Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சி மன்ற தேர்தலும் இடைக்கால அறிக்கையும்

Featured Replies

உள்ளூராட்சி மன்ற தேர்தலும் இடைக்கால அறிக்கையும்

 

தமிழ் தேசிய இனம் எதிர்­நோக்­கிய எந்­த­வொரு தேர்­தலும் பத­வியை மையப்­ப­டுத்­தி­ ய­தா­கவோ அல்­லது அபி­வி­ருத்தி, உட்­கட்­டு­மா­னங்கள், சபை­க­ளுக்கு என்று குறித்­தொ­துக்­கப்­பட்ட விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­துதல் என்­ப­தற்கும் அப்பால் தேசிய இனப்­பி­ரச்சினையை மைய­மாகக் கொண்டு அதற்­கான தீர்வை எட்­டு­வதை நோக்­க­மாகக் கொண்டே அமைந்­துள்­ளது. தமிழ் தேசிய இனத்தின் உரி­மையை வென்­றெ­டுப்­ப­தற்­கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்­யப்­பட்­டதன் பின்னர் ஜன­நா­யக வழியில் அதற்­கான குரல் பல்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளையும், அதி­கார பலப்பிர­யோ­கங்­க­ளையும் மீறி தேர்தல் அரங்­கு­களில் எதி­ரொ­லித்து வரு­கி­றது. இத்­த­கைய பின்­ன­ணியில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்­யப்­பட்­டதன் பின்னர் நடை­பெறும் இரண்­டா­வது உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லானது தமிழ் தேசிய இனத்­திற்கு மிகவும் முக்­கி­ய­மான தேர்­த­லாக பல­ராலும் சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்­றது. 

சர்­வ­தேச சமூ­கங்­களின் அழுத்­தத்­திற்கு அமை­யவும், ஐ.நாவில் நிறை­வேற்­றப்­பட்ட இடைக்­கால நீதி பொறி­மு­றை­க­ளுக்கு அமை­யவும் நான்­கா­வது விட­ய­மாக குறிக்­கப்­பட்­டுள்ள மீள்­நி­க­ழா­மையை உறுதி செய்யும் பொருட்டு ஒரு புதிய அர­சியல் யாப்பின் மூலம் நாட்டின் ஏனைய பிரச்­சினை­க­ளுக்கு தீர்வு காண்­ப­துடன் இனப்­பி­ரச்­சினைக்கும் தீர்வு காண்­ப­தற்கு அர­சாங்கம் இணங்­கி­யி­ருந்­தது. இந்த பின்­ன­ணியில் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டதன் பின்னர் முழு பாரா­ளு­மன்­றமும் அர­சியல் நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்டு அந்த அர­சியல் நிர்­ணய சபையை வழி­ந­டத்­து­வ­தற்­காக ஒரு குழுவும் நிய­மிக்­கப்­பட்டு இருந்­தது. இந்தக் குழு 73 முறை கூடி ஆராய்ந்து தங்­க­ளுக்குள் இணக்கம் காணப்­பட்ட விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி, கட்­சி­களின் கருத்­துக்­களை பின்­னி­ணைப்­பாக இணைத்து கடந்த வரு­டத்தின் இறு­திக்­கா­லாண்டுப் பகு­தியில் பாரா­ளு­மன்­றத்­திற்கு கைய­ளித்து அதன் மீது விவா­தங்­களும் நடந்­தியி­ருந்­தது. இந்த அறிக்கை வெளி­யி­டப்­பட்ட நாள் முதல் பல்­வேறு தரப்­பி­ன­ராலும் அதன் சாதக பாத­கங்கள் குறித்து விவா­திக்­கப்­பட்டு இருந்­தது. 

