Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அர­சியல்கட்சித் தலை­வர்கள் பொறுப்­புடன் செயற்­ப­ட­ வேண்டும்

Featured Replies

அர­சியல்கட்சித் தலை­வர்கள் பொறுப்­புடன் செயற்­ப­ட­ வேண்டும்

 

நாட்டின் 70 ஆவது சுதந்­திர தின விழா நேற்று வெகு விமர்­சை­யாக கொண்­டா­டப்­பட்­டது. கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் நடை­பெற்ற பிர­தான சுதந்­தி­ர­தின வைப­வத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்து கொண்டு நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­றி­யி­ருந்தார்.

நாடு சுதந்­தி­ர­ம­டைந்து 70 வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும் தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­கான கோரிக்கை இன்­னமும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. தமிழ் மக்கள் தமது உரி­மை­களை கோரி தொடர்ச்­சி­யான போராட்­டங்­களை அஹிம்­சை­ வ­ழி­யிலும் ஆயுத வழி­யிலும் மேற்­கொண்­ட­போ­திலும் இன்­னமும் அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை.

இந்த நிலை­யில்தான் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் சுதந்­திர தினத்தை முன்­னிட்டு விடுத்­துள்ள வாழ்த்து செய்­தியில் புதிய அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்ற அனைத்து அர­சியல் கட்சித் தலை­வர்­களும் ஆத­ரவு தர­வேண்டும் என்று கோரி­யி­ருக்­கின்றார்.

இது குறித்து அவர் விடுத்­துள்ள வாழ்த்து செய்­தியில் வர­லாற்றில் மிக முக்­கி­ய­மான ஒரு தரு­ணத்தில் இந்த 70 ஆவது சுதந்­திர தினத்தை நினை­வு­கூ­ரு­கின்றோம். கடந்த காலங்­களில் எம்மால் சுதந்­தி­ரத்தின் முழு­மை­யான நன்­மை­களை ஒரு­நாடு என்ற வகையில் அனு­ப­விக்க முடி­ய­வில்லை. தேசிய பிரச்­சினை தீர்க்­கப்­ப­டா­மையின் நிமித்தம் நாட்டில் சமா­தானம், நல்­லு­றவு மற்றும் அபி­வி­ருத்தி அற்ற நிலை­மையை எதிர்­நோக்­கி­யுள்ளோம். இனப்­பிரச்­சி­னை­யா­னது சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான இடை­வெ­ளியை விசா­லமாக்கி அவ­நம்­பிக்கை மற்றும் ஒற்­று­மை­யின்மை என்­ப­வற்­றையும் எமது மக்கள் மத்­தியில் தோற்­று­வித்­துள்­ளது. முழு­நாடும் ஆயு­தப்­போ­ராட்­டத்தின் பாத­க­மான விளை­வு­க­ளி­லி­ருந்து மீண்­டெழ போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றது.

கடந்த 70 வரு­டங்­களை நோக்­கு­கின்­ற­போது நாம் இழந்­த­வைகள் நாம் பெற்­றுக்­கொண்­ட­வை­களை விட விஞ்சி நிற்­கின்­றன. தேசிய பிரச்­சி­னையை இதய சுத்­தி­யுடன் தீர்க்கத் தவ­றி­ய­மையால் பொரு­ளா­தார வளர்ச்­சி­யிலும் செழிப்­பிலும் பிராந்­தி­யத்தில் நாம் மிகவும் பின்­ன­டை­வான நிலையில் உள்ளோம் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

நாட்டில் உள்ள ஒவ்­வொரு தனி­ந­ப­ரி­னதும் சுய கௌர­வத்தை உறுதி செய்­வதும், தேசிய பிரச்­சி­னையின் மூல­கா­ர­ணங்­க­ளுக்கு உண்­மை­யான தீர்­வினை வழங்­கு­வ­து­மான ஓர் அர­சியல் யாப்­பினை நாம் உரு­வாக்­க­வேண்டும். நாம் அனை­வரும் இணைந்து நீடித்து நிலைக்­கக்­கூ­டிய ஒரு நிரந்­தர தீர்­வினை நாட்டில் உய­ரிய சட்­ட­மான புதிய அர­சியல் சாச­னத்தின் மூலம் காண்­ப­தற்கு முன்­வ­ர­வேண்டும். இதற்­காக அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும் என்றும் சம்­பந்தன் கோரி­யி­ருக்­கின்றார்.

