்­கட்­சிக்குள் முழு ஆதிக்­கமும் இல்லை. இப்­போ­துதான் இவர் தனி­மைப்­பட்­டுள்­ளதை உணர்­கிறார்.

பொது ஜனா­தி­பதி கட்சி ஜனா­தி­ப­தி­யாக இருக்­கக்­கூ­டாது. கட்­சியின் தலை­மைத்­து­வத்தை சந்­தி­ரி­கா­வுக்கு வழங்­கி­யி­ருக்க வேண்டும். பாரா­ளு­மன்­றத்­தோடு அதி­கா­ரத்தைப் பகிர்ந்து கொண்­டி­ருக்­காது பத­விக்­காலம் முடியும் வரை முழு அதி­கா­ரத்­தையும் வைத்­துக்­கொண்டு மக்­க­ளா­ணையை முழு­மை­யாக நிறை­வேற்­றி­யி­ருக்க வேண்டும்.

 ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியின் தலை­வ­ராக ரணிலும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வராக சந்­தி­ரி­காவும் இருந்து வெற்றி தோல்­விப்­படி பிர­த­ம­ரா­கவும், எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரா­கவும் ஆக வகை செய்­தி­ருக்க வேண்டும். இப்­போது வெறும் உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­காக மஹிந்­த­வுடன் அவர் பேசும் நிலை ஏற்­பட்­டி­ருப்­பதைப் பார்த்­தீர்­களா?

உள்­ளூ­ராட்சித் தேர்தல் அண்­மித்­ததும் முதலில் இவ்­வாறு இணைய வேண்­டு­மென மைத்­திரி தரப்­பி­னரே குர­லெ­ழுப்­பினர். அமைச்­சர்­க­ளான சுசில் பிரேம் ஜயந்த, ஜோன் சென­வி­ரத்ன, அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா ஆகி­யோரே இதை முன் வைத்­தனர். முதன் முதலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அனு­ம­தியைப் பெற்­றுக்­கொண்டு கட்­சியின் செயற்­கு­ழு­விலும் அவர்கள் இதை சமர்ப்­பித்­தி­ருந்­தார்கள். எனினும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பின் செய­லாளர் துமிந்த திசா­நா­யக்­கவும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் செய­லாளர் மஹிந்த அமரவீரவும் இதை கடு­மை­யாக எதிர்த்­தார்கள்.

அப்­போது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பெரும்­பா­லானோர் இந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் நாம் வெவ்­வே­றாகப் போட்­டி­யி­டு­வோ­மாயின் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கே அதிக வாய்ப்­பாகி விடும். அதைத்­த­டுக்க வேண்­டு­மாயின் நாம் இரு சாராரும் இணைந்­தாக வேண்டும் என்­றார்கள். அப்­போ­துதான் இதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசே­னவும் அங்­கீ­க­ரித்தார். உடனே அமைச்­சர்­க­ளான நிமல் சிறி­பால டி சில்­வாவும், அனு­ர ­பி­ரிய தர்­ஷன யாப்­பாவும் இரா­ஜாங்க அமைச்சர் லசந்த அழ­கிய வண்ணவும் கொண்ட ஒரு குழு நிய­மிக்­கப்­பட்­டது. இதை மஹிந்த தரப்­புக்கு அறி­விக்கும் பொறுப்பு அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த­வுக்கு வழங்­கப்­பட்­டது. அதை அவரும் குறிப்­பிட்ட தரப்­புக்கு அறி­வித்தார். இந்த அறி­விப்பு மஹிந்த தரப்­புக்கு அதிர்ச்­சி­யையே ஏற்­ப­டுத்­தி­யது. இதற்கு நாம் இணங்­கக்­கூ­டாது. முன்பும் இப்­படிப் பேசித்தான் இவர்கள் பொதுத்­தேர்­தலில் ஏமாற்­றி­னார்கள். உள்­ளூ­ராட்­சித்­தேர்­தலில் இம்­முறை எம்மை ஏய்க்­கப்­பார்க்­கி­றார்கள். நாம் இதற்கு விருப்­ப­மில்லை என அவர்கள் கூறி­விட்­டார்கள்.