தமிழ் மக்கள் பேர­வையும் இடைக்­கால அறிக்­கையும் 

2015 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகு­தியில் அதா­வது தற்­போ­தைய மைத்­திரி - ரணில் கூட்­ட­ர­சாங்கம் உரு­வா­னதைத் தொடர்ந்து அது­வ­ரையில் தமிழ் தரப்­பி­னரால் உயர்த்திப் பிடிக்­கப்­பட்டு வந்த இறுதி யுத்­தத்தின் போதான யுத்­தக்­குற்­றங்கள், மனி­த­உரிமை மீறல்கள், மனி­த­கு­லத்­திற்கு எதி­ரான குற்­றங்கள் போன்­ற­வை­க­ளுக்கு சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம் என்று வலி­யு­றுத்தி வந்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அதில் இருந்து பின்­வாங்­கு­கி­றதோ என்ற சந்­தே­கத்தின் பேரில் தமிழ் தலை­மை­க­ளுக்கும், இலங்கை அர­சாங்­கத்­திற்கும், சர்­வ­தேச சமூ­கத்­திற்கும் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளையும், அபி­லா­சை­க­ளையும் எடுத்துச் சொல்­வ­தற்­கான ஒரு  மக்கள் இயக்­க­மாக  பல்­வேறு சிவில் அமைப்­புக்­க­ளையும், சில அர­சியல் கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக தமிழ் மக்கள் பேரவை உரு­வாக்­கப்­பட்­டது. இதன் தோற்­றத்தை வெளிப்­ப­டுத்தும் முக­மா­கவும், அதற்கு மக்கள் ஆத­ரவை திரட்டிக் கொள்­வதை நோக்­க­மாக கொண்டும், தமிழ் தேசிய இனத்தின் அபி­லா­சை­களை வெளிப்­ப­டுத்தும் முக­மா­கவும்  வடக்­கிலும், கிழக்­கி­லு­மாக எழுக தமிழ் என்ற கோசத்தை முன்­வைத்து இரண்டு பேர­ணி­களை மக்கள் எழுச்­சி­யுடன் நடத்­தி­யி­ருந்­தது. அது­மட்­டு­மின்றி, புதிய அர­சியல் யாப்பில் இனப்­பி­ரச்சினை தொடர்பில் உள்­ள­டக்­கப்­பட வேண்­டிய தனது முன்­மொ­ழி­வு­க­ளையும் மக்­களின் ஒப்­பு­த­லுடன் வழங்­கி­யி­ருந்­தது. தற்­போது வெளி­வந்­துள்ள வழி­ந­டத்தல் குழுவின் அறிக்­கையில் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளையும், அபி­லா­சை­க­ளையும் பூர்த்தி செய்யக் கூடிய வகை­யிலோ அல்­லது நிலை­மா­று­கால நீதிப் பொறி­மு­றையின் நான்­கா­வது அம்­ச­மான மீள் நிக­ழா­மை­யை உறு­திப்­ப­டுத்தும் வகை­யிலோ இந்த அறிக்கை அமை­ய­வில்லை என்று தமிழ் மக்கள் பேரவை பல்­வேறு விளக்­கங்­களை முன்­வைத்து தனது அதி­ருப்­தியை வெளி­யிட்டு இருந்­தது. 

தமிழ் மக்கள் பேர­வையின் இணைத்­த­லை­வர்­களில் ஒரு­வரும், வடக்கு மாகாண முத­ல­மைச்­சரும், முன்னாள் நீதி­ய­ர­ச­ரு­மான சீ.வி.விக்­கி­னேஸ்வரன் தனிப்­பட்ட ரீதியில் இந்த இடைக்­கால அறிக்கை தமிழ் மக்­களின் அபி­லா­சை­களை நிறை­வேற்றும் வகையில் அமை­ய­வில்லை என்றும் கருத்து தெரி­வித்­தி­ருந்தார். இதன் தொடர்ச்­சி­யாக உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழ் தேசிய இனத்தின் மத்­தியில் இந்த அறிக்கை ஒரு பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்கும் ஒரு சூழலில், மக்­க­ளுக்கு  அர­சியல் விழிப்­பு­ணர்­வூட்டும் வகையில் இடைக்­கால அறிக்கை தொடர்பில் 'இடைக்­கால அறிக்கை மாயை­களை கட்­டு­டைத்தல்' என்னும் தொனிப்­பொ­ருளில் தானே தலை­மை­யேற்று சர்­வ­தேச சட்ட வல்­லுநர் ஒரு­வ­ரையும், உள்­நாட்டு சட்­டத்­துறை பேரா­சி­ரியர் ஒரு­வ­ரையும் வைத்து  விளக்­க­ம­ளித்­துள்­ள­துடன், அவர்­களின் உரையை தொகுத்து தொகுப்­பு­ரையும் வழங்­கி­யி­ருந்­த­துடன், தற்­போது இடைக்­கால அறிக்­கையில் கூறப்­பட்ட விட­யங்­க­ளுடன் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தினால் ஏற்­படும்  விளை­வுகள் தொடர்பிலும் கருத்­துரை வழங்­கி­யி­ருந்தார். இதன் போது மக்­க­ளது சந்­தே­கங்­க­ளுக்கும், கேள்­வி­க­ளுக்கும் தெளி­வான பதில்­களும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.  