இதே­போன்றே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சுதந்­தி­ர­தி­னத்தை முன்­னிட்டு விடுத்­துள்ள அறிக்­கையில் பெற்­றுக்­கொண்ட சுதந்­தி­ரத்தை அர்த்­த­முள்­ள­தாக மாற்­றி­ய­மைக்­க­வேண்­டு­மானால் அனைத்து வகை­யான இன, மத, கட்சி, நிற பேதங்­க­ளையும் தாண்டி ஒரே மக்­க­ளாக செயற்­ப­டு­வது அனை­வரதும் பொறுப்­பாகும் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அனை­வ­ருக்கும் சம வாய்ப்­புக்கள் கிடைக்­கின்ற பசு­மை­யான அபி­வி­ருத்­தியை நோக்கி செல்­லுதல், அதன்­மூலம் தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­துதல், நமது மனித வளங்­களை உலக தரத்­திற்கு உயர்த்­து­வதன் மூலம் நாட்­டிற்கு நற்­ப­யனை பெற்­றுக்­கொ­டுத்தல் ஆகி­யன எமது நிகழ்ச்சி நிரலில் முக்­கிய இடம்­பி­டிக்­க­வேண்­டிய இலட்­சி­யங்­க­ளாக உள்­ளன என்று தனது சுதந்­தி­ர­தின வாழ்த்து செய்­தியில் கூறி­யி­ருக்­கின்றார்.

நாட்­டுக்கு சுதந்­திரம் பெற்று 70 வரு­டங்கள் கடந்து விட்ட நிலை­யிலும் தமிழ் மக்கள் உரிய வகையில் சுதந்­தி­ரத்தை அனு­ப­விக்க முடி­யாத நிலைமை நீடித்து ­வ­ரு­கின்­றது. இந்த நிலைமை தொடர்­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பாரா­ளு­மன்றம் அர­சியல் யாப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு வழி­ந­டத்தல் குழு உட்­பட உப­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்டு அதி­கா­ரப்­பகிர்வு குறித்தும் ஆரா­யப்­பட்­டுள்­ளது. இந்த அதி­காரப் பகிர்வு யோச­னை­களை உள்­ள­டக்­கிய இடைக்­கால அறிக்­கையும் தற்­போது அர­சியல் யாப்­பு­ச­பையில் சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா­தமும் நடை­பெற்­றுள்­ளது. இந்த இடைக்­கால அறிக்­கை­யி­லி­ருந்து புதிய அர­சியல் யாப்­புக்­கான இறுதி அறிக்­கைக்கு செல்ல வேண்­டி­யுள்­ளது.

ஆனால் புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்கும் முயற்­சிக்கு தென்­ப­கு­தியில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யி­ருக்­கின்­றது. ஒரு­மித்த நாட்­டுக்குள் அதி­கா­ரத்தைப் பகிர்ந்து அர­சியல் தீர்வு காணப்­ப­டு­மானால் நாடு பிள­வு­படும் என்ற தோர­ணையில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. தற்­போது நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் பிர­சா­ரத்தில் கூட இந்த இடைக்­கால அறிக்கை முக்­கிய இடத்தைப் பிடித்து வரு­கின்­றது.