பிர­சன்ன ரண­துங்க, வாசு­தேவ நாண­யக்­கார, காஞ்­சன விஜே­சே­கர, கெஹான் சேம­சிங்க ஆகியோர் இதைக்­க­டு­மை­யாக எதிர்த்­தார்கள். இது எங்­க­ளுக்­கான தூக்­குக்­க­யிறு. நேர்­மை­யி­ருந்தால் அரசை விட்டும் ஒதுங்­கு­மாறு கூறுங்கள். பிர­தமர் பத­வி­யையோ எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­வி­யையோ எமக்குத் தரு­மாறு கூறுங்கள் என்­றார்கள்.

பிர­தமர் பத­வி­யையும் எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­வி­யையும் நாம் கேட்டால் நாம் பதவி ஆசை பிடித்­த­வர்கள் என்­பார்கள். எனவே இணைய விருப்­ப­மாயின் அரசை விட்டு நீங்க வேண்டும் என்று மட்­டுமே அவர்­க­ளிடம் கேட்போம் என மஹிந்த ராஜபக் ஷ கூறினார். விமல் வீர­வன்ச, மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல ஆகி­யோ­ருடன் ஏனை­யோரும் மஹிந்த ராஜபக் ஷவின் விருப்­புக்கு உடன்­பட்­டனர்.

அதன்பின் அது­ர­லியே ரத்­ன­ தேரர் எம்.­பி­. யோடு அசோக அபயகுண­வர்­த­னவும் பல­முறை முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவைக் கண்டு பேசி­யுள்­ள­தோடு இச்­செய்தி பகி­ரங்­க­மா­க­தி­ருக்க இருத்­த­ரப்­பி­னரும் பொறுப்­பேற்­றார்கள். அதுபோல் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்த­பாய ராஜபக் ஷவுடன் கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும் அர­சியல் வட்­டா­ரங்கள் குறிப்­பி­டு­கின்­றன.

இந்த எல்லாப் பேச்­சு­வார்த்­தை­களின் போதும் மஹிந்த தரப்பு முன்­வைத்த முக்­கிய நிபந்­த­னை­யான ஆட்­சி­யி­லி­ருந்து வில­கு­மாறு கூறும் வற்­பு­றுத்­த­லுக்கு மைத்­திரி தரப்­பி­ட­மி­ருந்து உரிய பதில் கிடைத்­த­பா­டில்லை. காரணம் அவர்­களில் சிலர் தாம் அனு­ப­விக்கும் அமைச்­சுப்­ப­த­வி­களைக் கைவிட விருப்­ப­மில்­லா­தி­ருப்­ப­தே­யாகும். அது­போல மஹிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தோற்­ற பின் அவ­ருக்கெதி­ராக செயற்­பட்ட பலர் மஹிந்­த­வோடு மைத்­திரி இணை­வதை எதிர்ப்­ப­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. அது மட்­டு­மல்ல, மஹிந்த – மைத்­திரி கூட்டு ஏற்­ப­டு­மாயின் சிலர் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யோடு இணை­வ­தற்­குத்­த­யா­ராக இருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யு­ட­­னான கூட்­டி­லி­ருந்து வில­கு­வதா? இன்றேல் தொடர்ந்தும் நீடிப்­பதா என்­பது பற்றி இம்­மாதம் 31 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­விப்பார் எனக்­கூ­றப்­ப­டு­கி­றது. இது பற்றி சில தினங்­க­ளுக்குள் செயற்­குழு கூடி பொதுக்­கு­ழுவைக் கூட்­ட­வுள்­ளதாம். தலைமை இரண்­டா­ன­போதும் நாடு முழுக்க வாழும் கட்­சிக்­கா­ரர்கள் பிரி­ய­வில்லை என்­பதால் இணை­யலாம் என்­பதே மைத்­திரி, மஹிந்த இரு­வ­ரி­னதும் கூட்டை வலி­யு­றுத்­துவோர் முன்­வைக்கும் கார­ண­மாகும்.