அவர் கூறி­யதில் மிகவும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாக அரசின் ஆட்­சி­முறை குறித்த விளக்கம் அமைந்­தி­ருந்­தது. ஒற்­றை­யாட்­சியின் கீழ் அதி­கா­ர­ப­ர­வ­லாக்கல் என்­பது தேசிய இனப்­பி­ரச்­சினைக்கு தீர்­வாக அமை­யாது என்று அவர் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­தி­ருந்தார். இந்த இடைக்­கால அறிக்­கையில் ஆட்சி முறையைப் பொறுத்த வரையில் அது ஒற்­றை­யாட்­சி­யையே குறிக்­கின்­றது என்றும் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்தார். வள­வா­ளர்­க­ளாக பங்­கேற்று இருந்­த­வர்­களும் அத­னையே வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர். இவை அனைத்தும் அர­சியல் மேடைப்­பேச்­சாக அன்றி சட்ட ரீதி­யான விளக்­கங்­க­ளாக அமைந்­தி­ருந்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. 

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும்  இடைக்­கால அறிக்­கையும் 

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் உப­கு­ழுக்­க­ளிலும், வழி­ந­டத்தல் குழு­விலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அங்கம் வகித்­தி­ருந்­தது. புதிய அர­சியல் யாப்­பா­னது பிர­தான மூன்று விட­யங்­களை உள்­ள­டக்கி உரு­வாக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. முத­லா­வ­தாக ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை குறைத்து பாரா­ளு­மன்­றத்­திற்­கான அதி­கா­ரத்தை அதி­க­ரித்தல், இரண்­டா­வ­தாக தேர்தல் முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­துதல், மூன்­றா­வ­தாக தேசிய இனப்­பி­ரச்சினைக்­கான தீர்வைக் காணுதல். இதில் முதல் இரண்டு விட­யங்­களும் பெரு­ம­ளவில் புதிய அர­சியல் யாப்­பிற்கு முன்­ன­தா­கவே பாரா­ளு­மன்­றத்தின் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் தற்­போ­தைய அர­சியல் யாப்பு திருத்­தங்கள் மூலம் நிறை­வேற்­றப்­பட்டு விட்­டது. இந்த நிலையில் புதிய அர­சியல் யாப்­பா­னது மேற்­சொன்ன இரண்டு விட­யங்­களில் விட்டு போன சில­வற்­றையும், அர­சியல் தீர்­வுக்­கா­கவும் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. தமிழ் தேசிய இனத்தின் இனப்­பி­ரச்சினை தொடர்­பான தீர்வை முன்­வைத்து தற்­போது ஒரு இடைக்­கால அறிக்கை வெளி­வந்­துள்­ளது. இந்த அறிக்கை இந்த நாட்டின் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் சகல அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளையும் உள்­ள­டக்­கிய வழி­ந­டத்தல் குழுவின் அறிக்கை 73 முறை கூடி விவா­தித்து உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­பது இதன் சிறப்­பம்­ச­மாகும். 

தேசிய இனப்­பி­ரச்சினை தொடர்பில் பாதிக்­கப்­பட்ட தமிழ் தேசிய இனத்தின் சார்­பாக வடக்கு, கிழக்கைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் 2 பேரும், ஈ.பி.­டி.பி.சார்பில் ஒரு­வரும் அங்கம் வகித்­தி­ருந்­தனர். ஏனை­ய­வர்கள் அனை­வரும் தேசியக் கட்­சி­க­ளுடன் இணைந்து செயற்­படக் கூடி­ய­வர்கள். அல்­லது வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் தேசிய இனத்தின் உரி­மை­களின் மீது அதிக கரி­சனை கொள்­ளா­த­வர்கள். அல்­லது அக்­கறை இல்­லா­த­வர்கள். அல்­லது இது­வரை காலமும் அந்த தேசிய இனத்தின் மீது தங்­க­ளது ஆளு­மையை செலுத்தி அடக்­கு­மு­றை­களை மேற்­கொண்­ட­வர்கள். 