இடைக்­கால அறிக்­கையில் ஒரு­மித்த நாட்­டுக்குள் அதி­கா­ரத்தைப் பகிர்­வ­தற்­கான யோச­னைகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் அதற்கு எதி­ராக மக்கள் அணி திர­ள­வேண்­டு­மென்று பொது எதி­ரணி கோரிக்கை விடுத்து வரு­கின்­றது. இதனை விட இன­வாத சக்­தி­களும் இதற்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழுந்து போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றன.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில்தான் புதிய அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கு சகல அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் ஆத­ரவு தர­வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார்.

உண்­மை­யி­லேயே கடந்த மூன்று தசாப்­த­கா­ல­மாக இடம்­பெற்ற கொடூர யுத்­தத்­தினால் நாடு பேர­ழி­வு­களை சந்­தித்து வந்­தது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் உயி­ரி­ழந்­த­துடன் பொரு­ளா­தா­ரமும் பெரும் வீழ்ச்சி கண்­டது. இவ்­வா­றான நிலை­யில்தான் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்த போதிலும் யுத்­தத்­திற்கு கார­ண­மாக அமைந்த இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண அன்று பத­வி­யி­லி­ருந்த அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை.

 இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண பல்­வேறு சந்­தர்ப்­பங்கள் உரு­வா­கி­யி­ருந்த போதிலும் அந்த சந்­தர்ப்­பங்கள் அனைத்­துமே தவ­ற­விடப்­பட்­டன. 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தின் கீழ் மாகா­ண­சபை முறைமை கொண்­டு­வ­ரப்­பட்­டது. வடக்கு, கிழக்கு இணைந்த வகையில் மாகா­ண­சபை முறைமை அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால் அந்த சந்­தர்ப்­பமும் தவ­ற­வி­டப்­பட்­டது.

2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் பிராந்­தி­யங்­களின் ஒன்­றியம் என்ற யோச­னை­களை உள்­ள­டக்­கிய அர­சியல் தீர்­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­பட்­டது. அந்த சந்­தர்ப்­பமும் தவ­ற­வி­டப்­பட்­டது.

இதே­போன்றே 2002 ஆம்­ஆண்டு நோர்வேயின் அனு­ச­ர­ணையுடன் சமா­தானப் பேச்­சுக்கள் இடம்­பெற்­றன. சமஷ்டி யோச­னையை உள்ள­டக்­கி­ய­தாக ஒஸ்லோ பிர­க­ட­னமும் வெளி­யி­டப்­பட்­டது. ஆனால் அந்த சந்­தர்ப்­பத்­தையும் பயன்­ப­டுத்த முடி­யாத நிலைமை உரு­வானது.

இவ்­வாறு பல சந்­தர்ப்­பங்கள் அமை­யப்­பெற்­ற­போ­திலும் அவற்றைப் பயன்­ப­டுத்திக் கொள்ள நாம் தவ­றி­யி­ருந்தோம். தற்­போது இரு பிர­தான அர­சியல் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஆட்சி அமைத்­துள்ள நிலையில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண மற்­றொரு சந்­தர்ப்பம் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. இந்த சந்­தர்ப்­பத்தை தவ­ற­விடாது தீர்வைக் காண முயற்­சிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்பந்தன் செயற்பட்டு வருகின்றார்.

இதனால்தான் இனப்பிரச்சினைக்கு 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வுகாண முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது அடுத்த தைப்பொங்கல் தினத்திற்குள் தீர்வைக் காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார். இத்தகைய நிலையில்தான் அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பை நிறைவேற்ற ஆதரவு தருமாறு அவர் சுதந்திர தின செய்தியில் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

நாடு சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் இன்னும் ஏற்பட வில்லை. இத்தகைய நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் அரசியல் தீர்வு காணப்படவேண்டியது அவசியமாகும். எனவே அரசியல் கட்சிகள் இதனை உணர்ந்து இனியாவது பொறுப்புடன் செயற்பட வேண்டும். அடுத்த சுதந்திர தினத்திற்குள்ளாவது அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படவேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-05#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.