எனினும் இணைப்பு இதுவரை கைகூ­ட­வில்லை. தனித்­த­னி­யா­கவே உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் பிர­சாரம் செய்­கி­றார்கள். தேர்தல் முடிவை அனு­மா­னித்து பின்னர் பேசலாம் என்னும் நிலைப்­பாட்டில் இரு­த­ரப்­பி­னரும் இருப்­பதே இதற்குக் கார­ண­மாகும். நாம் ஜென்மப் பகைவர் அல்லர். நாம் மஹிந்­த­வோடு இருப்­பினும் மைத்­திரி தரப்பும் நாமும் ஒரே கட்­சிக்கு உரித்­தா­ன­வர்­க­ளாவோம். மைத்­திரி மாற்றுக் கட்­சி­யோடு இருப்­பதால் நாம் அநா­தை­க­ளா­கி­யி­ருக்­கிறோம். மைத்­தி­ரி­யோடு நாம் இணைய விரும்­பி­ய­போதும் அவர் மாற்றுக் கட்­சியைக் கைவிட விருப்­ப­மின்றி இருக்­கிறார். எம்மால் அதற்கு இணங்க முடி­யாது.

நம்­பிக்கை உறு­தி­யா­கா­ததால் இரு தரப்­பி­ன­ரதும் பேச்­சு­வார்த்தை முறிந்­து­விட்­டது. எனினும் எதிர்­கா­லத்தில் மறு­ப­டியும் பேச எதிர்­பார்ப்­போடு இருக்­கின்றோம் என மஹிந்த தரப்­பினர் குறிப்­பி­டு­கையில் மைத்­திரி தரப்­பினர் என்ன கூறு­கி­றார்கள் தெரி­யுமா? இவர்­க­ளுக்கு இந்த பேச்­சு­வார்த்­தையைத் தொடர எந்த தேவையும் இல்லை. இதை இடைநிறுத்துவ­தையே நோக்­க­மாகக் கொண்­டி­ருக்­கி­றார்கள். கூட்­ட­ர­சி­லி­ருந்து வில­கு­மாறு நிபந்­தனை விதித்­தார்கள். முன்பே இவ்­வாறு விதிக்­க­வில்லை. இத்­த­கைய நிபந்­த­னையை ஏற்­றுக்­கொண்டு நாம் பேச்­சு­வார்த்­தைக்குச் செல்­லவும் இல்லை. இத்­த­கைய நிபந்­த­னைக்கு ஒரே­டி­யாக இணங்க முடி­யாது என நாம் அவர்­க­ளிடம் கூறினோம். அதை அவர்கள் மறுத்­து­விட்­டார்கள். எனினும் நாம் எல்­லா­வற்­றையும் விப­ர­மா­கவும் விளக்­க­மா­கவும் கூறினோம். எனினும் அவர்கள் ஒத்­துக்­கொள்­ள­வில்லை. எனவே தொடர்ந்து பேசு­வதில் அர்த்தம் இல்லை. அவர்­களின் தேவை கட்­சியை அழிப்­ப­தே­யாகும். மேலும்­பேசுவதில் அர்த்தமில்லை. நாம் உட­னடி தீர்­வுக்கு வர­வேண்டும். நாம் கூட்­ட­ர­சி­லி­ருந்து வில­கி­விட்டால் ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையை விட்டும் தனிப்­பட்டு விடுவார். இது பாரிய பின்விளை­வு­க­ளுக்கு அடித்­தளம் இட்­டு­விடும் என மைத்­திரி தரப்­பினர் கூறு­கி­றார்கள். உள்­ளூ­ராட்சி தேர்தல் நிக­ழ­வி­ருக்கும் இந்­நி­லை­யில்தான் எதிர்­வரும் 31 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதையோ கூறப்­போ­கி­றாராம்.