இந்த நிலையில் வழி­ந­டத்தல் குழுவில் விவா­திப்­ப­தற்கு முன்­ன­தாக அர­சியல் தீர்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும், அர­சாங்­கத்­திற்கும் இடையில் விரி­வான விவா­தங்கள் நடத்­தப்­பட்டு அதில் இணக்கம் காணப்­ப­டு­கின்ற விட­யங்­களை வழி­ந­டத்தல் குழுவில் விவா­தித்து அவர்­களின் ஒப்­பு­தலை பெற வேண்டும் என்று ஈ.பி­.ஆர்.­எல்.எப். கூட்­ட­மைப்பின் தலை­வ­ரிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தது. இந்த வேண்­டுகோள் ஏற்­கப்­ப­டா­ம­லேயே தற்­போது இடைக்­கால அறிக்­கையும் வெளி­வந்­துள்­ளது.

இந்த அறிக்­கையில் பௌத்­தத்­திற்கு முத­லிடம், ஒற்­றை­யாட்சி முறையின் கீழ் தீர்வு, வடக்கு - கிழக்கு இணைப்பு இல்லை என தென்­னி­லங்­கையின் பிர­தான கட்­சிகள் கூறி­வ­ரு­வ­துடன், அதற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் இணங்­கி­விட்­ட­தா­கவும் தெரி­வித்து வரு­கின்­றன. ஆனால் தமி­ழ­ரசுக் கட்சி தலை­மை­யி­லான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த இடைக்­கால அறிக்­கையில் சமஷ்டி ஒளிந்­தி­ருப்­ப­தா­கவும், இதனை இன்னும் முன்­நகர்த்தி செல்­வ­தற்கு இந்த இடைக்­கால அறிக்­கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மக்கள் மத்­தியில் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது. அதற்­கான ஒரு ஆணை­யா­கவே இந்த உள்­ளூ­ராட்சிமன்றத் தேர்­த­லையும் அது பயன்­ப­டுத்தி வரு­கின்­றது.

எந்­த­வொரு தீர்வும் ஒழித்து வைத்தோ, மறைத்து வைத்தோ இன்­னும்­மொரு தரப்­பிற்கு தெரி­யா­மலோ அல்­லது நாட்டின் ஒரு பகுதி மக்­களின் கண்­களை கட்­டி­விட்டோ வழங்க முடி­யாது. அவ்­வாறு பெறப்­ப­டு­கின்ற தீர்­வுகள் உண்­மை­யான தீர்­வா­கவும் அமை­யாது. இதற்கு அண்­மையில் நடை­பெற்ற ஒரு நிகழ்வை உதா­ர­ண­மாக காட்ட முடியும். ஜனா­தி­பதி பதவி­யேற்றுக் கொண்ட போது அவ­ரது ஆட்­சிக்­காலம் ஆறு­வ­ரு­ட­மாக இருந்­தது. அவர் பத­வி­யேற்ற பின்னர் உரு­வாக்­கப்­பட்ட 19 ஆவது திருத்தச் சட்டம் மூலம் அது 5 ஆண்டுகளாக குறைக்­கப்­பட்­டது. இந்த திருத்தத்தில் கூட அமு­லாக்கல் திகதி தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் ஜனா­தி­பதி தனது பத­விக்­காலம் குறித்து நீதி­மன்­றத்தை நாடி­யி­ருந்தார். தெளி­வான விட­யத்­திற்கே நீதி­மன்­றத்தை நாட வேண்டிய சூழல் இருக்கையில் ஓரளவு மறைவான விடயம் எப்படி நிரந்தர தீர்வாக அமைய முடியும். யதார்த்தம் இவ்வாறு இருக்கையில் சமஸ்டி ஒழிந்திருக்கிறது என்று சொல்லி தமிழரசுக் கட்சி மக்களின் ஆணையை கேட்பது என்பது எந்தளவிற்கு சரியானது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியும், ஈபி.ஆர்.எல்.எப்பும்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியும், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியும் இடைக்கால அறிக்கை வெளிவந்ததில் இருந்தே அது தொடர்பில் ஆராய்ந்து தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்ததாக அதில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வுத் திட்டம் இல்லை என்பதை வலியுறுத்தி வருகிறன. தற்போதைய உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கூட அதனை நிராகரிப்பதாக தெரிவித்தே பிரசாரங்களையும் முன்னெடுத்துள்ளது.

இந்த தேர்தலானது தமிழ் தலைமைகளால் இடைக்கால அறிக்கைக்கான அங்கீகாரமாகவும், ஏனைய தமிழ் தரப்பு களால் அதனை நிராகரிப்பதற்கான அங்கீகாரமாகவும் நோக்கப் படுகையில், மக்கள் எத்தகைய முடிவை எடுக்கப்போகின்றார்கள் என்பதே தற்போது உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.