மைத்­திரி தரப்­பி­னரும் மஹிந்த தரப்­பி­னரும் ஒன்­றி­ணைய வேண்டும் என்னும் விருப்­போடு அண்­மையில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தன. மைத்­தி­ரியின் அனு­ம­தி­யு­ட­னேயே இது நிகழ்ந்­தது. இதற்கு அது­ர­லியே ரத்ன ஹமி தலைமை வகித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சார்­பாக அமைச்­சர்­க­ளான நிமல் சிறி­பால டி சில்வா, மஹிந்த அம­ர­வீர, தயா­சிறி ஜய­சே­கர, டிலான் பெரேரா ஆகிய நால்­வரும் எதிர்க்­கட்சி கூட்­ட­ணியின் சார்பில் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ், பஷில் ராஜபக் ஷ ஆகிய இரு­வ­ரு­மாக ஆறு பேர் கலந்து கொண்­டி­ருந்­தனர். இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டை­யி­லான அவ­நம்­பிக்­கையைப் போக்­கு­வ­தற்­காக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் புதிய திட்­ட­மொன்றை முன்­வைத்­தனர். அதா­வது இரு தரப்­பி­னரும் இணைந்து உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் புதுக்­கூட்­ட­ணி­யாகப் போட்­டி­யி­டு­வ­தாயின் அதன் தலைமை மஹிந்த ராஜபக் ஷவுக்கும் செய­லாளர் பதவி டலஸ்­ அ­ழக­ப் ­பெ­ரு­ம­வுக்கும் வழங்­க­வேண்டும் என்­ப­தே­யாகும். எனினும் எதிர்க்­கட்சிக் கூட்­ட­ணியில் வந்­தி­ருந்த இருவர் அதற்கு உடன்­ப­ட­வில்லை. அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யோடு செய்யும் கூட்டு அரசை விட்டும் வில­க­வேண்டும் என்­ப­தி­லேயே விடாப்­பி­டி­யாக நின்­றனர்.

ஐக்­கிய தேசி­யக்­கட்சி தேசிய வளங்­களை விற்­கி­றது. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை இந்த பாவத்­தி­லி­ருந்து மீட்க வேண்­டு­மாயின் இரு தரப்­பி­னரும் இணைய வேண்டும் என விமல் வீர­வன்­சவின் ஆத­ர­வா­ளர்­களும் கூறினர். அதன்­படி நீண்ட கலந்­து­ரை­யா­ட­லுக்குப் பின் மஹிந்த தரப்பும் ஒரு குழுவை நிய­மித்­தது. உடனே இக்­குழு குமார வெல்­க­ம­வையும் ஜனக பண்­டார தென்­னக்­கோ­னையும் தொடர்பு கொண்­டது. எனினும் அவர்கள் இதற்கு முன்­வ­ர­வில்லை. பின்னர் சி.பி.ரத்­னா­யக்க, பவித்ரா வன்­னி­ ஆ­ரச்சி, மஹிந்த யாப்பா அபே­வர்­தன ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டனர். அதன்­படி இரு தரப்பும் நான்­கு­முறை பேசியும் கூட நற்­பலன் கிட்­ட­வில்லை.

முடி­வாக மைத்­திரி தரப்­பினர் இணைந்து உங்­க­ளுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள பகு­தி­களில் உங்கள் சின்­ன­மான தாமரை மொட்டுச் சின்­னத்தில் கேட்போம். ஏனைய பகு­தி­களில் கூட்­ட­ணி­யாகப் பொதுச் சின்­னத்தில் போட்­டி­யி­டுவோம் எனக் கூறினர்.

அதற்கு மஹிந்த தரப்­பினர் எதைச் செய்­வ­தா­யினும் நீங்கள் அர­சி­லி­ருந்து விலக வேண்டும். இந்த அரசு செய்­ப­வற்றை எம்மால் அனு­ம­திக்க முடி­யாது. அதனால் முதலில் அர­சி­லி­ருந்து வெளியே வாருங்கள் என்­றார்கள். எனினும் முக்­கிய நிபந்­த­னைக்­கு­ரிய அதற்கு மைத்­திரி தரப்­பினர் உடன்­ப­ட­வில்லை. அதன்­பி­றகே மஹிந்த தரப்­பினர், அவ­ரிடம் இவர்­க­ளுக்கு அர­சி­லி­ருந்து வெளி­யேற விருப்­ப­மில்லை. எனவே நாம் தனித்து தாமரை மொட்டுச் சின்­னத்தில் போட்­டி­யி­டுவோம். இந்த பேச்­சு­வார்த்­தையில் அர்த்­த­மில்லை என்­றார்கள். இளம் எம்.­பி. க்­க­ளோடு முன்னாள் உள்­ளூ­ராட்சி உறுப்­பி­னர்­களும் கூட மைத்­திரி – மஹிந்த இணைப்பை எதிர்த்­தார்கள்.

பகி­ரங்­க­மாகப் பேச்­சு­வார்த்தை முறிந்­த­போதும் திரை­ம­றைவில் நிகழ்ந்­த­தென்ன? மைத்­திரி உட்­பட அவ­ரது தரப்­பினர் உள்­ளூர மஹிந்த தரப்­போடு இணைய விருப்­பு­ட­னேயே இருக்­கி­றார்கள். இதனால் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் கோத்த­பாய ராஜபக் ஷவுக்கும் மிக நெருங்­கிய மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரரைக் காண உட­ன­டி­யாக சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை பெப்­பி­லி­யான சுனேத்­ரா­தேவி பிரி­வெ­னா­வுக்குச் சென்று கலந்­து­ரை­யா­டினர்.

(லங்­கா­தீப 17.12.2017 ஞாயிறு) உடனே அந்த தேரர் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவுக்கு தொலை­பேசி அழைப்பை விடுத்தார். சில நிமி­டங்­களில் அவ­ரோடு தொடர்பு கொண்ட இவர் உங்­க­ளுக்குத் தெரிந்த ஒருவர் வந்­தி­ருக்­கிறார். கொஞ்சம் பேசுங்கள் எனக்­கூ­றி­விட்டு அந்த தொலை­பே­சியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கொடுத்தார். என்ன செய்தி எனக் கூறி­ய­வாறே பேச ஆரம்­பித்த ஜனா­தி­பதி எம்மால் ஏன் இணைந்து செயற்­பட முடி­யாது என பஷில் ராஜபக் ஷவிடம் கேட்டார். அதற்கு பஷில் ராஜபக் ஷ பதி­ல­ளிக்­கையில், நாம் இணைந்து அர­சியல் செய்ய விருப்­பம்தான். எனினும் எம்­மோ­டுள்ள பலரும் இணைப்பை எதிர்க்­கி­றார்கள். அதனால் இணையும் முடி­வுக்கு வர கஷ்­ட­மாக இருக்­கி­றது. எனினும் இரு தரப்­பி­னரின் ஒற்­று­மைக்­காக நான் அதிக­பட்­ச­மாக அர்ப்­ப­ணித்துக் கொண்­டி­ருக்­கிறேன். தொடர்ந்தும் முயற்­சிப்பேன் என பஷில் ராஜபக் ஷ கூறினார்.

இந்த நீண்ட தொலை­பேசி உடை­யாடல் இது­வரை ஊட­கத்­துக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை. முன்னாள் பிர­தமர் டி.எம்.ஜய­ரத்ன, பாரா­ளு­மன்ற அங்­கத்­தவர் அது­ர­லியே ரத்ன தேரர், எல்லே குண­வங்­ஷ­தேரர், சமூக சேவை­யாளர் அசோக அபயகுண­வர்­தன ஆகி­யோர்­உட்­பட பலர் பசில் ராஜபக் ஷ, கோத்த­பாய ராஜபக் ஷ ஆகி­யோரின் மூலம் இதில் ஈடு­பட வேண்டும் என்­றார்கள். அதன்­படி முன்னாள் எம்­.பி. யும் பிர­பல வியா­பா­ரி­யு­மான ஒரு­வரின் வீட்­டிலும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்த­பாய ராஜபக் ஷவின் வீட்­டிலும் அடிக்­கடி இது பற்­றிய பேச்சுவார்த்­தைகள் இடம்­பெற்று வந்­தன. அவற்­றிலும் அர­சி­லி­ருந்து விலகும் தீர்மானமே எடுக்­கப்­பட்­டன. அதற்குப் பதி­ல­ளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் அவ்­வாறு செய்தால் ஐக்­கிய தேசியக் கட்சி தனித்து ஆட்­சியைக் கொண்டு செல்லும் என்றும் அதனால் ஜனா­தி­பதி தனி­மைப்­பட்டு விடுவார் என்றும் இந்த சூழலில் கூட்டு அர­சி­லிருந்து அக­லு­வது பொருத்­த­மான செய­லல்ல எனவும் கூறினர்.

இதனால் எந்த தீர்வும் காணாது அந்தப் பேச்­சு­வார்த்தை முறிந்து போனது. பின்னர் இதைப்­பற்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பி­டு­கையில், எதிர்க்­கட்சிக் கூட்­ட­ணி­யோடு நிகழ்ந்த பேச்­சு­வார்த்­தையில் நாற்­காலி சின்­னத்தில் பொது ஜன ஐக்­கிய முன்­ன­ணியில் இரு­த­ரப்­பி­னரும் போட்­டி­யிடும் யோச­னையே முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் தலை­வ­ராக மஹிந்த ராஜபக் ஷவையும் செய­லா­ள­ராக டி.எம். ஜய­ரத்­ன­வையும் போட நிபந்­த­னை­யின்றி நான் இணங்­கி­யது கட்­சியை ஐக்­கி­யப்­ப­டுத்­தவே என்றார். இதற்கு திலங்க சும­தி­பால காரணம் கூறு­கையில், எல்­லோரும் விருப்பம். ஆனால் ஜி.எல்.பீரிஸும், பஷில் ராஜபக் ஷவுமே குழப்பி விட்­டார்கள். அப்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்சி இணை­யு­மாயின் என்ன சின்­ன­மா­யினும் பர­வா­யில்லை என்றார். பின்னர் இணை­மு­டி­யாமல் போனது பற்றி அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, பிர­சன்ன ரண­துங்க மீதும் நாமல் ராஜபக் ஷ மீதுமே குற்றம் சுமத்­தினார். அப்­ப­டி­யானால் இணையும் விருப்பம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கே இருந்­தி­ருக்­கி­றது என்­பதும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இல்லை என்­பதும் தெளி­வா­கி­றது. காரணம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இந்த உள்­ளூ­ராட்சிக் தேர்­தலில் பிள­வு­பட்டுப் போட்­டி­யிட்டால் ஐக்­கிய தேசியக் கட்சி 80 வீத ஆச­னங்­களை சுல­ப­மாகப் பெற்­றுக்­கொண்டு கிராம மட்­டத்தில் மிகப்­பெரும் வலி­மையைப் பெற்­று­விடும் என்­ப­தோடு இதற்­கான பழி மைத்­தி­ரியின் தலை­மீதே விழும் என்­ப­து­மாகும். இந்­நிலை ஏற்­பட்டால் கட்­சிக்குள் இவ­ரது இருப்பும் சவா­லுக்­குட்­பட்­டு­விடும். இமேஜும் பாதிக்­கப்­படும். எனினும் பத­வி­க்காலம் முடியும் வரை ஐக்­கி­ய­தே­சியக் கட்­சியின் தயவில் இருக்க வேண்­டிய நிலையே ஏற்­படும் என்றே இப்­போது சிந்­திக்­கிறார்.

இது உள்­ளூ­ராட்சித் தேர்­தல்தான் என்­றாலும் கூட மஹிந்த தண்­ணீரில் அடி­பட்டுச் செல்­பவன் மரக்­கி­ளையில் தொற்­று­வ­துபோல் இதைப் பற்­றிப்­பி­டித்­தி­ருக்­கிறார். இப்­போ­தைக்கு ஜனா­தி­பதித் தேர்­தலோ, பாரா­ளு­மன்­றத்­தேர்­தலோ, மாகாண சபைத்­தேர்­தலோ இல்லை. அதனால் தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைப் போல் இதைப்பற்றியிருக்கிறார். இதன் மூலம் அவர் தனது வலிமையை எடைபோட்டுப் பார்க்க விழைகிறார். இரண்டாம் இடத்துக்குத்தான் இப்போது மைத்திரிக்கும், மஹிந்தவுக்கும் போட்டி. ரணில் முதலாம் இடத்துக்கு வருவதை இரண்டாம் இடத்துக்கு தள்ளவேண்டுமானால் அவர்கள் இணைய வேண்டும். இதுவே போட்டி. ஆக, 18 ஆம் ஷரத்தை அன்று மஹிந்த கொண்டு வந்த நோக்கம் ரணிலை ஒடுக்குவதற்கே எனவும் மைத்திரி மூலம் ரணில் 19 ஆம் ஷரத்தைக் கொண்டுவந்ததன் நோக்கம் மஹிந்தவை ஒடுக்கவே என்றாகிறது. இந்த ஷரத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்துக்கும் பகிரப்பட்டதால் ரணில் வலிமை பெற்றார். ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைச் சுயமாக கலைக்க முடியாது எனும் நிலை இதையே உறுதி செய்கிறது.

ஏ.ஜே.எம்.நிழாம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-23#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.